ஞாயிறு, 24 நவம்பர், 2019

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”


 டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்போன் டிக்-டாக் செயலி மூலம் பழக்கமாயினர்.
இவர்கள் இருவருக்கும் வயது 25. திருமணமாகி விட்டது.
இவரும் நாட்கள் செல்ல, செல்ல இணைபிரியா தோழிகளாக மாறினர்.
இருவரும் சேர்ந்து டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
 டிக்-டாக் செயலிக்கு அடிமையானதால் அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆன்மிகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற பல வீடியோக்களை டிக்-டாக் செயலி மூலம் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இவருக்கும், தேனியை சேர்ந்த சுகந்தி  என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தியும் தனது நண்பரான செல்வம் என்பவருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுகந்திக்கும், மேற்கண்ட 2 இளம்பெண்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்-டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து அந்த 2 இளம்பெண்களின் டிக்-டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலைமாதுகளாக சித்தரித்து டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு விட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் ஒத்தக்கடை போலீசிலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிக்-டாக் செயலிக்கு அடிமையான 2 இளம்பெண்கள் மற்றும் சுகந்தி ஆகிய 3 பெண்களுமே டிக்-டாக் செயலியால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது கணவர்களை விட்டு பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மற்றொரு சம்பவமாக மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி டிக்-டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, ஆபாசமான வீடியோவாக பதிவிட்டதாக பொள்ளாச்சியை சேர்ந்த பூபதி(28) என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.வழக்கின்ற்னர்

குடும்பப் பெண்கள், மாணவிகள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்-டாக் அடிமைகளாகி தங்களது வாழ்க்கையையே தொலைத்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்மார்ட்போன் வெடிப்பு 

நாம் தவிர்க்க வேண்டியவை !
ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்களில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனம்.

 அதொன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல!
சில குறிப்பிட்ட தவறுகளை தவிர்த்தாலே போதும், ஸ்மார்ட்போன் வெடிப்பு அல்லது ஸ்மார்ட்போன் தீப்பிடிப்பு போன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம்.
மாறாக அதையெல்லாம் "அடிக்கடி" செய்தால் உங்கள் ஸ்மாட்போன் "டமால்" தான்!


நம்மில் சிலருக்கு ஸ்மார்ட்போன்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை தலையணையின் கீழ் வைக்கும் போது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இண்டர்னெல் டெம்ப்ரேச்சர் அதிகரிக்கும்.
தவிர உங்களின் உடல் எடையும் ஸ்மார்ட்போனின் மீதான தேவையற்ற அழுத்தத்தை செலுத்தும்.
இது வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய போலியான சார்ஜர்கள் அல்லது பிற நிறுவங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களின் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 குறிப்பாக உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய கார் சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பவர் பேங்கைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அவசரத்திற்கு ஒரு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து கொண்டால் என்ன? என்று நீங்கள் தெரிந்தே செய்யும் இந்த பிழையானது விபரீதமான முடிவுகளை வழங்கும் என்பதை மறக்க வேண்டாம்!

ஒரு ஸ்மார்ட்போன் சூடாகத் தொடங்கினால் அதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது, சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
 இருந்தாலும் கூட விடாமல் கேமிங் செய்வோம் அல்லது சாட்டிங் / காலிங் நிகழ்த்துவோம்.
சார்ஜ் தீர்ந்தால் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று தெரிந்த நமக்கு, அது சூடாகும் பட்சத்தில் அதற்கு சற்று ஒய்வு கொடுக்க வேண்டும், அதை மீண்டும் சகஜமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை, பாவம்!

என்ன ரூ.30,000 ஆ? பரவாயில்லை இ.எம்.ஐ போட்டாவது இந்த ஸ்மார்ட்போனை வாங்கிட வேண்டும்" என்கிற ஆர்வமானது அந்த ஸ்மார்ட்போனை வாங்கியபின்னர், குறிப்பாக பேட்டரிகளை மாற்றும் போது இருப்பதில்லை.
 "இதுக்கு வேற தனியா செலவு செய்யணுமா" என்று சலித்துக்கொண்டு நிறுவனங்களின் அசல் பேட்டரிகளை வாங்காமல் போலியான மாற்று பேட்டரிகளை வாங்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதென்றால், எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு நடக்கலாம்.

ஸ்மார்ட்போனை கீழே போடுவது என்பது ஒன்றும் பெரிய தவறல்ல.
ஒருவேளை ஏதேனும் கடுமையான சேதங்களை உங்கள் ஸ்மார்ட்போன் சந்தித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் சேவை மையத்திற்கு கொண்டு சென்று அதை சரிபார்க்கவும். ஏனெனில் நம் கண்களுக்கு மேலோட்டமான சேதங்கள் மட்டுமே புலப்படும், உள்ளூர எதாவது சிக்கல்கள் உள்ளதா?
அதன் விளைவாக பேட்டரி வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு நிகழுமா என்பதை வல்லுநர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்தபின்னர் அதை தொடர்ந்த்து பயன்படுத்தவும்.

 உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது (இது சில பழைய ஸ்மார்ட்போன்களுக்கு தான் பொருந்தும்). 

உங்கள் ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய ஒளியில் வைத்திருக்க வேண்டாம், அதேபோல சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து அதை சார்ஜ் செய்ய வேண்டாம். 

உங்கள் ஸ்மார்ட்போனை பவர் ஸ்ட்ரிப் அல்லது எக்ஸ்டென்சன் கார்ட் வழியாக சார்ஜ் செய்வதை தவிர்க்க பாருங்கள். உள்ளூர் பழுதுபார்க்கும் கடைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லுங்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்த வேண்டாம், குறிப்பாக சார்ஜ் செய்யும் போது, அதன் மேல் எந்தவிதமான எடையையும் ஏற்ற வேண்டாம். 

இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்!

 

“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

தமிழக அமைச்சர்களின் ‘அந்தப்புர அந்தரங்கங்கள்’ அம்பலமாகும் நேரம் இது போல!
’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஜெயகுமார் தொடங்கி, ‘ஆழ்துளை கிணறு அழுக்கு வேட்டி ஸ்பெஷலிஸ்ட்’ விஜயபாஸ்கர் வரை பல மாண்புமிகுக்களின் திரைமறைவு சங்கதிகள் தொடர்ந்து வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ‘உவ்வே’ வரிசையில் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் இணைந்திருக்கிறார்.
கோவையில் செட்டிலாகியிருக்கும் அந்த வட இந்திய பெண்ணின் பெயர் சோனாலி பிரதீப்.
ஏற்கனவே பாஜக மகளிரணியில் பல ஆண்டுகளாக கும்மியடித்து வந்தவர் இந்த சோனாலி..
செக்கச் சிவந்த மேனி, செழுமையான உடலமைப்பு, கேட்பவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு என சோனாலியிடம் ஏகப்பட்டத் தூண்டில்கள் உண்டு.

