செவ்வாய், 30 ஏப்ரல், 2013

"மே தின வாழ்த்துக்கள்.!"




எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் .
18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம்.
18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது.
அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன.
அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை.அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும்.பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர்.

அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியிருந்தது.தூங்கக்  கூட அனுமதிப்பது கடினமானதாக இருந்தது.
தொழிற்சாலைகளில் இருந்து தப்பித்தால் அவன் குற்றவாளியாக கருதப்பட்டான்.அரசு அவை தேடி கண்டு பிடித்து தண்டணை வழங்கியது .
மீண்டும் தப்பியவன் மாட்டினால் அவன் நெற்றியில் சூட்டுக்  கோ லால்  இலச்னை இட்டு அவமானப் படுத்த ப்பட்டான் .அதன்பின் அவன் மாடு போல் உழைத்தாலும் நரக வாழ்வுதான்.
18-ம் நூற்றாண்டு இறுதியிலும் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர்கள் சிந்திக்கவும்-போராடவும் ஆரம்பித்தனர்.
நெஞ்சில் குமுறிய உழைப்பாளர்கள் ரகசியமாக தங்களுக்கு உழைப்புக்கிடையில் ஓய்வும்,சரியான சாப்பாடும்,இருக்க குடும்பம் நடத்த  தனியாக  இடமும் தேவை என்று முடிவெடுத்து அதற்காக போராட தயாராகினர்.
suran
ஒன்றுமே இல்லாத தாங்கள் இனி இழக்க ஒன்றுமே இல்லை.வென்றால் பொன்னுலகம்தான் என  முடிவெடுத்து கடுமையாக போராடி பல உயிர்களை இழந்து தங்களுக்கான உரிமைகள் சிலவற்றை பெற்றனர்.
அதில் தலையானது 8மணி நேர வேலை.
முதலில் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிலாளர் போராட்டத்தில்  குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்.இந்த  இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.
 அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

"8 மணி நேரம் வேலை "
அது கிடைக்க பல போராட்டங்கள்.ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856-ல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.
 இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் முதல் மைல் கல்.
1896 ஏப்ரல் மாதத்தில் மாமனிதன் "லெனின் 'மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யாவில் தொழிலாளர்  புரட்சி செய்து ஆட்சியையே மாற்றியதற்கும்,கம்யூனிசம்  உண்டானதற்கும் முதல் காரணம்.
தொழிலாளர் வர்க்கம் ஆட்சியையே மாற்றியது ரஷ்யாவில்தான் என்றாலும் "மே-1 தினம்"
தொழிலாளர் தினமாக வடிவானது முதலாளித்துவ அடையாளமான அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.

"கூட்டத்துக்கு வாங்க "
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு  விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக இரு ந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும்1200 தொழிற்சாலைகளில் இருந்து  3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 தொழிலாளர்களின்  வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஊர்வலங்களில் கலந்து கொண்டு அரசை திகைக்க வைத்தனர்.
தொழிலதிபர்களும் அவர்களுக்கு ஆதரவாக அரசும் இணைந்து இந்த தொழிலாளர்களின்  ஒற்றுமையான போராட்டத்தை சிதைத்து தங்கள் வழிக்கு கொண்டுவர திட்டங்கள் தீட்டினர் .தங்கள் ஆட்களை கருங்காலிகளாக வெளியெ வராமல் ஐந்தாம் படையாக தொழிலாளர் கூட்டங்களில்  ஊ டுருவ வைத்தனர்.
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு  கூட்டத்தை நடத்தினர். அங்கு இந்த ஐந்தாம் படையினர் வன்முறையை தூண்டி கலவரமாக வெடிக்க வைத்தனர்.அதை பயன் படுத்திய   காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் நடத்தினர் தொழிலாளர்கள்.
ஆயிரக்கணக்கில்  தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியாக நடைபெற்றது.
அதில் மறைந்திருந்த முதலாளிகள் ஆட்கள்  திடீரென்று காவல் துறையினர் மீது  வெடிகுண்டு வீசினர்.
 அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின் கேட்கவா .வெண்டும் இதற்கென்றே காத்திருந்த காவல்துறையினர்  கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.
 அத்துடன் தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர உட்பட பலரை   கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.நவம்பர் 11,1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் 7 பேர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில்  5 லட்சம் பேர்  கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பை காண்பித்தனர்., அமெரிக்கா முழுவதும் கறுப்பு கொடிகள் எற்றி துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.
 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்தது.
 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
அதன் முதல்  மே முதல் நாள் , சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக உலகமெங்கும் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
நமது இந்தியாவில் சென்னை மாநிலத்தில்தான் முதன் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியான " ம.சிங்காரவேலர்" 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடி செங்கொடியை ஏற்றினார்.
கலைஞர்  மு.கருணாநிதி தான் தமிழ் நாட்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக "மே தின"த்துக்கு அரசு விடுமுறை வழங்கியவர்.
"மே தினப்  பூங்கா "பெயர் சூட்டியவர்.
suran
பல உயிர்களை இழந்து போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் இப்போது தொழிலாளர்கலாலேயே விட்டுக்கொடுக்கப்படுகிறது.அரசும் முன்பை போல் முதலாளிகள் கூட்டணியுடன் உழைப்பவர்களை ஏமாற்ற ஆரம்பித்தள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே தொழிற்சங்க உரிமைகள் பறி போக வைக்கும் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய உதாரணம் ஹுண்டாய் .தொழிற் சங்கம் அமைக்கவும் உரிய கூலி பெறவும் எவ்வளவு பொராட்டங்கள் .தொழிற் சங்கக் கொடியை ஏற்றியதற்காக தொழிற்சங்க தலைவர்
கை விலங்குடன் இழ்த்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தது.
தகவல் தொழில் நுட்ப துறையில் 8 மணி நேரப் பணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.தான் படித்தவன் கணினி நிபுணர் என்ற கனவில் இருப்பவர்கள் தான் போராடி,உயிர் இழந்து பெற்ற தொழிற் சங்க உரிமைகளை காவு கொடுக்கிறார்கள் .
கை நிறைய கிடைக்கும் சம்பளத்துக்காக.
ஆனால் அமெரிக்காவில் ஓபாமா தும்மினால் அடுத்த நொடியில் இவர்கள் வேலை எந்த உத்திரவாதமும் இல்லாமல் பறி போய்விடும் என்ற அபாயத்தை அவர்கள் உணர்ந்தது போல் தெரிய வில்லை.
இவர்களுக்கும் சேர்த்து  
"மே தின வாழ்த்துக்கள்.!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
                          ரஷ்யாவில் ஒட்டப்பட்ட உலகின் முதல் மே தின சுவரொட்டி.

-----------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

எப்படி எல்லாம்

  யோசிக்கிறாங்கப்பா?
suran
இது கூகுள் +இல்Jamie Eudora  இட்ட து.

