வியாழன், 28 பிப்ரவரி, 2013

"செருப்பு"விலை குறையும்.

ரஜினி-சரத்குமார் போராடிய சேவை வரி [அவர்களுக்கு] நீக்கம்.
இந்திய வரும் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை மக்களவையில் இன்று நிதியமைச்சர் ப.சி.தாக்கல் செய்துள்ளார்.

இந்த தாகளில் மக்கள் நலன்,விவசாயிகள் நலன் ஒன்றுமே இல்லை.வரை ஏய்ப்பு செய்வோர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய வரவு செலவு திட்டத்தால் "செருப்பு"விலை மட்டுமே குறையும்.
2013-2014 நிதி ஆண்டின் மொத்த திட்ட மதிப்பீடு 6. 80 லட்சம் கோடியில் திட்டச்செலவு 5. 53 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
மறைமுக வரி மூலம் 4 ஆயிரத்து 700 கோடியும் , நேரடி வரியாக 13 ஆயிரத்து 300 கோடி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 செருப்பு வரி குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சொகுசு கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
 பாதுகாப்பு துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர் உதவித் தொகைகளுக்கு  கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுங்க மற்றும் கலால் வரியில் பெரியஅளவில் மாற்றம் எதுவுமில்லை. வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வரும் ஆண்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்திற்கும், பெண்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 விவசாயிகள் கடன் , தொழிலாளர் நலன் குறித்தும் , மாநில வாரியாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படவில்லை.
தரைவிரிப்புகள்,செருப்பு விலை மட்டும் குறைகிறது.
ரூ 2 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள மொபைல் போன்களுக்கு வரியை 1 சதவீதத்தில் இருந்து 6 சதமாக உயர்த்தியுள்ளார். உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.
 சிகரெட்டுக்கு வரியை 18 சதமாக உயர்த்தியுள்ளார். இறக்குமதியாகும் செட்ஆப் பாக்ஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பு  2 லட்சம்அப்படியே  நீடிக்கிறது. ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை பெறுவோருக்கு வரியில் ரூ. 2 ஆயிரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஒரு கோடி பெறுவோருக்கு கூடுதலாக 10 சதவீத வரிஉயர்த்தப்பட்டுள்ளது.
  தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த 7 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நேரடி மானிய திட்டத்தின் மூலம் 11 லட்சம் பேர் பயன் அடைவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
செருப்பு விலை குறையும்?
வழக்கம் போல் அம்பானி வகையறாக்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது.அதற்காகவே  வரி ஏய்ப்போருக்கு  மன்னிப்பு வழங்கும் ஒரு புதிய திட்டம்  அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
 ஆயுர்வேத மருந்துகள் விலை குறைக்கப்படுகிறது. மார்பிள் கல்லுக்கு வரி உயர்த்தப்பட்  டுள்ள து.இதனால் புதிதாக வீடு கட்டும் மக்கள்  கடுமையாக பாதிக்கப்படுவர்.
ஆனால் கஞ்சிக்கு இல்லாமல் துன்பப்படுவோர் நிறைந்த திரைப்படத்துறைக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 100 கோடிகள் அளவு வசூல் செய்து கொண்டிருக்கும் திரைத்துறையை சார்ந்த  வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் திரைப்படத்துறையினர் துயர் துடைக்கப்படும்.

புதன், 27 பிப்ரவரி, 2013

முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றவில்லை

என்னடா கொஞ்ச நாட்களாக காணோமே என்று சிலர் இதை எ திர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.
அவர்களை முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றவில்லை.இதோ அடுத்த அமைச்சரவை மாற்றம்.
இம்முறை பதவி இழந்தோர் விவரம்:
பதவி இழந்துள்ள கோகுல இந்திரா சென்னை அண்ணாநகரிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். இவர் சுற்றுலாத்துறையை கவனித்து வந்தார்.