“அது யாரானாலும் சரி…ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டால் அப்புறம் சரண்டர்தான்’’ என தன்னைப் பற்றி இவர் பெருமையாக சொல்வதுண்டாம். ஆளை கிறங்கடிக்கும் தோற்றம் கொண்ட இவர் பல அழகிப் போட்டிகளிலும் மகுடம் சூடியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வேலுமணியை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் சோனாலி. முதல் சந்திப்பிலேயே அமைச்சரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளீரிட்டிருக்கிறது.
“ஏதாவது தேவைண்ணா காண்டாக்ட் பண்ணுங்க’’ என வேலுமணி சொல்ல, இதற்காகவே காத்திருந்த சோனாலி அந்த நிமிடம் முதல் இன்று வரை தொடர்ந்து அமைச்சருடன் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

நாளுக்கு நாள் அதிகமான இந்த நெருக்கம், சோனாலியை முதல்வர் எடப்பாடியிடம் அறிமுகம் செய்துவைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட தெம்பில், “டமிள்நாடு கவர்மென்டில் என்ன மேட்டர் ஆனாலும் செஞ்சி தர்றேன். நான் சொன்னா யாரும் தட்டமாட்டாங்க’’ எனப் பலரிடமும் சோனாலி சொல்லி வருவதாகப் பேச்சு.
வேலுமணியுடனான தொடர்பின் அடுத்தக் கட்டமாக அண்மையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் சோனாலி. சூட்டோடு சூடாக கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனுவும் தாக்கல் செய்ய, “இங்க என்னப்பா நடக்குது!’’ என விபரம் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

“ஆரம்பத்தில் பொது இடங்களில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சரை சந்திச்சி அந்த பொண்ணு போட்டோ எடுத்தபோது நாங்க பெருசா கண்டுக்கலீங்க.
ஆனால் அதற்கப்புறம் கோவைக்கு அமைச்சர் வரும்போதெல்லாம் இந்த பொண்ணும் கரெக்டா வந்திடுதுங்க. ‘மேயர் சீட் எனக்குதான், அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாருண்ணு’ சொல்லுது. இது எங்கே போய் முடியப் போகுதோன்னு தெரியலீங்க’’ எனப் புலம்புகிறார்கள் லோக்கல் அதிமுக புள்ளி ராஜாக்கள்..
 

ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு எஸ்.ஐ.யிடமே  ரூ.1 லட்சம் சுருட்டல்

ராமநாதபுரத்தில் ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு, எஸ்.ஐ.யின் வங்கி கணக்கில் இருந்து ரூ.ஒரு லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் உள்ள தேசிய வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். 

இவரின் செல்போனில் பேசிய மர்ம நபர், உங்களின் வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி கார்டு எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டு வாங்கி கொண்டார். 
சிறிது நேரத்தில் ரூ.99,968 எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது. 
அதிர்ச்சியடைந்த எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். 
பின்னர்தான் வேலை பார்க்கும் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
பணத்தை இழந்த கிருஷ்ணமூர்த்தி, இவரை போன்று ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற ஒருவரின் புகார் மனுவை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

ராமநாதபுரத்தில் எஸ்.ஐ ஒருவரிடமே பணம் ஏமாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பணத்தை இழந்த எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி, இவரை  போன்று ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற ஒருவரின் புகார் மனுவை  விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 29 ஜனவரி, 2019

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.
தீபக் கோச்சார்,           சாந்தா கோச்சார்,         வேணுகோபால் தூத்.


சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை.
சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.

அனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.
திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார்.

தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.
“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன்.

ஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி.

இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர்.

இந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?
2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார்.

 வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது.
இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.
சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை.
ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார்.

ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்.
கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க  வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.

  சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.

“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல.  சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது,  அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது.  மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.

 கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர்.
மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார்.
 இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
 


                                                                                                                     -கலைமதி
 நன்றி :வினவு.

சனி, 26 ஜனவரி, 2019

தமிழ் ராக்கர்ஸ் !

சார்லி சாப்லின் 2 படம் அதற்குள் இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியும் அதற்கான அதிகாரமும்,வசதியும் அரசுக்கு உண்டு.
ஆனால் படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு நீதிமன்றம்   தடை என்ற வேடிக்கையோடு முடிந்து விடுகிறது.
மற்றப்படங்களை வெளியிட நீதிமன்றம் என்ன அனுமதியா வழங்குகிறது.?
தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய முகவரியை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.அதனால் முடக்க முடியவில்லை என்கிறது அரசு.
சைபர் கிரைம் துறையை கையில் வைத்திருக்கும் அரசு இப்படி சொல்வது வேடிக்கை.
மோடிக்கோ,பழனிசாமிக்கோ மிரட்டல் வந்தால் சிலமணி நேரங்களில் கண்டு பிடிக்கும் சைபர் கிரைம் இதை மட்டும் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

புதிய படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இனிய புதிய முகவரியை சாதாரண மக்கள் கூட கண்டுபிடித்து படத்தை தரவிறக்கி பார்க்கிறார்கள்.
ஆனால்  அரசு ...?

தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு சினிமா உலகுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. 
தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரிக்காகவே இணையத்தை மொய்க்கும் கூட்டமும் அதிகரித்தபடியே இருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல… உலக சினிமாவுக்கே மிரட்டல்தான்!
 கோடிகளை கொட்டி எடுக்கப்படும் சினிமாக்களை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது.

சினிமாப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனதுமே தியேட்டர் ஊழியர்களையோ, வினியோகஸ்தர் தரப்பு ஆட்களையோ பிடித்து முழுப் படத்தையும் ‘காபி’ செய்து ஆன் லைனில் வெளியிடுவதுதான் தமிழ் ராக்கர்ஸின் வேலை.
 தமிழ் படங்களில் இருந்து ஹாலிவுட் படங்கள் வரை, எந்த மொழிப் படமும் இவர்களின் கோரப் பிடியில் இருந்து தப்புவதில்லை.

இதற்காக உலகம் முழுவதும் தங்கள் ஆட்களை வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். 
திருட்டுத்தனமாக இதில் புதுப்படங்களை பார்க்க சினிமா ரசிகர்கள் அலை மோதுகிறார்கள்.
இதனால் இந்த இணையதளத்திற்கு விளம்பரங்கள் மூலமாக வருமானம் கொட்டுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்து பலமுறை அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நீதிமன்றங்களும்கூட புதுப் படங்களை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதித்து பல முறை உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. 
எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இயங்க முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டால், உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வெப்சைட் முகவரியில் கூடுதலாக ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் லட்சக்கணக்கான திருட்டு அபிமானிகளில் ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது. 
இதனால் இந்த இணையதளத்தை முழுமையாக தடை செய்ய முடியாமல் அரசாங்க இயந்திரமே தடுமாறி நிற்பதுதான் நிஜம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் புதிய முகவரிகள் வேகமாக பறிமாறப்பட்டுவிடுகின்றன. தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணம் முதல் பாப் கார்ன் வரை தியேட்டர்காரர்களின் கொள்ளை ஆகியவற்றை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.


தியேட்டர்களில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது சரி! 
அதை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துவதுமுடியாதுதான்.

ஆனால் அதே திரையங்கு உரிமையாளர்கள்தான் தமிழ் ராக்கர்ஸுக்கு புதிய படங்களை பதிவு செய்யவும் உதவுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இதை எல்லாம் ஒழிக்கத்தான் கமல்ஹாசன் தனது படத்தை திரையரங்குகள் மற்றும் சேனல்கள் மூலம் ஒரே நேரத்தி வெளியிட்டால் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்வது தானாகவே குறைந்துவிடும்.

படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கள் வீட்டிலேயே பார்க்க முடியும்.

குடும்பம் திரையரங்குக்கு செல்வதால் ஏற்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு மீதமாகும் என்றார். கட்டாயமாக அங்குதான் வாங்க வேண்டிய தண்ணீர் பாப்கார்ன்,காபிக்கு செலவாகும் ஆயிரங்களை மீதமாக்கலாம்.

அப்போது அவரைத்திட்டித் தீர்க்காத திரையரங்கினரே கிடையாது.ஒரு ஞாயிறு நாள்தான் சானலில் படம் ஒளிபரப்பாகும் .தேவையானவர்கள் மட்டுமே பணம் செலுத்தி படம்பார்க்க முடியும்.