சொல்லுங்க சிதம்பரம் சொல்லுங்க "

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா முன்மொழிந்த கட்டணத்தை உயர்த்துமாறு வற்புறுத்தாதது ஏன்? சட்ட விரோதம் என்று தெரிந்தும் உரிமங்களை ரத்து செய்யாதது ஏன்?
'சொல்லுங்க ப.சிதம்பரம்  அவர்களே 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத் தில் இன்னும் பதிலளிக்கப்படாத கேள் விகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பதிலளித்தே ஆகவேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப் பினருமான சீத்தாராம் யெச்சூரி வலி யுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங், கூட்டுக்குழுவிடம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்.
சிதம்பரத்தின் பதில்கள் கிடைக்கப் பெறாமல் அல்லது அவரிடம் விசாரிக் காமல் எப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இறுதி விசாரணை அறிக் கையை தயாரிக்க முடியும் ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்த மாக விசாரணை செய்து வந்த நாடாளு மன்ற கூட்டுக்குழுவில் அங்கம் வகிக் கும் சக உறுப்பினர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., குறிப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் வந்துள்ள சில கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. 
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் நிதி அமைச்சர் குறித்து எண்ணற்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
நிதி அமைச்சரின் பங்களிப்பு தொடர்பாக கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழு எந்த முடி வுக்கும் வருவது சாத்தியமில்லை.சாக்கோ தயாரித்துள்ள வரைவு அறிக்கையில், 10.43ஆவது பிரிவு பின் வருமாறு கூறுகிறது:
‘‘தொலைத்தொடர்புத் துறையி லிருந்து 2007 நவம்பர் 29 தேதியிட்டு வந்த கடிதத்திற்கு, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங் களுக்கான துறை எவ்விதத் தகவலும் அனுப்பவில்லை என்று கூட்டுக்குழு விற்கு, நிதி அமைச்சகம் தெரிவித்திருக் கிறது. நடைபெற்றுள்ள நிகழ்வுகளிலி ருந்து, ஏற்கனவே உள்ள உரிமதாரர் களிடம் ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக அனுமதித்துள்ள கட்டணம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகம் ஒத்துப்போகிறது என்றே கூட்டுக்குழு அனுமானிக்கிறது.’’இவ்வாறு, தொலைதொடர்புத் துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமக் கட் டணங்கள் தொடர்பாக மேற் கொண்ட நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகமும் ஒத்துப்போனதாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு தன் வரைவு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா? 2.1.2(3)வது பிரிவின்படி, நிதி அமைச் சகத்திற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந் தம் ஏற்பட்டிருக்க வேண்டியது கட் டாயம், என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பிலிருந்து நன்கு தெரிந்தும் கூட, 2001ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட அள விலேயே நுழைவு மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை 2008ல் வசூலிக்கக் கூடாது என்று நிதி அமைச்சகம் ஏன் வலியுறுத்தவில்லை?உரிமக்கட்டணங்களை நிர்ணயிப் பதில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம் என்றிருக்கக்கூடிய நிலை யில், நிதி அமைச்சகம் அத்தகைய ஒப் புதலை அளித்ததா?
ஆ.ராசா,சாக்கோவிற்கு அனுப்பி யுள்ள கடிதத்தில், உரிமக் கட்டணங் கள் சம்பந்தமாக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், 2008 ஜனவரி முதல் வாரத்தில் நிதி அமைச் சரை அவர் சந்தித்தபோது அவர் அளித்த ஒப்புதலின் அடிப்படையிலும் தான் மேற்கொள்ளப்பட்டது என்று கூறியிருக்கிறாரே? அவ்வாறு இருவருக் குமிடையே சந்திப்பு நடந்தது உண் மையா? 
ஆம் எனில், 2008ஆம் ஆண் டிற்கான உரிமங்களுக்கு 2001இல் நிர் ணயித்த அதே உரிமக் கட்டணத்தை வசூலிக்க மத்திய நிதி அமைச்சர் தன் சம் மதத்தை அளித்ததாகக் கூறியி ருப்பது சரிதானா? 2008 ஜனவரி 15 அன்று அவர் பிர தமருக்கு எழுதியுள்ள கடிதத்தின்படி 2008 ஜனவரி 10 அன்று நுழைவு மற் றும் உரிமக் கட்டணங்கள் தொடர் பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு முடிந்துபோன விசயம் என்று குறிப் பிட்டிருக்கிறீர்களே, ஏன் அவ்வாறு ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்?.
 நாட்டின் மிகவும் புகழ்பெற்ற வழக் கறிஞர்களில் ஒருவர் என்ற முறையில், மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு உரிமக்கட்டணங்களுக்கான அனு மதிக் கடிதத்தை எந்த சமயத்திலும் ரத்து செய்யலாம் என்று சந்தேகமற நன்கு தெரியும். 2008ஆம் ஆண்டில் அளிக்கப்படும் நுழைவு மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக 2001 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டணத் தொகையையே பெறுவதற்கு, அவரது சம்மதம் அவசியம். அமைச்சரவைக் குறிப்பு எப்படி இருந்த போதிலும் இந்திய அரசின் (வர்த்தக நடைமுறை)விதி 4ன்கீழ், நிதி அமைச்சர் உடன்பாட்டைத் தெரி விப்பது கட்டாயமாகும். அத்தகு சமயத் தில் அவர் ஏன் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை?அதேபோன்று இந்திய அரசின் (வர்த்தக நடைமுறை) விதி 7இன்கீழ், நிதி சம்பந்தப்பட்ட வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வரும் பட்சத்தில், நிதி அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத் தைக் கூட்டி அமைச்சரவை முடிவைக் கோரலாமே, ஏன் அவ்வாறு நிதி அமைச்சர் கோரவில்லை?
மிகவும் உயர்ந்த இடத்தில் அமர்ந் திருக்கும் நிதி அமைச்சர், இக்கேள்வி களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு வின் முன்பு நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ பதிலளிக்க முடியும். மேற்கண்ட அம்சங்கள் குறித்து நிதி அமைச்சரின் பதிலைப் பெறாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழு இப்பிரச் சனையில் நிதி அமைச்சகம் அல்லது நிதி அமைச்சரின் பங்களிப்பு குறித்து எந்த முடிவுக்கும் எப்படி வரமுடியும் என்பது புரியாத புதிராகவே இருக் கிறது.
-இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கேள்விகளை  தொடுத்துள் ளார். 
பதில் வழக்கமான கல்லுளி மங்கத்தனமா ன  மவுனம்தான்.
---
-----------------------------------------------------------------------------------------------------------
 
 

சனி, 27 ஏப்ரல், 2013

"ரமணா" !

