திங்கள், 22 அக்டோபர், 2018

"பாப்பா" அப்பாவுக்கு என்ன வயசு?

11 மணி ஜெயக்குமார் வயதுதானாம்.
ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல். 
ஆனால் சமீபத்தில் ’எம்.பி. ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது. அப்போ எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க! 
அந்த குழந்தைக்கு  முறைப்படி சேரவேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுத்திடுங்க. இல்லேன்னா ரகசியம் உடைபடும், சொல்லிட்டேன்.’ என்று ஒரு பயோலாஜிகல் அணுகுண்டை கொளுத்திப் போட்டார்.  

வெற்றிவேல் ஒரு அதார் உதார் பேர்வழிதான் என்றாலும் கூட, அவர் சொல்லும் கிசுகிசுக்களெல்லாம் அடுத்த சில வாரங்களில் ஆதாரத்துடன் நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது.
 இதனால் ‘யார் அந்த எம்.பி., தம்பி?’ என்று குழம்பியது தமிழகம். அதிலும்  ஆளும் அ.தி.மு.க. அணிக்குள் ‘இவரா? அவரா? அவருக்கு பொறந்தது பொண்ணுதானேய்யா? 
இவர்தான் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி க்ளீன் பண்ண வெச்சிட்டாரே?’ 
என்று தங்களுக்குள் பல ரகசியங்களை உடைத்துப் பேசி தலையை பிய்த்துக் கொண்டனர். 
இதில் வேடிக்கை "அமைச்சர் ஜெயக்குமாரும் இவர்களுடனேயே சேர்ந்து இருக்கும் தன் பின் பாதி முடியையும்" பிய்த்துக் கொண்டார். 
ஆனால் நேற்று  வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலான அந்த ‘பிறப்புச் சான்றிதழ்’ தமிழக அரசியலை தெறிக்க விட்டிருக்கிறது. 
ஆம் .அந்த பிறப்புச்சான்றே  அமைச்சர் டி.ஜெயக்குமார்  - ஜெ., சிந்து என்கிற பெண்மணிக்கும் ஆண் குழந்தை பிறந்ததற்கானதுதான்.
அதை வாட்ஸ் அப்பில் விண்வெளியிட்டு வைரலாக்கியது தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.
கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதியன்று, சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உள்ள ஜெயம் நர்ஷிங் ஹோமில் இந்த குழந்தை பிறந்துள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுகின்றன. 
ஜெ., மரணித்த நாளில் இருந்து இதுவரையில் அ.தி.மு.க. மீதான எந்த விமர்சனத்துக்கும் முந்திரி கொட்டையிலும் முந்திரி கொட்டையாக முன்னே வந்து நின்று தாட்பூட் தடால் புடால் என்று பேட்டி தட்டுவதும், தினகரன் ஸ்டாலின் உள்ளிட்டோரை கன்னாபின்னாவென விமர்சனத்தில் கசக்கிப் பிழிவதும் ஜெயக்குமாரின் வாடிக்கை.
 ஊடகங்கள் அனைத்தும் 11 மணி ஜெயக்குமார் என்று கிண்டல் செய்யுமளவு தினசரி ஊடகங்களிடம் யாரைப்பற்றியாவது தாக்கி,கிண்டலடிப்பது ஜெயக்குமார் வாடிக்கை.

ஆனால் இன்று இப்படியொரு விஷயம் வெளிப்பட்டதில் மனிதர் அப்படியே அமுங்கிப்போய் விட்டார்.
ஆக வெற்றிவேல் அன்று சொன்ன ‘தம்பி பாப்பா’ என்பது ஜெயக்குமாரின் குழந்தையைத்தான்! என்கிறார்கள் விமர்சகர்கள். 
சரி, ஜெயக்குமாரின் மகன் எப்போது எம்.பி.யானார்? என்று தினகரன் ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘அட அது ச்சும்மா சுத்தல்ல விடுறதுக்காக இப்படி பேசியிருக்கார் வெற்றி. 
ஜெயக்குமார் பற்றிய ரகசியத்தின் ஆதாரம் தன் கையில் இருக்குதுங்கிறதை ஜெயக்குமார் மட்டுமே புரிஞ்சுக்கிற மாதிரி இப்படியொரு ட்விஸ்ட்டு வெச்சு வெற்றி பேசினார்.
அதுக்குப் பிறகாவது ஜெயக்குமார் நாவடக்கம் காட்டியிருக்கலாம், ஆனா அவரு என்ன நினைப்பிலோ தன் வேலையை தொடர்ந்துட்டே இருந்தார். 
இப்போ கையுங்களவுமாக சிக்கிட்டார்!
============================================================================================
சாட்சி சொன்ன சாமியார் கொலை?
கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். 
அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 
இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 
பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
தற்போது அவர் ஜாமினில் உள்ளார். 
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செயின்ட்பால் கான்வென்ட் பள்ளியின் ஒரு விடுதியில் மர்ம முறையில் இறந்து கிடந்துள்ளார். 
போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
பாதிரியார் குரியகோஷ் பிஷப் பிரான்கோவுக்கு எதிராக போலீசாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். 
இதனால் அவரது சாவில் மர்மம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 
மேலும் குரியகோஷ் குடும்பத்தினர் அவரது சாவு குறித்து கூறுகையில்; 
குரியகோஷ்சுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல் இருந்த வந்தது. 
இதனால் அவர் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாகவும், போலீசார் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார், பிஷப் கைது தொடர்ந்து, தற்போது பாதிரியார் கொலை மேலும் பல யூகங்களை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...