மற்ற நாள்களில் திரையரங்குகளித்தான் பார்க்க முடியும்.திரும்ப பார்க்க ஆவல் உள்ளவர்களும் திரையரங்குதான் செல்ல வேண்டும்.இதனால் திரையரங்குகளும்பாதிக்கப்படாது.
தயாரிப்பாளருக்கு சேனல்  மூலம் பல கோடிகளில் வருமானம் வரும்.
கமல்ஹாசனுக்கு அன்று உருவான எதிர்ப்பு அவரை மவுனியாக்கி விட்டது.

திரையுலகின் பல மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் கமல்ஹாசன்தான்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு,ஏவிட் முறை படக்கோர்ப்பு (எடிட்டிங்) ,டிடிஎஸ்,நேரடி ஒலிப்பதிவு ,ஏவியேஷன் காமிரா என்று இன்று அனைவரும் அனுபவிக்கும் வசைகளை முதன்முறை தனது படங்களில் தைரியமாக உபயோகித்து அறிமுகம் செய்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் என்பது மறுக்க முடிய உண்மை.

காலத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இடர்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பும் அதே திரையுலகில் இருந்துதான் கிடைக்கிறது.

திருடனாய்ப்  பார்த்து திருந்தா விட்டால் ....

வியாழன், 24 ஜனவரி, 2019

புறக்கணிக்கப்படும் "எச்.ஏ.எல்" நிறுவனம்.

துரோகத்தின் உச்ச கட்டம்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 17.1.2019 நாளிட்ட ஊடகச் செய்தியை பெருமகிழ்ச்சியோடு மறுநாளே 18.1.2019 முதல் பக்கத்தில் தீக்கதிர் தமிழ் ஏடு மட்டும் முழு தொழில்நுட்ப விபரங்களுடன் வெளியிட்டிருந்தது.
தற்காப்பு உற்பத்தியில் சர்வதேச தர மின்னணுவியலுடன் கூடிய சண்டை விமானதயாரிப்பில் இது பெருமைக்குரிய சாதனைதான். அதிகஉயரத்தில் பறந்தபடியே நகரும் இலக்கை எந்த திசையிலிருந்தும் தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் ஆயுதம் பொருத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹெலிகாப்டரின் சோதனை வெற்றிஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி உள்ளாற்றலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தமகிழ்ச்சிகரமான வெற்றிக்காக நமது டிஜிட்டல் சக்திமான் மோடிஜி அன்றைய தினமே எச்ஏஎல் நிறுவனத்தைவாழ்த்தி செய்தி வெளியிட்டிருந்தாரா இல்லையா என்பதைபிரபல செய்தித் தாள்களிலிருந்து அறியமுடியவில்லை.

எச்ஏஎல் நிறுவனத்தின் திறன்
இம்மாதம் முதல் வாரத்தில் எச்ஏஎல் முன்னாள் தலைவர் அசோக் சக்சேனா ஒரு ஆங்கில செய்திநிறுவனத்திற்கு தனது கட்டுரையை அனுப்பியிருந்தார்.
அதில் “இப்போதும் மோசமாகிவிடவில்லை; அரசுக்கும்அரசுக்குமான (இண்டர் கவர்ன்மெண்ட்டல் அக்ரிமெண்ட்) ஒரு ஒப்பந்தத்தின் மூலம் எல்லா ரபேல் ரகபோர் விமானங்களையும் நமது எச்ஏஎல் நிறுவனத்திலேயே தயாரிக்க முடியும்” என கூறியிருந்தார்.

நவீன சண்டை விமானங்களான எஸ்யு.30 எம்கேஐ (இது நமது வான்படையின் நட்சத்திர போர் விமானம் ரபேலுக்கு இணையானது) மிக் 29 பிரஞ்ச் ஜாகுவார் விமானங்களை தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தயாரித்த அனுபவமிருப்பதால் ரபேலை தயாரிப்பதற்கான நிறுவனஉள்ளாற்றல், அனுபவம், தகுதி எல்லாமே நமது எச்ஏஎல்நிறுவனத்திடம் உள்ளது.

 பிரெஞ்ச் நிறுவனமான டசால்ட்டுடன், ஒரு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் போட்டு எச்ஏஎல்-இல் ரபேல் தயாரிக்கப்பட்டால் பராமரிப்பு, பழுது பார்த்தல், அதற்கான வசதிகள், பயிற்சி வசதிகள், எஞ்சின்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, சிறந்த சிக்கன செலவின தீர்வு, புதிய விமானங்களை குறைந்த செலவில் தயாரிக்கும் வாய்ப்பு உருவாகும் எனவும் சக்சேனா எழுதியிருந்தார்.
 9.1.2019 அன்று பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரையில், எச்ஏஎல்-இன் திறன்குறித்த சந்தேகங்களை அசோக் சக்சேனா நிராகரித்துள்ளார் என்ற முன்னுரையுடன் அச்செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மோடி அரசுதான் எச்ஏஎல் குறித்த அந்த துரோக பிரச்சாரங்களை சந்தேகங்களை தொடர்ந்து செயற்கையாக உருவாக்கிவந்தது என்பதும் அந்த அழுத்தத்தில்தான் சக்சேனா தனது கட்டுரையில், தான்விரும்பும் தீர்வோடு எழுதியிருந்தார் என நாம் கருதலாம்.

பாதுகாப்பு அமைச்சரின் உள்நோக்கம்

13.9.2018 அன்று பிடிஐ நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் “முந்தையஅரசின் ஒப்பந்தத்தில் 126 ரபேல் விமானங்களை தயாரிக்க.. வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அவைகளை தயாரிப்பதற்கான திறமையை எச்ஏஎல் கொண்டிருக்கவில்லை” என்று பகிரங்கமாக கூறினார். (டைம்ஸ் குழுமச் செய்தி 13.9.2018)

தனது கார்ப்பரேட் கூட்டாளியான ரிலையன்ஸ் அம்பானிக்காகவே குறுகியகாலத்தில் நரேந்திர மோடி எச்ஏஎல் நிறுவனத்தை புறக்கணித்து அந்த வாய்ப்பினை தற்காப்பு உற்பத்தியில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாரி வழங்கினார்.
 இது மட்டுமின்றி, மிக அதிக விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும், இந்த சண்டை விமானஊழல் விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல, தற்காப்பு உற்பத்தி மற்றும் சர்வதேச ஆயுத விற்பனை சந்தையிலும் கடந்த இரண்டு வருடங்களாக அம்பலப்பட்டு நிற்கிறது.
'தேஜஸ்' போர் விமானம்.எச்.ஏ.எல்.

சக்சேனா கட்டுரை வெளியான ஒரு வாரத்தில்எச்ஏஎல் தனது விமான பொறியியல் மற்றும் மின்னணுவியல் ஆற்றலை மோடி அரசின் கன்னத்தில் அறைந்தாற்போல் நிரூபித்துள்ளது. ரபேல் ஊழல் அம்பலமாகியிருக்கும் இத்தருணத்தில் எச்ஏஎல்-இன் இந்த வெற்றி,இந்தியா முழுவதும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 1965, 1971 யுத்த ஜாம்பவான்களுக்கும் (றுயசஎநவநசயளே) விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கும் நாட்டை நேசிக்கக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எச்ஏஎல் நிறுவனத்திற்கு திறமையில்லை என நிர்மலா சீதாராமன் தில்லி செய்தியாளர் சந்திப்பில் பேசியதையும் சக்சேனாவின் 9.1.2019 தேதியிட்ட அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தையும் எச்ஏஎல்-இன்17.1.2019 சாதனையையும் இணைத்து புத்திசாலியானஊடகவியலாளர்கள் நேரடி பேட்டி ஒன்றில் நிர்மலா சீதாராமனின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவார்களா?