உண்மை கதை இதுதான்.........,!!
மதுரையில் உள்ள ராம் நகரில் இருந்து ஒரு பத்துவயது வெங்கட்ரமணன் என்ற சிறுவன் திருவண்ணாமலைக்குப் போகிறான். 
அப்போது உண்ண உணவில்லாமல் பசியால் மயக்கம்போட்டுக் கீழே விழுந்து விடுகிறான். அருகிலிருந்தவர்கள் பார்த்து விட்டுத் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கிறார்கள். சோர்விலிருந்து மீண்ட சிறுவன் ஏதேதோ உளறுகிறான். அதை என்னவென்று புரியாத மக்கள் அவரை பால யோகி என்று மூடத்தன கொண்டு  திடீரென்று அந்தச் சிறுவன் காலில் விழுகிறார்கள். 
சிலர் விழுந்ததைப் பார்த்து பலர் விழுகிறார்கள். 
கூட்டம் கூடுகிறது. வெங்கட்ரமணன் பெயர் மாறி "ரமணா" ஆகிறான்.
 கொஞ்சநாளில் ரமணரிஷி ஆகிறான். 
அப்பாவி மக்கள் பக்தர்களாகக் கூடுகிறார்கள். 
வழக்கம் போல் மக்கள் பலர் காணிக்கை என்ற பெயரில்  கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நிறையச் சொத்துகள் சேர்ந்து விடுகிறது. 
கோடிக்கணக்கில் பெருகி விடுகிறது. 
ஆசிரமம் அமைத்து ஒரு நல்ல நிலையில் அமர்கிறான்.மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டுகிறாரோ இல்லையோ சாமியார்களுக்கு நல்ல வழி பிறந்து விடுகிறது.
உடனே ஊரில் இருந்து தன் தம்பியை அழைத்து வந்து சொத்துக்களை நிர்வகிக்கச் செய்கிறான்.
அடுத்து   தன் தாயாரையும் அழைத்து வந்து விடுகிறான். 
ரமணரிஷி இப்போது ரமண மகான் ஆகிறான். இப்போதுதான் அவரின் சம் வெளியாகிறது.ஆசிரம் மூலம் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் தன் தாயார் பெயரில் உயில் எழுதி மாற்றம் செய்து விடுகிறான். 
அதை  தொடர்ந்து மற்றவர்களால் ஆசிரம சொத்து தொடர்பான  பிரச்சினைகள் வந்து விடுகின்றன. 
இதெல்லாம் நடந்தது 1930-ஆம் ஆண்டு வாக்கில்.
 திருவண்ணாமலை முனிசிபல் நீதி மன்றத்தில் இந்த சொத்து தொடர்பான வழக்கு நடந்தது.

 வழக்கு விசாரணைக்கு வருகிறது.
 அதற்கு முன் இருந்த வெங்கட்ரமணன் ரமணாவாகி ரமணரிஷி ஆகி ரமண மகான் ஆகி ரமண பகவான் ஆகிவிட்டார். 
பகவான் நீதிமன்றம் எல்லாம் வரமாட்டார் என்று அவரது பக்தர்கள் சொல்லி விட்டார்கள்.
 நீதிமன்றம் ஒரு கமிஷன் அமைத்தது. இரண்டு வழக்குரைஞர்கள் விசாரித்தார்கள். பக்தி மார்க்கத்தில் இருக்கும் நீங்கள் பொதுமக்கள் கொடுத்த சொத்தை தாயார் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டீர்களே என்று கேட்டபோது" நான் சந்நியாசம் வாங்கவில்லையே. அதனால் என் தாயாருக்கு நான் எழுதி வைத்த உயில் செல்லும்' என்று சொல்லி விட்டார் ரமன   மகரிஷி .
சொத்து விவகாரம் வந்த பின்னர்தான் ரமணரின் சொந்த விவகாரம் வெளி உலகிற்கே தெரிகிறது.அவர் சந்நியாசம் வாங்காமல் துறவியாக ,மனிதப்புனிதராக அல்லது மனித கடவுளாக இருந்த கதை.அல்லது வரலாறு. அவருக்கு அதாவது அந்த கடவுளுக்கு கடைசி காலத்தில் வந்தது இந்த உலகில் பாவிகளுக்கு வர வெண்டும் என்று வேத ஞானிகள் ஒதுக்கி வைத்திருந்த புற்று நோய்.அதுதான் அவரின் உயிரையே பறித்தது.
அதையும் சில பக்தர்கள் உலகின் மக்கள் பாவத்தை அவரே ஏற்றுக்கொண்டதால் தான் இந்நோய் அவரை தாக்கியதாக கூறி பெருமை ப்பட்டுக்கொண்டார்கள்.
ஆனால் இப்போதும் பாவங்கள் உலகில் மிச்சம் இருக்கிறதே என்ன காரணம்.விளக்கம்தான் இல்லை.
இன்றுவரை அந்த ரமணரின் சொத்து பிரச்னை நீதிமன்றத்தில் அப்படியே முடங்கி கிடக்கிறது. பிரச்சினை தீரவில்லை.
"நாங்கள் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ரமணரிஷியின் மர்மம் என்ற புத்தகத்தில் உள்ளது."

"பக்தி என்ற பெயரில் பிறர் சொத்துக்களை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி தன் தாயாருக்கும் தம்பிக்கும் மாற்றம் செய்த ரமணமகரிஷியின் பக்தி வே ட ம் எங்கே?
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு உழைப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு தான் சேர்த்த சொத்துக்களை தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்காகச் சேர்த்து அறக்கட்டளை ஆக்கி அதை பின் தங்கிய மக்கள் எல்லாம் அய்ஏஎஸ் அய்பிஎஸ் அதிகாரிகளாகவும் பெண்கள் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் உயர் நீதிமன்ற உச்சநீதிமன்ற ஜட்ஜ்களாகவும் உயர்வதற்குப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியாரின் உயர்ந்த மனிதநேயச் சிந்தனை எங்கே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்."
                                                                                                                                          -கி.வீரமணி 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்த்திரைப் படங்கள்  தரம்.

தமிழ் படங்கள் இந்திய சினிமா -100 இல் இடம் பெறாதது தொடர்பான இடுகையில் தோழர் ஒருவர்" தமிழ்ப்படங்கள் தரம்" பற்றி சந்தேகத்தை கிளப்பி விட்டார்.
நியாயமானது.அவர் கேள்வி.
அது தொடர்பான எனது கருத்துக்கள்.
இந்த தரம் எதை வைத்து அளவிடப்படுகிறது?

இந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ் சினிமாவில் தரம்வாய்ந்த படம் ஒன்று கூடாவா இல்லாமல் போய் விட்டது.மற்ற மொழி படங்கள் மட்டும் தரத்துடன் உள்ளதா?
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு தரமான படம் கூட தமிழகத்தில் எடுக்கப்படவே இல்லையா?
சரி.இந்த உலகப்படம் என்றால் என்ன?அதற்கு தரம் எந்த அளவுகோலால் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆஸ்கார் பரிசுகள் ஆங்கில மேலை நாட்டு பட்ங்க்களுக்கான் பரிசு.அதை வாங்குவதையே சிலர் தங்கள் லட்சியம் என்பது மிகத்தவறு.ஆஸ்கார் வாங்க உங்கள் படம் ஆங்கிலத்தில் பேச வே ண்டும்.  முக்கியமாக இடது சார்பான நிலை இருக்க கூடாது.இடது சாரிகளை அதாவது கம்யூனிஸ்ட்களை விமர்சித்தால் கூடுதல் வாய்ப்பு.
மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தியவைதான்ஒரு படத்தின் தரமாக கொள்ளவேண்டும்.
அதை விட்டு,விட்டு ஒரு சிறுமி பள்ளியில் இருந்து வீடு போவதை மட்டுமே ஒருமணி நேரம் காட்டி  வெறும் பேருந்து ஓசையும்,ஆட்கள ஆங்காங்கே பேசும் சத்தம் மட்டுமே பின்னணியாக கொண்டதுதான் இவர்கள் கூறும்  தரமா?

