வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஏன் இந்த முடிவு?

விளையாட்டு பிள்ளை அல்லது பிளே பாய் சசிதரூர் [57]இப்போதைய மனைவி திடீரென மரணமடைந்துள்ளார்.

டெல்லி ஐந்து நட்சத்திர விடுதியான 'லீலா பேலஸ்' என்ற விடுதியில் சுனந்தா புஷ்கர்,[56வயது ] 345எண்ணிட்ட அறையில்  மர்மமான முறையில் பிணமாகக் கிடந்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகவியலாளர் 'மெர் தரார்' என்ற பெண்ணுடன் சசிதரூருக்கு தொடர்பிருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டியிருந்த வேளையில், சுனந்தா புஷ்கரின் இந்த மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காரணம் சசி தரூர் பின் பக்கம்தான்.
இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த சசி  தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சசி  தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


சசி  தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியில், அன்றைய காலகட்டத்தில் சசி  தரூரின் நெருங்கிய சிநேகிதியாக இருந்த சுனந்தா புஷ்கருக்கு இலவசமாக பங்குகள் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சசி  தரூர் தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
 அந்த குற்றச்சாட்டுக்களை சசி  தரூர் அப்போது மறுத்தார் .ஆனா லும் அவர் மீது இந்தியா முழுக்க எழுந்த அதிருப்தியால்  மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகச் செய்தனர்..

பிறகு சிறிதுகாலம் கழித்து தனது சிநேகிதியாக இருந்த சுனந்தாவை சஷி தரூர் முறைப்படி திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டார்.


              சுனந்தா 
இருவருமே ஏற்கெனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றிருந்தவர்கள் என்பதால் இது இவர்கள் இருவருக்கும் மூன்றாவது திருமணம்.

2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் விலகிய சசி  தரூர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
கொஞ்ச காலம் பரபரப்பில் இருந்து விலகியிருந்த தரூர் ,இப்போது மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

                              முக்கோணக் காதல் அல்லது அறுபதிலும் ஆசை வரும்?

" பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் மெகர் தரர் என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக", அவர் மனைவி, சுனந்தா புஷ்கர்,தனது  'ட்விட்டர்' தளத்தில், தெ ரிவித்திருந்தார்.
இதை மறுத்த சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹே க்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்தார்.
"சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாக"வும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
எங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த டுவீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், அவர் என் கணவரை பின் தொடர்கிறார், ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் எனவும் சுனந்தா டுவிட் செய்துள்ளார்.
 இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சுனந்தா மரணம் அதுவும் ஓட்டல் அறையில் என்பது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இறந்து கிடந்த சுனந்தா  உடலில் காயங்கள் ஏதும் இல்லை
சுனந்தா மர"ணமடைந்தவுடன் சசி தரூர் பாக்கிஸ்தான் தோழி மெகர் தார் தனது டுவிட்டரில்,
ஏன் இந்த முடிவு, கடவுளே எதற்கு இப்படி செய்தார் "என்று டுவிட் செய்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா

ப. ஜீவானந்தம் மறைந்த நாள் ஜனவரி 18, 1963

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தோழர் ப. ஜீவானந்தம்
 மறைந்த நாள் ஜனவரி 18, 1963
 ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல ப...ுரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
காந்தியவாதியாக, இருந்து பின்னர் பரிணாமமாக சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.
தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். மேடையில் இவர் முழங்க ஆரம்பித்தால் கூட்டத்தினர் தங்களை மறந்து இவரின் பேச்சில் மயங்கி விடுவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.
1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
                             "சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத...் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.

ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்."

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறந்த மாணவர்
 
எம்ஜிஆர் 
 
நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம்  தேதிபிறந்தார்.
 இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனன் -, சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
Photo: " பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சி ஜங்ஷனில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.

அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு மற்றவர்களுக்காக அவர்கள் மழையில் வணடி இழுக்கும் பரிதாபத்தைப் பார்த்து பலத்த மழையில், வெயிலில், கடுங்குளிரில் வண்டி இழுக்காவிட்டால் அவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வயிருக்காதே என்பதையும் உணர்ந்து மழையில் வண்டியிழுத்தால் அவர்களின் உடலுக்கும் கஷ்டம், நோயையும் கொண்டு வந்துவிடுமே என்பதையும் அறிந்து,  உணர்ந்துதான் இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.

