வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஜெயா தொலைக்காட்சி உரிமையாளர் ?

செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள். 

அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார். 
நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது. 
செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து, 18 ம் தேதி விடுதலையாகி சென்னை வந்தனர். 
நால்வரும் 22 நாட்கள் சிறையிலிருந்த இந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமானதோர் நிகழ்வுதான் தற்போது வெளியில் வந்திருக்கிறது. அதுதான் ஜெயா டிவியை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அதாவது இந்த 22 நாட்களில் ஜெயா டிவி யின் 75 சதவிகித பங்குகள் சசிகலா பெயருக்கு மாறியிருக்கின்றன. 
கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தில் Ministry of Corporate Affairs இது சம்மந்தமாக தாக்கல் செய்யப் பட்டிருக்கும் தஸ்தாவேஜீகள் அல்லது ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. செப்டம்பர் 27 ம் தேதி நால்வரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 1 ம் தேதி மாவிஸ் சாட்காம் Mavis Satcom என்ற கம்பெனி தன்னுடைய பங்கு பரிவர்த்தனையில் பெரியதோர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கோரியும், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும் நோட்டீஸ் வெளியிட்டது. (For a Board Resolution to approve transfer of shares). 
மாவிஸ் சாட்காம்தான் ஜெயா டிவி யை நடத்திக் கொண்டிருக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி 6,59,200 பங்குகள், அதாவது மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 75.8 சதவிகித பங்குகள், வெங்கடேஷ் மற்றும் மருதப்ப பழனிவேலு என்ற இரண்டு இயக்குநர்களிடமிருந்து சசிகலாவுக்கு மாற்றப்பட்ட (transfer) முடிவுக்கு இந்த நிறுவனத்தின் Board அங்கீகாரம் கொடுக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி நடைபெற்ற Board Meeting ன் நடவடிக்கைகள் அதாவது Minutes பற்றி இதனது மேனேஜிங் டைரக்டர் பிரபா சிவகுமார் கையெழுத்திட்ட குறிப்பு இவ்வாறு கூறுகிறது: 'நிறுவனத்தின் தலைவர் Board க்கு கொடுத்திருக்கும் தகவலில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை மாற்றிக் கொடுக்கும், மனுக்களை Form நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். 
இந்த மனுக்களை தீர ஆராய்ந்த Board இந்த பங்குகளை மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதென்று முடிவு செய்கிறது. The Board after due deliberation passed the following resolution: Resolved that the approval be and hereby given to the undernoted transfers'. இதன்படி ஜெயா டிவி 1999 ல் ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து இயக்குநராக இருந்த வெங்கடேஷ் 2,19, 400 பங்குகளையும், 2006 ல் இயக்குநராக சேர்ந்த பழனிவேலு 4,39,900 பங்குகளையும் சசிகலாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள். 
இதன்மூலம் நிறுவனத்தில் சசிகலாவின் பங்குகள் 7.01, 260 ஆக உயர்ந்து விட்டது. இது கிட்டதட்ட மொத்த பங்குகளில் 80.76 சத விகிதமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பங்கு பரிவர்த்தனையின் மொத்த ரூபாய் மதிப்பு என்னவென்று குறிப்பிடப் படவில்லை. 
இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம் செப்டம்பர் 2013 வரையில் இந்த நிறுவனத்தில் சசிகலாவுக்கு எந்த பங்குகளும் இல்லை. ஆனால் 2013 - 14 கால கட்டத்தில் அப்போது இயக்குநர்களாக இருந்த மூவரிடமிருந்து 42, 860 பங்குகளை சசிகலா வாங்கியிருக்கிறார். 
இதில் முக்கியமான விஷயம் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஒருவரது பெயரில் இதுபோன்று ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதுவும் 75 சத விகித பங்குகளை மாற்ற முடியுமா என்பதுதான். இதில் சட்டப்படி தவறு இல்லையென்று கம்பெனி விவகாரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நன்கறிந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.
 'சிறையில் இருக்கும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக ஆக முடியாதென்று கம்பெனிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் எந்த சட்டப் பிரிவும் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆகவே சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு மாற்றிக் கொடுக்கப் பட்ட பங்குகள் விவகாரத்தில் சட்ட முறைகேடுகள் ஏதும் நடந்தது என்று நாம் சொல்லி விட முடியாது,' என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கம்பெணி விவகாரங்கள் மற்றும் ஷேர் மார்கெட் பற்றி நன்கறிந்த முதலீட்டு ஆலோசகர் ஒருவர். 
மற்றோர் பங்கு முதலீட்டு ஆலோசகர் சொல்லுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. 'இதுபோன்ற பங்கு பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட ஆவணங்களில் பங்குகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், (அதாவது யார் பெயரில் பங்குகள் மாற்றப் படுகிறதோ அவர்களும்) கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவிஸ் சாட்காம், பங்குகள் மாற்றப் படுவதற்கான transfer Board ன் தீர்மானத்துக்கான நோட்டீஸை அக்டோபர் 1 ம் தேதிதான் கொடுக்கிறது. 
இதற்கு அங்கீகாரம் கொடுத்த அறிவிப்பு அக்டோபர் 10 ம் தேதி இயக்குநர் பிரபா சிவகுமார் கொடுத்த அறிக்கையில் இருக்கிறது. 
அப்படியென்றால் தன் பெயரில் பங்குகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்களில் ச சிகலா எப்போது கையெழுத்துப் போட்டார்? 
அவர் செப்டம்பர் 27 ம் தேதிக்கு முன்பே கூட கையெழுத்து போட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. அந்த உண்மை தெரியாமல் நாம் எதுவும் சொல்ல முடியாது'. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், 2013 வரையில் மாவிஸ் சாட்காமில் எந்த பங்குகளையும் வைத்துக் கொண்டிராத சசிகலா 2014 அக்டோபரில் திடீரென்று 80 சதவிகித பங்குகளுக்கு எப்படி அதிபதியானார் என்பதுதான். 
சட்டப்படி சசிகலா செய்ததில் எந்த தவறும் இல்லை என்பது உண்மையாகவே இருக்க கூடும்தான். ஆனால் அஇஅதிமுக வின் ஊதுகுழலாகவும், பிரச்சார பீரங்கியாகவும் இருக்கும் ஜெயா டிவி எப்படி நன்கு திட்டமிட்ட முறையில் சசிகலா வின் கட்டுப்பாட்டுக்குள போனது என்பதுதான் முக்கியமான விஷயம். 
அதுவும் ஜெயலலிதாவும், சசிகலா வும் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. 
                                           