உலகப்படமா?
அவரவர் மொழி,கலாச்சாரத்துக்கு தக்கதான் கலாச்சார படைப்புகள் இருக்கும்.இதில் தரமும் அவர்கள் கலாச்சாரம் அடிப்படை யில்தான் அமைய வே ண்டும்.ஜப்பானிய அகிரா குரோசவே போல்,ஹாலிவுட் படம் போல்  தமிழன் படம் எடுக்க வெண்டும் என்று அடம் பிடிக்க கூடாது.தமிழ் படம் போல் எடுங்கள் என்று நாம் அடம் பிடித்து படம் பிடிக்க கூடாது.உடை,மொழி,கலை,மாற்றம் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு பாணியில் இருக்கிறது.அவைதான் மற்றவைகளில் பிரதிபலிக்கும்.கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியில் எடுத்த விஸ்வரூபம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிய வில்லையே ஏன் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

'சிதம்பர ரகசியம்?"




இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல செய்தி.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது.
அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது.
ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை.
ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது.
ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா?
அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தயாரானவை திரைப்படங்கள் வரிசையில் வரவில்லையா?
அல்லது நூற்றாண்டு விழாவில் திரையிடப்படும் அளவு தகுதி வாய்ந்தவை அல்லாதவையா?
தமிழ் நாட்டில்தான் திரைப்படங்கள் ஆட்சியையே மா ற்றியிருக்கி றது. திரைப்படத்துறைதான் அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜானகி ராமச்சந்திரன் ,ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களை தந்தும் இருக்கிறது.திரைத்துறை தமிழகத்தில்தான் உணர்வுடன் கலந்துள்ளது.அந்த தமிழ்த்திரைப்படங்கள் ஒதுக்கி வைப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.அப்படி நடக்கவும் கூடாது.
அரசு வெளியிட்டப்படியல் முழுமையானதாக இராது என்றே இப்போதுவரை நம்புகிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 'சிதம்பர ரகசியம்?"

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரினாமுல் காங்கிரசு சார்பான சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது பற்றி முன்பே பார்த்தோம்.இந்த நிதி நிறுவனத்துடன் கட்சித்தலைவியும் -முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் தொடர்புண்டு.
suran
இந்த நிதி நிறுவனத்தில் திரினாமுல் காங்கிரசு முக்கியத்தலைகள் நிர்வாகிகள்.
30000 கோடிகளுக்கு மேல்  புழங்கிய நிறுவனம் .தொலைக்காட்சி சானல்கள்,திரினாமுல் காங்கிரசு ஆதரவு பத்திரிக்கைகள் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திடீரென இதன் நிர்வாகிகள் தலை மறைவாகி விட்டனர்.
இதை நம்பி பணம் போட்ட, ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் செய்வதறியாது நிற்கின்றனர்.
 சில தினங்களுக்கு முன் சாரதா குழு தலைவர் சுதிப்தா சென் காஷ்மீரில் கைது செய்யப்பட்டார் .அவர்   போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி "பிளாக் மெயில்' செய்ததாக தான் சார்ந்த அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த ஸ்ரீஞ்சை போஸ், குணால் கோஷ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
suran
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் "மோசடியில் ஈடுபட்டுள்ள சாரதா குழுமத்திற்கு, சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பெண் வழக்குரைஞருக்கு 1 கோடி ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார். டில்லியிலும், கவுகாத்தியிலும் எவ்வளவோ வழக்குறைஞர்கள் இருக்கும் நிலையில், சென்னையை சேர்ந்த பெண் வழக்குறை ஞரை நியமிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை, காங்கிரஸ் அமைச்சர் விளக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் வழக்குறைஞர் என, பெயர் எதையும் குறிப்பிடாமல், மத்திய அமைச்சரை மணந்துள்ளவர் என யூகமாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.அப்படி இருப்பவர் யார் என்று கண்டு பிடிப்பது என்ன "சிதம்பர "ரகசியமா?மிக எளிதாக அல்லது" நளின"மாக கண்டு பிடித்து விட மாட்டீர்களா என்ன?
நளினமான சிதம்பர ரகசியம் இருக்கட்டும்.
தனியார் நிறுவனம் ஏமாற்றியதற்காக மேற்கு வங்க அரசு மக்கள் வரி ப் பணத்தில் இருந்து 100 கோடிகளை முதற்கட்ட நிவாரணமாக முதலீட்டார்களுக்கு மம்தா பானர்ஜி  ஒதுக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.?அவருக்கும் ,கட்சிக்கும் சம்பந்த மில்லாத நிதி நிறுவனத்திற்கு மக்கள் பணத்தில் நிவாரணமா?
சந்தேகமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 25 ஏப்ரல், 2013

மின்சாரப் பற்றாக்குறை

 "சூரியன் " கைகொடுக்கு ம்,
--------------------------------------------
-பேராசிரியர் கே.ராஜு
தேசிய மின்சார விநியோகப் பாதைக் கட்டமைப்பின் கடைக்கோடியில் தமிழ கம் இருப்பதால் வடமாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து நமக் குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடிவதில்லை.

suran
 தில்லி மாநிலம் உபரி என அறிவித்த மின்சாரத்தைக் கூட நாம் பெற முடியவில்லை.
மத்திய அரசின் நிதி உத வியுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிலையங் களிலிருந்து கிடைக்கும் மொத்த மின்சாரத்தையும் இடைக்கால ஏற்பாடாக ஓராண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை யும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக முதல மைச்சர் 2012 அக்டோபர் மாதம் அறிவித்த சூரியசக்தி மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி என்ற திட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்கள் அத் திட் டத்தை ஏற்பதற்கு அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. 500 மெகாவாட்டிற்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த மின்சாரமும் 2013 இறுதியில்தான் கிடைக்குமாம்.
காற்றாலை மூலம் மின் உற்பத்தியை நம்பியிருக்க முடியாத சூழ லில் தமிழகத்தில் வரும் கோடைக்காலம் மக்களுக்கு சோதனைக்காலமாக இருக் கவே வாய்ப்புகள் அதிகம். மின்விநி யோகத்தை சில மணி நேரம் நிறுத்தி வைப்பதால் மின்நுகர்வைக் குறைத்து விடலாம் என்று நினைப்பதே ஒரு மாயைதான்.

