வெள்ளி, 20 டிசம்பர், 2013

சேரக் கூடாத இடம்


 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தத் தகவலை கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டப் பிரிவு 377 குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது," தனி நபரின் விருப்ப உரிமை காக்கப்படும் என நம்புவோம் "என்றார்.
பொதுவாகவே பாலுணர்வு அனைத்து மிருகங்களிடமும்  [மனிதன் உட்[பட ]
உயிரிகளிடமும் உள்ளது.
ஓரின சேர்க்கை என்பது மன வியாதி,இயற்கைக்கு மாறானது.
ஆணுக்கு பெண்,பெண்ணுக்கு ஆண் என்று இயற்கையிலேயே உருவாக்கம் எற்பட்டு அதற்காகவே பாலின கவர்ச்சியும் இருபாலாரிடமும் இயற்கையிலேயே உள்ளது.
அப்படி இருக்கையில் ஆணை-ஆணே ,பெண்ணை-பெண்ணெ பாலியல் விருப்புக்கு உள்ளாக்கி உறவு கொள்வது என்பது இயற்கைக்கு மாறான செயல்தான்.
அது ஒரு மனப்பிறழ்வு .மன வியாதி.
பிறரை கொலை செய்யவதில் ,துன்புறுத்துவதில்  மனம் மகிழும் சைக்கோ வியாதிக் காரர்களுக்கும் இவர்களுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது.பிறருக்கு கிட்ட தட்ட துன்பம் இராது.
suran
ஆனால் அதை கூட உறுதியாக சொல்ல இயலாது.
ஊரினாஸ் சேர்க்கைக்கு உடன்படாதவர்களை தாக்கிய,கொலை செய்த வழக்குகள் இந்தியாவில் அதிகம் உள்ளது.அசிங்கம் என்று வெளிவராதவைகளும் அதிகம் உள்ளது.அதை விட கொடுமை கொடிய வியாதியாக இன்று உலகை பயமுறுத்தும் எயிட்ஸ் இந்த அளவு பரவ முக்கிய காரணமே ஓரின சேர்க்கைதான் என்பது உலகறிந்த உண்மை.
இப்போதுள்ள நிலைமை :
 இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம்தான் வேடிக்கையாகவும்-வேதனையாகவும் இருக்கிறது.
ஒரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ,உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறது சோனியா-மன்மோகன் அரசு.
இந்த விவகாரத்தில் அப்படி என்ன வேகம் இவர்களுக்கு.
போபாலில் உரிய இழப்பீடு கொடுக்காமல்  யூ னியன் கார்பைடு இழுத்தடிக்கிறது .அந்த வழக் கை  தீவிரப்படுத்தி அதன் முதலாளிக்கு தண்டனை வாங்கியும் போபால் பாதிப்பாளர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தரவும் வக்கற்று போன ஒரு அரசு ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அதிகப்படியான செயல் பாடு ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை வரவைக்கிறது அல்லவா?
வாராவாரம் கூடுகின்ற பெட்ரோல் விலை உயர்வை கண்டு கொள்ளாமல் விலை உயர்வை தனியாரிடம் தள்ளிவிட்ட மத்திய அரசு ,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இறக்கத்தை கட்டு படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காத அரசு,சுவிஸ் வங்கியில் கு விந்துள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வர சட்ட நுணுக்கங்களை பயன் படுத்தாத அரசு இதற்கு சட்ட ரீதியாக முனைப்பு காட்டுவது அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதாவது பய ன் இருக்கலாம் என்றே எண்ண வைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.
மத்திய அரசுக்கு நமது அறிவுரை சேராத இடம்தன் னில் சேர வேண்டாம் என் பதே .
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நோக்கி பயணிக்கும் இந்திய அரசு                                                                                                                    ஆர். எஸ். துரைராஜ்,
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கித் துறையில் சில புதிய விதி முறைகளையும், வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. இவை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறு வனங்கள் குறைந்தபட்சம் 500 கோடி முதலு டன் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்படும்.
மேலும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகள் தொடங்குவதற்கும், ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வங்கிகள் அதனை முழுவதும் தனதாக்கப்பட்ட துணை நிறுவனங்களாக மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை
  இந்தத் துணை நிறுவனங்கள் இந்தியாவி லுள்ள மற்ற இந்திய வங்கிகள் போன்று அனைத்து சலுகைகளுடன் பணியாற்றுவதற் கும், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிளை கள் தொடங்குவதற்கும் அனுமதிக்கப்படும். (ஒரு சில பிரத்தியேக இடங்களில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை). இவ்வங்கிகள் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளை கையகப்படுத்தவும் அனுமதிக்கப்படும்.
  மேலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள விவாதக் குறிப்பில் இந்திய வங்கி யில் அரசின் பங்கை 51 சதத்திற்கும் கீழே குறைக்கலாம் என்றும், சர்வதேச தரத்திற்கு இந்திய வங்கிகளை உயர்த்துவதற்காக வங்கி களை இணைக்க வேண்டும் என்றும் பரிந் துரைத்துள்ளது.
அரசின் இந்த அறிக்கை இந்தியப் பெரு முதலாளிகள் மக்கள் சேமிப்பை கையகப் படுத்தவும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியா வில் அதிக சுதந்திரத்துடன் நடமாடவும் வழி வகுக்கும்.
இந்த சூழ்நிலையில் நிதித் துறைக் கான நாடாளுமன்ற நிலைக்குழு நிறுவனங் களையும், வங்கிகளையும் தனித் தனியேதான பார்க்க வேண்டும் என்றும், பெரு நிறுவனங் கள் வங்கி துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
விளைவுகள் என்ன?
* இந்தியப் பொருளாதாரத்தில் நிதித்துறை ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்திய நிதித்துறையில் பொதுத்துறை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இவை தேசிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், நம் நாடு சுய சார்பு எய்துவதற்கும் அடிப்படையாகும். வங்கிகளை தனியார்மயப்படுத்தும் அரசின் இம்முயற்சி இந்திய நிதித்துறையை உலக நிதி மூலதனத்தின் ஒரு பகுதியாக மாற்றும் நிலைக்குத் தள்ளி விடும்.
* வெளிநாட்டு வங்கிகளும், தனியார் பெரு நிறுவனங்களும் இந்தியாவில் வங்கிகளை அதிக அளவிற்கு செயல்பட அனுமதித் தால் அவை தற்போது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை “இணைப்பு, மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு” என்ற முறையில் தனியார் வங்கியாக மாற்ற அரசு ஊக்குவிக்கும்.
*இத்தொழில் நிறுவனங்கள் மக்கள் சேமிப்பை தங்கள் நிறுவனத்தின் நலனுக் காகவே செயல்படுத்துவர். மக்களின் சேமிப் புக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.

