சனி, 29 டிசம்பர், 2012

தண்ணீர் வர்த்தகம்

நாட்டை கண்ணீரில் தள்ளிவிடும்....

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்”
கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும்.
மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை, “விஞ்ஞான பூர்வமான மேலாண்மை” மூலம் வர்த்தக பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதர வணிகம்.
அந்த வகையில் இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தப்படியாக நீர் இன்று மிக பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது.
 நீருக்கு தனி கடவுகளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. “தேசிய நீர்க் கொள்கை வரைவு - 2012” என்கிற திட்ட வரைவு ஒன்றை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பாக தனது இணைய தளத்தில் வெளியிட்டது.இந்த கொள்கை வரைவு குறித்தான பொது கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2002-ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிற நிலையில், எவ்வித காரணமும் முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகமயம்- தண்ணீர் வர்த்தகம்: 
சந்தைப் பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தக பண்டமாக வரையறுத்துள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடைச் செய்யக் கூடாது என்று கூறுகிறது காட் ஒப்பந்தம். இதன் பொருள் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்ய கூடாது என்பது தான்.
Farmers-7_380உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம், மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய் யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தகம் செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் வர்த்தக சேவை துறையில் தண்ணீ ரின் பங்காக, அதாவது நீர் வணிகம் செய்ய ஏற்ற செயல்களாக இவற்றை எல்லாம் கூறுகிறது: நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர்க் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவாசயத்திற் கான நீர்ப்பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்த பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன் னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங் கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது. பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கி லாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடு வது. இந்த முறை பிரான்சு நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது.


----------மேலும் படிக்க --------------------------->>>>>>

நன்றி:கீற்று 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
கமலின் "விஸ்வரூபம்" 
--------------------------------
விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் , டிடிஎச் ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்திருக்கும் புதிய படம், விஸ்வரூபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ரூ.95 கோடி செலவில், மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தை டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டெலிவிஷ னில் ஒளிபரப்ப கமல்ஹாசன் ஏற்பாடு செய்து இருக்கிறார்.இதற்கு சில தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால், கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி.டி.எச். மூலம் படத்தை திரையிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறுகிறார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். உலகிலேயே இதுதான் முதல் முறை. உலகமே நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.சேட்லைட் தொலைக்காட்சி வந்தது போல், வேறு ஒரு பரிணாம வளர்ச்சி இது. டி.வி.யில் இலவசமாக படம் காட்டப்பட்டது. டி.டி.எச். மூலம் வருமானம் வருகிறது.
suran
இதன் மூலம் கள்ள வீடியோ தொழில் சிதைக்கப்பட்டு, வருமானம் எங்களுக்கு வந்து சேரும்.ஆனால் சிலர், திருடன் கொண்டு போனாலும் பரவாயில்லை. உடையவனுக்கு லாபம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். டி.டி.எச். தொழில்நுட்பம், ஒரு கூட்டு முயற்சி வியாபாரம். இதில், யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. 6 மாதங்களாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு இது.
தமிழ்நாடு முழுவதும் “விஸ்வரூபம்’ படத்தை திரையிட, இதுவரை 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படத்தை திரையிட மாட்டோம் என்று சொல்பவர்களிடம், திரையிட சொல்லவில்லை.

படம், குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும்.ஏர்டெல், சன், டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 5 டி.டி.எச். நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

' நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறதே?’’ என்று கேட்கப்பட்டது.
அது பற்றி  கமல்ஹாசன் 
'"பொருளாதார நெருக்கடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை. எனக்கு எந்த குறையும் இல்லை. நெருக்கடி, எல்லோருக்கும் வரும். டாட்டா, பிர்லாவுக்கும் வந்திருக்கிறது.பஸ்சில் போய்க்கொண்டிருந்த என்னை, “ஆடி’ காரில் போக வைத்து இருக்கிறீர்கள். ரசிகர்கள், என்னை வசதியாகத்தான் வைத்து இருக்கிறார்கள்"
  பதில் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


