சனி, 20 அக்டோபர், 2018

அய்(யோ அ)ப்பா.

கிருத்துவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா? :அன்புமணி ராமதாஸ்
ஏதோ அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு தவறான ஒப்பீட்டை அன்புமணி சொல்லியுள்ளார்... 

அன்புமணிக்கு கர்தினால் லூர்துசாமியை கண்டிப்பாக தெரிந்திருக்கும்.. 
ஒரு ஆப்பிளை ஆப்பிளோடுத்தான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்..
கர்தினால் லூர்துசாமி


 ஆப்பிளை எடுத்துக் கொண்டுபோய் தேங்காயுடன் ஒப்பிட முடியாது என்பது அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு தெரியும்.
.. பெண்களை வழிபாட்டுக்காக சபரி மலையில் அனுமதிப்பதா இல்லையா என்பதுதான் கேள்வி.. ஒருவேளை ஏதாவது ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் பெண்களை அனுமதிக்காமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட்டு சொல்லலாம்.. 

ஆனால் அப்படி ஒரு நிலவரம் இருப்பதாக தெரியவில்லை.. மேலும் கிறிஸ்துவ மதத்தின் தலைமைப் பாதிரியார்களாகவும் பிஷப்களாகவே ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள்..ஆனால் எங்காவது ஒரு பெண் அர்ச்சகராக இருக்கிறாரா?பிராமணப்பெண்ணாக இருந்தாலும் கூட.

ஒருவேளை சங்கராச்சாரியார் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருந்தால், அன்புமணி கேட்டது சரியாக இருந்திருக்கும்.. 

மேலும் போப் இருப்பதோ வாத்திகன் எனப்படும் இத்தாலியில் இருக்கும் தனிநாட்டில்..
 அங்கு இந்திய சட்டங்கள் நீதிமன்ற உத்தரவு ,செல்லுபடியாகாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அசல் சங் பரிவார் போன்றே பேசுகிறார்  அன்புமணி.
கடைசியாக, கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். 

கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. இவர் கடலூரைச் சேர்ந்த நீங்கள் சங்கம் நடத்தும்  வன்னிய கிருத்துவர்.. 


அன்னிய கிறிஸ்தவ மதத்திலேயே ஒரு வன்னியர் இந்த அளவுக்கு உயர் பதவியில் பொறுப்பில் வந்து விட்டார், 
ஆனால் நீங்கள் வக்காலத்து வாங்கும்  இந்து மதத்தில்  உள்ள கோயில்களில் உங்கள் சாதியைச் சார்ந்த வன்னியர் ஒருவர் அர்ச்சகராக முடியுமா.உங்கள் கட்சியால் ஆக்கத்தான் முடியுமா?சவால் விட  முடியுமா?

அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் அந்நிய நாட்டின் மதத்துக்கு எச்ச.ராசாவைப்  போல் சவால் விடுகிறீர்களே?திடீர் சங்கி புதிய டமிளகம்  கிட்ணாசாமி  கூட இப்படி கேட்கவில்லை,கேட்க மாட்டார்.
மருத்துவக்கல்லூரி ஊழல் தொடர்பாக பாஜகவுக்கு வால் பிடிக்க வேண்டியிருக்கிறது.
அதற்காக இப்படியா?.
சுத்த சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.
சபரிமலை  உண்மைகள் :
1969 வரை பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லாமல் இருந்தது. 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழியாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டார்கள்..
1991 வரை மாதத்தின் முதல் 5 நாட்கள் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு அளிக்கும் "அன்னபிரசன்னம்" விழாவுக்கு அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் செய்த அபிடவிட்டில் உள்ள தகவல்கள்.
எனவே ஹிந்துத்துவா கும்பல் செய்வது அப்பட்டமான ஏமாற்றுத்தனம், அயோக்கியத்தனம்.
எங்க கிட்ட இருந்து பறித்த அய்யப்பன்  கோயில எங்க எங்ககிட்ட விட்டுட்டு வெளிய போங்கடா பார்ப்பன நம்பூதிரி அயோக்கியர்களா.ன்னு ஐயப்பன் கோயிலுக்கு பூர்வீக உரிமையாளர்களான கேரள சபரிமலை ஆதிவாசி மக்கள் கேட்டிருக்காங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...