*வங்கி சேவையைப் பெற வாடிக்கை யாளர்கள் பெரும் செலவு செய்ய வேண்டி யிருக்கும்.
 *மக்கள் சேமிப்பு ஒரு சில குறிப்பிட்ட தனி யார் கையில் சென்றால் அந்த உள்நாட்டு சேமிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்த முடியாத நிலை ஏற்படும்.
*இத்தகைய வங்கிகள் நம் நாட்டு வளர்ச் சிக்கு முக்கியமான விவசாயத் துறை மற் றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்க முன் வராமல், தனியார் முதலாளிகளுக்கு கடன் வழங்குவதற்கே அக்கறை காட்டும்.தேசியமயமும் தாராளமயமும்1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் தான் இந்திய வங்கிகள் ஒரு குறிப் பிட்ட முதலாளி வர்க்கத்திற்கான வங்கி என்ப திலிருந்து அனைவருக்குமான சமூக நலன் சார்ந்த வங்கியாக மாற்றப்பட்டது. தேசியமய மாக்கலுக்குப் பின்னர் தான் வங்கித் துறையில் மிகப்பெரிய அளவிற்கு விரிவாக்கம் ஏற்பட் டது.
 கிராமப் புறங்களுக்கு வங்கி சேவையை பரப்புவதிலும், சிறு தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவி அளிப்பதிலும் தேசிய வங்கிகள் முக்கிய கவனம் செலுத்தி அது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்து வருகிறது.
1990ல் நவீன தாராளமயமாக்கல் கொள் கைகள் அமல்படுத்துவதற்கு முன்பு கிராமங் களில் 58 சதம் வங்கிக் கிளைகள் இருந்தன. 2011ல் இது 37 சதமாகக் குறைந்துள்ளது. வங்கிகளை அணுகுவதும், கடன் பெறுவதும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இன்னும் 80 சதம் கிராமத்து மக்கள் தங்கள் பணத் தேவைக்காக தனியார் வட்டிக்காரர் களை நம்பி இருக்கும் நிலையில் தான் உள்ள னர்.
கந்து வட்டிக் காரர்களிடம் கடன்பட்டு அதனால் ஏழைகள் படும் துயரங்களுக்கு பெருகி வரும் தற்கொலைகளே சாட்சியாகும்.
பின் நோக்கி பயணிக்கும் இந்திய அரசு
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங் களை தொடங்கி மக்களின் சேமிப்புப் பணத் தை தங்கள் நிறுவனங்களின் சொந்த நலனுக் குப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள் ளையடித்ததன் விளைவாகத்தான் 1956ல் இன்சூரன்ஸ் துறையும், 1969ல் வங்கித் துறை யும் தேசியமயமாக்கப்பட்டன.
  இதே காரணத் துக்காகத்தான் பல வளர்ந்த நாடுகளில் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இன்று ரிசர்வ் வங்கி யின் அறிவிப்பிற்கு பிறகு வங்கிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பல நிறு வனங்கள் ஏற்கனவே இப்படி பித்தலாட்டம் நடத்திய நிறுவனங்கள் தான். இந்த அனு பவத்தை மறந்துவிட்டு இந்திய அரசு பின் நோக்கி பயணிக்கும் செயலை செய்து வரு கிறது. அரசின் இந்த செயல்பாடு தேசியமயத் திற்கு முன்பிருந்த மோ
சமான நிலைக்கு இந் திய வங்கிகளை இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப் படுத்துவது உடனடி சாத்திய மான ஒன்றாக இல்லை. எனவேதான் பெரு நிறுவனங்கள் வங்கிகளை திறப்பதற்கு அனுமதி அளிப்பதும், வெளிநாட்டு வங்கி களுக்கு கதவுகள் அகலமாகத் திறந்துவிடப் படுவதும் நடக்கிறது.
இது பின்வாசல் வழியாக இந்திய வங்கித் துறையை தனியார்மயப் படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை.