ஞாயிறு, 23 டிசம்பர், 2012

இளைஞர் புலி

இளைஞர் புலி அமைப்பு என்ற ஓர் பயங்கரவாத இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல சிங்கள நாளேடான ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
suran
அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. புதிய இளைஞர் புலி அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சுரேஸ் குமார் என்பவர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஸ் குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தயாரிப்புப் பிரிவில் கடயைமாற்றியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சிகளை வழங்கி அவர்களை இலங்கைக்கு அனுப்பி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பில் தமிழகத்தில் வைத்து பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
suran
மக்களை அகதிகள் வாழ்விலிருந்து மாறுதல் கொடுக்க இயலாத இலங்கை அரசு தன்னை உலக நாடுகள் மத்தியில் பாதுகாத்துக்கொள்ளவே இந்த "புலி" வருது கதையை பரப்பி வருகிறதாக தெரிகிறது.இந்த கதைக்கு இந்தியாவும்  குறிப்பாக தமிழக அரசும் இலங்கைத்தமிழ் இளைஞர்களை கைது செய்து வழுவேற்றி  வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
  "எம்.ஜி.ஆர்" நினைவு தினம்

'மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். 
suran
பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
மு தல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பள்ளி மாணவி கற்பழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் - பேச்சியம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் புனிதா (13). கணவர் இறந்து விட்டதால் பேச்சியம்மாள் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து அவர்களுடன் வசித்து வந்தார். 
தாதன்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவாக வேலை பார்த்து வந்த பேச்சியம்மாள் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மூத்த மகள் புனிதாவை நாசரேத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். அங்குள்ள விடுதியில் தங்கி புனிதா 7ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் ரோகிணி (10) உள்ளுரில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
 தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் ஒரு வாரத்திற்கு முன் விடுதியில் இருந்து ஊருக்கு வந்த புனிதா தினமும் தாதன்குளத்தில் ரயில் ஏறி நாசரேத் சென்று பரீட்சை எழுதிவிட்டு மாலை ஊர் திரும்புவார். கடந்த 20ந் தேதி காலை பரீட்சை எழுத சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து சேரகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை புனிதா தாதன்குளம் அருகே முட்புதரில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கொலையாளி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி.தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 
suran
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை சடையநேரி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சுப்பையா (36) என்பவது தெரியவந்தது. அவன் மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். கைதான சுப்பையாவின் உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் உறவினர் வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். கடந்த 19ந் தேதி தாதன்குளம் வந்துள்ளான். மறுநாள் 20ந் தேதி (வியாழக்கிழமை) தாதன்குளம் ரோட்டில் மாணவி புனிதா தனியாக நடந்து வந்ததை பார்த்துள்ளான். காமம் தலைக்கேறிய அவன் மாணவியை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கிச் சென்றுள்ளான். அப்போது மாணவி அவனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா மாணவியை கற்பழித்து அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசிவிட்டு பின்னர் அவன் சொந்த ஊருக்கு செல்லாமல் தாதன்குளம் பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளான். சடையநேரி பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.  மாணவி புனிதாவை கொடுரமாக கொலை செய்த சுப்பையா இது போன்று பல பெண்களை சீரழித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் தாதன்குளம் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதை பார்த்த உறவினர்கள் அவனை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இது போல் சொந்த ஊரான பாறைக்குட்டத்திலும் சித்தி மகளிடமும் சில்மிஷம் செய்துள்ளான். அவன் மீது மணியாச்சி போலீசில் புகார் செய்யப்பட்டதால் போலீசார் சுப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 அங்கிருந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளான். வந்தவன் தன் மீது போலீசில் புகார் கொடுத்த சித்தியை அரிவாளால் வெட்டி இருக்கிறான்.
 இது தொடர்பாக பிறகு தாதன்குளம் உறவினர் வீட்டிற்கு கடந்த 19ந் தேதி வந்திருக்கிறான். இங்கு மாணவியை கொடுரமாக கொலை செய்து தனது காமபசியை தீர்த்துள்ளான். இது போன்று பல பெண்களின் கற்பை அவன் சூறையாடியதாக தெரிகிறது. குறிப்பாக சிறுமிகளைத்தான் அவன் குறிவைத்து வேட்டையாடி இருக்கிறான். 
இவன் மீது நெல்லை தாலுகா போலீஸ், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. போலீசார் அவனை தேடிவந்தநிலையில் தற்போது மாணவி கொலையில் சிக்கியுள்ளான். மாணவியை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
suran
 டிச. 17ம் தேதி இரவு புதுடெல்லியில் பஸ்சில் சென்ற மருத்துவக் கல் லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலி யல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்ட னை விதிக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போல் செய்துங்கநல்லூர் அருகே மாணவி புனிதா பாலியல் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டும் என்று நாடார் சமுதாய தலைவர்கள் கூறியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் வரும் 26ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகராஜ், சமக மாவட்ட செயலாளர் சுந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அப்துல்காதர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------- 

சில பலாத்கார சிந்தனைகள்.



டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்தான் இன்றைய முக்கிய தலைப்பு செய்தி.அந்நிய சில்லறை வர்த்தக அனுமதி ,லோக்பால்,நிலக்கரி  முறைகேடு போன்றவை பின் வாங்கி பொய் விட்டது.
டெல்லியில்  கற்பழிப்புகள் இதற்கு முன் நடக்கவே இல்லாதது போலும் அல்லது அடிக்கடி நடப்பதை தடுக்ககோரியும் நடப்பது போல் போராட்டக்காரகள் கோரிக்கைகள் வைத்தது போல் தெரியவில்லை.
ஏதோ எல்லோரும் பரபரப்பாக போகிறார்கள் நாமும் போய் போராடுவோம் என்பது போல் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த போராட்டம் நடப்பதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது.இன்றைய நடுத்தர வர்க்கம் ஆட்சியாளர்கள் மீது கடுங் கோபத்தில் இருக்கிறர்கள்.அவர்கள் பிரதமர்,குடியரசுத்தலைவர் நாட்டின் சீரழிவுக்கு துணை போவதாக எண்ணுகிறார்கள்.
அதற்கு இது பொன்ற போராட்டங்களை வடிகாலாக வைத்துக்கொள்கிறார்கள்.
suran
இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பிரதமர்,குடியரசுத்தலைவர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டு கடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் வேறு என்னவாக இருக்கும்.அவர்களா கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்த இளைய,நடுத்தர வர்க்கம் இன்றைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்களவையில் இரட்டை வேடம் பூட்டும் எதிர்கட்சிகள் மீதான கோபம் உள்ளூர கொதி நிலையில் இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
கற்பழிப்புக்கு பரிகாரம் என்பது அடுத்த கட்டம்தான்.
இந்த போராட்ட உணரவுகளை சில்லறை வணிகத்தில்  அனுமதி ,வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது,180000கோடிகள் தனியார் முதலாளிகளுக்கு வரி விலக்கு ,விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் காட்டியிருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் இந்த ஆளுங்கட்சியினர் தங்கள் நாட்டை சீரழிக்கும் திட்டங்களில்கொஞ்சம் தயக்கம் காட்டியிருப்பார்கள்.
suran
அன்னாகசாரே யின் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக குவிந்தனர்.ஆனால் அவரோ தனது வழித்திட்டத்தை குழப்பத்தின் மொத்த வடிவாக உருவாக்கி இந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பொய்த்து விட்டார்.
மொத்தத்தில் டெல்லி போராட்டம் வெறும் கற்பழிப்பு சம்பவத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று நம்பமுடியவில்லை.மக்களின் பல்வெறு விடயங்களில் அரசுக்கு எதிரான குமுறலின் வடிவம்தான் இது.
 மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது.இந்த போராட்டத்தை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்கு உடனேயே வழங்க வெண்டும் என்கிறார்கள்.
டெல்லி கற்பழிப்பு குற்றவாளி கூறிய சில வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
suran
'இந்த குற்றத்துக்கு என்னை தூக்கில் போடுங்கள் .இந்த இரவில் வேறு ஆணுடன் தனியே சுற்றி வருவதுடன் நாங்கள் பேருந்தில் வர கூப்பிட்டதுடன் வரும் பெண் நல்லவளாக இருக்க மாட்டாள் என்றே நினைத்தோம்.மேலும் இந்த இரவில் எங்கே தனியே பொய்வருகிறீர்கள் என்று கேட்டதற்கு 'அதைப்பற்றி எதற்கு சொல்லவேண்டும்.என்று திமிராக பேசியதும்தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது."
-என்று அவன் கூறியுள்ளான்.இந்த் எண்ணம் உருவாக அந்த பெண்ணும் ஒருவகையில் காரணமாகி விட்டாள்.
ஆ னால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  பள்ளி மாணவி கற்பழிப்பு மிகக்கொடுரமானது.வழக்கமாக கூட்டமாக செல்லும் மாணவி தேர்வுக்காக தனியே ரெயில் நிலையம் போக ஒற்றையடி பாதையில் செல்லும் போது கொடுரனால் மிகக்கொடுரமாக கற்பழிக்கப்பட்டு அவளின் துப்பட்டாவினாலேயே கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளாள்.நிச்சயம் இந்த திட்டமிடப்பட்ட பலாத்தகாரத்துக்கு தூக்கு அவசியம்.
டெல்லி,தூத்துக்குடி சிறுமி கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கலாம் .
ஆனால் கற்பழிப்பு என்ற புகார்களுக்கெல்லாம் வழங்குவது சரியாகாது.
காரணம் காதலித்து அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் சில பெண்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் ஆண் தன்னை கற்பழித்துவிட்டதாக திசையை திருப்பி தன்னை கண்ணகியாக்கிக் கொள்கிறார்கள்.
ஆண் மட்டுமே குற்றவாளியாகிவிடுகிறான்.இது போன்ற கூட்டு களவாணித்தனத்துக்கு ஆணுக்கு தூக்கு சரிவருமா?பெண் குற்றவாளிக்கு தண்டனை என்ன?
பாரதி கூறியதுபொல் கற்பென்பதை பொதுவில் வைப்போம்.
suran
ஆண்கள் எல்லோருமேசமயம் கிடைத்தால்  கற்பழிப்பு எண்ணத்துடன் இருப்பது போல் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் .சமயம் கிடைத்தால் பெண்களிலும்  சிலர் அப்படித்தான் இருக்கிறா ர்கள்.ஆனால் மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள் மட்டுமே.இங்கு பெண் பாவம் சட்டத்தின் கண்ணை மறைத்து விடுகிறது.
இப்போது காவல்துறையினர் நகர ரோந்து வராததினாலும்,ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை மட்டும் செய்து கொண்டிரூப்பதால்தான்  இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
இது போன்ற பாலியல்,கொலை,கொள்ளைகளுக்கு மூலக்காரணம் காவல்துறையின் செயல்பாடுகள் சரிவர இல்லாததுதான்.
suran
அவர்கள் குற்றம் வந்தபின் வந்து பார்க்கவந்தவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டாமல்.
அவ்வப்போது நகர ரோந்து,சிறிய ரவுடியாக உருவெடுக்கும் போதே தலையில் தட்டி வைப்பது கட்சிக்காரர்களின் சொல்படி கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு விட்டால் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்துவிடும்.




ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

போதையின் பாதை



போதையை வாங்குகிறார்.


__போதையை ஏற்றுகிறார்
____________________________________________________________________________________________________________

பக்‌ஷே  பர்'ராக்
இலங்கையின் வடக்கே வவுனியாவுக்கு வெள்ளிக் கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அரசாங்கத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் வகையில் அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள் சகிதம் வன்னிப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் வன்னிப்பிரதேசத்தி;ன் காணி, வீடமைப்ப, மீன்பிடி, சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.
காணிகளைப் பொருத்தமட்டில் பல்வேறு வசையன காணி உறுதிப்பத்திரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்திருப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எனினும், ஜப்பான் காணி உறுதியென்றோ இங்கிலாந்து காணி உறுதியென்றோ எதுவம் கிடையாது. காணிகளுக்கு காணி ஆணையாளரின் ஊடாக அரசாங்கம் வழங்குகின்ற ஒரேயொரு உறுதிப்பத்திரம் தான் உள்ளது. ஏனைய காணி உறுதிப்பத்திரங்கள் செல்லுபடியாகாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். காணிகளில்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அனுமதியில்லை

வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டபோது, வீடற்றவர்களுக்கு வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் உள்ளுர் செய்தியரளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஞாயிறு, 25 மார்ச், 2012

குரலிசை வேந்தனின் 89-ம் ஆண்டு


டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!


* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'


* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!


* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!


* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!
 

* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்


சனி, 24 மார்ச், 2012

                           கமல்ஹாசன் இன்னும் காதல் இளவரசன் தானா?

கொன்றது குற்றமே

miinnar

 'எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல், கையில் ஆயுதமின்றி இருந்த இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தீவிரவாதச் செயல்' என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் அஜீஸ் பிங்கி (25), ஜெலஸ்டீன் (45) ஆகிய இருவரும் கேரள கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடந்த மாதம் 15ம் தேதி, அந்த வழியே வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கப்பல் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் கப்பல் கம்பெனியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கப்பல் கம்பெனியின் இந்த மனு நேற்று நீதிபதி சி.எஸ்.கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'எந்த வித எச்சரிக்கையும் விடுக்காமல், கையில் ஆயுதமின்றி இருந்த இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தீவிரவாதச் செயல்' என கருத்து கூறினார்.
 