என்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி சட்டம் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தவர் ஆவார். இவர் முசிறி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.
வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆனவர் டாக்டர்.விஜய் ஆவார்.
மணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டி.பி.பூனாட்சி,
அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ வைகைச்செல்வன்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணிஆகிய மூன்று பேர்கள் நாளை  அமைச்சர்களாக  பணியேற்க மன்னிக்கவும் பதவியேற்க உள்ளனர்.
காதி மற்றும் ஊரக தொழில்துறைக்கு  அமைச்சராக பூனாட்சி , பள்ளிக்கல்வித்துறைக்கு  அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறைக்கு  அமைச்சராக கே.சி.வீரமணி   ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது எத்தனையாவது மாற்றம் என்று கணக்கிட்டுக்கொண்டிருக்காமல் இப்படி அடிக்கடி மாற்றங்கள் செய்வது தேவையா?என்றுதான் பார்க்க வேண்டும்.கணக்கிட கைவிரல்கள் பத்தாது.
 ஒரு துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் பதவி நாற்காலியில் அமர்ந்து துறை தொடர்பாக விடயங்களை தெரிந்து செயல்படும் முன்னரே அவர் மாற்றப்படுவது போல் மாற்றங்கள் அடிக்கடி நடக்கிறது.
பதவி வழங்கும் முன்னரே அவரின் தகுதி,திறமை,நாணயம் பற்றி நன்கு அறிந்துதானே நாற்காலி கொடுக்கப்படுகிறது.பின் திடீர் மாற்றங்கள் ஏன்?
இது அவர்களின் மனதில் இன்னும் எத்தனை நாட்களோ ?அதற்குள் துறை மூலம் சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்துக்கொள்வோம் .செய்ய வேண்டியவற்றை செய்து கொள்வோம் என்ற சிந்தனைதான் ஓடும்.மக்கள் நலன்,துறைவாரி நலன் பற்றி சிந்திக்க யாருக்கு மனநிலை இருக்கும்.?
ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.இந்த ஆட்சி முடியும் போது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இருக்க மாட்டார்கள்.
அனைவரும் முன்னாள் அதிமுக  அமைச்சர்களாகத்தான் இருப்பார்கள்.!
இப்போது கோட்டைக்கு சென்று அரசு தலைமைச்செயலரை துறைவாரியாக அமைச்சர்கள் பெயரை கேட்டால் உடனே சொல்லிவிடமுடியுமா என்ன?
அவரை ஏன் கேட்க வேண்டும் .சக அமைச்சர்களையே கேட்போமே.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சேயின் போர் குற்றம்.
புதிய தீர்மானம்?

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
 இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
 இதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 இந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.
 பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று போர்க்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட இருப்பதால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பார்வை திரும்பும். இதன் மூலம் இலங்கையின் முகமூடி கிழித்து எறியப்படும். அதற்கு எதிரான பிடி மேலும் இறுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.
ராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடு மைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறுவன் பாலச்சந்திரனைகொன்று

விடக்கூ றியதெ இனத்துரோகி கருணாதானாம். 
அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அவர்களை இங்கிலாந்து அரசு இலங்கைக்கு  திருப்பி அனுப்பி வருகிறது. அவ்வாறு இலங்கை திரும்பிய பின்புஅவர்களை  சிங்கள ராணுவம் , போலீசார்  சித்ரவதைகள் செய்வ தாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் டேவிட் மேபம் கூறுகையில், இங்கிலாந்து அரசு இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் மாற்றம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மாவீரன் பிரபாகரன் தமிழீழம் எனக் காட்டும் இடங்கள்தான் இன்று தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட இடங்களாக மாறிய சோகம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சில அவலங்கள்

