திங்கள், 21 நவம்பர், 2016

இதுதான் மோடியின் திட்டம் ..?

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு நிச்சயம் முட்டாள்தனமான ஒன்று கிடையாது.
இந்த எமர்ஜென்சியை அறிவிப்பதால் நாட்டில் மிகப் பெரிய சிக்கல்கள் உருவாகும். பல மக்கள் இறக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதெல்லாம் மோடிக்கோ, மோடியை இயக்குபவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
இதனால் கருப்புப் பணத்திற்கோ, கருப்புச் சந்தைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவின் பொருளாதாரத்தினை கிராமப் பொருளாதாரமாக சுய சார்புடையதாக இருக்கிறது. அதனை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதன் உட்சபட்ச நடவடிக்கையே இந்த தடை நடவடிக்கை.
சிறு வணிகர்கள், காய்கறி விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவரின் Transactionம் வங்கி மூலமாகத் தான் நடைபெற வேண்டும் என அறிவித்து அனைவரையும் வரிவருவாய்க்குள் தள்ளியிருக்கிறார்கள். இனி இவர்கள் எல்லோரும் Tax Payers.
நாட்டின் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு கடனை அள்ளிக் கொடுத்து, திரும்ப வாங்க முடியாமல் இருக்கும் வங்கிகளுக்கு ஏழை மக்களின் பணத்தினைக் கொண்டு அதனை நிரப்பும் முடிவே இது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.
சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.
இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.
1% கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம்.
நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.
இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.
நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.
தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.
ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.
இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரிyயும் கட்ட வேண்டும்.
இதை நாம் இன்றே உணர்ந்து போராட்டங்கள் செய்து நமது எதிப்பை காட்டவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறை திவோடு ஏந்தவேண்டியதுதான்....

வியாழன், 17 நவம்பர், 2016

மோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.?

இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம்.

அதைவிட இந்திய மக்கள் தினம் என்று வைத்து விடலாம்.யார் ஆட்ச்சிக்கு வந்தாலும்  ஒன்றும் செய்யாமல் பணமுதலைகளுக்கு மட்டுமே ஆட்சி ,அதிகாரத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளை மீண்டும்,மீண்டும் வாக்களித்து  ஆடசியில் அமர்த்தும் சகிப்புத்தன்மை ஆப்ரிக்க நாடுகளில் கூட இருப்பதாக தெரியவில்லை.

அங்கு கூட சிறு குழுக்களாக பிரிந்து ஆயுதம் தாங்கி போராடியே வருகிறார்கள்.
இந்திய மக்களின் சகிப்புத்தன்மையை இன்று உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார் மோடி.அவரது ஆலோசகர்களான ஆர்.எஸ்.எஸ் ,கூறுகிற ஆடசி முறையை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரப்படி ஆடசி நடக்கிறது.

500,1000 செல்லாது என்பது கள்ள,கருப்புப்பணத்தை ஒழித்து விடுமாம்.இது அகல மார்பு பிரதமர் மோடியின் முலையில் உதித்து ஆறு மாதம் வியூகம் அமைத்து கள்ள,கருப்புப்பணத்துக்கு  நடத்தப்பட்ட தாக்குதலால்.

இதை செய்ததால்கள்ள,கருப்புப்பணம்  பலர் மோடியை கொல்லும் எண்ணத்தில் கையில் கத்தியுடன் அலைகிறார்களாம்.

இன்று 4000 மாற்ற வரிசையில் ஊழல் செய்தவர்கள்தான் நிற்கிறார்களாம்.
எவ்வளவு ஏமாற்றுத்தனம்.இதை செய்தியாக வெளியிட ,பரபரக்க வைக்க ஒரு ஊடக கும்பலும்,அறிவுஜீவிகள் (?)கும்பலும்,சமூக ஆர்வலர் கும்பலும்,பொருளாதார நிபுணர்களும் களமிறங்கி மோடியின் செயற்கரிய செயலை தொலைக்காட்ச்சிகள்,நாளிதழ்களில் பாராட்டி,ஆராதித்து வருகிறார்கள்.