                                                                                              - ஆர்.மணி

சனி, 10 டிசம்பர், 2016

அயோக்கிய சிகாமணிகள்!



500,1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார் மோடி.அதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டதாகவும்.அதை மிகப்பிரம ரகசியமாக வைத்திருந்ததாகவும் மோடி,ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் நாட்டில் நடப்பதைப்பார்த்தால் அவர்கள் ரகசியம் என்ன லட்சணம் என்பதும்,அவர்கள் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் அதை ரகசியமாக வைத்து சொந்தப பணத்தை எடுத்து செலவிடவே முடியாதபடி ஆப்பு வைத்திருப்பது தெரிகிறது.
பாஜகவினர் இந்தியா முழுக்க ஆடிய திரு விளையாட்டல் இதோ:-
 8ந்தேதி ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி சரியாக ஒரு மாதகாலம் ஆகியுள்ளது. நாடே ஏடிஎம் முன் நிற்கிறது.

 ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களும், அவற்றின் பிரமுகர்களும் தான் இந்த ஒரு மாதத்திலும் அதற்கு முன்பும் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளை கையாண்டு வெள்ளையாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பீகார்

கடந்த நவம்பர் 25ம்தேதி பீகார் மாநில பாஜகவின் சார்பாக நிலம் வாங்கப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. அம்மாநில பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி, பாஜக வாங்கியுள்ள நிலம் குறித்த சர்ச்சை தேவையற்றது என்றும், நாங்கள் கடன் பெற்று நிலங்களை வாங்கியுள்ளோம் என்றும் கூறியிருந்தார். 

ஆனால் அடுத்த நாள் (நவம்பர் 26) முழு விவரமும் வெளிவந்தது. சுசில் மோடி சொன்ன கூற்றுகள் அனைத்தும் பொய் என்பது அம்பலமானது. பிரதமர் நரேந்திர மோடியின் நவம்பர் 8ந்தேதி அறிவிப்புக்கு முன்னரே ரூ.2 கோடிக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையாக பாஜக நிலம் வாங்கியதாக பீகார் மாநில வருவாய்த்துறையிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. 
அதன்படி பீகார் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ரூ.2.07 கோடிக்கு 5 இடங்களில் நிலங்களை பாஜக வாங்கியுள்ளது.

இந்நிலங்களை வாங்குவதற்காக அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட ஒப்புதல் கடித நகலும் ஆதாரமாக வெளிவந்துள்ளது. 
• பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திகா சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருமான சஞ்சீவ் சார்ஜிஸ்ஷா, மாநில துணைத் தலைவர் லால் பாபு பிரசாத், மாநில பொருளாளர் திலீப் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

பாஜகவின் மேற்குவங்க மாநில கிளையின் சார்பாக நவம்பர் 1 முதல் 8ம்தேதிக்குள் ரூ.3 கோடி ரூபாய் பாஜகவின் வங்கி சேமிப்பு கணக்கில் க/கு எண் (554510034) இந்தியன் வங்கி மத்திய கொல்கத்தா கிளையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சஞ்சீவ் காம்போஜ் நவம்பர் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்பாகவே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.2000 கரன்சி நோட்டுகளோடு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு முன்பாக பாஜகவின் மூத்த தலைவருக்கு புதிய ரூ.2000 நோட்டு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது.

கர்நாடகா

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பாஜகவின் கர்நாடக மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி 650 கோடி செலவில் திருமணத்தை நடத்தினார். 
பாஜகவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் சப்தமில்லாமல் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை புரோக்கர்களை வைத்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தின.