1,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள  பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என ஒருவர் மட்டுமே உறுப்பினராகவும் -தலைவராகவும் ,தொண்டராகவும் உள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால்  பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரை எந்த கிறுக்கனும் கூட ஆதரிப்பதில்லை என்றும் தெரிந்தே இவர் அவ்வப்போது தனது தத்துவங்களை உளறிக்கொண்டிருக்கிறார்.அவற்றை வெளியிடவும் சில பத்திரிகைகள் இருக்கிறது. 
சில நாட்களுக்கு முன்பு மாவீரன் பிரபாகரன் இளைய மகன் சிங்கள ராணுவத்தால் கொடுரமாகக் கொல்ல ப்பட்டதை  கூட நியாயப்படுத்தி இந்த அரசியல் ஞானி அறிக்கை விட்டிருந்தார்.பிரபாகரன் தீவிரவாதி கொடுரமானவர் அவர் மகனும் அப்படித்தானே இருப்பான் என்று அரிய ஆய்வை வெளியிட்டிருந்தார்.
இப்போது எங்கள் சந்தேகம் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமி அப்பா ஒரு கிறுக்கராகவா வாழ்ந்து மறைந்தார் என்பதுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தளங்களை ஊடுருவி தாக்குபவர்கள் [ஹாக்கர்கள் ]இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தை  பதிவேற்றம் செய்து இலங்கை ஊடக அமைச்சக  இணையத்தளத்தை தாக்கியுள்ளனர். 
“H4x Or HUSSY' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள  இந்த  தாக்குதல் நடத்துபவர்கள், 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்  இடம்பெற்ற கொடூரங்கள்  பற்றிய ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஒன்றை இந்த இணையத்தில் பதிவெற்றியுள்ளதாக தெரிகிறது.
"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து !    அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு! என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உடனே அரசு செயல்பட்டு  இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.மின் உற்பத்தியில் தமிழகத்தின் அக்கறை....?
  சரியாக தீபாவளி,பொங்கல்  போன்ற விழாக்காலங்களிலும்,முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளிலும் மட்டும் தமிழகம் முழுக்க மின்தடை இன்றி அல்லது அதிக நேரம் மின்சாரம் இருக்கிறது.அது முடிந்தவுடன் மீண்டும் அதிக நேரம் மின்தடை.காரண்ம் காற்றாலை கை கொடுத்தது என்று கூறிவருகிறார்கள்.அது என்ன பண்டிகைக்காலம் மட்டும் வீசும் காற்று - அப்போது மட்டும் மின்சாரம் தயாரிக்கும்  காற்றாலைகள் ?
இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. 
ஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது.புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. இப்போதைய கடும் மின் தட்டுப்பாடு காலத்தில் கூட தமிழக அரசு இது பொன்ற திட்டங்களை கண்டு கொள்ள வில்லை.நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
படம்&தகவல்  நன்றி:தினமலர்.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். 
கேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும்  செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிக மின்தடையால் திணறி வரும் தமிழ் நாட்டில் இங்குள்ள அரசு இந்த திட்டாங்க்கள் எதையும் நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் கண் மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
மின் தடைக்கு காரணம் சென்ற ஆட்சியின் அலங்கோலம் என்று குற்றம் சாட்டிக்கொண்டு கையை கட்டிக்கொண்டிருப்பது சரியா?
அவர்கள் அலங்கோலம் என்றுதானே உங்களை மக்கள் கொண்டுவந்து ஆட்சி செய்ய கூறி வைத்திருக்கிறார்கள்.
 ஆனால் குற்றம் சாட்டுவதை தவிர மின்னுற்பத்திக்கு இதுவரை இன்றைய ஆட்சியாளர்கள் எ துவும் இதுவரை  செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,