சந்தையில் 5% வளர்ச்சியுடன் வங்கி பங்குகள்!! பணப்புழக்கத்தை அதிகரிக்க அதிரடி திட்டம்..
அரசின் வாதம்
இந்தியாவில் நிதித் துறையை உள்ளடக் கியப் பொருளாதார வளர்ச்சியில் வங்கித் துறையை தனியார்மயப்படுத்துவது என்பது மிக முக்கியமானது என்று அரசு வாதிடுகிறது. ஒரு பெரும்பகுதி மக்கள் வங்கி நடவடிக் கைகள் பற்றி தெரியாமலே உள்ளனர். 40 சதத் திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.
 பெண்களில் 25 சதம் பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள 650000 கிராமங் கள் 36000 கிராமங்களில் மட்டுமே வங்கிகள் உள்ளன. வங்கிகளை தனியார்மயப்படுத் தினால் போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டு இது வரை வங்கிகள் இல்லாத பகுதிகளுக்கும் வங்கிச் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இது “நிதி உள் ஈர்ப்புக்கு” மிகவும் தேவையான ஒன்று என்று அரசு வாதிடுகிறது. ஆனால், போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டா லும், தனியார் வங்கிகள் கிராமங்களுக்குச் செல்லாது என்பதற்கு இந்திய இன்சூரன்ஸ் துறையே சாட்சி.
 போட்டி ஏற்பட்டால் இன் சூரன்ஸ் கிராமங்களுக்கெல்லாம் பரவும் என்று காரணம் சொல்லப்பட்டு தனியார் இன் சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அனு மதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின் னரும் எந்த தனியார் நிறுவனமும் கிராமங் களுக்குச் செல்லவில்லை. இன்றும் கிராமத் திற்கு இன்சூரன்சை விரிவாக்கம் செய்து வருவது எல்ஐசி என்ற பொதுத்துறையே. மக்களின் நிதி சேகரிப்பு என்பது வரு மானம் மற்றும் சேமிப்பிற்காக மக்கள் ஒதுக்கும் தொகையைப் பொறுத்தது.
  மக்களின் வரு மானத்தை உயர்த்தவும், வறுமையைப் போக்க வும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிதி ஈர்ப்பு பற்றி பேசுவது என்பது அந்தரத்தில் கோட்டை கட்டுவது போன்றதே. இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை உள்ளது. இதைப் பாது காக்க வேண்டுமென்றால், வங்கித் துறையின் கட்டுப்பாடு அரசின் கையில் இருப்பதே சரியாக இருக்கும்.
செய்ய வேண்டியது என்ன?
அனைவர் நலன்களையும் உள்ளடக்கிய நிதி ஏற்பாடு நாட்டு வளர்ச்சிக்குத் தேவை யான ஒன்றே என்பது உண்மை. அதனை அடைய :-
1. சாதாரண மக்களின் வருமானம் அதி கரிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு மற் றும் நிலையான வருமானம் மூலம் சேமிப் பினை அதிகரிக்க வேண்டும்.
 2. வங்கிகளில் கணக்கு தொடங்கவும், கடன் பெறவும் ஏழைகளுக்கு வாய்ப்பும் வசதியும் வழங்கப்பட வேண்டும்.
3. பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ள கடன் தொகையை வசூ லிக்க பிரத்தியேக ஏற்பாடு செய்ய வேண்டும்.
 4. மக்களின் சேமிப்பு மீது அரசுக்கு அதிகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதுவே தேசிய வளர்ச்சிக்கு உதவும். இதை விட்டுவிட்டு பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பதும், வெளி நாட்டு வங்கிகளுக்கு பட்டு கம்பளம் விரிப்பதுமான அரசு நடவடிக்கை கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