தமிழ்நாடு

கடந்த நவ. 26ஆம் தேதி தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள அஸ்தம்பட்டியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் (கணக்கில் வராத பணம்) பிடிபட்டது. 

பிடிபட்டவர் சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஜே.வி.ஆர். அருண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் மீதான மக்களின் விமர்சனத்திற்கு தனது முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பதில் பதிவை வெளியிட்டவர்.

. ‘தேசத்தைக் காப்பாற்ற 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கடா’ என்று மக்களை வசைபாடிய தேசபக்தர் இவர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.2 கோடி பெறுமான நிலங்களை பாஜக வாங்கியுள்ளது. இந்த நிலங்கள் கட்சியின் அலுவலக செயல்பாட்டுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2 கோடிக்கு திடீரென நிலங்களை வாங்கி குவித்திருப்பது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் எப்போதுமில்லாத வகையில் கடந்த ஐந்து மாத காலத்திற்குள் 18 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட அலுவலக செயல்பாட்டிற்காக ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆ.எஸ்.சுர்ஜேவாலா அம்பலப்படுத்தியுள்ளார். 
பாஜக தலைமையிடம் இருந்த கறுப்புப் பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்படி பாஜகவின் பொறுப்பாளர் சுரேந்திர நாத் லத் என்பவரது பெயரில் கேந்திர பாரா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது. 
கடந்த செப்டம்பர் மாதத்தில் சுரேந்திர நாத் லத் 0.23 ஏக்கர் ஜகத் சிங்பூரில் ரூ.8.25 லட்சத்திற்கும் நிலம் வாங்கியுள்ளார். அக்டோபர் மாதத்தில் பெர்ஹாம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 10,000 சதுர அடியிலான நிலம் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.

உ.பி., 
ஹரியானா

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் பாஜக நிலங்களை வாங்கி குவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக மத்திய அமைச்சர் 300 ஏக்கர் நிலங்களை ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் வாங்கி, கறுப்புப் பணங்களை வெள்ளையாக மாற்றியுள்ளார்.
கேரள மாநிலத்தில் , மக்கள் ஊழல் தொடர்பான் புகார்களை தெரிவிக்க புதிதாக இரண்டு அலைபேசி  செயலிகளை கேரள அரசு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 
சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர்  பினராய் விஜயன் , ’அரைசிங்கேரளா’ மற்றும் ’விசில் நவ்’ என்ற இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தினார். 
பின்னர் இது குறித்து அவர் , "இந்தஇரு  செயலிகளை கொண்டு மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் . இவை இரண்டும் கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் வடிவமைத்துள்ளனர்.ஊழல் தொடர்பான தகவல்களை கொடுப்பவர்களுக்கும் , குற்றவாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கும் விசில்ப்ளோவர் விருது வழங்கப்படும் "என அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக(கொடி)?


லஞ்சம் வாங்கிய மோடி?