500,1000 செல்லாது என்று அறிவித்தால் 1946 இல் அன்றைய அரசு அறிவித்தது.
அதன் பின்னர் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போய் விட்டதா?
அதன் பின்னரும் அப்படி ஒரு முறை அறிவித்தனர் பின்னரும் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போகவில்லையே.
ஏன்?
முதலில் கள்ள ,கறுப்புப்பணம் எப்படி வருகிறது என்பதை அறிந்து அதை அரசு தடுக்க வேண்டும்.அதற்கான எல்லா அதிகாரமும் அதனிடம் மட்டும்தான் உள்ளது.
500,1000 வைத்திருக்கு அப்பாவிகளிடம் அல்ல.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால் மோடி போன்று அரசியல் செய்யும்  அரசியல்வாதிகள்,பெரும் வணிகர்கள்,கார்பரேட்கள்  ஆனால் அவர்கள் யாரும் ஆட்ச்சியாளர்களாய் அருகில் இருக்கிறார்கள்.அதிலும் இதுவரையில் இருந்த அரசியல் தலைவர்களை விட மோடிதான் பகிரங்கமாக பணமுதலைகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்,திட்டங்கள் தீட்டுகிறார்,ஆட்சியையே நடத்துகிறார்.
அதானிக்கு 2000கோடிகள் வங்கிகளில் கடன் கொடுக்க சொன்னது முதல் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் குத்தகைக்காக நேரடியாக ஆஸ்திரேலியா சென்று பேசியது,பயந்த திட்டத்திலேயே இல்லா பாகிஸ்தானில் இறங்கி அதானி தொழிலுக்கு தரகு வேலை பார்த்தது என்பது முதல்,அம்பானி ஜியோவுக்கு விளம்பர தூதராக போஸ் கொடுத்தது வரை பட்டியல் உள்ளது.
பின் எப்படி அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணத்தை எடுத்து இந்திய மக்கள்தலைக்கு 12 லட்சம் வாங்கிக்கணக்கில்போடுவார்?
அமிதாப் உட்ப்பட்ட பெருந்தலைகள் பனாமா வங்கிகளில் குவித்த கோடிகள் ஆதாரத்துடன் வெளிவந்ததற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?அமிதாப்புக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆலோசனைதான் நடத்தப்பட்டது.
இந்த கருப்புப்பணம் ,கள்ளப்பணம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எதிர்ப்பான கருத்து கிடையாது.
பொது மக்களை பொறுத்தவரை அவை இரண்டுமே அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் .ஆனால் அரசியல்வாதிகளுக்கும்,ஆள்வோருக்கும் அது தேர்தல்தோறும் வைக்கப்படும் பரப்புரை வாக்குறுதி மட்டுமே.
மோடி அரசு தற்போதைய கருப்புப்பணம்,கள்ளப்பணம் ஒழிப்பு ,500,1000ரூபாய்த்தாள்கள் ஒழிப்பு எல்லாம் சரிதான்.தேவையானதும் கூட.
ஆனால் அதை அவர் நடைமுறை படுத்திய விதம்தான் துக்ளக் ஆட்ச்சியை விட முட்டாள்தான் நிறைந்தது.அதைவிட கேவலம் அதை குறிப்பிட்ட சிலர் வானளா வ  புகழ்வது.   குமுதம் ரிப்போர்ட்டர் மெகா ஆ த்மா என்கிறது.கல்கி உலகநாயகன் மோடி என்கிறது.(கமல் பட்டத்தை களவாடி)தினமலர் தினசரி வாழ்த்துப்பா பாடுகிறது. 
முதலில் செல்லாது என்று அறிவிக்கப்படும் பணத்துக்கு பதிலாக புதிய பணத்தை அச்சிட்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.அவைகளை புழக்கத்தில் விடப்போவதாக கூறி எல்லா வங்கி கிளைகளுக்கும் அனுப்பி தயாராக வைத்திருக்க வேண்டும் .இன்றைய அன்றாடம் காய்ச்சிகளுக்கு  பணம் காய்க்கும் மரம் ஏ.டி .எம்,கலீல் அப்பணம் அடுக்கி வைக்கும் விதமாக இடம்,மென்பொருள் எல்லாமே தயாரித்து வங்கிகளுக்கு அவற்றை பொறுத்த கூறியிருக்க வேண்டும்.
ஆனால் இவை எதுவுமே மோடி அரசால் செய்யப்படவில்லை.இதற்கு 6 மாதம் ஆலோசனை,திட்டமிடல் செய்தார்களாம்.அப்படி என்ன திட்டமிட்டார்கள்?

பெரும் பணமுதலைகள்,கன்டெய்னரில் பணம் கடத்துபவர்களுக் பணம் மாற்றிக்கொள்ளும்  கால அவகாசம்தானா 6 மாதம்.?
மக்களை வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து விட்டு மெதுவாக பணம் அச்சிட்டு அனுப்பப்படுகிறது.ஏ.டி .எம் கள் இன்றுவரை புதிய பணம் வைக்க மென்பொருள்,இடம் மாற்றம் செய்யப்படவில்லை.

ரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல. 

இதனை நன்கு புரிந்து கொள்ள  சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.
 இன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள். 

ஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும். 
அதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். 
இந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.

புதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு  வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.
இந்தியாவில் சுமார் 2,01,861 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன.  69 கோடி ஏ.டி.எம். அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7305கோடி பணம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் இன்றைய நிலையில் சுமார் 10,000 (50ரூ) ஏ.டி.எம். இயந்திரங் கள்தான் செயல்படுகின்றன.  ரூ100ரூபாய் தாள்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் ஒரு இயந்திரத்திற்கு 2,20,000 ரூபாய் மட்டுமே வைக்கப்படுகிறது.
அதாவது 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ரூ 2200 கோடி ரூபாய்நிரப்பப்படுகிறது. ஆனால் சராசரி தேவையோ ரூ 7305 கோடி!
எனவேதான் 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் காலியாகிவிடுகின்றன. ட ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 20 லட்சம் ரூபாய் நிரப்ப முடியும். 
ஆனால்2,20,000 தான் நிரப்பப்படுகிறது. 
ஏன்?
இயந்திரத்தில் ரூ1000,ரூ500 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்கள் நிரப்ப முடியும்.ஆனால் தற்பொழுது ரூ100 தாள் மட்டுமே வைக்கப்படுவதால் இயந்திரத்தில் நிரப்பப்படும் தொகை மிகப் பெரிய சரிவை காண்கிறது.  புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை இயந்திரத்தில் வைக்க முடியவில்லை.