ஏற்கனவே காவேரி தண்ணீர் கிடைக்காமலும்,மழை ஏமாற்றி விட்டதாலும் விவசாயிகள் வாழ்க்கை வெறுத்து போயுள்ள இந்த காலத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வந்த அமைச்சர் மேலும் அவர்களை கடுப்படித்துள்ளார்.
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டிபேசியுள்ளார்.காரணம் அவர் அம்மாவின் புகழ் பாடி  இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது அங்கு  கூடிய விவசாயிகள் யாரும் கைதட்டவில்லை .
திட்டும் அமைச்சர்.-படம்:தினகரன்.
அதனால் கோபம் தலைகேறிய  அமைச்சர் கைதட்டுமாறு கேட்டுள்ளார்.ஆனால் சீவனற்ற விவசாயிகள் கைத்தட்டியது ஓசையை அமைச்சர் விரும்புமளவு எழும் பாததால் அங்கு கூடியிருந்த விவசாயிகளை பார்த்து கடுமையாக ஏகத்துக்கும்  திட்டி பேசியுள்ளார்.
"அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,அம்மா கொடுக்கும் பணத்தை
 வாங்கியும் நன்றியில்லாத ஜென்மங்கள்"
 என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கடுமையான வார்த்தைகளால் திட்டிமுடித்துள்ளார்.
இதைக்கண்ட அதிகாரிகளும் ,விவசாயிகளும்  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.  மிக மோசமான வார்த்தைகளை அமைச்சர் பேசியுள்ளார்  என எதிர்த்து திட்டிக்கொண்டே கலந்தனர்.
அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று மரியாதையுடன் இருக்க காரணம் அம்மா இல்லை.விவசாயிகள் இவருக்கு போட்ட வாக்குகள்தான் அவரை அ மைச்சராக்கியுள்ளது.
அது போக இப்போது விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரணம் இவர் தனது கையில் இருந்தோ,இவர் வணங்கும் அம் மாவின்  சொத்துக்களை விற்றோ கொடுக்கவில்லை.மக்களின் வரிப்பணம்தான்.இப்போது அரசு நிதியாக மக்களுக்கு போ யுள்ளது.
இவர் அம்மாவின் கடைக்கண் கடாட்சம் வேண்டுமென்றால் வழக்கமான முறையில் 90பாகை குனிந்து கும்பிடட்டும்.மற்றவர்களையும் இவர் "இதய தெய்வம் அம்மா "என்று கூறும் போதெல்லாம் கைத்தட்டியாக வே ண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு .
ஏற்கனவே கொடுக்கும் நிவாரணம் உரம் வாங்கிய காசில் பாதிக்கு கூட வராது.வட்டிக்கு என்ன செய்ய என்று கலங்கிய நிலையில் காலம் தள்ளும் விவசாயிகளை அவர்கள் மனதை இன்னமும் கலங்க வைப்பது ஒரு அ மைச்சரின் வேலை அல்ல.
அமைச்சர் தனது தலைவியை புகழும் போதெல்லாம் கைத்தட்ட வே ண்டியது  ,மக்களின் கடமை அல்ல.
அவர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்கப் போய்தானே சென்ற முறை அம்மாவின் ஆட்சியின் அலங்கோலங்களை மறந்து உணர்ச்சியின்றி இந்த முறை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதை அமைச்சர் நன்கு புரிந்து கொ ண்டுள்ளா ர் .

சனி, 23 பிப்ரவரி, 2013

"காவிரி தாய்".



முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அவதாரம் "காவிரி தாய்".அரசிதழில் நீதிமன்றத்தீர்ப்பை வெளியிடச்செய்ததற்காக அம்மாபெரும் சாதனையை செய்து முடித்த பெருமைக்காக இந்த பட்டம் அவரின் ரத்தத்தின் ரத்தங்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெளியீடு அவ்வளவு பெரிய சாதனையா?என்றால் ஒன்றுமே இல்லை.அரசியல்வாதிகள் தாங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்படியோ அது போலத்தான்.
எந்த இதழில் வெளியிட்டாலும் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டால்தான் உண்டு.உச நீதிமன்றத் தீர் ப்புக்கே தண்ணிரை திறந்து விடாமல் தண்ணிர் காண்பித்த துதான் கர்நாடகா.
இந்த காகித மிரட்டலுக்கு பயந்து விடுமாஎன்ன?