வீடுகள், பள்ளிகள், மருத்து வமனைகள் மற்றும் அரசு அலுவலகங் களில் இன்வர்ட்டர்-பாட்டரி மூலம் முன் கூட்டியே அதே மின்சார வாரிய விநி யோக ஏற்பாட்டிலிருந்து மின்சாரத்தை எடுத்து சேமித்துவைத்து, மின்வெட்டு நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் முறைதான். 8-10 மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கும் பகுதிகளில் இதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.

டீசல் ஜெனரேட்டர்களைப் பயன் படுத்தி மின்சாரத்தை ஓரளவுக்கு உற் பத்தி செய்து கொள்ளலாம். தமிழக அரசு அறிவித்துள்ள தனிப்பட்டவர்களின் வீட்டு மொட்டை மாடிகளில் சூரியசக்தித் தகடு களைப் பதித்து பரவலாக மின் உற்பத்தி செய்து கொள்ளும் முறையில் அது மின்சார வாரியத்தின் மின்விநி யோகக் கட்டமைப்புக்குள் இருக்குமாறும் செய்ய முடியும். அதற்குள் இல்லாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள முடியும்.
சராசரியாக மாதம் 300 யூனிட்டுகள் செலவாகும் (ஏர்கண்டிஷனர் இல்லாத) ஒரு வீட்டை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
suran
 2.5 கிலோவாட் சக்தி தரும் ஒரு சூரியசக்தி போட்டோவோல்டையிக் அமைப்பு  சூரியவெளிச்சம் பிரகாசமாக உள்ள ஓர் நாளில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 10-லிருந்து 15 யூனிட்டுகள் வரை (அதாவது மாதம் 300-லிருந்து 450 யூனிட்டுகள் வரை) உற்பத்தி செய்யவல்லது.

ஏர்கண் டிஷனர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் கருவிகளை இயக்க மின் வாரியக் கட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
ஆனாலும் சூரியசக்தி மின் சாரத்தையும் பயன்படுத்தும்போது மாதாந் திர நுகர்வுக்கான அமைப்புப் படிகளில் குறைவான படிக்கு வந்துவிடும் என்பதால் செலுத்த வேண் டிய மின்கட்டணம் குறைவாகவே இருக் கும். தமிழகத்தில் 10 லட்சம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் “மொட்டை மாடி, மொட்டை மாடி.. சூரியனே போற்றி, சூரி யனே போற்றி” எனப் பாட ஆரம்பித்தால் ஒரு நாளைய மின்வாரியக் கட்டமைப்பின் சுமையில் ஒரு கோடி யூனிட்டுகள் குறைக்க முடியும்.
 கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங் களில் இன்னும் பெரிய அளவில் சூரிய சக்தி மின்உற்பத்திக் கட்டமைப்பை உரு வாக்கினால் மின்வாரியக் கட்டமைப்பின் சுமையைக் கணிசமாகக் குறைக்க முடி யும்.
அனல் மின்நிலையங்கள், சூரியசக்தி ஆலைகள் எல்லாம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது நிலைமை மேலும் சீராக மாறிவிடும். 2.5 கிலோவாட் சூரியசக்தி அமைப்பை நிறுவ 2.5 லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாய் வரை செல வாகும். கார்களுக்கும் இரு சக்கர வாக னங்களுக்கும் கடனை வாரிவாரித் தரும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்குக் குறைந்த வட்டியில் கடன் தரத் தொடங்கினால் கடும் மின்வெட்டுக் கொடுமையிலிருந்து தமிழகம் தப்பிக்க முடியும்.
சுற்றுச் சூழ லுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்உற்பத் திக்கு  அது பேருதவி செய் ததாகவும் இருக்கும்.
 வங்கிகள் முன் வருமா?

 [ கட்டுரை உதவி :- இந்து நாளிதழில் டி.வி.சுப்பிரமணியன் எழுதியது,]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசிடம்   ஊதியம் [அல்லது  கிம்பளம்] பெற்ற பத்திரிகையாளர்கள்
---------------------------------------------------------------------------------------------------------
பாகிஸ்தான் அரசிடம் ரகசியமாக ஊதியம் பெற்ற பத்திரிகையாளர்களின் பட்டியலை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-12ம் ஆண்டு பாகிஸ் தானில் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்து வந்தது. அப்போது, ஊடகத் துறையில் பணியாற்றும் பத்திரிகையா ளர்கள் செய்தித்துறை அமைச்சகத்திட மிருந்து ரகசியமாக ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பணியாற்றி யதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 இது அந் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. மேலும், ஊடகத்தின் மீது மோசமான அபிப்பிராயத்தையும் ஏற் படுத்தியது.இதுதொடர்பாக இரண்டு தனியார் தொலைக்காட்சி தொகுப் பாளர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை செவ்வாயன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடை பெற்றது. 
அப்போது செய்தித்துறை அமைச்சகத்திடமிருந்து ரகசியமாக ஊதியம் வாங்கிய பத்திரிகையாளர் களின் பட்டியலை பகிரங்கமாக வெளி யிட்டது. மேலும், இந்தப் பட்டியல் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தி லும் வெளியிடப்பட்டது. இதுதொடர் பாக நடைபெற்ற விசாரணையில் மொத்தம் சுமார் ரூ.18 கோடி அளவிற்கு பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள் ளது.
வழக்கம் போல இக்குற்றச்சாட்டை செய் தித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. உச்சநீதிமன்றம் பத்திரிகையாளர்களின் பெயரை பகிரங்கப்படுத்தியும்  பெயர் வந்த பத்திரிக்கையாளர்கள் யாரும் இதுவரை வாயைத்திறந்து  கருத்தும் தெரிவிக்க வில்லை.
இது பாகிஸ்தானில் மட்டும் நடப்பதாக தெரியாவில்லை.
உலகம் முழுக்க கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக செய்தியை வரவைக்கும்  வழக்கமாகி விட்டது.
suran
பெரும்பாலான இடங்களில் செய்தியாளர்களுடன் கதை  முடிந்து  விடுகிறது.ஊடக உரிமையாளர் விழிப்புடன்  இருந்தால் செய்திகளுக்கு பணம் கொடுக்கும் முறை வந்து விடுகிறது.
இந்தியாவிலும் பணம் கொடுத்து வரும் செய்திகளுக்கு  எதிராக மக்களவை வரை பிரச்னை எழுப்பப்பட்டது.
இங்குள்ள பத்திரிக்கைகள் பல வற்றில் அவ்வாறு செய்திகள் வருவது தெரிந்த விடயம்தான்.
அரசுக்கு ஆதரவாக வருவது முதல் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவாக செய்தி வருவதுவரை இங்கு நடக்கிறது.எல்லாமும் விளம்பரங்க்களக்காகவும் ,அவர்கள் தரும் சலுகைகள்,"கவர்"வதாலும் தானே .
suran