 
கட்டுரையாளர் : துணைத்தலைவர், நெல்லை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.
 

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இந்திய ராணியார் சோனியா

உலக அளவு பணமுதலைகள் பட்டியலில் பிரிட்டன் ராணியாரையே தனது சொத்து மதிப்பின் மூலம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் ஏழை நாடு என்னும் களங்கத்தை இந்திய ராணியார் சோனியா துடைத்து ள்ளார்.
suran

 சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா 12 வது இடம்பெற்றுள்ளார்.
இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத் 18 வது  இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை பெற்றுள்ள பிரபலங்கள்

முதல் இடம் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். (சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)

இரண்டாம் இடம் : தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் (சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,400 அமெரிக்க டாலர்கள்)

7ம் இடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,800 அமெரிக்க டாலர்கள்)

12ம் இடம் : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,- தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்)
.

16ம் இடம் : சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் (சொத்து மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலர்கள்)

18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சி தலைவர், பிரிட்டன் ராணி, ஓமன் சுல்தான், சிரியா அதிபர், குவைத் ஷேக் உள்ளிட்டவர்களை முந்தி, சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா 2 பில்லியன் டாலர்களில் சொத்தை எப்படி சம்பாதித்தார்.?
அவரை இந்த இடத்துக்கு கொண்டுவந்தது  நீங்கள்  தினசரி 35 ரூபாயில் வாழ்வு நடத்தக்கூறும் இந்திய மக்கள் தான் என்பதை இந்த மகிழ்வான நேரத்தில் நினைவு படுத்துகிறோம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று  நினைவுக்கு வரும் அன்றைய சோகம்.
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும்நச்சு  வாயு 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கசிந்தது.
போபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள் (டிச.3- 1984)
இதில் 3800 பேர் உடனடியாக மரணம் அடைந்தனர். இதன் பாதிப்பால் 6 ஆயிரத்திறக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.கும்பல்,கும்பலாக பிணங்களை எரித்தனர்.கிட்டத்தட்ட மற்றொரு நாகாசாகியாகத்தான் போபால் அன்று காணப்பட்டது.
இந்த படுகொலையில் ஆளை நிர்வாகம் கவனக்குறைவுதான் காரணம் என்று தெரிந்த பின்னரும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் கார்பைடு முதலாளி வெளிநாட்டிற்கு தனி விமானம் மூலம் மக்களுக்கு தெரியாமல் தப்ப வைக்கப் பட்டார்.இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை நிவாரணமும் வழங்கப்பட் வில்லை.இன்றைக்கும் இதன் பாதிப்பால் பலர் ஊணமுற்றொர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று ஊனமுற்றோர் நாள் [டிசம்பர் -3]

