புதன், 10 அக்டோபர், 2018

மீட்டு

அநாகரீகம் இப்போது நாகரீகமாகிவிட்டது

கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து பதில் :

ஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார்.
இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
1,613 RETWEETS 6,872 LIKES
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட திரைமறைவு சதிகள் உள்ளது.அதன் பின்னால் சாதிகள் உள்ளதும் தெரிகிறது.
திராவிட இனம் வைரமுத்துமேல் குற்றம் சுமத்தியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இனத்தவர்கள்தான்.ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை அசிங்கமாகப்பேசி போராடியும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போனவர்களும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நடத்தியும் தோற்றவர்களும் தான் இதன் பின்னால் உள்ளது தெரிகிறது.
உண்மை இருந்தாலும் 18 ஆண்டுகள் கழித்து இவ்விவகாரம் கிளப்பப்பட்ட காரணம் ஏன்ன?
இடையில் பாடகி  சின்மயி திருமணத்தில் வைரமுத்து அழைக்கப்பட்டு மனமக்களுடன் புகைப்படமும் எடுத்து வெளியிடப்பட்டது.அசிங்கம் நடந்திருந்தால் அவ்வாறு நடக்குமா என்ன?
தற்போது அமைசசர் அஃபர் மீது மீட்டு வில் பாலியல் குற்றம் சாட்டியவர் அவர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாகத் தெரிகிறது என்றே இடுகையிட்டுள்ளார்.
ஆக மொத்தம் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கவே மீட்டு போன்றவைகள் பயன்படுத்தப்படுவதாக ஐயம் எழுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...