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மாட்டி விட நினைத்தவர்களே ,

மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
suran

"2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு  அறிக்கை முன்கூட்டியே வேண்டுமென்றே கசியவிட்டதற்கு  கண்டனம் தெரிவித்த  முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, இந்த விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என நிருபிப்பேன்" என கூறியுள்ளார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வந்தது. ஏறத்தாழ இறுதி கட்டத்தை, இந்தக் குழு அடைந்துள்ள நிலையில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
காரணம் விசாரணை ஒரு சார்பு நிலையிலேயே காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சியை சார்ந்த சாக்கொவால் தயாரிக்கப்பட்டுள்ளது பகிரங்கமாக தெரிகிறது.
மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் போன்றொருக்கு 2ஜியில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதுபோல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.முற்றிலும் ஆ.ராசா தான் இக்குற்றம் புரிந்தவர் என்று தலைப்பா கட்டும் படி அறிக்கை உள்ளது.
ஆ.ராசா தனது பக்க நியாயங்களை சொல்ல பல முறை குழு தலைவர் சாக்கோவுக்கு வேண்டுகோள் விடுத்தும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.பல கட்சியினரும் குழு உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டும் சாக்கோ ஆ.ராசாவை விசார்க்க மறுத்து விட்டார்.இதில் இருந்தே இந்த அறிக்கை உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே தயாரா கியுள்ளது தெரிகிறது.
suran
தப்பிக்க முடியுமா?
குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .
, சில நாட்களுக்கு முன் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கை விவரங்கள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
"ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை. பிரதமரை, தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா தவறாக வழி நடத்தினார்' என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாமே, "கூட்டுக் குழுவின் அறிக்கை, எப்படி ஊடகங்களுக்கு கசிந்தன. வேண்டுமென்றே, காங்கிரஸ் இவ்வாறு செய்கிறது. பார்லிமென்ட் நடைமுறைகளை, காங்கிரஸ் அர்த்தமில்லாமல் செய்வது கண்டிக்கத்தக்கது' என கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா "எல்லா முடிவுகளையும், பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுத்தான் எடுத்தேன். எல்லா விவரங்களும் அவருக்கு தெரியும். எனது  200 பக்க ஆதாரங்கள் அடங்கிய வாக்குமூலத்தை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப உள்ளேன்.ஆனால் அதை அக்குழு கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது.இது ஜனநாயக படுகொலை " என்றார். 
  ஜே.பி.சி., தலைவர் சாக்கோவுக்கு ராஜா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில்

"ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியானதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜே.பி.சி., முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பு தர வேண்டும். எனது நேரடி விளக்கத்தை கேட்காமல் வரைவு அறிக்கை தயாரித்திருப்பது சரியல்ல. வாகன்வதி அறிக்கையை இதுவரை தமக்கு தரப்பட வில்லை.
 நான் பிரதமரை தவறாக வழிநடத்தியிருந்தால், என்னை மீண்டும் அமைச்சராக நியமித்திருக்கமாட்டார். 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக  எனது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை பல முறை நடந்துள்ளன.
 ஆனால் இதுவரை லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. என் மீதான குற்றங்கள் தவறு என நிருபிப்பேன். ஜே.பி.சி.யில் ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை?.
எனது வி ளக்கத்தை கேட்டிருந்தால் வாதங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். இதில் இருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறு. எனது நிலை வேறு அமைச்சருக்கு வரக்கூடாது. குற்றமற்றவன் என நிருபிபேன்.'"
என்று எழுதியுள்ளார்.
என்னை விட்டுடுங்களேன்.
ஆனால் சாக்கோ தனது காங்கரசு கட்சிக்கு ஆதரவான நிலையில் இருந்து விலக்கிக்கொள்வதாக தெரியவில்லை.மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் இருவரையும் மறைமுகமாக இவர்களை இயக்கியவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் பகிரங்கமாகவே செயல் படுகிறார்.
2ஜி யை பொறுத்தவரை விவகாரம் இப்போது மக்களவையில் அவையை ஒத்தி வைக்கும் அளவில் உள்ளது.
2ஜி விவகாரத்தில்ஆ.ராசா,திமுக போன்ற  மற்றவர்களை  மாட்டி விட நினைத்தவர்களே இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி கதைதான் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


திங்கள், 22 ஏப்ரல், 2013

உலக புத்தக தினம்




suran
நேற்று நாம் வாழும் பூமி தினம்.
இன்று நம் வாழ்வை செழுமை படுத்தும் உலக புத்தக தினம்.
மக்கள் தலைவன் "லெனினி"டம் நண்பர் ஒருவர் உங்கள் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டபோது உடனே "புத்தகங்கள் "என்றாராம்.
பிறந்த நாள் அன்று அவர் மீதி அன்பு கொண்ட மக்கள் அனைவரும் புத்தகங்களை பரிசளிக்க எண்ணிக்கை லட்சத்தை தொட்டு விட்டதாம்.
நல்ல புத்தகத்தை போல் நல்ல நண்பன் இல்லை.நல்ல வழிகாட்டியும் இல்லை.
இன்று கணினியும்-இணையம்- மின்னணு புத்தகங்களும் வந்து விட்டாலும் அச்சில் வரும் புத்தகங்களை படிக்கும் இன்பம் தனியேதான்.
டாஸ்மாக்கில் செலவிட்டு போதையை எற்படுத்தி தன்னையே மறக்கும் குடிமக்கள் புத்தகங்களை படிக்கும் போதையை பெற இந்த புத்தக நாளில் வாழ்த்துகிறேன்.முன்னதின் போதை உங்களை மற்றவர்களிடம் சிறுமையாக்கும்.புத்தக போதையோ உங்களை பெருமை படுத்தும் பாதையை தரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
+  காசுக்கு பாதுகாப்பு 

டெல்லியில் விடிந்தால் ஒரு பாலியல் பலாத்கார வன்முறை.
இந்தியாவின் தலை நகரிலே நடக்கும் குற்றங்கள் நம் இந்தியாவையே அசிங்கப்படுத்தி வருகிறது.உலக நாடுகள் ஆய்வு செய்து உலகிலேயே அதிக பாலியல் வன்முறை இந்தியாதான் என்று சான்றிதழ்கள் வரிசையாகத்தருகிறது.
அதை தடுக்க வக்கற்ற இந்திய அரசு உலகிலேயே பெரும் பணக்காரர் வரிசையில் 20-வது இடத்தை தக்க வைத்துள்ள.3000கோடிகளில் குடிசையை கட்டி அதில் வாஸ்து சரியில்லை என்று புலம்பிவரும் ஒரு பண முதலைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை அவர் வீட்டின் கூர்கா வேலையை செய்ய சொல்லுவதும் அவர் போகும்போது பாதுகாப்பு தரக் வைப்பதும் மக்களாட்சி நடப்பதற்கான அறிகுறியாக இல்லை.
முகேஷ் அம்பானி.
அவருக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு, முகேஷ் அம்பானி செல்லும் போதுஅவருக்கு 28 வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர்.