எது நிரந்தர தீர்வு?

பாதுகாப்பு உற்பத்தியை லாப வெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கும் மிக மோசமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.
இது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும்சமூக வாழ்வியல் போன்ற துறைகளில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஆசிய கண்டத்தின் அமைதியை சீர்குலைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான நிரந்தர தீர்வு என்ன?அருகாமையில் ரஷ்ய - சீன அனுபவங்கள் நம் கண்முன்னே உள்ளன. உலகில் ஆயுத உற்பத்தி ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் ரஷ்யா உள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை துணை நிறுவனங்களாகவும் சந்தையில் கூட்டு பங்கு நிறுவனங்களாகவும் உள்ளன. ஆனால்அவை எல்லாம் ரோஸ்டக், யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன், யுனைடெட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் போன்றபிரம்மாண்டமான பாதுகாப்பு உற்பத்தி அரசு நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தும் ரஷ்ய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன.

பாதுகாப்பிற்காக 150.2 பில்லியன் டாலர் ஒதுக்கீடுசெய்யும் இரண்டாவது நாடு சீனா. இதில் பெரும்பகுதியை தனது சொந்த பாதுகாப்பு உற்பத்தி வளர்ச்சிக்காகசீனா செலவிடுகிறது.
உலகின் மிகச்சிறந்த 22 பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் மக்கள் சீனத்தின் அரசு நிறுவனங்களாகும். இதில் முதல் பத்து நிறுவனங்களில் சீனத்தின் அரசு நிறுவனங்களான சிஎஸ்ஜிசி, ஏவிஐசி மற்றும் நாரின்கோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
 1998லிருந்து 2017 வரை தளவாட ஏற்றுமதி 211 விழுக்காடு உயர்ந்து முதன்முறையாக உலகின்முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.


ஆரவாரமின்றி முன்னேற்றம்

சீனத்தின் அரசு நிறுவனமான செங்டு விமான தயாரிப்புநிறுவனம் ஆரவாரமே இல்லாமல் ஐந்தாம் தலைமுறை ஜே.20 ரக போர் விமானங்களை தயாரித்து தனது படையணிகளில் இணைத்து விட்டது.
 சீனத்தின் பாதுகாப்பு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்து வருவதுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் நான்காம் தலைமுறை மிக்.29 மற்றும் எஸ்யு.30 எம்கேஐ போர் விமானஉற்பத்தியில் ஏற்கனவே உற்பத்தி அனுபவம் மற்றும் உள்ளாற்றல் பெற்றுள்ள எச்ஏஎல்-ஐ புறக்கணித்து விட்டு,தகுதியில்லாத ரிலையன்சை அங்கீகரித்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திக்கும் நாட்டிற்கும் மோடி இழைத்த துரோகத்தின் உச்சமாகும்.

சர்வதேச தரஅரசுத்துறை நிறுவனங்களான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஏ) பாரத் டைனமிக்ஸ், பெல் போன்ற ஆராய்ச்சி உற்பத்தி நிறுவனங்கள்இணைந்து ராணுவத்திற்கான நாக், திரிசூல்,ஆகாஷ், பிரம்மோஸ், ப்ரித்வி போன்ற ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள், வான் தற்காப்பு மின்னணுகருவிகளை உற்பத்தி செய்து வருகின்றன.

கார்ப்பரேட்டுகளிடம் சிக்கிய ‘மேக் இன் இந்தியா’

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.
மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.

இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.

 மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.
 இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
                                                                                                                                                                                                                                              - சுஜித் அச்சுக்குட்டன்

புதன், 23 ஜனவரி, 2019

விக்கிபீடியா விஞ்ஞானி ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?


ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.
 சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்;
இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது என்று சொல்லலாம்.
 பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.

சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக இருக்கும். 
பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. 

 இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன.

அந்தந்த சூழலில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட் தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள்.
ஆனால், மக்கள் இதை விரும்புகின்றனர்.
மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன் என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார்.
சாராம்சத்திலும் தன்மை அளவிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?

இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை.

இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.

உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில் இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது.
தற்போது வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.

வெப் 1.0, வெப் 2.0 மற்றும் வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு சாரமாக புரிந்து கொள்வோம்.
வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை கொண்டதாக (Uni Directional) இருக்கும் –
 அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர் அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு (வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம் என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள் அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் (இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்).
 இப்போது வளர்ந்து வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் – அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.
இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.
வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால் ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார் கட்டுரையாளர்.
இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக முன்வைக்கின்றனர்.

 இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள் அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.
வேய்நித் பால்த்ரோ.
வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.
இதில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
 இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள் குறித்தும் பாடம் எடுக்கிறார்.
பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் டொனால்டு டிரம்ப். அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.
வழமையான அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில் இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில் அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப் பெரிய அளவுக்கு கைகொடுத்தது.

தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன.
 இதன் விளைவாக சமீப காலமாக போலி அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. ச
மூக வலைத்தளங்களே இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.


இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்” வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன.

இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார்.

அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத் தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும் என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.
இதன் எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம். பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக” ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர். வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல் கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.

இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி வருகின்றன.

நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள் சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு பெண் அநியாயமாக இறந்தே போனார்.
இந்தப் போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம்.

 அல்லது இந்த சூழலை மாற்றப் போராடலாம்.
 நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை.

அதில் சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும் சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம் கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.
என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
                                                                                                         நன்றி:   வினவு -சாக்கியன்

சனி, 19 ஜனவரி, 2019

ரஃபேல் போர் விமானத்தின் விலை ஏறியுள்ளது'

'நரேந்திர மோதியின் புதிய ஒப்பந்தத்தால்

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி எடுத்த முடிவு, ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41% உயர காரணமாயிற்று என்று மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் சேர்மன் என்.ராமின் பிரத்யேக கட்டுரை தி ஹிந்து (ஆங்கிலம்) இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியானது.
இது பற்றி பிபிசி தமிழ் உடன் அவர் உரையாடினார். அவரது பேட்டியின் கருத்துகளை தொகுத்து வழங்குகின்றோம்.
126 ரஃபேல் போர் விமானங்களை வாங்காமல் 36 மட்டுமே வாங்க இந்திய பிரதமர் எடுத்த முடிவு ஒவ்வொரு விமானமும் 41 சதவீத விலை உயர வழிவகுத்தது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, என். ராம் நீண்ட விளக்கமளித்தார்.