கேரள அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி, 'கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்தபின்னர்தான் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளிலிருந்துதான் மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணமான குண்டுகள் சுடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய முடியும்' என கூறினார். இதையடுத்து மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

வியாழன், 26 ஜனவரி, 2012

இது வித்தியாசமானவைகள்












________________________________________________________________________________________
காவல்துறையினர் பாலியல் வன்முறை 
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள தி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் காசி என்பவரை விசாரிக்க சென்ற போது அவர் மட்டும் அல்லாது ஐந்து பெண்கள் உட்பட உறவினர்கள் அனைவரையும் இரவில் வேனில் திருக்கோவிலூர் போலீசார் ஏற்றி சென்று ஆண்களை காவல் நிலையத்தில் அடைத்துவிட்டு 4 பெண்களை இரவு 12 மணியளவில் அருகில் உள்ள தைலத்தோப்பில் காவல்துறையினர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட போலீசார் 5 பேரை சஸ்பெண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா லட்சம் இழப்பீடு வழங்கி தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்து அவர்களின் சொத்தான 10 பவுன் நகை, பணம் ரூபாய் 2000,   4 செல்போன் அதன் சார்ஜர் என அனைத்தையும் திருடியுள்ளனர். இரவில் பெண்களை கைது செய்ய கூடாது, பெண்களை விசாரிக்கும் போதும் கைது செய்யும் போதும் பெண் போலீசார் கூட இருக்க வேண்டும் போன்ற நீதிமன்ற உத்திரவுகளை எல்லாம் மயிருக்கு சமமாக கூட போலீசார் மதிப்பதில்லை. எங்கு திருட்டு நடந்தாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க வக்கற்ற போலீஸ் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே தொழிலாக கொண்டுள்ளது. சில காவல்துறையினர் அதிகார திமிரோடு இருளர் பெண்கள் பெரிய அழகியா? பாலியல் வன்முறை நடக்க வாய்பில்லை என வக்கிரமாக பேசுகின்றனர். நடக்காத குற்றத்திற்கா தமிழக முதல்வர் 5 லட்சம் இழப்பீடு கொடுத்தார்?
பழங்குடியின இருளர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் கருகுவது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? கரும்பு வெட்ட அழைத்து சென்று குறைந்த கூலி கொடுத்து இடை தரகர்கள், இருளர்களின் உழைப்பை அட்டையாக உறிஞ்சுவதும், வாழும் இடங்களில் விலங்குகளுக்குள்ள சமத்துவம் கூட இல்லாமல் ஆற்றோரத்திலும், ஒதுக்கு புறத்திலும் மாட்டு கொட்டகைக்கும் கீழாக வீடு கட்டி வாழும் இருளர் இன மக்களை இன்றும் குற்றப் பரம்பரையாக கருதி போலீசார் வேட்டையாடுவதை நாம் அனுமதிக்க முடியுமா?
வீரப்பனை பிடிக்கிறேன் என்று தேவாரம் தலைமையிலான அதிரடி படை போலீசார் மலைவாழ் மக்களை வேட்டையாடியதும் பெண்களை பாலியல் வன்முறை செய்ததும் நீதிபதி சதாசிவம் கமிஷன் முன்பு வாக்குமூலங்களாக நிருபிக்கப்பட்ட பிறகும் எத்தனை போலீசார் தண்டிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு பதவி உயர்வுகளையும் பணம் வீட்டுமனை என மக்கள் வரிபணத்தை சன் மானங்களாக வாரி வழங்கியவர்தான் ஜெயா. 1992-ல் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை அனைரும் சேர்ந்து காட்டு மிராண்டி தனமாக பெற்ற தாய்மார்கள் கண் முன்பாகவே 13 வயது பள்ளி சிறுமி உட்பட 18 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்தார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட இவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததோடு உணவு தானியங்களை தீ வைத்து கொளுத்தியும், குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெயை கொட்டியும் நாசப்படுத்தினர். 15 நாட்களுக்கு பிறகே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தது. 19 ஆண்டுகள் இழுத்தடித்துஅனைவரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டனர்.
சிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், அந்தியூர் விஜயா வழக்காகட்டும், திண்டிவனம் ரீட்டாமேரி வழக்காகட்டும், போலீசோ, அரசோ நீதிமான்களாக நின்று விசாரணை செய்து குற்றவாளி போலீசாரை தண்டிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், பழங்குடியின பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி கட்சிகள், புரட்சிகர அமைப்புகள் என அனைவரும் இறங்கி போராடியதுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி, இறங்கியதால் பெற்ற தீர்ப்புகள். இவை அனைத்திலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் குற்றவாளி போலீசாரை பாதுகாக்கவே செய்தனர்.
பரமக்குடியில் தலித்துகள் மீதான போலீசு துப்பாக்கி சூடு படுகொலையை ஜெயா சட்டமன்றத்தில் ஆதரித்து பேசினார். சி.பி.ஐ. விசாரிக் வேண்டும், இழப்பீடு தரவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் 1 லட்சம் வழங்கிய ஜெயா இன்று 4 லட்சம், இறந்தவர் வீட்டில் ஒருவருக்கு வேலை என அறிவித்துள்ளார். படுகொலைக்கு காரணமான போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மண்டபம் பகுதி இருளர் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி போலீசார் ஒருவரின் பெயர் கூட இல்லை. கைது செய்யப்படவும் இல்லை. உயர் அதிகாரியிடம் முறையிட வந்த பாதிக்கபட்ட பெண்களை இரவு முழுவதும் பெண் போலீசை வைத்து தூங்க விடாமல் உளவியல் சித்ரவதை செய்து, நடந்த சம்பவத்தை இல்லை என சொல்ல கட்டாய படுத்தியுள்ளனர். பழங்குடியின இருளர்கள்தானே, ஒருவேலை சோத்துக்கு அலையும் ஏழைகள் தானே என்ன செய்யமுடியும்? என்ற ஆதிக்க மனோபாவம்.
போலீசின் அத்துமீறல்கள் எங்கு நடந்தாலும் அரசுக்கு எதிராக ஓட்டு கட்சிகள் தயவின்றி பல்வேறு அமைப்புகள் போராடுவதுடன் நீதிமன்றத்தின் எந்த படிக்கட்டுக்கும் சென்று போலீசுக்கு எதிராக வழக்கு நடத்தி தண்டணை வாங்கித்தருகிற இந்த காலத்தில், திருக்கோவிலூர் போலீசார் இரவு12 மணிக்கு தைல மரத்தோப்பில் வீட்டு ஆண்களை லாக்கப்பில் போட்டு விட்டு 3 மாத கர்ப்பிணி உட்பட 4 பெண்களை கும்பலாக பாலியல் வன்முறை செய்து விட்டு அதிகாலை அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றால் திடீரென எதிர்பாராமல் போலீசு செய்யவில்லை. கிரிமினல் மயமான போலீசு துறையின்  வெளிபட்ட சீழ்கட்டிகள்தான் மண்டபம் பாலியல் வன்முறை.
போலீசு சட்ட பூர்வ கிரிமினல் கும்பல் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். பத்திரிக்கையாளர்கள், அனைத்து போலீசையும் எப்படி கூறமுடியும் என கேட்டதற்கு ஒரு கூடை அழுகிய மீன்களில் ஒரு நல்ல மீனை தேடும் முட்டாளல்ல நான் என பதிலளித்தார். ஏட்டு முதல் எஸ்.பி. வரை சிவகாசி ஜெயலட்சுமியை வைத்திருந்தார்கள் அதுபோல் காவல் துறையில் வேறுபாடு இல்லாமல் லஞ்ச ஊழல் முறைகேடுகள் அழுகி நாறுவது அனைவரும் அறிந்ததே  கூலிப்படையுடன் கூட்டு வைத்து கொலை செய்வது வழிபறி கொள்ளையில் ஈடுபடுவது, பொய் வழக்கு போடுவதற்கு ஒருரேட்டு, வழக்கு போடாமல் இருப்பதற்கு தனி ரேட்டு, குற்ற வாளிகளை கைது செய்வதற்கு, கைது செய்யாமல் இருப்பதற்கு, ஒரு ரேட்டு இவை அனைத்தும் போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே ஊரறிய நடக்கிறது. உரிமைக்காக போராடும் மக்களை கண்காணிக்க எண்ணற்ற உளவுப்போலீசார். இதை கண்காணிக்க மறுப்பதேன்?
கிரிமினல் மயமான போலீசை வைத்துதான் தலித்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொல்ல முடியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்கவும், சிறையில் அடைக்கவும் முடியும். எதிர்ப்பு குரல் கொடுக்கும் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளரை ஒடுக்கமுடியும். விசாரணை என்ற பெயரில் சாதாரண மக்களை, லாக்-அப் கொலை செய்து ஏனைய மக்களை அச்சுறுத்த முடியும். சட்டம், நியாயம், நீதி, என்று பாராமல் கடி என்றால் கடிப்பதற்கும் பிடி என்றால் பிடிப்பதற்கும், குற்றவாளி போலீசாரை பாதுகாப்பதும், கிரிமினல் மயமான போலீசும்தான் ஜெயாவுக்கு அவசியம்.
போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...