மற்றவர்கள் நினைப்பார்கள் ‘ஏழைகளுக்கு எப்படி உதவலாம்?’ என்று அவர்கள் உள்ளத்தில் ‘100 பேருக்குச் சோறு போடலாம்; 200 பேருக்குத் துணி கொடுக்கலாம்; திருமணத்துக்கு ரூ.50 கொடுத்து உதவலாம் என்றுதான் தோன“றும்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் மிகவும் எளிதானவை; ஆனால் ஏழை படும் இன்னலை எண்ணி எண்ணிப் பார்த்துக் கனிவு உள்ளம் பெற்றுத் தொண்டாற்றுகிறார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.இராமச்சந்திரன் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.

அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.

இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .

“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?

நம்முடைய புரட்சி நடிகர் இராமச்சந்திரன் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.

இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.

எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும் ! "

 = அறிஞர் அண்ணா , 4 - 12 - 1961 , நம் நாடு  இதழில் .

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறையில் கால் பதித்தார்.சதிலீலாவதி எம்ஜிஆரின் முதல் படம்.அப்போது வயது 31, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு பெரும்பாலான மக்களைகுறிப்பாக அடித்தட்டு மக்களை  கவர்ந்தது.
தங்களின் லட்சிய நாயகனாகவே எம்ஜிஆரை பார்த்தனர்.அதுதான் அவரை சாகும் வரை முதல்வராகவே வைத்தது.இன்று இரட்டை இலைக்கு பாமரர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கவும் வைக்கிறது.

முதலில் காங்கிரசில் இருந்தவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையில் மோதல் உண்டாகி திமுகவில் இருந்து விலகி, சொந்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற  கட்சியைத் தொடங்கி அண்ணாயிசம் என்பதை கொள்கையாக அறிவித்து , தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார்.
இவரின் மறைவுக்குப் பின்னர் முன்பு இந்தியாவின்  உயரிய விருதாக இருந்த   பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Photo: " இருந்தாலும் மறைந்தாலும் 
பேர் சொல்ல வேண்டும் ,
இவர் போல யாரென்று 
ஊர் சொல்ல வேண்டும் ! "

##   எங்கள் தங்கத்துக்கு இன்று 
97  வது  பிறந்தநாள் !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 
தொப்பை குறைய
சர்வாங்காசனம்.
 
தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.  இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக கெய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
 

 
 


சர்வங்காசனம்
பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 10 முறை இப்படி பண்ணுங்க.
During the filming of Rumble in the Bronx, Jackie broke his ankle while jumping off a bridge onto a hovercraft. Despite being told to rest, Jackie painted his cast to look like a shoe so that they could continue filming!
                        இது என்ன ஆசனம்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 Check out some of the best pictures of the week from @[154990484549538:274:TIME Photo]: http://ti.me/LpTqAl

(Photo: AP)
                                                               இது என்ன ஆசனம்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

ஜப்பானிய விவசாயிகள் உருவாக்கிய ஐங்கோண ஆரஞ்சின் சுளை.


இப்படி நால்வராக சென்ற குடும்பம் விபத்தில் சிக்கி கணவர் மரணம்.
எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீர்களா?

 "
தி முக கூட்டணி தோற்றால்தான் தமிழக அரசியலில் தெளிவு பிறக்கும்.
தமிழகத்தில் கடந்த தேர்தலில் மின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது.

ஆனால் இப்போது மின்மிகை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி விட்ட து..." |
துக்ளக் ஆண்டு விழாவில் நகைச்சுவை நடிகர் சோ

ஏம்பா சோ உன் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா?அதுவும் இன உணர்வுடன் ஜெயலலிதாவுக்கு அடிக்கும்  ஜால்ராவுக்கும்  முடிவே இல்லையா?
உன்னை மதித்து உன் மகன் திருமணத்துக்கு வராமல் அவமதித்தாலும் அவாளை விட்டுக்கொடுக்காத உன் இன வுணர்வு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதுதான்.அதற்காக இப்படி கேனத்தனமாக பேச வேண்டுமா?