பாஜக அரசின்  பிரதமர் என்ற முறையில், ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மிகப்பெரிய எதிரி என்று மோடி மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறார். தான் ஒரு நெருப்பு எனவும் தன்னை ஊழலும் லஞ்சமும் நெருங்க முடியாது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். 
அதையும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஊழல் இல்லாத ஆட்சிதான் தனது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பல முறைகேடுகள் நடந்தன. 
அவற்றை சில ஊடகங்கள் 2014க்கு முன்னரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
தற்பொழுது மோடியே நேரடியாக லஞ்சம் பெற்றார் எனும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பிரதான ஊடகங்கள் அதை வெளியிட மறுக்கின்றன. 
மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது சஹாரா குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் சுமார் 55.2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டுகிறார். இதே குற்றச்சாட்டை தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
எனினும் இதுவரை மோடி இதற்கு பதில் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளின் பணம் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் பைகளுக்குள் ஆழமாக ஊடுருவும் என்பதை இந்த ஆவணங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகின்றன.நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் எவரும் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது. மோடி அரசாங்கமும் இதற்கு விலக்கு அல்ல. 
அரசாங்க அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிகாரத்திற்கு அஞ்சும் ஊடகங்களின் மவுனம் மூலமும் இந்த உண்மைகளை தற்காலிகமாக மூடிமறைக்கலாம். ஆனால் மக்களிடமிருந்து நிரந்தரமாக மறைக்க முடியாது.
ஆதித்யா பிர்லா குழுமத்திடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
2013ம் ஆண்டு நிலக்கரி ஊழல் தொடர்பாக மத்தியபுலனாய்வு துறை ஆதித்யா பிர்லா குழு மத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 
அப்பொழுது ஹிண்டால்கோவின் முதன்மை அதிகாரி சுபேந்து அமிதாப்பின் அலு வலகத்தில் இருந்து ரூ 25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது கணினியில் இருந்து பல ரகசியத் தகவல்களும் கைப்பற்றப்பட்டன.
அதில் ஆதித்யா பிர்லாகுழுமம் தமது தொழில் திட்டங்களுக்கு சுற்றுபுற சூழல் தடையில்லா சான்றிதழ் பெற ‘‘ஜெ’’ (J) என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு இருந்தது. (அப் பொழுது இந்த துறைக்கு ஜெயந்தி நட ராஜன் அமைச்சர். ஆனால், ‘‘ஜெ’’ என்பது எவரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை.) மேலும் ‘குஜராத் சி.எம். (CM) – 25 கோடி – 12 கொடுக்கப்பட்டது- மீதி 13?’ எனும் ஒரு பதிவும் இருந்தது. இன்னும் ஹவாலா பணம் குறித்தும் பல விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
 இந்த விவரங்கள் லஞ்சம் – ஊழல் நடந்திருப்பதை தெளிவுபடுத்துகின்றன. எனினும் புலனாய்வுத் துறை இது குறித்து எவ்வித வழக்கையும் பதியவில்லை.
விசாரணையும் நடத்தவில்லை. மாறாகஇந்த விவரங்களை வருமான வரித்துறைக்குஅனுப்பியது. வருமான வரித்துறை ஓரளவு விசாரணையை நடத்தியது. 
சுபேந்து அமிதாப் பலமுறை விசாரிக்கப்பட்டார். குஜராத் சி.எம். எனில் யார் எனும் கேள்விக்கு அவர் குஜராத் அல்கலி கெமிக்கல்ஸ் (Gujarat Alkalis and Chemicals) என்பதையே குறிக்கும் என்று கூறினார்.
 சி.எம். (CM) என்பது எதனை பொருள்படுத்துகிறது எனும் கேள்விக்கு அவரிடம் திருப்திகரமான பதில் இல்லை. சி.எம். (CM) எனில் CHIEF MINISTER என்பதே பொருள் என்பது தெளிவு.
இதற்கு மேல் இந்த விசாரணை நகர வில்லை.வருமான வரித்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அல்லது மீண்டும் புலனாய்வுத்துறைக்கு அந்த ஆவணங்கள் மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடைபெறவில்லை. 
பிரச்சனை புதைக்கப்பட்டது. பின்னர் ஆதித்யா பிர்லா குழுமம் வருமான வரித்துறையிடம் இந்த வழக்கை முடித்துவைக்க அணுகியது. அவ்வாறு முடித்துவைக்கப்பட்டால் இந்த ஆவணங்கள் முழுவதும் மீண்டும் ஆதித்யா பிர்லா குழு மத்தின் கைகளுக்கே சென்றுவிடும். இந்த ஊழல் நிரந்தரமாக மறைக்கப்பட்டுவிடும்.
சஹாரா ஆவணங்கள்
சஹாரா ரெய்டுகள் 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. சஹாரா குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களிடமிருந்து சுமார் ரூ.137 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கும் கணினியில் இருந்து சில விவரங்கள் கைப்பற்றப்பட்டன. 
அதில் பல அரசியல்வாதிகளுக்கு தரப்பட்ட பணம் பற்றிய பதிவுகள் இருந்தன.
அதில் கீழ்கண்ட பதிவுகள் மோடிக்கு தந்ததாக விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன.30.10.2013 – ரூ. 2.5 கோடி; 12.11.2013 – ரூ.5.1 கோடி; 27.11.2013- ரூ.2.5 கோடி; 29.11.2013- ரூ. 5 கோடி; 22.02.2014- ரூ.5கோடி இது மட்டுமல்லாது மோடிக்கு மேலும் சில தேதிகளில் பணம் தரப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் மோடிக்கு தரப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. 