நதிநீர் கண்காணிப்புக்குழு -காவிரி நீர் நிர்வாக வாரியம் இரண்டும் தன்னிச்சையாக உறுதியாக செயல்பட்டால் மட்டுமே இந்த காவிரி தண்ணீர் விவகாரம் ஒரளவுக்கு நிறைவுக்கு வரும்.அதற்கு நதிகளை தேசியவுடமையாக்க வெண்டும்.அதற்காக தனியாரிடம் மத்திய அரசு இப்போது திட்டமிட்டுக்கொண்டிருப்பது போல் ஒப்படைத்து விடக்கூடாது.அது இன்னமும் கலவரத்தை மக்களிடம் தேசிய அளவில் உருவாக்கி விடும்.
இப்போது காவிரி பிரச்னை பற்றியும் தற்போதைய நிலை பற்றியும்  கொஞ்சம் பார்க்கலாம்.
அதை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விவரிக்கிறார்.
1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே! (ஆவண ஆதாரம் என்னிடம் உண்டு).
2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.
3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.
4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.
ஆனால், அதன் பிரிவு  4-ன்படி,  மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு.
நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு
இந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).
இறுதித் தீர்ப்பு விவரம்
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,
ஓடிவரும் நீரின் மொத்த அளவு    - 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு    - 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்கு    - 270 டி.எம்.சி.
கேரளாவிற்கு    - 30 டி.எம்.சி.
புதுவைக்கு    - 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க    - 10 டி.எம்.சி.
இந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.
இடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.
வழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.
சட்டப்படியான நடவடிக்கைக்கே போராட்டமா?
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.
6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்பதோ சரியல்ல! அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டதாதது ஏன்?
கருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.
என்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும்  (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.
அதைவிட  அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.
அடுத்து செய்யப்படவேண்டியது என்ன?
7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.
1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,
மத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.
அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.
இவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, இப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.
முதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல!
இன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி!
ஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
இந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.
2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது!
3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு,
எனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது!
இனிமேல் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது.
ஆனா லும், கர் நாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம்
 - இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும்.
 இது மிக,மிக முக்கியம். மிகமிக அவசரம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 20 பிப்ரவரி, 2013

அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு

'இன்று நடக்கும் வேலை நிறுத்தம் தேவை இல்லாதது.
அதில் வங்கி ஊழியர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்'
இது மத்திய நிதி யமைச்சக   திருவாக்கு.
இன்றைய அகில இந்திய இரு நா ட்கள் வேலை நிறுத்தம் முதாலாவதாக மத்திய சோனியா அரசின் தவறான நடைமுறைகளை கண்டித்து நடப்பது. இதுவரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்று எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளுமே இந்திய நாட்டு மக்களுக்கு ஆபத்தை தருவதாகவும் -துன்பத்தை தருவதாகவும் அந்நிய குறிப்பாக அமெரிக்க நாட்டுக்கு மட்டும் நன்மை தருவதாக்கவுமே இருக்கிறது.
இந்த போராட்டம் யா ரோ -யாருக்காகவோ நடத்துவது போல் பெருவாரியான மக்கள் இருப்பது போல் தெரிகிறது 
மாதம் மாதம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும்  ,வங்கி ஊழியர்களுக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன அவசியம்?
அவர்களும் இந்த இந்திய குடிமக்கள்தானே அரசியலில் இல்லாவிட்டாலும் இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது .
நாம் அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு  என்று குடிசை வாழ் மக்களும் எண்ண இயலாது .
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு சார்பில் அறிவிக்கும்போது அரிசி  -காய்கறி விலையில் இருந்து அனைத்துப பொருட்களுமே விலை தன்னால் உயர்கிறது .பேருந்து கட்டணம் முதல் ரெயில் கட்டணம் வரை உயர்கிறது.
மானியம் கொடுக்க வக்கில்லாததால் அனைத்து பொருட்களுக்கும் மானியத்தை நிறுத்துகிறோம் என்கிறார்கள் .
உரத்துக்கு மானியத்தை நிறுத்தியதால் வேளாண் பொருட்கள் உற்பத்தி வி லை உயர்ந்து சாதாரண வகை அரிசியே  இன்று கிலோ 40/-க்கு போ ய் விட்டது.
மானியம் அனைத்தும் நிறுத்தினால் அரசுக்கு 4000 கோடிகள் மிச்சமாம்.
இதில் லாபக் கணக்கு பார்க்கும் மத்திய பொருளாதாரப்புலிகள் 14000 கோடிகள் அம்பானி,டாடா இன்னும் அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அதுதான் அரசுக்கு அவர்கள் தர வே ண்டிய பணத்தை  தள்ளுபடி செய்துள்ளது .
பலகோடி மக்களுக்கு போய் சேர வே ண்டிய மானியம் கொடுக்க யோசிக்கும் மன்மோகன் சிங்  சில பணமுதலைகளுக்கு மட்டுமே லாபம்தரும் இந்த 14000 கோ டிகளை தள்ளுபடி செய்தது ஏ ன்?
மத்திய அரசின் மனதில் மக்களுக்கு சேவை-நல்லது செய்யும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது.அவர்கள் சேவை முழுக்க அம்பானி,அமெரிக்க வகையறாக்களுக்கு மட்டும்தான்.பதவியில் இருப்பதே  பண முதலைகளின் கால்களை வருடி விடத்தான்.
லட்சம் கோடிகள் கணக்கில் முறைகேடுகள் செய்யத்தான்.
அதற்கு பக்க பலமாக முலாயம்,மாயாவதி,லாலு,கருணாநிதி ,நிதிஷ்குமார்,நவீன் பட்நாயக்,போன்ற எதிர்கட்சிகள்[?] மற்றும் கூட்டணி கட்சிகள் இருக்கிறது.
இவர்களை எதிர்ப்பதுபோல்  இருந்தாலும் இவர்களின் இந்த சீர்திருத்தங்களுக்கு தன்னால் முடிந்த அளவு மறைமுக ஆதரவை தந்து மக்களவையை முடக்கி வைத்து மசோதாக்களை நிறைவேற்றிட பாஜக  உதவி வருகிறதுஆக நம்மை ஆள்வது காங்கிரசு கூட்டணி அல்ல.
அமெரிக்கா மற்றும் அம்பானி-அணில் அகர்வால் -இந்துஜா-டாடா  போன்ற இந்திய பகாசுர 
 முதலாளிகள்தான் .
இப்போது  ரேசன் பொருட்களுக்கு மானியத்தை கொடுப்பது ரேசன் கடைகளை மூடி விடும் திட்டம்தான்கொஞ்ச்ச நாட்களுக்கு மட்டுமே உங்கள் பணம் உங்கள் கையில்.அதன்பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்.