திங்கள், 13 ஜனவரி, 2014

இந்திய மீசை .........!


வெள்ளி, 10 ஜனவரி, 2014

இந்திய மீசை .........!

"எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது.
அதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலைக்காக அமெரிக்கா வந்தேன்.
ஆனால் இங்கு இவ்வளவு மோசமான நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை.
தேவயானி வீட்டில் என்னிடம் ஏராளமான வேலைகளை வாங்கி சித்ரவதை செய்தனர். இதனால் எனக்கு சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ மற்றும் எனது பணிகளை கவனிப்பதற்கோ போதிய நேரம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டேன்.
தேவயானியின் வீட்டில் என்னை அவமரியாதையாக நடத்தினார்கள். எனவே இந்தியாவுக்கு திரும்ப நான் முயற்சி செய்தேன். அதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை.
அமெரிக்காவில் என்னைப் போன்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வீட்டு வேலைகக்காரர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன்.
உங்களுக்கு என்று பல உரிமைகள் உண்டு. எனவே உங்களை சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள் "என்று  சங்கீதா ரிச்சர்டு கூறி யு ள்ளார்.

suran சங்கீதா
சங்கீதா ரிச்சர்டு
இவர்தான் தேவயாணி இவ்வளவு புகழ் பெறவும்.இந்தியா அமெரிக்காவுடன் மோதவும் காரணமானவர்.
சம்பளம் மட்டுமின்றி,விசாவிலும் முறைகேடு அமெரிக்காவில் என்றால் கார்கில் வீரர்களுக்கான வீட்டுத்தொகுப்பில் முறைகேடு இந்தியாவில் .அந்த
தேவயாணி விவகாரத்தில் இந்தியா தேவைக்கும் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வதும்,தடாலடி அறிவிப்புகளை அமெரிக்காவுக்கு எதிராக வெளியிடுவதும் ஏன் என்று தெரியவில்லை.
இதுவரை எடுத்த முடிவுகள் அளவுக்கு அதிகமானவைதான்.
போபால் விச வாயு கசிவு அழிவு,இத்தாலிக்காரகளால் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொலை,இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிப்பு போன்ற வற்றில் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தியாவின் இறையான்மை என்று கூறிக்கொண்டிருப்பது காக்கப்பட்டிருக்கும்.
அதை விடுத்து தற்பொதைய தேவயாணி விவகாரத்தின் நடவடிக்கைகள் தேவைக்கு அதிகமே.
ஆடை களைந்து சோதனை .அமெரிக்காவில் இந்தியா இதுவரை சந்திக்காத அ வமானமா என்ன ?Diplomat row: Preet Bharara submits contracts to court signed between Devyani,maid

http://zeenews.india.com/news/nation/diplomat-row-preet-bharara-submits-contracts-to-court-signed-between-devyani-maid_903222.html