தேதி வாரியாக இந்த பதிவுகள் உள்ளன. மேலும் இந்த தொகைகள் முழுதும் அகமதாபாத்தில் வைத்து தரப்பட்டுள்ளன. 
இந்த தொகை ஜெய்ஸ்வால் எனும் ஒரு நபர் மூலமாக தரப்பட்டது எனவும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஹாரா குழுமம் மோடிக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான்(மத்தியப் பிரதேசம்)- ரூ.10 கோடி, ராமன் சிங்(சத்தீஸ்கர்)- ரூ 4 கோடி மற்றும் காங்கிரசின் ஷீலா தீட்சித்திற்கு ரூ 1 கோடி எனவும் பணம் தரப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் பாஜக பொருளாளர் ஷைனாவுக்கும் ரூ.3கோடிக்கும் அதிகமாக தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை துணை இயக்குநர் அங்கிதா பாண்டே எனும் பெண் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அதனை உறுதி செய்து இரண்டு சாட்சிகள் மட்டுமல்லாது சஹாரா அதிகாரிகளும் கையெழுத்து இட்டுள்ளனர். 
இந்த ஆவணங்களில் உள்ளது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதானா என்பதை உறுதி செய்யுமாறு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடிதம் எழுதினார்.
அங்கிதா பாண்டேவின் இரு வேறு கையெழுத்துக்களை ஒப்பிட்டு சஹாரா ஆவணங்களில் இருப்பது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதான் என்பதை தில்லி அரசாங்கம் தடவியல் ஆய்விக்கு பிறகு உறுதி செய்தது.இதுகுறித்து எக்னாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்ஜய் குஹா இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதியன்று அங்கிதா பாண்டேவுடன் தொலைபேசியில் பேசியபொழுது, தான் நீண்ட விடுப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தனக்கு அனுமதியில்லை எனவும் இந்த ஆவணங்கள் குறித்து ஆம் அல்லது இல்லை என்பதைச் சொல்ல இயலாது எனவும் அங்கிதா பாண்டே கூறினார். மோடியையும் இதர அரசியல்வாதிகளையும் காப்பாற்ற இந்த பெண் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பதை கூறத்தேவை இல்லை.
                                                                                                                         தொகுப்பு : அ.அன்வர் உசேன்
                                                                                                                                    ஆதாரம்: -1) Wire இதழுக்கு பிரஷாந்த் பூஷன் அளித்த பேட்டி.                                                                                                                                                     2) News click.com
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் மோடி
ஆதித்யா பிர்லா மற்றும் சஹாரா குழு மங்களின் மீது நடந்த வருமானவரித் துறையின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் கே.வி.சவுத்ரி எனும் அதிகாரி. இவர்தான் இந்த விசாரணையை குழி தோண்டிப் புதைக்க முயன்றவர் எனும் குற்றச்சாட்டு உள்ளது. இவர் அரசுத்துறைகளின் ஊழல்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்பு குழு (Central Vigilance Commission) எனும் அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
மோடி மற்றும் ஏனையோர் மீது உள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளை மறைத்த திருப்பணிக்கு பரிசாகவே இந்தப் பதவி தரப்பட்டது என்பது வெள்ளிடை மலை. ஊழலை மறைத்தவர் ஊழல் ஒழிப்பு அமைப்புக்கு தலைவர். 
என்னே மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கடமை! 
இவரின் இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூடுதல் ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்
இந்த லஞ்ச விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்பு குழு, அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை, கறுப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு, மத்திய புலனாய்வு குழு ஆகிய அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் பிரஷாந்த் பூஷன் கடிதம் எழுதினார். 
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எக்னாமிக் அன்டு பொலிட்டிகல் வீக்லியும் காரவன் பத்திரிகையும் இந்த ஆவணங்கள் குறித்து மோடி, சவுகான், ராமன்சிங், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். 
ஆனால் ஆனால் எவருமே பதில் அனுப்பவில்லை. உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதலான ஆதாரங்கள் கொண்டுவரும்படி நீதிமன்றம் கூறிவிட்டது.
=================================================================================

திங்கள், 21 நவம்பர், 2016

இதுதான் மோடியின் திட்டம் ..?

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு நிச்சயம் முட்டாள்தனமான ஒன்று கிடையாது.
இந்த எமர்ஜென்சியை அறிவிப்பதால் நாட்டில் மிகப் பெரிய சிக்கல்கள் உருவாகும். பல மக்கள் இறக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதெல்லாம் மோடிக்கோ, மோடியை இயக்குபவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
இதனால் கருப்புப் பணத்திற்கோ, கருப்புச் சந்தைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவின் பொருளாதாரத்தினை கிராமப் பொருளாதாரமாக சுய சார்புடையதாக இருக்கிறது. அதனை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதன் உட்சபட்ச நடவடிக்கையே இந்த தடை நடவடிக்கை.
சிறு வணிகர்கள், காய்கறி விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவரின் Transactionம் வங்கி மூலமாகத் தான் நடைபெற வேண்டும் என அறிவித்து அனைவரையும் வரிவருவாய்க்குள் தள்ளியிருக்கிறார்கள். இனி இவர்கள் எல்லோரும் Tax Payers.
நாட்டின் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு கடனை அள்ளிக் கொடுத்து, திரும்ப வாங்க முடியாமல் இருக்கும் வங்கிகளுக்கு ஏழை மக்களின் பணத்தினைக் கொண்டு அதனை நிரப்பும் முடிவே இது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.
சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.
இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.
1% கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம்.
நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.
இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.
நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.
தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.
ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.
இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரிyயும் கட்ட வேண்டும்.
இதை நாம் இன்றே உணர்ந்து போராட்டங்கள் செய்து நமது எதிப்பை காட்டவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறை திவோடு ஏந்தவேண்டியதுதான்....

வியாழன், 17 நவம்பர், 2016

மோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.?

இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம்.

அதைவிட இந்திய மக்கள் தினம் என்று வைத்து விடலாம்.யார் ஆட்ச்சிக்கு வந்தாலும்  ஒன்றும் செய்யாமல் பணமுதலைகளுக்கு மட்டுமே ஆட்சி ,அதிகாரத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளை மீண்டும்,மீண்டும் வாக்களித்து  ஆடசியில் அமர்த்தும் சகிப்புத்தன்மை ஆப்ரிக்க நாடுகளில் கூட இருப்பதாக தெரியவில்லை.