இந்த போராட்டத்தினால் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது அதன் அமைச்சர்கள் பேச்சில் தெரிய வருகிறது.
முன்பும் இது போன்ற இந்திய வேலை நிறுத்தம் நடக்கும் போது அதை கண்டு கொள்ளாத  மத்திய அரசு இப்போது பேச்சு வார்த்தைக்கு வர ச்சொல்வதும்சம்பளத்தை பிடிப்போம் என்று மிரட்டுவதும் அதன் வெளிப்பாடுகள்தான் .
அதற்கு காரணம் முந்தைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கைதான் கிட்டத்  தட்ட   ஒரு கோடி பேர்கள் அதில் கலந்து கொண்டதுதான்.
 ஆட்டோ ஓட்டுபவர்களை மத்திய அரசின் பெட்ரோல் விலை கொள்[ளை ]கை பாதிக்கவில்லையா?
விவசாயிகளை மத்திய அரசின் உர மானிய வெட்டு நீர் கொள்கை பாதிக்க வில்லையா?
அரசு ஊழியர்களை புதிய ஒய்வூதிய திட்டம், அடிக்கடி உயரும் விலை வாசிக்கேற்ப அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய நிலை பாதிக்கவில்லையா?
தொடரும் மின் வெட்டு ,அனைத்தும் தனியார் மயத்தாலும் அனைத்து இனங்களுக்கும் போட்டு தாக்கும்  சேவை வரி யாலும் அனைவரும் பாதிக்கப்பட வில்லையா?
கிராமங்களில் 28 ரூபாயும், நகரங்களில் 35 ரூபாயும் செலவிட்டால் அவர்கள் வறுமைக்கோட்டில் இல்லை என்ற அநியாயம் கூலி வேலைக்காரர்களை பாதிக்கவில்லையா? 
இவை எல்லாவற்றையும் விடபூமியில்  நிலக்கரியில் இருந்து வானில் ஹெலிகாப்டர்-வளி மண்டலத்தில்  2ஜி அலைவரிசை என்று மண்ணில் இருந்து விண்வெளி வரை  அனைத்திலும் லட்சம் கோடிகளில் கை நனைக்கும் ஆளுங்கட்சியினர் இப்போது குடிக்கும் தண்ணிரிலும் நீர்க்கொள்கை என்று தனியார் மயமாக்கிட கை வைக்கப் போகிறார்களே .
இப்போதும் கூட இந்திய உழைக்கும் மக்கள்  தனது  எதிர்ப்பை இது போன்ற வேலை நிறுத்தங்களில் காட்டாவிட்டால் ....
இனி காட்டுவதற்கும் -இழப்பதற்கும் ஒன்றுமே இல்லாமல் போய் விடும்.!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒன்றும் கண்டு கொள்ளவேண்டாம் .
சிறுவன் பாலச்சந்திரன் படு கொலையில் இந்திய அரசு கருத்தோ- கண்டனமோ தெரிவிக்க ஒன்றுமில்லையாம் .
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் அது பற்றி கேட்டபோது ", சம்பவம் தொடர்பான படத்தை தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாக கூறினார். 
தற்போது இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முக்கியமான அண்டை நாடு என்றும். போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டதாகவும்"
 சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். நல்லவேளை .படத்தை பார்த்தேன் ரசித்தேன் ,சிரித்தேன்.பின் கிழித்துப்போட்டேன்.என்று முந்தைய கருணாநிதி பாணியில் சொல்லாமல் விட்டார் .
மாலத்தீவு உள்நா ட்டு பிரச்னையில் முன்னாள் பிரதமர் நஜிமுக்கு தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்து மாலத் தீவு உள்நாட்டு விவகாரத்தில் தலையை நீட்டியுள்ள இந்தியாவுக்கு ஈழத்தமிழர் என்றால் ஏன் இந்த பாரபட்சம்.ஒரு சிறுவனின் அநியாயக் கொலை கூட இந்திய அரசின் மனதை பாதிக்கவில்லையா?எங்கோ இருக்கும் கனடா,ஆஸ்திரெலியா  ஆகியவற்றிற்கு இருக்கும் மனிதாபிமானம் சோனியா கட்சியினருக்கு இல்லாமால் போ ய் விட்டதே.
ஒருவகையில் ஈழத்தமிழர் ஒழிப்பில் ரா ஜபக்சே யுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட
சோனியா கட்சியினரிடம் மனிதாபிமானத்தை  அதுவும் தமி ழர் விடயத்தில்
எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறுதான் .