நாட்டின் மொத்த பணத்தில் சுமார் 86% உள்ள இரண்டு நோட்டுகளை வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் 99.8% பயன்பாட்டிலிருந்து செல்லாதது என்று அறிவிக்கும்போதே அதை ஈடு செய்யும் மற்ற நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விடாமல் ஏதுமறியா அப்பாவி மக்களை அலைக்கழித்தது அவரின் திட்டமிடலில் உள்ள அறியாமையை காட்டுகிறது.

இரண்டு நாட்களில் நிலமை சீரடைந்துவிடும் என்று பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து இன்னும் 50 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று இன்னொரு குருட்டு பொய்யை சொல்லியிருப்பது அவரின் திட்டம் குறித்து அவருக்கே தெளிவான பார்வை இல்லாததை காட்டுகிறது.

  வாரத்திற்கு வெறும் ரூ 20000 என்று அறிவித்து பின்னர் அதை ரூ 24000 என்று அதிகரித்தது. மற்றும் இரண்டு நாட்கள் கழித்து மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பின்பு மூன்று நாட்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் அதை ஒருவாரம் என்று மாற்றியது.
இவை, மக்களின் அவசியங்கள் / தேவைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கியதை காட்டுகிறது.
இன்னமும் பல கோடி மக்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் 90% மையமாக கொண்டு ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தியதும், அதற்கு சரியான மாற்று வழிகளை கொடுக்காததும் அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய சாதாரண அக்கறையை கூட கேள்விக்குறி ஆக்குகிறது.
இத்தனை குளறுபடிகளையும் செய்துவிட்டுஇத்திட்டம் கொண்டுவந்ததற்காக தன்னைத்தானே செல்பி எடுத்து புகழ்ந்து கொள்ளும்  மோடி பொது கூட்டங்களில் மூன்றாம்தர அரசியல்வாதியை போல கண்ணீர்விடுவதும், தன்னுடைய பாதுகாப்பையே உலக அரங்கில் கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு திறனையே வலிமையற்றதாக கருத வைப்பதும்.

மீண்டும் மீண்டும் தன் கட்சிகாரர்களை வைத்து நாட்டில் எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பொய் சொள்வதும்.அதை வியா அவர் கடசியினர் பணம் செல்லாது அறிவிப்பால் உயிரிழந்த ஏழை மக்களை பார்த்து  130 கோடி மக்களில் 16 பேர் செத்தால் என்ன குறைந்துவிட போகிறது என்று வக்கிரமாக பேட்டி கொடுப்பதும் எவ்வளவு பெரிய அசிங்கம்.அவமானசெயல்.
வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒருமக்கள் தலைவரை  உருவாக்கிவிடாது.  அத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதில்தான் திறமை இருக்கிறது.
அதில் மோடி பட்டவர்த்தனமாக தோற்றுபோய்விட்டார் என்பது மட்டும் தான் உண்மை.
இந்திரா காந்தி வங்கிகளை தேசவுடமையாக்கினார் .கலைஞர்  கருணாநிதி போக்குவரத்தை அரசுடமையாக்கினார்.அவை மக்களுக்கு பெரும் நன்மையாக முடிந்தது.

கருப்புப்பணம் பதுக்குபவர்கள் 500,1000 மாகவா கட்டி வைத்திருப்பார்கள்?ஹவாலா மூலம் வெளிநாட்டில் டாலர்களாக வங்கிகளிலும்,உல்லாச தீவுகளாகவும்,ஆடமபர ஓட்டல்களாகவும் அல்லவா இருக்கிறது.சிலருக்கு இந்தியாவிலேயே நிலம்,பங்களாக்கள்,நகைகள் மேலும் பினாமி பெயர்களிலும் சொத்துக்களாக இருக்கிறது.

கள்ளப்பணம் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்றால் அது வரும் வழியில் கண்காணிப்பை பெருக்கி தடுப்பதுதானே கள்ளப்பணத்தை தடுக்கும் முறையான வழியாக இருக்கும்.

இவை எல்லாம் தெரியாமலா அரசு இருக்கிறது.தெரிந்தும் பொது மக்களை வதைத்து தான் உத்தம புத்திரன் என்று மோடி காட்டுகிறார்.

நமது ஊர் நத்தம் விசுவநாதன்,அன்பு நாதன் வகையறாக்களே இப்படி முதலீடு செய்யும் போது பகாசுர முதலாளிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.

ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம் என்று சொல்லி விட்டு  ஒரு வாரம் கழித்து தேர்தல்  "மை" வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது.

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதை  தடுக்க விரலில் மை என்றால், கடந்த 7 நாட்களாக அவ்வாறு செய்யாமல் திடீர் புத்தி வரக்காரணம்.?

போதுமான பணம் புழக்கத்தில் விட வங்கிகள் ,அரசு கைவசம் இல்லாததுதானே ?
சென்ற வருடம் வாராக் கடன் இனி வசூலிக்க முடியாது என்று பெரும் தொழிலதிபர்களிடம்,கார்பரெட்களிடம் வாங்காமல்  வங்கிகள் கைகழுவிய  பணம் 1.14 லட்சம் கோடி..
  
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத அடையாள மை வைப்பதற்கான முயற்சியில் மோடியின் பாஜக அரசு இறங்கியுள்ளது. இது, பொதுமக்களை கருப்புப்பணம் வைத்திருப்பவர்களாகவும் ,ஊழல்வாதிகளாகவும் காட்டி அவர்களிடமிருந்து நாட்டை மீட்டியதாகவும் மோடி அரசு வைக்கும் உழைக்கும்,ஒழுங்காக வருமானவரி கட்டியவர்கள் வருமானமே இல்லா ஏழைகள் மீது கரும் புள்ளி.
ஆனால் மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு என்பதை அவருக்கு வாக்களித்த மக்களுக்கு  காட்ட்டிக்கொடுக்கும் அவமானப் புள்ளி.
மொத்தத்தில் இப்போது மோடி அரசு ஒரு( கரும்)புள்ளி ராஜா. 
ஒரு 120 கோடிகளுக்கு மேல் மக்களை கொண்ட இந்தியாவின் பிரதமர் மோடி தனது வீரத்தை காட்ட தொலைக்காட்ச்சியில் தோன்றியவுடனே 500.1000 தாள்கள் செல்லாது என்றும்,அவை இனி குப்பை காகிதங்கள் என்றும் பொறுப்பின்றி கூறியதால் விபரம் தெரியாமல் கந்து வட்டிக்கு விவசாயம்,மக்கள் திருமணம்  கடன் வாங்கி 500,1000 தாள்களாக வைத்திருந்தவர்கள் இதுவரை 18 பேர்கள் மாரடைப்பால் , தற்கொலை செய்தும் இந்த மத்திய பாஜக அரசால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்


ஒட்டு மொத்த  பணக்காரர்கள் அல்லாத மக்களனைவரையும்  வங்கி வாசலில் காத்திருக்க வைத்தது போதாது என்று கரும் புள்ளி,குத்தி அனுப்பி வைத்த மோடியின் செயல் எழுப்பும் அதிர்வுகள்,மோசமான விளைவுகள் விலக குறைந்தது மூன்று மாசமாவது ஆகும்.

காரணம் இந்த மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள்,பொருளாதார நிபுணர்களின்(?) குளறுபடிகள்தான்.

1,ஆறு மாத ஆலோசனையில் என்ன ஆலோசிக்கப்பட்டது?தடையினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றா?பண முதலைகளும் மோடி நண்பர்களுமானவர்கள் பாதிக்கபபடக் கூடாது என்றா?

2, தடை செய்யப்படப் போவது 500,1000 தாள்கள்.ஆனால் அதை அச்சிட்டாமல் 2000 தாட்களை அச்சிட உத்திரவிட்டது எந்த பொருளாதர நிபுணர். அம்பானி,அதானிக்கு 1000 தாட்களை விட 2000 தாட்களை பதுக்குவது வசதி என்பதுதானே இதன் மூலக் காரணம்?

3,ஏடிஎம் களில் வைக்க முடியா அளவில் வடிவமைத்தது கூட பரவாயில்லை.அதை வைக்க ஏடிஎம்களை,மென்பொருளை தயார் நிலையில் வைக்காதது ஏன்?

4,தடை அறிவிக்கும் முன்னர் வங்கிகளில் புதிய பணத்தை தயாரக வைக்க வேண்டும் என்ற அடிப்படை ,கூட தெரியாதவர்களதான், பொது அறிவு இல்லாதவர்கள்தான் ஆட்சியாளர்கள்,அதிகாரிகளாக இருக்கிறார்களா?

அடுத்த நாட்டுக்காரன் பார்த்தா இந்தியாவை பற்றி என்ன நினைப்பான்.

5,ஒரு பொறுப்பான பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இவ்வளவு பெரிய,மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் தடையை அறிவிக்கும் முன்னர் இதை எல்லாம் கேட்டு தெரிந்து ஆலோசித்திருக்க வேண்டாமா? மேலும் எடுத்தவுடனே இனி 500,1000 செல்லாது.

அவை வெறும் தாள்கள்.குப்பை காகிதங்கள் என்று பொறுப்பின்றி சொல்லலாமா?

அதனால் உடனே 6 பேர்கள் மாரடைப்பிலும்,இதுவரை 32 பேர்கள் இறந்திருக்கிறார்கள்.இதெல்லாம் உங்கள் சர்ஜிக்கள் ஸ்டரைக்  கொலை கனக்கில்தான் சேரும்.

தடையினால் உண்டாகும் நிலமையை முன்கூட்டியே திட்டமிடாததால் தினசரி ஒரு அறிவிப்பு.கடைசியில் மைவைப்பதுவரை வந்து விட்டது.முதலில் 4000.பின் படிப்படியாக பணம் மாற்றும் தொகை கூடும் என்று கூறிவிட்டு தற்போது 4000ம் ,2000மாக குறைக்கப்படடுள்ளது.

சாமான்யனிடம் கூட திருமணம்,விவசாயம் என்கிறபோது கடன் வாங்கிய பணம் பல லட்சங்களில் இருக்கும் என்பது 10 லட்சத்தில் சட்டை போடும் பிரதமருக்கு தெரிந்திருக்க வேண்டாமா.அவன் பணத்தை அவன் எடுக்க அவன் மீது கரும்புள்ளை,செம்புள்ளி குத்துவது ஒரு நல்ல,மக்கள் அரசுக்கு அவாமானமில்லையா?

இது நம் நாட்டையே உலக அளவில் தலை குனிய வைக்கும் என்பது தெரியாதா.இதுதான் மோடி,பாஜக,ஆர்.எஸ்.எஸ் ஆட்சி முறையா?

தற்போதைய பணமுடக்கம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கப்போகிற மத்திய அரசு தனது பட்ஜட் கூட்டத்தொடரை ஜனவரி மாதமே ஆரம்பிக்கும் என்றும் பிப்ரவரி 1ம் தேதியே பட்ஜட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

வழக்கம் போல வழ,வழ  பட்ஜட்டாக இல்லாமல் மோடி,அருணஜெட்லீ கொண்டுவரப்போகும் இப்  பட்ஜட் கடுமையான பட்ஜட்டாக இருக்கப்போகிறது என்ற எண்ணம் பொதுவாக உண்டாகியுள்ளது.

ஏற்கனவே நொந்து போயுள்ள பொதுமக்கள்  இந்த பட்ஜட்டில் மேலும்  பிழிந்து எடுக்கப்பட்டு நோக வைக்கப்படுவார்கள் .
அதற்கு இந்தியா வல்லரசாகிறது,ஜெய்ஹிந்த் என்று கரணம் சொல்லப்படும்.

வழமை போல் நடுத்தட்டு மக்களுக்கு மேலானவர்கள் மேன் மேலும் உயரவும்,நடுத்தட்டு வர்க்கம் கீழே போய் ஏழைகளாக்கக்ப்படுவதும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இனி ஏழை,பணக்காரன் என்ற இரு தட்டுதான் நடுத்தர வர்க்கம் இனி இராது.என்று  ஒரு மெல்லிய அச்சுறுத்தல் உருவாகி  இருக்கிறது.

மோடி க்கு முந்தைய பாஜக அரசு வாஜ்பேயினால் இயக்கப்பட்டது.அப்போது பொது மக்கள் நலன் கண்காணிக்கப்பட்டது.
அதற்கு அது கூட்டணி கட்சிகளால் தாங்கப்பட்டது காரணம் ஆகும்.

ஆனால் இன்றைய மோடி அரசுக்கு போதிய பெரும்பான்மை இருக்கிறது.மேல் சபையிலும் ஆட்களைஅவரவர் சொந்த தேவைகளை பூர்த்தி செய்து அதிமுக போன்றவர்களை  கையில் வைத்துள்ளது.
எனவே மோடியின் வெறியாட்டம் தவிர்க்க முடியாது.கடிவாளம் கைநழுவி விட்டது.

இதன் மூலம் இந்திய மக்கள் இரண்டு பாடம் பிடித்துக்கொள்ள வேண்டும்.

1,இனி எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கொடுக்கக் கூடாது.கூட்டணி ஆடசி இருந்தால்தான் பொது மக்கள் கொஞ்சமாவது பலன்களை பேர் முடியும்.

2,இனி எந்த கிறுக்கனை தேர்ந்தெடுத்தாலும் மோடி யையோ ,அவரை முன்னிறுத்தும் கட்சியையோ காப்புத்தொகையை இழக்கும் அளவு மரண அடி தோல்வியை தர வேண்டும்.

#மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்#

சனி, 12 நவம்பர், 2016

மோடியின் மக்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதல்.

உண்மையிலேயே கருப்புப்பணத்தை ஒழிப்பதுதான் அரசு விருப்பம் என்றால் அதை பெருமுதலாளிகள்,அமைசர்கள்,அரசியல்வாதிகள்,திரையுலகை சேர்ந்தவர்களிடமிருந்துதான் மோடி ஆரம்பித்திருக்க வேண்டும்.


ஆனால் வழக்கமான தீவிரவாதிகள் தடுப்பை "சர்ஜிக்கல் ஸ்டைர்க் "என்று தனது மாவீரத்தனமான செயலாக காட்டிக்கொள்ளும் மோடி தொலைக்காட்சிகளில் நேரடியாகத்தோன்றி "இனி 500,1000 ரூபாயத் தாள்கள் செல்லாது .அவை இனி வெறும் காகிதம் "என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு.அதன் பின்னர் அதை மாற்றிக்கொள்ளலாம் என்று மெதுவாக சொல்வது சரியானதா?ஒரு 120 கோடி மக்கள் உள்ள நாட்டின்   பொறுப்பான பிரதமரின் பொறுப்பற்ற அந்த பேச்சினால் இதுவரை ஐந்து ஏழைகளின் உயிர் போயுள்ளது.
இவர்கள் திருமணத்துக்கும்,விவசாயத்துக்கும்,கல்விக்கும் கந்து வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி 1000,500 ரூபாய்களாக வீட்டில் வைத்திருந்த ஏழைகள்.

பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அந்த பணம் செல்லாது,வெறும் காகிதம்தான் இனி என்று கூறினால்?மாரடைப்பில் மூவரும்,தூக்கில் இருவருமாக மோடியரசால் "கொலை"செய்யப்பட்டுள்ளார்கள்.
பொறுப்பான பிரதமர் "ஜனவரி முதல் இந்த காகிதங்கள் செல்லாது.அதுவரை அவைகளை மாற்ற அரசு வழி செய்துள்ளது வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்" என்று பொறுப்பாக சொல்லியிருந்தால்...
இவை நடக்குமா?

பேருந்தில் ஏறியவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.உணவு விடுதியில் முன்பு தொழுநோய்க்காரர்கள் உள்ளே வராதீர் என்பது போல் 500,1000 வைத்திருப்பவர்கள் உள்ளே வராதீர்கள் என்று பலகை அறிவிப்பு.
மளிகை சாமான்கள் வாங்கி அன்றாடம் உணவு சமைப்பவர்கள் பாடு அதை விட மகா கேவலம்.20 ரூபாய் அரிசி 15 கிலோ வாங்கிவிட்டு 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்து சில்லறை மறுக்கப்பட்டு,செல்லாத பணத்துக்கு இது  கிடைத்ததே என்று அழுது வந்தவர்கள் கணக்கு தெரியுமா ,அறிவிப்பை வெளியிட்ட கையோடு இன்று ஜப்பான் உல்லாசப் ப்யணத்தில் இருக்கும் மோடிக்கு?

இந்த அறிவிப்பு கள்ளப்பணத்தை வேண்டுமானால் தற்போது மட்டும் அல்லது பாகிஸ்தான் மீண்டும் அச்சடிக்கும் வரை தடுக்கலாம்.
ஆனால் கருப்புப் பணத்தை?
அவை எல்லாம் உரியவர்களுக்கு முன்பே தகவல்கள் போய் நகைகள்,தங்கக் கட்டிகள்,நிலங்களாக மாறிவிட்டன.அம்பானி,அதானி போன்ற பெரும் முதலைகள்,அமிதாப் போன்ற திரையுலக நாயகர்கள்,அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் பணங்கள் எல்லாம் ஏற்கனவே அயல் நாடுகளில் வங்கிகளிலும்,உல்லாச தீவுகள்,ஓட்டல்களாகத்தான் உள்ளன.

இதோ  பாஜக செய்தி தொடர்பாளரும் டெல்லி MP யும் ஆன மீனாட்சி லேகி பேசிய காணோலி அதில் , 'கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகச் சொல்லும் மத்திய அரசின் திட்டம் நிச்சயம் வெற்றிபெறப்போவதில்லை; மாறாக அவை புதிய வடிவில் இன்னும் பாதுகாப்பாகவே புழங்கப்படும். மோடியின் அறிவிப்பால் வங்கி கணக்கு வைத்திருக்காத 65% பாமர மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்." என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பணத்தை இறக்க,மக்களிடம் புழக்கத்தில் கொண்டுவர,பழைய 500,1000ங்களை செல்லாததாக்க  பல வழிகள் உள்ளன.
மக்கள் புழங்கும் இந்தப்பணங்கள் கடைக்காரர்கள் மூலம் வியாபாரிகள்,மொத்த வியாபாரிகள் என்று அலைந்து கடைசியில் வங்கிக்குத்தான் வரும்.கருப்புப் பணம் மட்டுமே அன்பு நாதன் போன்றவர்கள் மூலம் கிடங்குகளுக்குப் போய் வெளிநாடு வங்கிகள்,தீவுகள் என்று மாறும்.

பொது மக்கள் மூலம் வங்கிகளை அடையும் 500,1000 தாள்களை அப்படியே வங்களில் முடக்கி விட்டு பணம் எடுப்பவர்களுக்கும்,ஏ.டி.ஏம்,களிலும்  புதிய கரன்சிகளை மூன்றாம் பேருக்கு தெரியாமல் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு தகவல்தராமல் புழக்கத்தில் விட்டு விட்டு,பழைய  கரன்சிகள் முந்தைய 2,5ரூபாய்,கிழிந்த ரூபாய் தாட்கள் போல் மக்களிடம் இருந்து மறைந்த பின்னர்,அரசு இனி 500,1000 செல்லாது .மாற்ற வேண்டியவர்கள் இத்தனை நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளுங்கள் என்றால் கருப்புப் பண முதலைகள் திணறும்.

கருப்பு இரட்டிப்பு வருமான வரியுடன் வெள்ளையாகும்.மற்ற கிடங்கு,கண்டெய்னர்கள் மக்கி கரையான் தின்னும்.
ரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல. 

இதனை நன்கு புரிந்து கொள்ள  சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.
 இன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள். 

ஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும். 
அதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். 
இந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.

புதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு  வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.ஏடிஎம் களிலும் வைக்கப்படவில்லை.நான்கு நாட்களாக ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.
என்ன நிர்வாகம்,என்ன நடைமுறையாக்கம்.இதனால் பாதிக்கப்படுபவர்கள்.நடுத்தட்டு வர்க்கம்,பாமரர்களே.
ஆனால் இங்கு கருப்புப் பண முதலைகளுக்குத்தான் அரசின் ஆறு மாத திட்டமிடல் முதலிலேயே தெரிந்திருக்கிறது.அவர்களுக்கு அவகாசம் கொடுத்த பின்னரே பாமரர்கள் மீது மோடி தாக்குதலை தொடங்க்யிருக்கிறார்.

அதற்கு நல்ல உதாரணம்.இந்த மோடியின் வீரச்செயலை பாராட்டி அறிக்கை விட்டவர்கள் பெரும் பணக்காரர்கள்,அமிதா பச்சன்,ரஜினிகாந்த் போன்ற திரையுலக வருமானவரி சோதனைக்குட்பட்டவர்கள்தாம்.
எதிர்த்து பேசியவர்கள்,கண்டனம் பதிந்தவர்கள் பாமர மக்கள்,ஏழைகள்,ஒழுங்காக வருமான வரி கட்டும் மாத சம்பளக்காரர்கள்,அரசு ஊழியர்கள்.

இன்று கூலி வேலை,கொத்த வேலை பார்ப்பவர் கூலியாக 500,1000ங்களில்தானே ஊதியம் பெறுகிறார்கள்.
முதலில் மோடி கருப்புப்பண முதலைகளுக்கு எதிராக பெரும் முதலாளிகளை தனது நண்பர்களாக் கொண்டவர் அவர்களுக்கு எதிராகவே  கடும் நடவடிக்கை எடுத்துள்ளாரே என்று எண்ணியவர்களுக்கு தற்போது மோடி எடுத்திருக்கு நடவடிக்கை வழக்கம் போல் அவர்களுக்கு ஆதர்வாகவும்,கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராகவுமே அமைந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி யுள்ளது.

கருப்புப்பணமும் ஒழியாது.கள்ளப்பணமும் மறையாது.அசல் ரூபாய்தாள்களுக்கு குறையாமல்  கள்ளப்பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் இந்த புதிய தாள்களை அச்சிட எத்தனை நாட்களாகிவிடும்.
சொல்லப் போனால் தற்போது மோடி அச்சிட்டு வங்கிகளுக்கு அனுப்புவதற்குள் பாகிஸ்தான் ஒஉழக்கத்தில் போலிகளை விட்டு விடும். அங்கிருந்து வருவதை தடுக்க வக்கில்லாத மோடி அரசு மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துகிறதா என்ன?

ஆனால் அதில் எரிவது கருப்புப்பண மூட்டை பூச்சிகள்அல்ல,எப்போதும் போல் அஞ்சுக்கும்,பத்துக்கும் அலைகிற மக்கள்தான்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

ரத்தக்கண்ணீர்தான்

 நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது. 

* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். 
* ஏ.டி.எம்.க்கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நவம்பர் 9ம் தேதி வங்கிகள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.
புதிய ரூபாய்கள் 

* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. 
கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு கொடுத்த இந்த திடீர் அறிவிப்பு மூலம் தற்போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணக்காரர்கள் அல்ல.
அன்றாடங்க்காய்ச்சிகள் தாம்.
இன்றைய நிலையில் முந்தைய 10,50 ரூபாய் நிலையில் அன்றாடம் அவர்கள் கையில் புழங்குவது 500/,1000/-ரூபாய் தாட்கள்தான்.
அவர்கள்தான் இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்பட்டார்கள்.500/-தாளை வைத்து பேருந்தில் ஊர் திரும்ப காத்திருந்தவர்கள் இறக்கி விடப்பட்டார்கள்.
உணவகத்தில் இரவு,காலை சாப்பாடு சாப்பிட 500/ -வைத்திருந்தவர்கள் பட்டினி.
பெட்ரோல் போடுமிடங்களில் செல்லாமல் போன 500/-தாட்களை வாங்க  கூறினாலும் இரவு 8 மணிக்கு மேல் வாங்கமறுத்து விட்டார்கள்.ஆனால் ரஜினி காந்த் போன்றவர்கள் அறிவிப்பு வெளியான ஐந்து நிமிடத்திலேயே வாய்ஸ் கொடுத்துள்ளார்கள்.
மளிகைக்கடையில் பொருட்களை வாங்க முடியாமல் திணறுகிறார்கள்.அப்படி உள்ளவர்கள்தான் உடனடியாக இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்த்து பேசினார்கள்.
அதை எதிர்ப்பவர்கள் கையிருப்பே இரண்டு 500களும்,ஒரு 1000முமாகத்தான் இருக்கும்.
அவர்களுக்கு இந்த இரு நாட்களைக்கடத்துவது பயங்கரகனவு.பணத்தை மாற்ற வங்கியில் காத்திருப்பார்களா.அடுத்த வேலை சோற்றுக்கு கூலி வேலைக்கு போவார்களா?
இந்ததிடீரை மோடியின்  மத்திய அரசு  வேறுவிதமாக செய்திருக்கலாம்.
பொதுமக்கள் கடைகளில் வாங்கும்  கொடுக்கும் பணம் சிறு வியாபாரி,பெரு வியாபாரி,தயாரிப்பாளர் கடைசியில் வங்கி என்றுதான் போகிறது. அங்கே வங்கியில் இந்த 500/-,1000/- நிறுத்தி வைத்து விட்டு,ஏ.டி.எம்,,பணம் எடுப்போர்களுக்கு புதிய 500/-100/-தாள்களை கொடுத்து வந்தாலே இரண்டு மாத்ததில் பழையரூபாய்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து விடும்.அப்படித்தானே இப்போது ஒரு ரூபாய்,ஐந்து ரூபாய்கள் காணாமல் போனது.
அதன் பின்னர் பதுக்கி வைத்திருப்பவர்கள் பழைய தாள்களை மாற்ற கெடு விதிக்கலாம்.
இப்படி செய்தால் பாமர மக்கள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.இரண்டு நாளில் ஊருக்கு செல்லமுடியாமலும்,ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் சாப்பிட முடியாமலும்,மளிகை சாமான்கள் வாங்க தொழிலாளர்கள் துன்பப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
மத்திய அரசு செய்யும் சீர்திருத்தம் தற்போதைக்கு தேவையானதாக இருப்பினும்,அதை நடை முறைபடுத்திய விதம் சின்னப்புள்ளதனமாக அமைந்து விட்டது.
இதனால் வீண் பதற்றம்,விபரமில்லா பாமர மக்களிடம் தேவையற்ற பயம்.அன்றாட வாழ்க்கை முடக்கம் உண்டாகிவிட்டது.
ஆனால் கணக்கில் கறுப்பை ஏற்றியவர்கள் அரசு திட்டத்தை ஆதரித்து அறிவித்து வருகிறார்கள்.மத்திய அரசு அமைசர்கள்,அதிகாரிகள்பாஜக ஆதரவு பணமுதலைகள்   இந்த அறிவிப்பு வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே தயாராகியிருப்பார்கள்.
கறுப்புப் பணத்தை இந்த அறிவிப்பு முற்றிலுமாக வெளிக்கொணருமா என்றால் இல்லை.கொஞ்சம் பதுக்கியவர்கள் துணிந்தவர்கள் தங்களைப்பற்றிய செய்தி வராது என்பதால் கறுப்பை வங்கியில் செலுத்தி,வருமானவரி செலுத்தி வெள்ளையாக்கி விடுவார்கள்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியவர்களும் தப்பிவிடுவார்கள்.
ஆனால் 3000 கோடிகள் ,கன்டெய்னர்களில் ஆயிரம் ரூபாய் தாட்களாக வைத்துக்கொண்டு இருப்பவர்கள் ,அன்புநாதன் தயவிலும் ,சிவாஜி பட சுமன் பாணியிலும்  ஒளித்து வைத்திருக்கும் தலைகள்தான் பாவம். 
ரத்தக்கண்ணீர்தான் .
மெல்லவும் முடியாது ,மாற்றவும் முடியாது.யாரிடமும் தங்கள் சோகத்தை சொல்லவும் முடியாது.மாற்றினால் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று சொல்ல வேண்டும்.மக்களுக்கு சொல்வதைப்பற்றி கவலை இல்லை.
தலைமைக்கு தெரிந்தால் .?
ஒரே நாளில் ஓட்டாண்டியான நல்லநேரம் எம் ஜி ஆர் கதைதான்.நிலைதான்.நகைகள்,நிலம்,பங்களாக்கள் மட்டுமே மிஞ்சும் .
மற்றபடி வீடு முழுக்க கழிவு துண்டு தாள்கள்தான்.மிக்சர் ,வடை கடைக்காரன் கூட அளவு சரியில்லை என வாங்க மாட்டான்.பஜ்ஜி எண்ணையையும் உரியாது .
என்னும் போது நமக்கே வலிக்கிறது.

புதன், 2 நவம்பர், 2016

சிமி

  • உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் கடந்த 1977-ஆம் அண்டில் சிமி இயக்கம் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் முகமது அகமதுல்லா சிதிக்கி இதன் ஸ்தாபன தலைவராக அறியப்படுகிறார்.
  • ஆரம்ப காலங்களில் ஜமாத் இ இஸ்லமி இயக்கத்தின் மாணவர் அமைப்பாக தெற்காசிய பயங்கரவாத தளத்தால் இனம் காணப்பட்ட சிமி அமைப்பு, கடந்த 1981- ஆம் ஆண்டு தனியாக பிரிந்து சென்றது.
  • கடந்த 27 செப்டம்பர் 2001-இல் சிமி இயக்கம் முதல் முறையாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் பலரும் பொடா, தடா போன்ற பல கடும் சட்டங்களினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • ஒரு தீவிர இஸ்லாமிய உல்கம் அமைப்பதே சிமியின் முக்கிய  குறிக்கோளாக இருந்து வருகிறது.
  • சிமி இயக்கத்தின் மீதான தடை செப்டம்பர் 2003-இல் விலக்கப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அரசின் பரிந்துரையின்படி, சிமி இயக்கம் பிப்ரவரி 2006-இல் மீண்டும் தடை செய்யப்பட்டது.
  • கடந்த அக்டோபர் 2008-இல் டெல்லி உயர் நீதிமன்றம் சிமி இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய போதிலும், அதற்கு மறு நாளே மீண்டும் இந்த இயக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
  • இதனிடையே, ஜமாத் இ இஸ்லமி இயக்கத்தின் எஸ்.ஐ.ஓ என்ற தனது சொந்த மாணவர் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • தங்களுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று எப்போதும் சிமி இயக்கம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய பிரதேச சிறைச்சாலையிலிருந்து சிமி இயக்கத்தினர் தப்பிப்பது இது முதல் முறையல்ல .
  • கடந்த 2013-ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் காண்ட்வா மாவட்ட சிறைச்சாலையிலிருந்து சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட 7 பேர், அங்கிருந்த 2 சிறை பாதுகாவலர்களை தாக்கி விட்டு, சிறைக் கழிப்பறை சுவரை உடைத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...