அங்கு கூட சிறு குழுக்களாக பிரிந்து ஆயுதம் தாங்கி போராடியே வருகிறார்கள்.
இந்திய மக்களின் சகிப்புத்தன்மையை இன்று உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார் மோடி.அவரது ஆலோசகர்களான ஆர்.எஸ்.எஸ் ,கூறுகிற ஆடசி முறையை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரப்படி ஆடசி நடக்கிறது.

500,1000 செல்லாது என்பது கள்ள,கருப்புப்பணத்தை ஒழித்து விடுமாம்.இது அகல மார்பு பிரதமர் மோடியின் முலையில் உதித்து ஆறு மாதம் வியூகம் அமைத்து கள்ள,கருப்புப்பணத்துக்கு  நடத்தப்பட்ட தாக்குதலால்.

இதை செய்ததால்கள்ள,கருப்புப்பணம்  பலர் மோடியை கொல்லும் எண்ணத்தில் கையில் கத்தியுடன் அலைகிறார்களாம்.

இன்று 4000 மாற்ற வரிசையில் ஊழல் செய்தவர்கள்தான் நிற்கிறார்களாம்.
எவ்வளவு ஏமாற்றுத்தனம்.இதை செய்தியாக வெளியிட ,பரபரக்க வைக்க ஒரு ஊடக கும்பலும்,அறிவுஜீவிகள் (?)கும்பலும்,சமூக ஆர்வலர் கும்பலும்,பொருளாதார நிபுணர்களும் களமிறங்கி மோடியின் செயற்கரிய செயலை தொலைக்காட்ச்சிகள்,நாளிதழ்களில் பாராட்டி,ஆராதித்து வருகிறார்கள்.

500,1000 செல்லாது என்று அறிவித்தால் 1946 இல் அன்றைய அரசு அறிவித்தது.
அதன் பின்னர் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போய் விட்டதா?
அதன் பின்னரும் அப்படி ஒரு முறை அறிவித்தனர் பின்னரும் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போகவில்லையே.
ஏன்?
முதலில் கள்ள ,கறுப்புப்பணம் எப்படி வருகிறது என்பதை அறிந்து அதை அரசு தடுக்க வேண்டும்.அதற்கான எல்லா அதிகாரமும் அதனிடம் மட்டும்தான் உள்ளது.
500,1000 வைத்திருக்கு அப்பாவிகளிடம் அல்ல.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால் மோடி போன்று அரசியல் செய்யும்  அரசியல்வாதிகள்,பெரும் வணிகர்கள்,கார்பரேட்கள்  ஆனால் அவர்கள் யாரும் ஆட்ச்சியாளர்களாய் அருகில் இருக்கிறார்கள்.அதிலும் இதுவரையில் இருந்த அரசியல் தலைவர்களை விட மோடிதான் பகிரங்கமாக பணமுதலைகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்,திட்டங்கள் தீட்டுகிறார்,ஆட்சியையே நடத்துகிறார்.
அதானிக்கு 2000கோடிகள் வங்கிகளில் கடன் கொடுக்க சொன்னது முதல் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் குத்தகைக்காக நேரடியாக ஆஸ்திரேலியா சென்று பேசியது,பயந்த திட்டத்திலேயே இல்லா பாகிஸ்தானில் இறங்கி அதானி தொழிலுக்கு தரகு வேலை பார்த்தது என்பது முதல்,அம்பானி ஜியோவுக்கு விளம்பர தூதராக போஸ் கொடுத்தது வரை பட்டியல் உள்ளது.
பின் எப்படி அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணத்தை எடுத்து இந்திய மக்கள்தலைக்கு 12 லட்சம் வாங்கிக்கணக்கில்போடுவார்?
அமிதாப் உட்ப்பட்ட பெருந்தலைகள் பனாமா வங்கிகளில் குவித்த கோடிகள் ஆதாரத்துடன் வெளிவந்ததற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?அமிதாப்புக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆலோசனைதான் நடத்தப்பட்டது.
இந்த கருப்புப்பணம் ,கள்ளப்பணம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எதிர்ப்பான கருத்து கிடையாது.
பொது மக்களை பொறுத்தவரை அவை இரண்டுமே அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் .ஆனால் அரசியல்வாதிகளுக்கும்,ஆள்வோருக்கும் அது தேர்தல்தோறும் வைக்கப்படும் பரப்புரை வாக்குறுதி மட்டுமே.
மோடி அரசு தற்போதைய கருப்புப்பணம்,கள்ளப்பணம் ஒழிப்பு ,500,1000ரூபாய்த்தாள்கள் ஒழிப்பு எல்லாம் சரிதான்.தேவையானதும் கூட.
ஆனால் அதை அவர் நடைமுறை படுத்திய விதம்தான் துக்ளக் ஆட்ச்சியை விட முட்டாள்தான் நிறைந்தது.அதைவிட கேவலம் அதை குறிப்பிட்ட சிலர் வானளா வ  புகழ்வது.   குமுதம் ரிப்போர்ட்டர் மெகா ஆ த்மா என்கிறது.கல்கி உலகநாயகன் மோடி என்கிறது.(கமல் பட்டத்தை களவாடி)தினமலர் தினசரி வாழ்த்துப்பா பாடுகிறது. 
முதலில் செல்லாது என்று அறிவிக்கப்படும் பணத்துக்கு பதிலாக புதிய பணத்தை அச்சிட்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.அவைகளை புழக்கத்தில் விடப்போவதாக கூறி எல்லா வங்கி கிளைகளுக்கும் அனுப்பி தயாராக வைத்திருக்க வேண்டும் .இன்றைய அன்றாடம் காய்ச்சிகளுக்கு  பணம் காய்க்கும் மரம் ஏ.டி .எம்,கலீல் அப்பணம் அடுக்கி வைக்கும் விதமாக இடம்,மென்பொருள் எல்லாமே தயாரித்து வங்கிகளுக்கு அவற்றை பொறுத்த கூறியிருக்க வேண்டும்.
ஆனால் இவை எதுவுமே மோடி அரசால் செய்யப்படவில்லை.இதற்கு 6 மாதம் ஆலோசனை,திட்டமிடல் செய்தார்களாம்.அப்படி என்ன திட்டமிட்டார்கள்?