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

"உலக அளவி"ல் பட வரிசை "பத்து,"

உலக அளவில் செய்தியாளர்களால் வெளிடப்பட்ட  புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.
அந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,

இந்த புகைப்படம் 2012-ம்,ஆண்டில் வெளியான படங்களில் பொதுவான  செய்தி  படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..


20-11-2012 -ல்  காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 1-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
14-4-2012சிரியாவில் அரசு படையினரால் கடத்தி கொல்லப்பட்ட தந்தையின் அருகில் மகள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2-ம் பரிசு பெற்ற பொது செய்திப் படம் .
31-7-2012 சிரியா கலவரத்தில் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்களை போட்டுக்கொடுத்தவரை  கலவரக்காரர்கள் போட்டு தாக்கும் போது ,


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 3-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
17-4-2012 சூடான் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட  போர் வீரன் வான் அடக்கம் செய்யப்பட்டபோது.
ஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா?
தேர்வான  படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் தேர்வான சில படங்கள,






நம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

"புத்த" மத அரக்கர்கள்.




ஈழத்தில் ராஜபக்சேயின் கொடுர கொன்றொழிப்பை மறக்க நினைத்தாலும் மறக்க இயலவில்லை.
ஒரு இனத்தையே பூண்டொடு அழித்தொழிக்கும் நிகழ்வல்லவா அது.அந்த கொலைக்களத்திற்கு விடுதலைப்புலிகளின் மீதான கோபத்தை மட்டும் ஒரே காரணாமாக கொண்டு இந்திய மத்திய அரசு பலி வாங்கும் பூசாரிகளாக ஆதரவை கொடுத்து தனது கரங்களையும் ரத்தக்கறையாக்கிக் கொண்டது இன்னும் கொடுமையானது.
அந்த கொடுரங்களில் உச்சமாக 'மாவீரன் பிரபாகரன் 'மகனாக பிறந்த காரணத்தினால் சிங்கள ராணுவத்தால் சின்னஞ்சிறுவன் என்றும் பாராமல் துப்பாக்கிக் குண்டுகளால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட "பாலச்சந்திரன்" கொலை காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கி விட்டது.
இப்படி சிறுவனையும் கொன்ற இந்த படையினர் மனித இனம்தானா என்பதில் சந்தேகம் வ ருகிறது.இவர்கள் அமைதிக்கு வழி கூறிய புத்த மதத்தை சார்ந்த அரக்கர்கள்.
 தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், மாவீரன்  பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை செய்யப்பட்ட விவரத்தை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
 போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது இறந்திருக்கலாம் என்று இதுவரை இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருந்த  சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை இப்போது வெளியான படங்கள் வெளிப்படுத்துகின்றன .
படத்தில் ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் பார்க்கும் அவன் பார்வை கொடுரக்கும்பளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று பார்ப்பது போல் உள்ளது.
அடுத்த படத்தில் அவன் தனது மார்பில்  குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தக் கறைகள இல்லாத நிலையில்  உயிரி ழந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன்  பிரபாகரனின் சின்ன மகன்  எவ்வாறுராஜபக்சேயின் அரக்க கூட்டம்  திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்ற கொடுர  உண்மை உலகிற்கு தெரியவந்துள்ளது.
மனம் படைத்த மனிதர்கள் இதை கண்டு கண்கலங்கி இலங்கை அரக்கர்களையும்,அதற்கு துணை போன சோனியா கும்பலையும் எண்ணி குமுறுவர்.
இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் இலங்கை ராஜபக்சே அரசை கண்டிக்காத-தண்டனை வழங்க வக்கற்ற  ஐ.நா, சபை 
எதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.
சிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளசேனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  
கரிய வாசம் 
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம், உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும்,
 இதற்கு பின்னால் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இருப்பதாகவும்.
 இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லையென என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
நிச்சயம் கொலையையே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இ தில் புதிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லைதான்.
உயிருடன் இருக்கும் சிறுவன் உயிர் இழந்து கிடப்பது எப்படி?
இதற்கு கரிய வாசம் என்ன பதில் சொல்லுவார்.
அது அவன் முன்பு விடுதலைப்புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பாரோ?
நிச்சயம் இதுபோன்ற சிறுவர்கள்வயதானவர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்த ராஜபக்சே கும்பலுக்கு வரும் முடிவும் அவலமாகத்தான் இருக்கும்.அதற்கு துணைபோன கும்பலு க்கும்தான்.
உண்மையில் இதயம் உள்ளவர்கள் இதை கண்டு கண்ணிர் வடிப்பார்கள்.ஆனால் அந்த இடத்தில் பள்ளம் உள்ளவர்களை என்ன சொல்ல.
இத்தனை கொடுமை செய்யும் ராஜபக்சே பக்தனாக இந்தியாவில் தமிழ் நாடு வரை வருகிறான்.அதை இந்த மனிதாபிமான இல்லா மத்திய அரசும் அனுமதிக்கிறது.அதற்கு இங்குள்ள தமிழனும் காங்கிரசுக்காரன் என்ற பெயரில் பதவிக்காக வக்காலாத்து வாங்குகிறான்.
என்ன தமிழனின் இன உணர்வு?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

மின்சாரம் தவிர அனைத்தும் வருகிறது.
தமிழக  அரசு தன்மக்களுக்கு மின்சாரம் மட்டும்தான் தர இயலவில்லை.
ஆனால் மின் கட்டணம் முதல் அனைத்துக்கும்பல மடங்கு  கட்டண உயர்வை மட்டும் தாராளமாக அதிகரித்த து .
இப்போது மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. 
இதுவரை உபயோகித்த மின்சாரத்துக்கு கணக்கு பார்க்க மட்டுமே வீட்டில் இருந்த மீட்டருக்கும் இனி மாத வாடகை வாங்கவும் மிக புரட்சிகரமாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
 இதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.
இதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. 
மேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. 
ஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------













.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...