அவர் செல்லும் வாகனத்திற்கு முன், "பைலட்' வாகனம் செல்லும்.பின்னால் திறந்த ஜீப்பில் அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் வாகனங்களில் செல்வர். 
இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும்உண்டு.
உத்தர பிரதேசத்தின் உள்ள, சி.ஆர்.பி.எப். படைப் பிரிவில் இருந்து முதற்கட்டமாக, அம்பானிக்கு பாதுகாப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மும்பையில் உள்ள முகேஷின் 3000கோடி கள்  "அன்டில்லா' வீட்டிற்கு மும்பை காவல்துறை  பாதுகாப்பு வழங்குகிறது.
இப்போது  துணை ராணுவங்களில் ஒன்றான சி.ஆர்.பி.எப்., படைப் பிரிவின் வீரர்கள் இ துவரை மத்திய அரசின் தொழிற்சாலைக[ரெயில்வே,அணுமின் நிலையம்,துறைமுகங்கள்,கண் நீர்த்தொழிற்சாலை போன்ற மு க்கியமான]ளுக்கு மட்டும்தான்  ஒரு பகாசுர  தனியார் நிறுவனத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை. தவறான வழிமுறையும் கூட.அம்பானிகளிடம் கொட்டிக்கிடக்கும் பனக்குவியலுக்கு அவர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை காசு கொடுத்து வைத்துக்கொள்ளலாம் .ஒரு அரசு தனது படைப்பிரிவுகளில் ஒன்றை மக்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் தனி நபரை பாதுக்காக்க அனுப்புவது.அவர் போடும் எச்சில் காசுக்குக்காக த்தான் .இந்த அம்பானி  எப்படி பட்ட தொழில் அதிபர்?
1400 கோடிகள் தொலைத்தொடர்புத்துறையில் ரிலையன்ஸ் அரசை ஏமாற்றியுள்ளது.2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் கையை வைத்து ள்ளது.
நிலக்கரி உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு செயற்கையாக நிலக்கரியை தொண்டி வழங்காமல் தட்டுப்பாட்டை எற்படுத்தி இந்தியாவின் அனல் மின் உற்பத்தியையே கேள்விக்குரியதாக்கி அதிக விலைக்கு தன்னிடமிருந்து மின்சாரத்தையும்,நிலக்கரியையும் விற்கும் அம்பானி.
கோதாவரி,கிருஷ்ணா நதிப்படுகை பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை வைத்து வாராவாரம் பெட்ரோல் விலையை அதிகரிக்க வைத்த அம்பானி.
இயற்கை எரிவாயுவை தான் சொன்ன விலைக்கு வாங்கவில்லை என்பதற்காக பூமியில் இருந்து அதுவும் அரசு இடங்களில் இருந்து எடுத்து விநியோகம் செய்யாமல் அடம் பிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை வாங்க வைத்த மாமனிதன் இந்த அம்பானி .முரைகெடுகள்தான் அம்பானி சாம்ராஜ்யத்தின் அடிக்கல்லே.இல்லாவிட்டால் திருபாய் அம்பானி துபாயில் பெட்ரோல் பல்க்கில் வேலைபார்த்து உழைத்தவர் மகன் உலகில் 20வது பணக்காரனாவது எப்படி நடந்திருக்கும்.?
முறைகேடுகளும் வரி ஏய்ப்பும் தான் இவர் உலக அளவில் 20 வது பணக்காரராக  உருவெடுக்க வைத்துள்ளது.எத்தனை முறை கே டுகள் செய்தாலும்,அரசை -வரியை எய்த்தாலும் அம்பானி கொடுக்கும் தேர்தல் நிதி -கட்சி நிதிதான் காங்கிரசு அரசை இப்படி எடுபிடி வேலையை செய்ய வைத்துள்ளது.மன்மோகன் ,சோனியா கட்சி அளவில் என்னவும் செய்து விட்டு போகட்டும்.மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு எந்திரத்தை அம்பானி வீட்டு காவலுக்கு அனுப்புவது சரியானது அல்ல.
நாடெங்கும் நடக்கும் சிறுமிகள் முதல் கிழவிகள் வரையிலான பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட -வாக்களித்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசு .கட்சி நிதி என்ற எச்சில் காசுக்காக யார்,யார் வீட்டுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது பார்த்தீர்களா?
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------


                           "இந்தியாவின் விஸ்வரூபத்துடன் ஹாலிவுட் ஜுராசிக் பார்க்"

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

"ஆண்டுக்கு முப்பதாயிரம்"

{கணக்கில் வந்தது மட்டும்.}

இன்று இந்தியாவில் தலையாய பிரச்னை மட்டுமல்ல இந்திய தலைநகரையே ஆட்டிப் படைக்கு ம் பிரச்னை  பாலியல் பலாத்காரம்தான்.
அதிலும் சிறார் கற்பழிப்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பலாத்காரங்களும் அதே அளவு உணர்சியுடன் தொடர்கிறது.அதுவும் டெல்லியில் அதிகமாகவே உள்ளது.காரணம்.?புரியா த புதிர் .
காவல்துறையினர் மீதுதான் இப்போது முழு குற்றமும் உள்ளது.அவர்களின் உருப்படியான  நடவடிக்கைகள்      இல்லாமை இப்படியான பாலியல் செயல்கள் பெருக காரணம்.
மேலும் குற்றவாளிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தையும் -அடக்குமுறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் போராடுபவர்கள் மீதும் காட்டுவது டெல்லி காவல்துறையினரின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடுகள் தான்.

இப்போது 5 வயது சிறுமி பலாத்கார நிகழ்வில் அவரின் தாயாரையும் உடன் வந்தவர்களையும் தாக்கிய காவல்துறையின் செயல் மிக அதிக பட்ச கேவலம்.
இது தொடர்பாக உலக அளவிலான நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளை உலகமெங்கும் எடுத்துக்காட்டி அசிங்கப்பட வைத்துள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக 

தற்போது  யு னி செப்  வெளியிட்டுள்ள அறிக்கை:-

"கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது.

சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, "ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர். 
பாலியல் வன்முறைக்கு வயதில்லை.இவன் அசாம் மாவட்ட காங்கிர சு தலைவர். 
இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள்" என தெரிய வந்துள்ளது.

பச்சிளம் தளிர்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்து 200 சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதைவிட பன்மடங்கு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல், புகார்களாக பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பினும், உரிய முறையில் பிரயோகப்படுத்தாத வரை இந்த சட்டங்களினால் பெண்களுக்கு பாதுகாப்போ, நிவாரணமோ அளிக்க இயலாது.

5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை, சட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை தற்போது எற்படுத்தியுள்ளது.'

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறியபடி பல கற்பழிப்பு  குற்றசாட்டுகளை   காவல்துறையினர் வாங்குவது இல்லை அதை பதிவதும்  இல்லை.
சொல்லப் போனால் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அனுப்பிவைப்பதுதான் காவல்துறையினரின் பாதுகாப்பாக உள்ளது.
இதை டெல்லி முதல் குமரி வரை மாநில வேறுபாடுகளில்லாமல் எல்லா காவல் துறையினரும் கடை பிடிப்பதில் மட்டும் நம் இந்திய ஒற்றுமை அதிகமாக உள்ளது.