Manhattan's top prosecutor Preet Bharara has submitted to a federal court here two employment contracts signed between Devyani Khobragade and her domestic help Sangeeta Richard.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலாமையே அவிழ்த்துப் பார்த்தார்களே அப்போது இந்த உணர்வு எங்கே மறைந்திருந்தது?ஷாருக்கான் ,கமல்ஹாசன் போன்றோரும் அவமானப்பட்டார்களே?
அப்போதில்லாமல்  இப்போது இந்திய மீசை அதிகமாக துடிக்க காரணம் என்னாவாயிருக்கும்?
998041_4523491305183_1263421253_n.jpg
--------------------------------------------------------------------
"110 அடி தல கட்டவுட்டுக்கு காலையில் கணபதி ஹோமம் நடத்தி அதன் பின்னர் நடை பெறும் பாலாபிசேகத்திற்கும் அனைவரையும் அழைக்கிறோம் "
  -திருநெல்வேலி மாலை முரசு நாளிதழில் அஜித் பக்தகோடிகளின் விளம்பரம்.
நாடு கண்டிப்பாக விளங்கிடும்.!
-----------------------------------------------------------------------
தென்காசி அல்லது தூத்துக்குடியில் சமக போட்டியிடலாம்.இரண்டிலும் கூட  போட்டியிடக் கூடும் .எங்கு நிற்க வேண்டும் என்பதை அம்மா அறிவிப்பார்கள் .
  -சரத் குமார் .
கடைசியில் போயஸ் தோட்ட வாசலில்தான் நிற்க வேண்டும் .ஏற்கனவே அங்கு நிற்கும் தா.பாண்டியனும்,ஜி.ராமகிருஷ்ணனும் கோவிச்சுக்குவாங்க.
-----------------------------------------------------------------------
லால் பகதூர் சாஸ்திரி
நினைவுகள்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு கடைநிலை ஊழியர் இப்படி சொன்னார் ,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசித் தலைவரும் மறைந்து விட்டார் !" என்று . அவர் இறந்த பொழுது தவணையில் வாங்கியிருந்த பழைய கார் ஒன்றுக்கு கட்ட வேண்டிய பாக்கியிருந்தது !
வெறும் விளையாட்டு வீரருக்கும் ,விளையாட்டின் மூலம் கோடிகளை குவித்தவர்களுக்கும்,மக்களின் நலனுக்கு எந்த விதத்திலும் பயன்படாதவ்ர்களுக்கும் அவர்களின் இளம் வயதிலேயே  வழங்கப்பட்ட" பாரத ரத்னா "விருது இவர்  மறைவுக்கு பின்னர் வழங்கப்பட்டது.

suran
அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி .சாஸ்திரி அவரின் சாதியால் ஒட்டியதில்லை.அவர் படித்து வாங்கிய பட்டம்.
இந்தியாவை மிகக்குறுகிய காலம் ஆண்ட குறிப்பிடத்தகுந்த இந்திய பிரதம்ர்களுள் முக்கியமானவர் லால் பகதூர் சாஸ்திரி. இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர் ஏழ்மை சூழவே படிப்பை மேற்கொண்டார். நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.
கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள் ஒத்துழையாமை இயக்கம் வரவே காந்தியின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்குகொண்டு சிறை சென்றார். மிஷ்ராஜியோ, அவரின் கல்விக்கு பெருந்துணையாக இருந்த மாமாவோ இதை ரசிக்கவில்லை. சாஸ்திரியின் அம்மாவின் ஆசீர்வாதம் மட்டும் அவருக்கு முழுமையாக இருந்தது. அதற்கு பிறகு அடிக்கடி போராட்டங்களில் பங்குகொண்டு சிறை சென்றார் அவர். காலையில் கல்லூரி மாலையில் காதி விற்பனை என்று செயல்பட்டுக்கொண்டே தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவரின் ஜாதிப்பெயரான ஸ்ரீவத்சவாவை துறந்து சாஸ்திரி என்கிற படித்த பட்டத்தை ஏற்றார் அவர்.

திருமணத்தின் பொழுது வரதட்சணையாக கதர் உடை, கைராட்டை ஆகியவற்றை மட்டுமே பெற்றுக்கொண்ட அவர் சிறை புகுந்து மனைவியை வருடக்கணக்கில் பார்க்காமல் இருந்த காலங்கள் உண்டு. சிறை புகுந்து பரோலில் உடல்நலம் சரியில்லாத மகளை பார்க்க சாஸ்திரி வந்தார். அவர் பரோல் காலம் முடிவதற்குள் விலை அதிகமான மருந்துகளை வாங்க காசில்லாமல் மகளை இழந்தார் சாஸ்திரி. மகள் இறந்த உடனே சிறை புகுந்தார் சாஸ்திரி.
ஜி.பி. பந்த் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக சாஸ்திரி இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. அரியலூர் ரயில் விபத்துக்கு அமைச்சர் என்கிற முறையில் தார்மீக ரீதியாக பொறுப்பேற்று பதவி விலகுகிற உச்சபட்ச பொறுப்புணர்வு அவருக்கு இருந்தது.
காஷ்மீரில் சிக்கலான சூழல் நிலவிய பொழுது நேரு இவரை சிக்கலைத்தீர்க்க அனுப்பிவைத்தார். குளிரைத்தாங்கி கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை டைலர் இவரின் அளவுக்கு தைத்துக்கொடுத்தார். நண்பர் ஒருவர் ஐம்பது ரூபாய் கடன் கேட்க இவரில்லை என்று சொன்னார்.
 மனைவியோ தன்னிடம் இருப்பதாக சொல்லி பணத்தை நீட்டினார். நண்பர் போன பின்னர் விசாரித்து பார்த்ததில் கட்சி கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்தது அது என்று புரிய கூடுதலாக கிடைத்த சம்பளத்தை குறைத்துக்கொண்டார் இவர்.
அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் "இனிமேல் உணவில் பருப்பும், காய்கறிகளும் குறைத்துக்கொள்ள வேண்டும் !" என்று மனைவிக்கு உத்தரவு போட்டார். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் இரவில் இருட்டிலேயே இருக்க பழகிக்கொண்டவர் அவர் !
See some of @[154990484549538:274:TIME Photo]'s best pictures of the week: http://ti.me/19X9TXG