ஒப்பந்தத்தின் பின்னணி
முதலில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2007ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
2011ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது, டஸ்ஸோ ஏவியேசன் (டஸ்ஸோ பிரான்ஸ் நிறுவனம்) மிகவும் குறைவான தொகையில் விண்ணப்பம் செய்திருந்ததால் அவர்களிடம் வேலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. ஹெச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 108 போர் விமானங்களை இந்தியாவின் பெங்களூருவில் தயாரிக்கும். 18 போர் விமானங்கள் பறக்கக்கூடிய அளவில் பிரான்சில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. அதுவொரு வணிக ஒப்பந்தம் என்று கூறப்பட்டது.
இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தமாக மாற்றம்
2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி பிரான்ஸ் சென்றபோது, திடீரென்று இந்தோ-பிரெஞ்ச் கூட்டறிக்கையில் ஒரு தகவல் வந்தது. 126 ரஃபேல் போர் விமானங்கள் அல்ல. 36 ரஃபேல் போர் விமானங்களை நேரடியாக பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க போகிறது.
அடுத்ததாக, இதுவொரு வணிக ஒப்பந்தமாக டஸ்ஸோவோடு இல்லாமல், "அரசிடம் இருந்து அரசு" என்ற நிலையில் பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்தியா வாங்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை தயாரிக்கப்போவது டஸ்ஸோ நிறுவனம்தான். அரசிடம் இருந்து வாங்கப்போவதால், ஹெ.ஏ.எல் நிறுவனத்திற்கு இதில் இடம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
விலை பற்றிய ரகசியம்
எமது புலனாய்வின் கவனம் என்னவென்றால், போர் விமானத்தின் விலை என்ன என்பதே என்று என்.ராம் குறிப்பிட்டார். அது பற்றிய முழு தகவல்களையும் கொடுக்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
ரஃபேல் சர்ச்சையின் பின்னணி என்ன?

நாடாளுமன்றத்திடம் இந்த தகவலை வழங்கவில்லை. நாடாளுமன்ற பிரிவின் குழுக்களிடம் வழங்கவில்லை. வெளிப்படையாகவும் சொல்லவில்லை. இதில் என்ன பெரிய ரகசியம் என்ற விவாதம் ஏற்பட்டது.
பிரான்ஸ் அரசிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதனால் இதனை கூற முடியாது என்று கூறிவிட்டார்கள்.
ஆனால், விலை தொடர்பான தகவல்கள் ஒப்பந்தத்தில் வராது. அவற்றை வெளிப்படுத்தலாம் என்ற பிரான்ஸ் அரசே தெளிவாக்கியது.
இந்தியாவுக்கான சிறப்பு வசதிகள்
வேறு எந்த நாட்டுக்கும் கொடுக்காத, இந்திய விமானப்படை வேண்டுமென தெரிவிக்கும் மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட 13 மேம்பட்ட வசதிகளை (ஐ.எஸ்.இ) இந்த விமானங்களில் பொருத்தி வழங்க வேண்டுமென இந்தியா கோரிக்கை வைத்தது.
இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்த 13 மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியவில்லை. பிரான்ஸ் நிறுவனம் 1.4 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என்று கேட்டது. பேரம்பேசி 1.3 பில்லியனாக குறைத்து பின்னர் வழங்கியது.

13 மேம்பட்ட வசதிகளை வடிவமைத்து, பொருத்தி வழங்குவதற்கான கட்டணம் எத்தனை ரஃபேல் போர் விமானங்களை வாங்கினாலும் மாறாது என்றும் தெரிவித்துவிட்டார்கள்.
18 போர் விமானங்கள் வாங்கினாலும், 126 வாங்கினாலும் இந்த கட்டணம் குறையாது. இதுதான் இந்த ரஃபேல் போர் விமானத்தின் விலையை உயர செய்துவிட்டது. இதனால், 2007ம் ஆண்டடோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு போர் விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் அதிகரிக்க இது காரணமாகிவிட்டது.
“அதிகரிப்பு அம்சம்” என்ற காரணி இந்த ஒப்பந்தத்தில் உள்ளது. அதனை பார்த்தாலும் 14 சதவீதத்திற்கு மேலாகவே விலை கொடுத்துள்ளனர் என்று என்.ராம் கூறினார்.
யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் அளித்த விலை
பிரிட்டன் விமான நிறுவனம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் பன்னாட்டு ஒத்துழைப்போடு நடத்தப்படும் யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம் ஜூலை 2014 ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் மூலம் நல்லொரு மலிவான விலையை இந்தியாவுக்கு வழங்கினார்கள்.
இந்த கடிதம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு வந்தது. இந்த கடிதத்தை வைத்து பேரம்பேசி இன்னும் விலையை குறைத்திருக்கலாம்.
புதிய ஒப்பந்தம் - ஏன்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த ஒப்பந்தத்தை புதியதொரு ஒப்பந்தமாக கருதலாம். காரணம் ஹெ.ஏ.எல்-க்கு இதில் பங்கில்லை. 126 போர் விமானங்களில் எதையும் இந்தியாவில் தயாரிக்க போவதில்லை. மேக் இன் இந்தியா கிடையாது. பிரான்சிஸில் தயாரிக்கப்பட்டு நேரடியாக பிரான்சிடம் இருந்து 18 விமானங்களை வாங்குவதற்கு பதிலாக 36 போர் விமானங்களை வாங்குகிறார்கள்.
அதிக விலை என்றால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம். புதிய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கலாம்.
குறைந்தபட்சம் எங்களுக்கு இவ்வளவு மலிவாக செய்ய வழங்க யூரோஃபைட்டர் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று போர் விமான தயாரிப்பு செலவை குறைப்பதற்கான கருவியாக இந்த ஏர்பஸின் கடிதத்தை பயன்படுத்தி இருக்கலாம். அதுமட்டுமல்ல, 20 சதவீதம் விலை குறைவாக வழங்க யூரோஃபைட்டர் தயாராக இருந்தது. டஸ்ஸோ இந்த மாதிரியான சலுகை வழங்கவேயில்லை.
யூரோஃபைட்டருக்கு இந்த வாயப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் அதிக விலை குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.