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


சனி, 16 நவம்பர், 2013

த[நெ ]டு மாறன்

முள்ளி வாய்க்கால் முற்றம் இன்று பரபர பிரச்னையாக உள்ளது.
இதுவரை கருணாநிதியின் ஈழப்பாசத்தை வேசம் என்றும் ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று கொண்டாடியவர்கள் முகத்தில் ஒரு டன் கரி.
ஜெயா அரசு முற்றத்தின் சுற்று சுவரை இடித்ததை கூட மத்திய அரசின் கட்டாயத்தால் தமிழக அரசு செய்து விட்டதாக தன்னை மாவீரன் என்று கூறிக் கொள்ளும் ப.நெடுமாறன் வகையறாக்கள் சொல்லிக்கொண்டு சிறையில் புலம்புகிறார்கள்.suran
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இருமுறை பதவி இழந்த கருணாநிதி திட்டமிட்ட ஈழத் துரோகி பட்டத்தால் இம்முறையும் பதவியை இழந்தார்.ஈழப்பிரச்னை மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை முறைகேடும் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
ஆனால் எவ்வளவு காலம்தான் நானும்  நல்லவராக நடிப்பது என்று இப்போது தனது ஈழப் பாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.
இது கொஞ்சம் தான் இன்னமும் நெடுமாறன்,சீமான் போன்றோர் பார்க்க வேண்டிய வை இருக்கிறது.அது ஏற்கனவே வைகோ பார்த்து அதிர்ந்த பக்கம்தான்.ஆனால் வைகோ ரோசம்,மானம் இழந்து அவரை இடையில் சிறிது காலம் அன்பு சகோதரியாக்கி அழகு பார்த்து இப்போது மீண்டும் பாசிஸ்டாக பிரகடனம் செய்து வருகிறார்.
நெடுமாறன் திரையில் வடிவேலு செய்ததை முற்றத்தில் செய்து வருகிறார்.தன்னை ஜெயா அரசு சிறையிலிட்டாலும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டார் என்று புளகாங்கிதமடைந்துள்ளார் .
செந்தமிழன் சீமானோ பிழைக்கத்தெரிந்த புரட்சியாளர்.
முற்றம் பிரச்னையில் நாம் தமிழர் தொண்டர்கள் அடி பட்டு ரத்தம் சிந்தினாலும் தான் மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்று சஷ்டி விரதம் இருக்கிறார்.
அவருக்கு கருணாநிதி ஆட்சிக்கும் -ஜெயலலிதா ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியும்.
அதை விட முக்கியமாக இருவரில் யார்  ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்ற உண்மையும் தெரியும்.அதனால் அடக்கி வாசிக்கிறார் .அடங்கிப் போயுள்ளார்.
கருணாநிதி ஒருநாளில் புழலில் இருந்து வெளியெ விட்டு விட்டார்.
ஆனால் திடீர் ஈழத்தாய் ??
வைகோ முன்னுதாரணம் இருக்கிறதே?
ஒன்றை மட்டும் இன்னமும் இந்த நெடு மாவீரனையும்.செந்தமிழனையும் நம்பி ஈழப்பிரச்னையை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
முள்ளி வாய்க்கால் முற்றம் சுற்று சுவர் -பூங் காவுக்கு ஒப்பந்தம் போட்டு இடம் கொடுத்தவர் கருணாநிதி.
அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடித்து தூள் கிளப்பியவர் ஜெயலலிதா,
சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனத்தீர்மானம் நிறைவெற்றிக்கொண்டே முற்றத்தில் அவர் கரசேவை நடந்துள்ளது.
அது மட்டுமல்ல வேதனை  நெடுமாறன் இன்னமும்  மாவீரன் பிரபாகரனுடன் தான் கதைப்பதாக கதை விட்டு தன்னை முன்னி லை ப்படுத்துவதுதான்.
மாவீரன் பிரபாகரன் நிச்சயம் இன்னமும் வாய் மூடி ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவர் அல்ல.அதாவது இந்த நெடு,சீமான் போன்ற அடக்குமுறைக்கும்,சிறைக்கும் அஞ்சும்  கோழை அல்ல.தான் இருப்பதை எவ்வாறாவது -எவ்வகையிலாவது.இதற்குள் தெரிவித்தித்திருப்பார்.
ஆனால் அதற்கு இயலா உடல் நிலையில் இருப்பாரானால் இங்கு நடக்கும் ஈழ வியாபரத்தை கண்டு கொதி நிலையில் தான் இருப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------