(Photo: Ulet Ifansasti—Getty Images)
நேருவின் காலத்தில் ஒரே ஒரு முறை இந்திரா காந்தி கட்சி தலைவராக இருந்தபின்னர் பதவியை விட்டு விலகியிருந்தாலும் நேரு இந்திராவை தன்னுடைய வாரிசு என்று சொல்லாவிட்டாலும் சாஸ்திரிக்கு நேருவுக்கு பின் இந்திரா பிரதமர் ஆகி விடுவார் என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், நேருவின் மறைவுக்கு பின்னர் இவரே காமராஜர் எடுத்த முன்னெடுப்புகளால் பிரதமர் ஆனார்.
பாகிஸ்தானுடன் அமைதியாக பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திக்கொண்டு இருந்ததை கண்டு பாகிஸ்தான் தவறாக எடைபோட்டு பாய்ந்தது. பாகிஸ்தான் காஷ்மீரில் முன்னேறிக்கொண்டு இருந்ததை பார்த்தார் சாஸ்திரி. இந்தியப்படைகளை மேற்கில் பாகிஸ்தானுக்குள் நுழையச்சொல்லி உத்தரவு போட்டார். லாகூர் வரை போய் இந்திய ராணுவம் சாதித்தது. பாகிஸ்தான் சரண்டர் ஆனது ! அமைதிக்கும்,அடித்து நொறுக்கவும் தனக்கு தெரியும் என்று அந்த உருவத்தால் சிறிய பெருமனிதர் நிரூபித்தார். அமைதிக்கான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர் மர்மமான முறையில் இறந்து போனார்.
 
  • இனிய தமிழ்ப் புத்தாண்டு 
  • -பொங்கல் 
  • -திருவள்ளுவர் தினம் 
  • -உழவர் திரு நாள்
  • நல் வாழ்த்துக்கள்.!
  • --------------------------------------------------------------------------
  அழகாக..!ஆயுர்வேதம் !!