ஆனால், புதிய சூழ்நிலையில், புதிய ஒப்பந்தம் வந்ததால், அதற்கேற்றவாறு தொடர்ந்திருக்கலாம். சட்ட காரணங்களால் அவ்வாறு முடியவில்லை என்றால் ஏர்பஸின் கடிதத்தை குறைந்தபட்சம் ஒவ்வொரு போர் விமான தயாரிப்புக்கு ஆகின்ற செலவை குறைக்கும் கருவியாக பயன்படுத்தியிருக்கலாம். 1.3 பில்லியன் யூரோ என்பதில் இருந்து குறைக்க நீங்கள் தயாராயில்லை. 36 போர் விமானங்களை வாங்குவதால் எங்களுக்கு ஒவ்வொன்றின் விலை அதிகமாகிவிட்டது என்று பேரம்பேசி குறைத்திருக்க முடியும்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விஷயத்திற்கு நாங்கள் செல்லவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மனுதாரரும் அங்கு வெற்றிபெறவில்லை. இந்த சர்ச்சைக்கு இது கடைசி வார்த்தை என்று எண்ணிவிட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தவிர்க்கப்பட்ட கட்டாயமான வழிமுறைகள்
இவ்வாறு ரஃபேல் விமானங்களின் போர் விமானங்களின் விலை உயர்வதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தவிர்த்திருப்பதை காரணம் என்று கூறியிருக்கிறீர்களே. எவை சரியாக கடைபிடிக்கவில்ல என்ற கேள்விக்கும் என். ராம் பதிலளித்தார்.
இவ்வாறு வழிமுறைகள் கடைபிடிக்காமல் தவிர்த்தது பற்றி பல கட்டுரைகள், அரசியல் அறிக்கைகளில் வந்துள்ளன. உச்ச நீதிமன்றத்திற்கும் இந்த விஷயத்தை எடுத்து சென்றார்கள்.
இந்த கொள்முதலின் விலைகளை ஆராய்வது போன்ற மிகவும் ஆழமாக இதில் செல்ல விரும்பவில்லை. இது எங்களுடைய வேலையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1. ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தை, அதன் கட்டமைப்பை, உள்ளடக்கத்தை மாற்றிவிட்டு இந்திய பிரதமர் மோதியும், பிரான்ஸ் அதிபரும் 2015 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டார்கள்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு வழிமுறை உள்ளது. பாதுகாப்பு தேவை நடைமுறை (Defense Requirement Procedure) என்று அதற்கு பெயர். பாதுகாப்பு நிர்வாக கவுன்சில் ஒன்று உள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர்தான் தலைவர். இந்த கவுன்சிலுக்கு இந்த பேச்சுவார்த்தையில் பங்குண்டு.
2. 7 பேரை உள்ளட்கிய இந்திய பேச்சுவார்த்தை அணி ஒன்று உள்ளது. இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது மிகவும் அதிகம். நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிமாக உள்ளது.
யூரோஃபைட்டர் வழங்கிய விலையை கவனத்தில் கொள்ளாதது சரியல்ல. அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 3 பேர் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால், ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
3. பாதுகாப்பு நிர்வாக கவுன்சிலுக்கு (டி.ஏ.சி) இதில் பொறுப்புள்ளது. அதனை அவர்கள் செய்யவில்லை. ஏழு பேரில் நான்கு, மூன்று என்ற பெரும்பான்மை முடிவு நேரடியாக பாதுகாப்பு அமைச்சரவைக்கு சென்றுவிட்டது.
4. அதே நேரத்தில் சட்ட மற்றும் நீதி அமைச்சகம் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இந்திய அரசின் இறையாண்மை உத்தரவாத்தை (sovereign guarantee) ஏற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸ் அரசின் கடிதம் (Letter of comfort - கடன் உறுதிப்பாட்டை வழங்குவது) போதாது என்று சொன்னார்கள். ஆனால், இது தொடாபான பேச்சுவார்த்தையில் தோற்றுவிட்டார்கள்.
உயர் அதிகார நிலையில் எடுக்கப்பட்ட முடிவு, சரியான வழிமுறைப்படி வரவில்லை என்பதுதான் எங்களுடைய வாதம் என்று என். ராம் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செலவீனத்தை வெளியிடுதல்
பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடப்படுவதால் அதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என எதாவது விதி உள்ளதா என்று கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று ராம் தெரிவித்தார்.
பல ஒப்பந்தங்கள், போஃபர்ஸ் ஆகியவற்றை பார்த்தால் எல்லா விஷயங்களையும் வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். எவ்வளவு விலை கொடுத்தார்கள், எப்போது வழங்கப்படும் என்கிற திட்டத்தை வழங்கினார்கள் குறிப்பாக விலையை மறைக்கவேயில்லை.
இவ்வாறான நேரங்களில் அதனுடைய தொழில்நுட்ப திறன்கள் அனைத்தையும் சொல்லமாட்டார்கள். சிலவற்றை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
இவ்வாறு வைத்திருப்பது கூட நல்லதல்ல. ராணுவ நிபுணர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். பல தளத்தில் இருந்து அவர்களுக்கு உடனே இந்த தகவல் போய்விடும்.
ஆனால், தொழில்நுட்ப திறன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. விலை விபரங்கள், எப்போது விநியோகம் செய்யப்படும் என்ற விவரங்களில் எல்லாம் ரகசியம் இல்லை என்கிறார் என்.ராம்.

9 சதவீத சலுகை - எவ்வாறு?
இந்த ஒப்பந்தத்தில் 9 சதவீத சலுகை கிடைத்திருப்பதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது பொய்யா என கேட்டபோது, அது உண்மைதான். ஆனால் எதை மறைத்தார்கள் என்றால், இந்த 9 சதவீத சலுகை ஒட்டுமொத்த ரஃபேல் போர் விமான விலையில் அல்ல.
இந்தியாவிற்கு என்று சிறப்பாக பொருத்தப்படுகின்ற மேம்பாடுகள் வசதிகள் இல்லாத விமானத்தின் அடிப்படை விலையில் இந்த 9 சதவீத சலுகை கிடைத்துள்ளது. இந்த தள்ளுபடி சலுகையைவிட ஒவ்வொரு விமானத்திலும் அதிகரித்த 41 சதவீத விலை உயர்வு அதிகமாக இருக்கிறது.
இதற்கு முன்னதாக நாட்டில் எழுந்த சில பிரச்சனைகள், கொள்முதல்கள், ஆட்சி புரிந்த கூட்டணிகளின் அடையாளமாக உள்ளன. குறிப்பிட்ட கொள்முதல் என்றவுடன் அந்த கூட்டணிதான் நினைவுக்கு வரும் நிலை உள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் ஆளும் கூட்டணியின் அடையாளமாக மாறுமா? என்று கேட்டபோது, இதுவொரு ஊழலாககூட மாறும் வாய்ப்பு உள்ளது என்று என். ராம் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் இதற்கு அப்பால் செல்லவில்லை. போர்ஃபஸில் நிதி வழங்கியதை நாங்கள் உறுதி செய்தோம். வங்கியில் நிதி அளித்தது, கமிஷன் என்ற பெயரில் கையூட்டு வழங்கியுள்ளதாக நாங்கள் வெளியிட்டோம் என்று அவர் கூறினார்.
அது போன்றதொரு நிலை இந்த கொள்முதலில் இல்லாவிட்டாலும், மறைமுகமாக அதை நோக்கி சென்று கெண்டிருக்கிறது.
எதனால் இந்த முடிவு எடுத்தார்கள்? அனுபவம் இல்லாத பாட்னர்களை ஏன் கொண்டு வந்தார்கள்? ஹெச்ஏஎல்-யை ஏன் நிறுத்தினார்கள்? ஏன் இவ்வளவு அதிக தொகைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? யூரோஃபைட்டர் கூறிய தொகையை ஏன் தொடரவில்லை?
இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்த பிரச்சனையை சுற்றியுள்ளன. போஃபர்ஸ் வேறுவிதமான ஊழல். இது வேறு விதமாக சர்ச்சை என்று சொல்லாம்.
ராஃபேல் விவகாரம் பற்றி நீங்கள் கேட்பது இத்தோடு முடிவு பெற போவது கிடையாது என்று கூறியுள்ளோம். கண்டுபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக மறைத்துவிட முடியாது. அரசாங்கம் மாறலாம். புதிய அரசாங்கம் வரும்போது இந்த தகவலை எடுத்து அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று என்.ராம் குறிப்பிட்டார். இந்த பிரத்யேக கட்டுரையை இந்த நேரத்தில், குறிப்பாக மக்களவை தேர்தல் வருவதற்கு முன்னால் ஏன் எழுதினீாகள் என்று கேட்டபோது, தகவல் வரும்போதுதான் பயன்படுத்த முடியும். பல வாரங்களாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
இதில் பல தகவல் இடைவெளிகள் இன்னும் உள்ளன. உண்மையை ஆய்ந்தறிய வேண்டியுள்ளது. இந்த தகவல் இப்போதுதான் வந்துள்ளது.
வேறு பத்திரிகைகள் கூட பல புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளன. தி வயர், கேரவன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதிய விஷயங்களை வெளிகொண்டு வந்துள்ளன.
புகார் அளித்தவர்கள் புதிய விஷயங்களை கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ் சில புதிய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். பல சிறிய தகவல்கள் ஒன்றிணையும்போதுதான், ஒரு செய்திக்கு முழுமையான வடிவம் ஏற்படும் என்று சொல்வார்கள்.
இன்னும் நிறைய இடைவெளிகள் உள்ளன. பண பரிவர்த்தனையை கண்டுபிடிக்காத வரையும் ஊழலை உறுதிசெய்ய முடியாது. ஆனால், தன்னிச்சையாக முடிவு, முறையற்ற நடத்தை பற்றி எல்லாம் நீங்கள் விவாதம் செய்யலாம் என்கிறார் என்.ராம்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்
இந்த கட்டுரையின் அம்சங்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டபோது, மூத்த அதிகாரி ஒருவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
01. இந்த கட்டுரையிலுள்ள உண்மைகள் தெளிவற்றவை. இது புதிய விவாதங்களை தோற்றுவிக்கவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் பல்வேறான மன்றங்களில் விவரங்களோடு அரசு விடையளித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.