இந்திய முதல் குடிமகன் இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக அறிக்கை மட்டுமே விட்டு வைக்க முடிகிறது.தனது கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடியாதது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.
உலக வங்கியும்,அமெரிக்காவும் இந்தியாவில் பாலியல் வன்முறை குறைந்தால்தான் இனி அந்நிய முதலீடு என்று மன்மோகன் சிங் அரசிடம் சொன்னால் மட்டுமே இந்த பாலியல் பலாத்காரங்களை நம் இந்திய அரசு கடுமையாக கட்டுப்படுத்தும் என்று எனக்கு தோ ன்றுகிறது.
suran

 

உலகிலேயே ஏழைகள் நாடு

SURAN


"உலகிலேயே  ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா"தான் என உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிட்டு ள்ளது.
எப்படியோ இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் திட்டங்கள் எல்லாம் பகாசுர பணக்கார நிறுவனக்களுக்கும் -அந்நிய நிறுவனங் களுக்குமாக இருப்பதால்தான் இந்த நிலை.
எல்லா வழிகளும் பணக்காரர்கள் மேலும் பணத்தை குவிக்கும் வழியாகவே காங்கிரசு அரசு செய்து வருகிறது.உலகமயமாக்கல் ,தனியார் மயமாக்கல்,தாரள [கொள்ளை]மயமாக்கல் போன்ற அரசின் கொள்கைதான் ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை 1950களுக்குப்பின்னார் மீண்டும் கொண்டு வருகிறது.
விடுதளைக்குப்பின்னார் நேரு,இந்திரா காந்தி  போன்ற பிரதமர்கள் கொண்டூவந்த தேசியமயமாக்கல் மூலம் விலகிய ஏழ்மை கோடு குறைவு  அதே காங்கிரசு அரசின் இன்றைய ஆட்சியாளர்களால் தனியார் மயமாக்கலால் மீண்டும் அதிகரித்து வருகிறது ஏழ்மை.
உலக நாடுகளில் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை இந்தியாவில் வாழ்வதாக கூறியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகின் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியர்களில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாகவும் அது இன்றைய இந்திய விலைவாசியில்   அன்றாட தேவைக்கு 80%க்கும்  மிக குறைவானது" என்றும்  அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

=============================================#
சகுந்தலா தேவி .6 வயதிலேயே மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது கணித திறமையை காண்பித்து மற்றவர்களை அசர் வைத்தவர் சகுந்தலா தேவி .
தனது கணித திறமையை காட்டி  கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.
 அவருக்கு தற்போது வயது 83.
sakunthala devi
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி.

1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.

முதல்வர் மம்தா க்கு தொடர்பில்லை.
---------------------------------------------------- --------------------------
 மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது சாரதாகுழுமம்.
இக்குழுமம் பல்வேறு வங்க மொழிபத்திரிகைகள் மற்றும்நிதி நிறுவனத்தையும் நடத்தி வந்தது. இந்த நிறுவனம் திரிணாமுல் காங்கிரசு முக்கியத்துவர்களால் நடத்தப்படுகிறது.திரிணாமுல்  கட்சி சார்பாக பத்திரிக்கைகளும் வெளியிடுகிறது முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இந்நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்றுதெரிகிறது.
சாரதா நிதிநிறுவனம்சமீபத்தில் நிதி நெருக்கடியால் இழுத்துமூடப்பட்டது. இதில் முதலீடு செய்தவர்களுக்கு  காசோலைகள் எல்லாம்  பணமில்லாமல் திரும்பி விட்ட து.
இந்நிறுவனத்தின் தலைவரும்  திரினாமுல் காங்கிரசு தலைகளில் ஒருவருமான சதீப்தா சென் கடந்த மார்ச் 26-ம் தேதி நிதிநிறுவனம் மூடப்படுவதாக அறிவித்து விட்டு தலைமறைவாகி விட்டா ர்.
சாரதா குழுத்தின் தலைமைநிர்வாகியும்  , திரிணாமுல் காங்.எம்.பி.யுமான குணால்கோஸ்  "நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தொடர்பில்லை.அவருக்கு இந்த விடயங்கள் தெரியாது " என்று  கூறியுள்ளார்

சனி, 20 ஏப்ரல், 2013

‘நவீன அம்பேத்கர்.”

இதுவரை வெளியாகாத பரம ரகசியமான அதிர்ச்சித் தகவலை ஒட்டு அ .திமுக.வான தாபாண்டியனின் கட்சி வெளியிட்டுள்ளது.
அதுவும் சட்டப்பேரவையில் தைரியமாக இந்த உண்மையை வெளியிட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே. லிங்கமுத்துதான்  தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘நவீன அம்பேத்கராக” இருக்கும் போட்டுடைத்துள்ளார் .
 முன்பு இதே முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி ஆராய்ந்த  சீமான்,வைகோ,நெடுமாறன் போன்றோர்  அவர் "ஈழத்தாய்' என்ற தகவலை வெளியிட்டு தமிழத்தை மட்டுமின்றி,இலங்கையையும் அதிர வைத்தார்கள்.
இப்போது இ.கம்யு .கட்சியினரின் ஜால்ரா முறை.
 சட்டசபையில்  கேள்வி நேரம் முடிவடைந்த பின்பு தனது வழக்கப்படி  110-விதியி ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த ஜெயலலிதாவை பாராட்டத்தான் இப்படி புகழுரையை உளறியிருக்கிறார்.

  110 வது விதியின் கீழ் படிக்கப்படும் அறிவிப்பை தொடர்ந்து ஒருவரும் வாயைத்திறந்து பே சக்கூடாது என்பதுதான் தலை விதி.
விவாதமே இருக்க கூடாது.
 ஆனால் இந்த 110 சிறப்பாளர் [ஸ்பெ ஷலிஸ்ட் ] ஜெ ஆளுமையில் எதிர் கேள்விதான் கூடாது.பாராட்ட எவ்வளவு நேரமும் எடுத்துக்கொள்ளலாம்.
அந்த நேரத்தைத்தான் லிங்க முத்து தனது ஜால்ராவை கையில் எடுத்து அ .தி.மு.க.வினரே சிந்திக்காத கோணத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
இவருக்கு பின்னாள் நல்ல கவனிப்பு இருக்கிறது.
தா.பா. இந்த கோணத்தில் இதுவரை சிந்திக்க வில்லை போல் தெரிகிறது.
ஆனால் பாவம் .
அம்பேத்கர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் 110 விதியின் கீழ் வருவதால் யாரும் ஒன்று ம் சொல்ல முடியாது.
இதை விட ஜெயலலிதாவை பெருமைப்படுத்தவும் முடியாது.
அம்பே த்கரை  சிறுமை படுத்தவும் இயலாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தோண்டத் தோண்ட.........,
சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.
இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.
அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.
இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
 ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...