என் வயது 25. உடல் எடை அதிகமாக உள்ளது. முகம், கை, கால்களில் ரோமங்கள் உள்ளன. கருப்பான நிறம், முடி குட்டையாகவும், உதிரவும் செய்கிறது. நான் இந்த புதுவருடம் முதல் அழகாக இருக்க விரும்புகிறேன். ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு சொல்லப்பட்டுள்ளதா?
ஆர்.குட்டி, மதுரை.
அழகாக இருக்க விரும்பும் நீங்கள் காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய சிறப்பான செயல்களை ஆயுர்வேதம் வர்ணித்துள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதலாக வைகறைத் துயில் எழு எனும் உபதேசம் முக்கியமானது. சூர்ய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதயவேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும்.
இந்த வேளையில் இயல்பாக மனம் தெளிந்து விருப்பு, வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாதிருக்கும். இரவின் தன்மையாலும், அமைதியாலும் முன் நாளின் கொந்தளிப்பு அடங்கி, களைப்பு அகன்று தானே பொறிகளும், மனமும் சுறுசுறுப்புடன் விழித்தெழும் வேளை. ஆசை, கோபம், தாபம், சோகம், பயம் போன்ற எண்ண அலைகள் அடங்கி இன்னதென அறியமுடியாத அமைதி நிலவும் வேளை. இந்த வேளையில் நீங்கள் எழுந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
விழித்தெழுந்ததும் உடன் வாய் கொப்பளித்து அதன் பிறகு மலம், சிறுநீர் கழித்து, பல் துலக்கவும். தசனகாந்தி எனும் பற்பொடியால் பல் துலக்குவது சிறந்தது. அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் (5 மி.லி) சுத்தமான தேன் கலந்து அதில் சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்தக் கலவையைக் குடிக்கவும்.
இது உடல் பருமனைக் குறைக்க உதவும்.
அதன் பிறகு அரை, முக்கால் மணிநேரம் நடைப்பயிற்சி பழகவும். நன்றாக வியர்வை வரும்வரை நடந்த பிறகு அந்த வியர்வையை உடலிலேயே நன்றாக தேய்த்துவிடவும்.
இந்த நடைப்பயிற்சியை காலை வெயில் வந்த பிறகு செய்யவும்.
குண்டு மஞ்சளை தண்ணீரில் இழைத்து ரோமங்கள் உள்ள பகுதியில் தேய்க்கவும். இரண்டு சொட்டு இளநீர் குழம்பை கண்களில் விட்டுக்கொள்ளவும்.
குங்குமாதிதைலம் எனும் ஆயுர்வேத சொட்டுமருந்தை மூக்கினுள் இரண்டு, நான்கு சொட்டுகள் விட்டு உறிஞ்சி துப்பிவிடவும்.
ஏலாதிகேர தைலத்தை முகத்தில் நன்றாக அழுந்தித் தேய்த்துவிடவும். அரிமேதஸ் எனும் தைலத்தை ஒரு ஸ்பூன் (5 மி.லி) வாயினுள் விட்டு நன்றாகக் கொப்பளித்துத் துப்பவும்.
காதினுள் நான்கைந்து சொட்டு வசாலசுனாதி தைலத்தை வெதுவெதுப்பாக விட்டுக்கொள்ளவும்.
இவை அனைத்தும் தினமும் செய்யப்படவேண்டிய முறைகளாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீலிப்ருங்காதி எனும் தேங்காய் எண்ணெயை பஞ்சில் முக்கி எடுத்து தலையில் ஊறவிடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
 எண்ணெய்ப் பிசுக்கை அகற்றிக்கொள்ள சீயக்காயுடன் சிறிது கடலை, பயறு, அரிசிமாவு, வெந்தயத்தூள் ஆகியவற்றைக் கலந்து தண்ணீரில் கரைத்து உடலெங்கும் தேய்த்து அலம்பிக் கொள்ளவும்.
 இவற்றின் மூலம் தேவையற்ற ரோமங்கள் நீங்கும், உடலின் கருமை நிறம் குறையும். முடி நன்றாக வளரும். உடல் வனப்பு கூடுவதால் நீங்கள் பார்ப்பதற்கு அழகாகத் தெரிவீர்கள்.
பெண்மையைப் போற்றி வளர்க்கும் சதாவரீகுலம், பலசர்ப்பிஸ், குமார்யாசவம், தான்வந்திரம் கஷாயம், பலாதைலம், அசோகாரிஷ்டம், புஷ்யானுகம் சூர்ணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடியவை.
 ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இவற்றில் எது உங்களுக்குப் பொருந்துமோ அவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
 மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல் தக்கப் போக்கிடம் காட்டி அவற்றைத் தவிர்த்து மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நீங்கள் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த செயலிலும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு கருத்தூன்றிச் செய்வதால் மனதின் நிறைவான பலனை பெற்றதற்கான மகிழ்ச்சி ஏற்படும்.
இரவில் படுக்கும் முன் பல் தேய்த்து, பாதங்களைச் சுத்தப்படுத்தி, சுடுதண்ணீரால் வாய்க் கொப்பளித்து, ஒரு கிளாஸ் (300 மி.லி) வெந்நீரைக் குடித்து கிழக்கு அல்லது தெற்குமுகமாக தலை வைத்து இடது புறம் சரிந்து படுக்கவும். இதனால் இரவில் உண்ட உணவு விரைவில் செரிக்கும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்துகொள்ளலாம்.