பெரும் பணமுதலைகள்,கன்டெய்னரில் பணம் கடத்துபவர்களுக் பணம் மாற்றிக்கொள்ளும்  கால அவகாசம்தானா 6 மாதம்.?
மக்களை வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து விட்டு மெதுவாக பணம் அச்சிட்டு அனுப்பப்படுகிறது.ஏ.டி .எம் கள் இன்றுவரை புதிய பணம் வைக்க மென்பொருள்,இடம் மாற்றம் செய்யப்படவில்லை.

ரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல. 

இதனை நன்கு புரிந்து கொள்ள  சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.
 இன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள். 

ஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும். 
அதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். 
இந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.

புதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு  வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.
இந்தியாவில் சுமார் 2,01,861 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன.  69 கோடி ஏ.டி.எம். அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7305கோடி பணம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் இன்றைய நிலையில் சுமார் 10,000 (50ரூ) ஏ.டி.எம். இயந்திரங் கள்தான் செயல்படுகின்றன.  ரூ100ரூபாய் தாள்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் ஒரு இயந்திரத்திற்கு 2,20,000 ரூபாய் மட்டுமே வைக்கப்படுகிறது.
அதாவது 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ரூ 2200 கோடி ரூபாய்நிரப்பப்படுகிறது. ஆனால் சராசரி தேவையோ ரூ 7305 கோடி!
எனவேதான் 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் காலியாகிவிடுகின்றன. ட ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 20 லட்சம் ரூபாய் நிரப்ப முடியும். 
ஆனால்2,20,000 தான் நிரப்பப்படுகிறது. 
ஏன்?
இயந்திரத்தில் ரூ1000,ரூ500 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்கள் நிரப்ப முடியும்.ஆனால் தற்பொழுது ரூ100 தாள் மட்டுமே வைக்கப்படுவதால் இயந்திரத்தில் நிரப்பப்படும் தொகை மிகப் பெரிய சரிவை காண்கிறது.  புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை இயந்திரத்தில் வைக்க முடியவில்லை.


நாட்டின் மொத்த பணத்தில் சுமார் 86% உள்ள இரண்டு நோட்டுகளை வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் 99.8% பயன்பாட்டிலிருந்து செல்லாதது என்று அறிவிக்கும்போதே அதை ஈடு செய்யும் மற்ற நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விடாமல் ஏதுமறியா அப்பாவி மக்களை அலைக்கழித்தது அவரின் திட்டமிடலில் உள்ள அறியாமையை காட்டுகிறது.

இரண்டு நாட்களில் நிலமை சீரடைந்துவிடும் என்று பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து இன்னும் 50 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று இன்னொரு குருட்டு பொய்யை சொல்லியிருப்பது அவரின் திட்டம் குறித்து அவருக்கே தெளிவான பார்வை இல்லாததை காட்டுகிறது.

  வாரத்திற்கு வெறும் ரூ 20000 என்று அறிவித்து பின்னர் அதை ரூ 24000 என்று அதிகரித்தது. மற்றும் இரண்டு நாட்கள் கழித்து மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பின்பு மூன்று நாட்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் அதை ஒருவாரம் என்று மாற்றியது.
இவை, மக்களின் அவசியங்கள் / தேவைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கியதை காட்டுகிறது.
இன்னமும் பல கோடி மக்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் 90% மையமாக கொண்டு ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தியதும், அதற்கு சரியான மாற்று வழிகளை கொடுக்காததும் அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய சாதாரண அக்கறையை கூட கேள்விக்குறி ஆக்குகிறது.
இத்தனை குளறுபடிகளையும் செய்துவிட்டுஇத்திட்டம் கொண்டுவந்ததற்காக தன்னைத்தானே செல்பி எடுத்து புகழ்ந்து கொள்ளும்  மோடி பொது கூட்டங்களில் மூன்றாம்தர அரசியல்வாதியை போல கண்ணீர்விடுவதும், தன்னுடைய பாதுகாப்பையே உலக அரங்கில் கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு திறனையே வலிமையற்றதாக கருத வைப்பதும்.