 

திங்கள், 4 நவம்பர், 2013

"ஆல் இன் ஆல் " வரி விலக்கு பெற ...!



suran

     
 கார்த்தி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
 இந்த படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும்[?] வரி விலக்கு அளித்து வருகிறது.
பத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தி ற்கு தமிழக அரசு கேளிக்கை வரி வில க்கு கொடுத்துள்ளது.
ஒரு கல் ,ஒரு கண்ணாடி படத்தின் பெயராக வைத்தும் ஒகே,ஒகே என்று சுவரொட்டிகளில் இருந்ததால் வரி விலக்கு இல்லாமல் போனது.
அதை கூட சரி எனலாம்.
நீர்ப்பறவை,நேரம்,கும்கி,மைனா ,மன்மதன் அம்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களுக்கு வரி விலக்கில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் அவைகளை தயாரித்தது,வெளியிட்டது உதயநிதி ஸ்டாலின் .அவரின் அப்பா ஸ்டாலின்.தாத்தா கருணாநிதி என்ற காரணத்தால் தான்..
தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலம் -மற்ற மொழிகளில் கண்டபடி தமிழ் படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட போது அதை தடுக்கும் நோக்கில்தான் தமிழில் பெயர்வைத்தால் வரி விலக்கு என்ற அரசாணை வெளியிடப்பட்டது.அதனால் அரசு வருவாய்தான் இழப்பு.ஆனால் திரைப்படங்களுக்கு தேவை இல்லாமல் ஆங்கில தலைப்பு வைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
கருணாநிதி கொண்டுவந்த அரசாணை இப்போது அவருக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படூகிறது .
கருணாநிதி குடும்பத்தினர் தாயாரிக்கும்-வெளியிடும் படங்கள் அனைத்துக்கும் வரி விலக்கு இல்லை.ஆனால் மற்றவர்கள் தயாரிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கு கூட இந்த ஆணையின் கீழ் வரி விலக்கு தரப்படுகிறது.
ஜெயலலிதா அரசு இதற்கென அமைத்துள்ள குழு ஆங்கிலம்-தமிழ் வேறுபாடு அறியாத [சங்கர் ]கணேஷ் போன்றவர்களை உறுப்பினர்களை கொண்டதால் வந்த குழப்பமா?அல்லது அரசியல் காழ்ப்புணர்வா?
அமைச்சர் ஒருவர் தனது ஊதவியாளர் மூலம் வரி விலக்கு தர 7 லட்சம் வரை கையூட்டு “அங்குசம் “படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அங்குசம் படமே இது போன்ற கையூட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் என்பது இங்கு வருத்தமான் விடயம்.
மொத்தத்தில் இப்போது “ஆல் இன் ஆல் “பட விலக்கு விவகாரம் நீதிமன்றம் போயுள்ளது.ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருக்கிறார் .
அரசும் அது உருவாக்கிய சிங்கி குழுவும் பதில் சொல்ல வெண்டிய நிலை.
இரட்டை இலை சின்னங்களையே  பறக்கும் குதிரையின் இறகு,பசுமையின் வெளிப்பாடு என்று சொல்லி வரும் கும்பலுக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல .
பேசாமல் கருணாநிதி குடும்பத்தயாரிப்புகள் தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் வரி விலக்கு என அரசாணையை வெளியிட்டு விட்டால் என்ன?
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
“அம்மாவும் நீயே “என்று அப்போதே பாடி சினிமாவுக்கு வந்தவர் கமல் ஹாசன் ".
                                             -இது பேரா.ஞானசம்பந்தம்.
suran
“பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்று இங்கு கேட்டார்கள்.
இப்போது “சூரிய ஒளி"யைத்தான் ‘நம்பியிருக்கிறோம்.பெட்ரோல் கை கொடுக்காது.சோலார் சக்தியில் வண்டியை ஓட்டலாமே?”
   
                                                         -இது கமல்ஹாசன் .
இரண்டும் ஜெயா டிவி புதுமை பட்டிமன்றத்தில் கேட்டு,சுட்டது.
ஜெயா டிவியில் சூரிய சக்தியைப்பற்றி பேச எப்படி விட்டார்கள்.
மூலிகை அல்லது "பசுமை இலை" பெட்ரோல் பற்றி கமல் சொல்லியிருக்கலாமே ?.
ஏன் “சூரிய ஒளி”க்கு போனார்.?
[போட்டுக் கொடுக்காமல் இருக்க முடியலைங்க.!] 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிம்கா சாதனை!
===============

‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தை குரு ரமேஷ் இயக்குகிறார். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பிலோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார.
ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி. அனுப் தயாரிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா முதன் முறையாக நடிகராகவும் அறிமுகமாகிறார். "காதல் மன்னன்" படத்தில் நாயகியாக நடித்த பாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இதில் நடிக்கிறார். 
suran
இவர்களுடன் உலக சினிமாவில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே தோற்றம் கொண்ட எட்டு வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோரும் நடிக்கின்றனர். 
‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர் இந்த முயற்சிக்கு  "லிம்கா சாதனை"சான்றிதழ் வழங்கினார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வழுக்கைக்கு “முடி” வு
-----------------------------------------------
ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.

தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.
suran
ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில். இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.
மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.
ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் .
----------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 16 அக்டோபர், 2013

"மோடி தாசன் '