நன்றி:எஸ். சுவாமிநாதன்,
முதல்வர்
ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
 நசரத்பேட்டை - 600 123
 
  • suran

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இனி இலவச மின் விசிறி ஓடுமா?

தமிழகத்தில், அ.தி.மு.க., இலவசமாக மின் விசிறி,மிக்சி,கிரைண்டர் ,வழங்குவதாக வாக்குகள் கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி,வழங்கி வருகிறது.
suran
இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் மிக்சி, கிரைண்டர்; 34 லட்சம் மின் விசிறி; 56 ஆயிரம் மின் அடுப்பு கொள்முதல் செய்ய திட்டமிட்டுஉள்ளது.
இலவச பொருட்கள் கொள்முதலுக்கான அரசாணை வெளியீடு தாமதம், 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டு, மறு, 'டெண்டர்' நடத்தியது போன்ற காரணங்களால், குறித்த காலத்திற்குள் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து, கொள்முதல் காலம், 210 நாட்களில் இருந்து, 150 நாட்களாக குறைக்கப்பட்டது. 'டெண்டர்' மூலம் தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்கள், அக்., 15 முதல், பிப்., 13ம் தேதிக்குள், 100 சதவீத பொருட்களையும், படிப்படியாக சப்ளை செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதையநிலவரப்படி, 12 நிறுவனங்கள், 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 ல ட்சம் கிரைண்டர்களை  வழங்கி உள்ளன.
இதற்கு, அரசு , 100 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியு ள்ளது;
நிலுவை இன்னும், 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதேபோல், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 லட்சம் மிக்சிகளை சப்ளை செய்த, ஆறு நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய்; 10 லட்சம் மின் விசிறிகளை சப்ளை செய்த, 8 நிறுவனங்களுக்கு, 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதன்படி, 675 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, பாக்கி தொகையான, 450 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளதால், பல தயாரிப்புநிறுவனங்கள்,  அரசு மீது, கடும் அதிருப்தியில் உள்ளன.
suran
மின்சாரக் கட்டணம் செலுத்தியதற்கு கூட அரசு தந்த பணம் பத்தாது.இன்னமும் தொழிற்சாலை நடத்த ,தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்பதால்  மேற்கொண்டு பொருட்களை ஒப்பந்தப்படி வழங்க முடியாமல்  திணறுகின்றன,
மூலப் பொருட்கள் வாங்க வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்த இயலாமல் முழிக்கின்றன்வாம்.
இதனால், இலவச பொருட்கள்  செய்யும் பணிபாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த ஆண்டு இலவசங்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மக்களவை  தேர்தலுக்கு முன், பொதுமக்களுக்கு, இலவச பொருட்கள் வினியோகம்செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் ஜெயலலிதாவும்,அதிமுகவினரும் தேர்தல் வரை வழங்கினால்தான் வாக்குகளை அள்ள முடியும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

 
நுகர் பொருள் வாணிபக் கழகமோ நிதித்துறை மூலம் பணம் ஒதுக்காமல் -வழங்கப்படாமல் எப்படி பொருட்கள தயாரிப்பவர்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்குவது என்று திணறுகிறது.முதல்வர் கோப்பில் கையெழுத்திட்டால் மட்டுமே பணம் என்று நிதித் துறை கூறிவிட்டது.
சென்ற ஆட்சி காலத்தில் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க தேவையான நிதியாதாரம் கண்டு அதை ஒதுக்கி பின்னரே ஏலம் விடப்பட்டு இலவச தொலைக் காட்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இப்போது இலவச பொருட்கள் வழங்க நிதி ஒதுக்குவதில் தான் சிக்கலே.
இலவச மிக்சி, கிரைண்டர்,மின் விசிறி சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, தமிழக அரசு , பாக்கி தொகையான, 470 கோடி ரூபாயை வழங்காமல்,இழுத்தடித்து வருவதால்  பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளது.
அதனால் இந்த ஆண்டு இலவச பொருட்கள் பொருட்கள் மக்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஜெயலலிதா ஏதாவது செய்வார் என்று அரசு அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.இலவசங்களைப் பெறும் பயனாளிகளும்தான்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...