மீண்டும் மீண்டும் தன் கட்சிகாரர்களை வைத்து நாட்டில் எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பொய் சொள்வதும்.அதை வியா அவர் கடசியினர் பணம் செல்லாது அறிவிப்பால் உயிரிழந்த ஏழை மக்களை பார்த்து  130 கோடி மக்களில் 16 பேர் செத்தால் என்ன குறைந்துவிட போகிறது என்று வக்கிரமாக பேட்டி கொடுப்பதும் எவ்வளவு பெரிய அசிங்கம்.அவமானசெயல்.
வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒருமக்கள் தலைவரை  உருவாக்கிவிடாது.  அத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதில்தான் திறமை இருக்கிறது.
அதில் மோடி பட்டவர்த்தனமாக தோற்றுபோய்விட்டார் என்பது மட்டும் தான் உண்மை.
இந்திரா காந்தி வங்கிகளை தேசவுடமையாக்கினார் .கலைஞர்  கருணாநிதி போக்குவரத்தை அரசுடமையாக்கினார்.அவை மக்களுக்கு பெரும் நன்மையாக முடிந்தது.

கருப்புப்பணம் பதுக்குபவர்கள் 500,1000 மாகவா கட்டி வைத்திருப்பார்கள்?ஹவாலா மூலம் வெளிநாட்டில் டாலர்களாக வங்கிகளிலும்,உல்லாச தீவுகளாகவும்,ஆடமபர ஓட்டல்களாகவும் அல்லவா இருக்கிறது.சிலருக்கு இந்தியாவிலேயே நிலம்,பங்களாக்கள்,நகைகள் மேலும் பினாமி பெயர்களிலும் சொத்துக்களாக இருக்கிறது.

கள்ளப்பணம் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்றால் அது வரும் வழியில் கண்காணிப்பை பெருக்கி தடுப்பதுதானே கள்ளப்பணத்தை தடுக்கும் முறையான வழியாக இருக்கும்.

இவை எல்லாம் தெரியாமலா அரசு இருக்கிறது.தெரிந்தும் பொது மக்களை வதைத்து தான் உத்தம புத்திரன் என்று மோடி காட்டுகிறார்.

நமது ஊர் நத்தம் விசுவநாதன்,அன்பு நாதன் வகையறாக்களே இப்படி முதலீடு செய்யும் போது பகாசுர முதலாளிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.

ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம் என்று சொல்லி விட்டு  ஒரு வாரம் கழித்து தேர்தல்  "மை" வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது.

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதை  தடுக்க விரலில் மை என்றால், கடந்த 7 நாட்களாக அவ்வாறு செய்யாமல் திடீர் புத்தி வரக்காரணம்.?

போதுமான பணம் புழக்கத்தில் விட வங்கிகள் ,அரசு கைவசம் இல்லாததுதானே ?
சென்ற வருடம் வாராக் கடன் இனி வசூலிக்க முடியாது என்று பெரும் தொழிலதிபர்களிடம்,கார்பரெட்களிடம் வாங்காமல்  வங்கிகள் கைகழுவிய  பணம் 1.14 லட்சம் கோடி..
  
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத அடையாள மை வைப்பதற்கான முயற்சியில் மோடியின் பாஜக அரசு இறங்கியுள்ளது. இது, பொதுமக்களை கருப்புப்பணம் வைத்திருப்பவர்களாகவும் ,ஊழல்வாதிகளாகவும் காட்டி அவர்களிடமிருந்து நாட்டை மீட்டியதாகவும் மோடி அரசு வைக்கும் உழைக்கும்,ஒழுங்காக வருமானவரி கட்டியவர்கள் வருமானமே இல்லா ஏழைகள் மீது கரும் புள்ளி.
ஆனால் மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு என்பதை அவருக்கு வாக்களித்த மக்களுக்கு  காட்ட்டிக்கொடுக்கும் அவமானப் புள்ளி.
மொத்தத்தில் இப்போது மோடி அரசு ஒரு( கரும்)புள்ளி ராஜா. 
ஒரு 120 கோடிகளுக்கு மேல் மக்களை கொண்ட இந்தியாவின் பிரதமர் மோடி தனது வீரத்தை காட்ட தொலைக்காட்ச்சியில் தோன்றியவுடனே 500.1000 தாள்கள் செல்லாது என்றும்,அவை இனி குப்பை காகிதங்கள் என்றும் பொறுப்பின்றி கூறியதால் விபரம் தெரியாமல் கந்து வட்டிக்கு விவசாயம்,மக்கள் திருமணம்  கடன் வாங்கி 500,1000 தாள்களாக வைத்திருந்தவர்கள் இதுவரை 18 பேர்கள் மாரடைப்பால் , தற்கொலை செய்தும் இந்த மத்திய பாஜக அரசால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...