ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

போதையின் பாதை



போதையை வாங்குகிறார்.


__போதையை ஏற்றுகிறார்
____________________________________________________________________________________________________________

பக்‌ஷே  பர்'ராக்
இலங்கையின் வடக்கே வவுனியாவுக்கு வெள்ளிக் கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அரசாங்கத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் வகையில் அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள் சகிதம் வன்னிப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் வன்னிப்பிரதேசத்தி;ன் காணி, வீடமைப்ப, மீன்பிடி, சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.
காணிகளைப் பொருத்தமட்டில் பல்வேறு வசையன காணி உறுதிப்பத்திரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்திருப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எனினும், ஜப்பான் காணி உறுதியென்றோ இங்கிலாந்து காணி உறுதியென்றோ எதுவம் கிடையாது. காணிகளுக்கு காணி ஆணையாளரின் ஊடாக அரசாங்கம் வழங்குகின்ற ஒரேயொரு உறுதிப்பத்திரம் தான் உள்ளது. ஏனைய காணி உறுதிப்பத்திரங்கள் செல்லுபடியாகாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். காணிகளில்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அனுமதியில்லை

வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டபோது, வீடற்றவர்களுக்கு வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் உள்ளுர் செய்தியரளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...