02. முந்தைய ஒப்பந்த முன்மொழிவைவிட நல்ல விலை, சிறந்த விநியோக நேரம், மற்றும் நல்ல நிபந்தனைகள் ஆகிய நோக்கங்களோடுதான் 2016ம் ஆண்டு 36 ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
03. பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியதும், இந்தோ-பிரெஞ்ச் பாதுகாப்பு ஒப்பந்தம் 2008-ல் உள்ளடங்கியதுமான விலை விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தோடு பகிரப்பட்டுள்ளது. இந்த விலை விவரங்களையும், வணிக பலன்களையும் உச்ச நீதிமன்றம் ஆய்ந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஆட்சேபனைக்குரிய எதையும் கண்டறியாத உச்ச நீதிமன்றம், புகார்தாரர்களால் கோரப்பட்ட புலனாய்வை நிராகரித்துள்ளது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு (சிஏஜி) ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய கோப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிஏஜி போன்ற அதிகாரபூர்வ நிறுவனத்திடம் இருந்து அறிக்கை வரும் வரை காத்திருப்பது நல்லது.
04. பல ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் 2007ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையோடு 2015ம் ஆண்டு போர் விமானத்தின் ஒட்டுமொத்த விலையோடு ஒப்பிட்டு பார்க்கையில், 'படிப்படியான விலை அதிகரிப்பு' அம்சத்தை கவனத்தில் கொண்டு, 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட விலையை விட 2016ம் ஆண்டு அடிப்படை போர் விமானத்தின் விலையை விட நன்றாகவே உள்ளது என்று கட்டுரை எழுதிய ஆசிரியரே சுட்டிக்காட்டியுள்ளார்.
5. இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளை பொருத்துவது என்பது எதிரிகளைவிட சிறந்த பலம் பெறும் வியூகமாகும். 2007ம் ஆண்டு ஒப்பந்தத்தின் இந்த பகுதி 2016ம் ஆண்டு ஒப்பந்தத்திலும் தொடர்கிறது. 2007ம் ஆண்டு மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்த அதே தொகை 2016ம் ஆண்டிலும் அப்படியே மாறாமல் இருக்கிறது. செயல்பாட்டுக்கு வராத நடுத்தர பன்முக போர் விமான (MMRCA) ஒப்பந்தத்தை 2016ம் ஆண்டு 36 விமானங்களோடு ஒப்பிடுவது தவறானது. 2007ம் ஆண்டு இந்தியாவுக்கென சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளை பொருத்தும் செலவு 1.4 பில்லியன் யூரோ என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர், 2007 முதல் 2015ம் ஆண்டு வரையான கட்டுமானத்தில் ‘படிப்படியான விலை அதிகரிப்பை‘ உள்ளடக்க தவறிவிட்டார்.

06. விலை மதிப்பீட்டில் உள்ளடங்கியுள்ள படிப்படியாக விலை அதிகரிப்பதை கவனத்தில் எடுத்து கொள்ளாமல், 2007ம் ஆண்டின் தொகையை, 2016ம் ஆண்டு விலையோடு ஒப்பிட்டிருப்பது ஆசிரியரின் இந்த கட்டுரையின் தலைப்பாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது, இந்த கட்டுரையின் உள்ளே மறைவாக 14.2 சதவீதம் என்று ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்,
07. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட 2016 ஒப்பந்தத்தில் கிடைத்த விலை நிபந்தனைகளின் முக்கிய பயன்களை ஆசிரியர் இந்த கட்டுரையில் விட்டுவிட்டார்.
08. ஐஜிஏ-யின் கீழ் இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் மட்டுமே நிறுவன மாற்றம் மற்றும் நிலையான விலையை மாற்றிக்கொள்வது ஆகியவை கைக்கூடியுள்ளது. இதனால்தான் 36 ரஃபேல் போர் விமானங்களின் விநியோக காலத்தில் கணிசமான வணிக ஆதாயம் பெற வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
09. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியான ஓர் ஒப்பந்தம் இது. இதில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவது முக்கிய தேசிய பாதுகாப்பில் வெளிப்புற சக்திகள் பற்றிய சந்தேகத்தை உண்டாக்குகிறது. இது தொடர்ந்து பலமுறை அரசால் சுட்டிக்காட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
10. இந்திய பேச்சுவார்த்தை அணி எதிராக இருந்தது பற்றிய பிரச்சனை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரால் விடையளிக்கப்பட்டுள்ளது, பொது சேவையின் உயரிய பாரம்பரியத்தோடு, எல்லா கருத்துகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு அத்தயை கருத்துகளை கவனத்தில் எடுதுதுகொண்ட பின்னர்தான் குழுவின் முடிவு எடுக்கப்படுகிறது. உள்-அமைச்சக ஆலோசனையின் உகந்த வழிமுறைக்கு பின்னர்தான் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
11. விலை வரையறை பிரச்சனையும், 20 சதவீத தள்ளுபடியும் தொடர்புடையவை. 2012ம் ஆண்டு வழங்கப்பட்ட 20 சதவீத தள்ளுபடியை விதிமுறை மீறல் என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணியே நிராகரித்துவிட்டது. இந்த சலுகையில் அடிப்படை விதிமீறல் குற்றச்சாட்டு எழும் என்று அரசு எண்ணியது. இந்திய விமானப்படையின் திறன்களை மோசமாக பாதிக்கின்ற 2012ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் ஒரு பெருநிறுவன போர் மோதலின் தீமைகளை தவிர்ப்பது நல்லது. தேசிய பாதுகாப்பின் பெயரில் இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும்.

                                                   - என்.ராம்

வெள்ளி, 18 ஜனவரி, 2019

அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக காவல்துறை?



 அணில் அகர்வால் பாதுகாப்பு படை?
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கனவு கண்டவர்களைக்கூட வீடு புகுந்து கைது செய்யும் அரசு, வாராவாரம் எல்லா நாளிதழ்களிலும் வரும்  ஸ்டெர்லைட் ஆதரவு விளம்பரங்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஏன்?
இந்த விளம்பரம் கொடுத்தவர்கள் தூதுக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்.இந்த சங்கங்கள் யாரால் உருவாக்கப்பட்டது,வரவு-செலவு கணக்கு என்ன?
இந்த விளம்பரம் கொடுக்க எவ்வளவு செலவு?
அந்தத்தொகை வந்த வழி என்ன?அரசு அனுமதித்த விதிகளின்படி பெறப்பட்டதா?
என்று அரசு கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.


ஸ்டெர்லைட் நாசகார பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்துக்களை ஆவணப்படம் எடுத்தவரை உடனே நாட்டை விட்டு வெளியேற்றி ஆணையிட்டு அவர் பேட்டி எடுத்தவர்கள் பட்டியல்படி அனைவரையும் மிரட்டிய காவல்துறை இவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.


அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் "ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிராகவோ யாரும் பேசக்கூடாது.மனுக்களை தரக்கூடாது,குறிப்பாக சுவரொட்டி போன்ற விளம்பரங்களையும் செய்யக் கூடாது "என்று ஆணை பிறப்பித்துள்ளார்.


அது ஸ்டெர்லை எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமேதானா?
ஸ்டெர்லை ஆதரவாளர்கள் கருத்தரங்கு,ஊர்வலம்,விழாக்கள்,விளம்பரங்கள் என்று நடத்துவது காவல்துறை கண்களுக்கு தெரியவில்லையா?

