திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பார் மிகுந்த பொருட்செலவில், பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.
ஆனால் அந்த திரைப்படம் வெளியான தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம்தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் 10 திரையரங்குகள் திருட்டுத்தனமாக படம்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றன.
திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் (ஊர், தியேட்டர், படத்தின் பெயர்)
மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பார் மிகுந்த பொருட்செலவில், பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.
ஆனால் அந்த திரைப்படம் வெளியான தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம்தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் 10 திரையரங்குகள் திருட்டுத்தனமாக படம்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றன.
திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் (ஊர், தியேட்டர், படத்தின் பெயர்)
- கிருஷ்ணகிரி முருகன் - மனுசனா நீ
- கிருஷ்ணகிரி நயன்தாரா - கோலிசோடா டூ
- மயிலாடுதுறை கோமதி - ஒரு குப்பைக் கதை
- கரூர் எல்லோரா - ஒரு குப்பைக் கதை
- ஆரணி சேத்பட் பத்மாவதி - மிஸ்டர் சந்திரமௌலி
- கரூர் கவிதாலயா - தொட்ரா
- கரூர் கவிதாலயா - ராஜா ரங்குஸ்கி
- பெங்களூரு சத்யம் - இமைக்கா நொடிகள்
- விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் - சீமராஜா
- மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா
மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக