ஞாயிறு, 14 அக்டோபர், 2018

அவிழும் கோவணங்கள்....?

ஜெயா  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இளம் வயதில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்துபேசி, பார்வையாளர்கள் அனைவரையும் கதிகலங்கவைத்தார் நடிகை வரலட்சுமி.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று (ஞாயிறு) முதல் துவங்கியிருக்கிறார் வரலட்சுமி.
‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பில் வெளியாகும் அந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில்  நடைபெறும் அநீதிகள் குறித்து விவாதிக்கப்படுமென்று தெரிகிறது.

அதன் முதல் எபிசோடில் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் பலாத்காரம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்  குற்றவாளிகளுக்கு நீதிமன்றத் தண்டனையை  விட தெருவில் நிற்கவைத்து தரும் தண்டனைகளே பயத்தைக்கொடுக்கும் என்று பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்தார்கள். 
ஒருவர் சம்பந்தப்பட்ட நபர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து அவர்களது ஆண்குறியில் ஆசிட் அடிக்கவேண்டும் என்று உச்சக்கட்ட அதிர்ச்சி அளித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் தான் ஏன் இந்த நிகழ்ழ்சியை நடத்த ஒப்புக்கொண்டேன் என்று விளக்கமளித்தார்  வரலட்சுமி.
 " நானே பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைதான். என்னுடைய13 வயதில் ஒரு டிரைவர், இரண்டு மேனேஜர்கள், ஒரு செக்ரட்டரி மற்றும் ஒரு தாத்தாவில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டேன்’ என்று ஒரு பகீர் உண்மையை உடைத்தார்.
இதைக்கேட்ட பார்வையாளர்கள்  அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவிழும் கோவணங்கள் 
அப்போதைய குஜராத் முதல்வரும்... குஜராத் கல்லூரி பெண்ணும் தொடர்புடைய இந்த metoo எப்பொழுது வெளியே வரும்??

‘ஒருவன் பத்ம பூஷன் கனவில் இருந்தபோது, அவன் கட்டியிருந்த கோவணமும் களவு போனது’ 
                                                                                                                                                                      -வைரமுத்து 

சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியுமான சிந்துஜா ராஜாராம், கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார். இவர் கலிஃபோரினியாவில் வசித்துவரும் தமிழராவார்.
’முதலில் சின்மயிக்கு ஆதரவாக குரல்கொடுக்கமட்டுமே எனது பெயரை சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன்.

 பின்னர் அவரால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்களை ஓப்பனாக பேசு என்றதால் சொல்கிறேன். 
அவரால் செக்ஸ் தொல்லை கொடுக்கப்பட்ட பெண்களின் பெரிய பட்டியல் இன்றும் என்னிடம் உள்ளது.
அப்போது எனக்கு 18 வயதுதான் இருக்கும் தமிழ்சினிமாவில் பாடவும் நடிக்கவும், வாய்ப்பு கிடைத்தால் இசையமைக்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். 
என் தாய் தந்தையர் பெங்களூருவில் இருந்ததால் சென்னையில் தங்குவதற்கு சரியான லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தபோது பேப்பர் விளம்பரம் பார்த்துவிட்டு, வைரமுத்துவின் ஹாஸ்டலுக்கு வந்தேன்.
அங்கு சேர்த்துவிட்டு என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டார்கள் என்று தெரிந்த்தும் தனது மன்மத வேலையைக் காட்ட ஆரம்பித்தார் வைரமுத்து. 
’வா ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்பார். உன்னை நினைத்து காதல் கவிதை எழுதியிருக்கிறேன். பெசண்ட் நகர் வீட்டுக்கு தனியே வா என்பார். 
ஒரு கட்டத்தில் தலையே வெடித்துவிடும் அளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் மெல்ல அவரது போன்கால்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன். 
என்னிடம் தவறாக நடக்கவில்லை என்று வைரமுத்து மறுப்பு தெரிவிப்பாரேயானால், என்னால் அவரது ஆபாச நடவடிக்கை குறித்து நிறைய ஆதாரங்களை வெளியிடமுடியும்’ என்கிறார் சிந்துஜா.
அப்படி என்ன ஆதாரம் வைத்திருப்பார் சிந்து?
இது என்னடா  நம்ம வைரமுத்துக்கு வந்த சோதனை.
====================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...