அவைகளை மட்டும் அனுமதிப்பது ஏன்?

அரசே மக்கள் நலனுக்காக ஸ்டெர்லைட்டை செயல்படவிடமாட்டோம் என்கிறபோது அதிகாரிகளும் ,காவல்துறையும் யாருக்கு துணையாக இருக்கவேண்டும்.

மக்களுக்கா?
ஸ்டெர்லைட்டுக்கா? 

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக செயல்படுகிறதா தமிழக காவல்துறை?
இது தமிழக காவல்துறையோ?
அணில் அகர்வால் பாதுகாப்பு படையா? 
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் குரல் இதுதான்.
", ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசசாமி அரசு சொல்லுவதைத்தான்  நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லி வருகிறோம். 
இப்படி கூறுவது தவறு என்றால் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மீது 107 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரையும்  கைது செய்வார்களாஇந்த காவல்துறையினர்.?
  கோலார் வைர வயல்

‘மன்மத ராசா’ பாடல் ரசித்துப்பார்த்தவர்களுக்கு அந்த அடுக்கடுக்கான மணல் மலை ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.
அப்பாட்டு எடுக்கபப்ட்ட இடம்தான் சுருக்கமாக கே.ஜி.எஃப் எனப்படும் கைவிடப்பட்ட கோலார் தங்க வயல்.

  கே.ஜி.எஃப்.  என்று கோலார் தங்க வயல் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படம்கூட வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது.

இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80% தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள் காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண் தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பல லட்சம் டன் தங்க மண் எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் 


சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு.

பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா?
இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன.

அதேபோல், அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான்.
 இந்தக் குறியீடுகளின் கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றனர்.

நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின.
தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில் நிறுத்தப்பட்டுவிட்டது.

சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு.
ஒருவேளை இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல் இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம்.
ஆனால் அங்கு கோலார் தங்க வயல் தொழிலாள தமிழர்களுக்கு  வேலை கிடைக்குமா?.
 

செவ்வாய், 8 ஜனவரி, 2019

3 கன்டெய்னர்களின் தொடரும் மர்மம் !



2016 சட்டமன்ற தேர்தலின் போது, மே 13-ம் தேதி தேர்தல் அதிகாரிகள் வாகன
சோதனையில் ஈடுபட்டபோது 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருப்பது
கண்டறியப்பட்டது.

 டெல்லியில் இருந்து அருண்ஜெடலிதான் முதலில் வாயைத்திறந்து அது வங்கியின் பணம் என்றார்.அதன்பின்னரே கோவை ஸ்டேட் வங்கி அந்த பணத்திற்கு உரிமை கோரியது.

ஆனாலும் அந்த வங்கி சமர்ப்பித்த அதற்கான ஆவணங்கள் முறையானதாக இல்லை.

கண்டெய்னர் லாரிகளின் எண்கள் தவறாக இருந்தது.
பாதுகாப்புக்கு வந்தவர்கள் காவல்துறை சீருடை இல்லாமல் அனுமதி பெறா  துப்பாக்கி வைத்திருந்தனர்.அவர்களும் காவல்துறை வாகனத்தில் வராமல் தனியார் சொகுசு கார்களில் வந்தனர்.

அதைவிட ஐயம் தந்தது.தேர்தல் பார்வையாளர்கள் அக்கண்டெய்னரை சாலையில் பரிசோதிக்க நிறுத்தியபோது வேகமாக நிறுத்தாமல் சென்றதுதான்.துரத்தியே அந்த லாரிகளை மடக்கினர்.

தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாயுடன்
பிடிபட்ட இந்த 3 கன்டெய்னர்களின் மர்மமும், உண்மையான பின்னனியும் இன்று வரை
விடை தெரியாமல் இருந்து வருகிறது.

புதன், 2 ஜனவரி, 2019

வெறும் பொய்கள் மட்டுமே மோடி.!

2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி.

இதுவரை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை.
 
"பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். 
அதுவும் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். "

2 ஆயிரத்து 21 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். 
ஒன்றுமே சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.
 
வெளிநாடு செல்லும் பிரதமர்கள் செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். 
அப்போது தெரிவிக்கும் விவரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட வாடிக்கை.
 
ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது பயணத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகிவிட்டது. 
அதிகபட்சமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது பெருமைகளை முழக்கிவிட்டு வந்திருக்கிறார், செல்ஃபி பிரதமர் என்று பெயரெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
 
உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி நேரம் விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் என்றும் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியிருக்கிறார்.
 
அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான செய்தியாளர் பேட்டியாக நினைத்துவிடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம் கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். 

பிறகு அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்துவிட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால் எடிட் செய்துவிட்டு ஔிபரப்பாகிற பேட்டி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
 இந்திய நாடாளுமன்றத்தில் அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை மோடி மறந்துவிட்டார். 
அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப் போலவும் பதில் கூறியிருக்கிறார்.
 
நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே வராத இவர், இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் எப்படித்தான் கூசாமல் போலியாக பேசுகிறாரோ தெரியவில்லை.
 
இந்தப் பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் மோடி. அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தேர்தலில் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையிலான போட்டி என்று பெருமை பீற்றியிருக்கிறார்.

மோடி என்ற தனி மனிதனின் வெற்றியாகவே 2014 வெற்றியை பில்டப் செய்தார்கள். 

நிஜத்தில் அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை கூட்டணியாக சேர்த்தே பாஜக தேர்தலை சந்தித்தது. 
இப்போதும் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.
 
உண்மை இப்படி இருக்க, மோடி அகங்காரத்துடன் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில் தவிர்த்துவிட்டு, தெலங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார். 

அங்கு முக்கியக் கட்சியாக டிஆர்எஸ்சுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக மறைக்கிறார்.
 
ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக கூறியிருக்கிறார் மோடி. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்த தீர்ப்பு பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். 
அப்படி அவர் மறைத்த விஷயத்தை எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
 
பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். 

காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில் உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார விவகாரங்களில் சிக்கிய பாஜக எம்எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏஎன்ஐ நிருபர் எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பொய்யை அள்ளி வீசியிருக்கிறார் மோடி.
 
மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் பொய்களையே அள்ளி விதைத்திருக்கிறார் மோடி.
                                                                                                                                                                                                                                           
-ஆதனூர் சோழன் 
இதுவரை இக்கேள்விகளை ராகுல்காந்தி வெளியில் மட்டுமல்ல ,மக்களவையில் பலமுறை எழுப்பியுள்ளார்.அதுவும் பிரதமர் மோடி முன்னேயே.
ஆனால் இதுவரை மோடி பதில் சொல்ல வாயே திறக்கவில்லை.
தன்னைப்பார்த்து கண்ணடித்ததையும்,கட்டியணைத்ததையும் குற்றமாகக்கூறியுள்ளார்.
தான் ஏழைத்தாயின் மகன்,தேநீர் விற்றவன் என்று கண்ணர் வடிக்கிறார்.
உடனே வெளியே போய் பாஜக கூட்டங்களில் காங்கிரஸ் மீது குற்றங்களை சுமத்துகிறார் .
அதில் 90 % பொய்கள்தான்.
மோடி  தேநீர் விற்றதாகக் கூறப்படம் ரெயில் நிலையமே அவர் கூறும் காலத்தில் இல்லை.அதற்குப் பின்னர்தான் கட்டப்பட்டது என்ற உண்மை வெளியாகி மோடியின் பொய் முகத்தில் கரியைப்பூசிவிட்டது
 


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...