suran


தமிழருவி மணியன் 
--------------------------------------






காந்திய மக்கள் இ யக்கத்தின்ஒரேதலைவரும்,தொண்டருமான  தமிழருவி மணியன்,இப்போது காவிக் கொள்கையில் கரைந்து விட்டார் போல் தெரிகிறது.
பாஜகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக மோடிக்கு வாக்காலத்து வாங்கி மேடைகளில் மட்டுமின்றி எழுத்துக்களிலும் மோடியாயணம் பாடி வருகிறார்.
கடந்த 2 ம் தேதி மதுரையில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க 4 - ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழருவி மணியன் பேசிய பேச்சுகளுக்கு கிடைத்த எதிர்வினையைத் தொடர்ந்து தற்போது தனது எழுத்தை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதழ் ஒன்றில் பில்டப் செய்துள்ளார்.
 என்னைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றதற்குத் துணைபோன காங்கிரஸ் அரசு கருவறுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மாற்று அரசியல் வேண்டும் என்கிறேன்.
 இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் ஒரு வருடமாகப் பேசி வந்தேன்.
திருப்பூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளையும், வைகோவையும் இணைத்து மாற்று அணியாக அறிவிக்க எவ்வளவோ பாடுபட்டேன். 
சிபிஎம் கட்சியினர் எப்போதுமே வித்தியாசமானவர்கள். மண்ணில் நடக்காமல், விண்ணில் நடக்கக் கனவு காண்பவர்கள். தனி ஈழத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை; அதனால் வைகோவுடன் இணைய முடியாது என்றார்கள்.
இந்த நிலையில் மாற்று அரசியல் அணியை, நான் எப்படி முடிவு செய்வது? அந்த சிந்தனை முற்றுப் பெற்றது. மாற்று யோசனை செய்தேன். 
பாஜக இன்று பத்து சதவிகித வாக்கு வங்கியுடன் வளர்ந்துள்ளது. 
அதேபோல வாக்கு வங்கியுள்ள தேமுதிக, மதிமுக ஆகியவை சேர்ந்தால் தமிழகத்தில் சுலபமாக வெற்றி பெறலாம். காங்கிரஸை இவர்களால்தான் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்."
- என்று தமிழருவி கூறியுள்ளார்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. காந்திய மக்கள் இயக்கத்திற்கு கூட கொள்கை என்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் நிலைப்பாட்டில் தமிழருவிக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.
அது அவர் விருப்பம். பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதைப்போன்ற கனவுடன் மண்ணில் கால் பாவாமல், விண்ணில் மிதந்து வரும் தமிழருவி மணியன், இலங்கைத்தமிழர்களுக்காக பிறப்பெடுத்தவர் போல பேசுகிறார். 
ஈழம் பற்றி யும் அதற்காகவே கருணாநிதியை துரோகி என்றும் மேடை  தொறும் திட்டி வரும் தமிழருவி மணியன் தற்பொது அடியாள் சேவகம் செய்யும் பாஜக, ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்ததை  மறந்து விட்டுப் பேசிக்கொண்டே போகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடந்த புத்தர் விழாவிற்கு வந்த இலங்கை ஜனாதிபதி இராஜபக்சேவை வரவேற்று ராஜஉபச்சாரம் செய்த சிவராஜ் சிங் சௌகான் எந்த கட்சியின் முதல்வர்? 
suran
ராஜபக்சேயை வரவேற்று அடிக்கல் நாட்டச்செய்த  ம.பி. பாஜக முதல்வர் சவுகான். 
அவர் கட்சி பாஜக தான் என்பதை மணியன் மறந்து விட்டாரா?அல்லது மறதி வியாதியா?
தமிழ் நாட்டில் அணைவரும்[தமிழருவி உட்பட ] ராஜ பக்சே இந்தியா வரக்கூடாது என்று போராடிய பொது அனைத்தையும் புறந்தள்ளி அப்போதுதான் தமிழர்கள் ரத்தத்தால் கறை பட்ட கரங்களை கொண்டு அடிக்கல் நாட்டினார் பா ஜ க முதல்வர் சிவராஜ் சௌ கான் .
தமிழருவி, இராஜபக்சேவிற்கு கறிவிருந்து வைத்த சிவராஜ் சிங் சௌகானுக்கு கறுப்புக்கொடி, வேண்டாம் கண்டனக்கொடியாவது எழுத்தில் ஏற்றினாரா? அப்படிப்பட்ட பாஜகவிற்குத் தான் தமிழருவி பல்லக்கு தூக்குகிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், சாஞ்சிக்கு இராஜபக்சே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழக வீதிகளில் வலம் வருவதற்கு தமிழருவி மணியனுக்கு தைரியம் வருகிறது என்றால் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்ற நினைப்புத்தான் காரணம்.
தமிழருவி மணியன் பேச்சாளர் மட்டுமல்ல: நல்ல படிப்பாளி.
எப் போதும் உலக நாடுகளின் தலைவர்களைப் பற்றி பேசிவிட்டுத்தான் உள்ளூருக்குள் போவார். 
அப்படிப்பட்டவர் என்ன சொல்லியுள்ளார்? 
suran
“இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்ய மாட்டேன் என்று முஸ்லிம் சமுதாயத்திடம் மோடி மன்னிப்பை வேண்டுவது தான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தி யாவின் பிரதமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்” என்று மோடிக்கு யோசனைகளை அள்ளி வீசி யுள்ளார்.
உச்சநீதிமன்றம் சொன்னதையே கேட்காத மோடி, தமிழருவி சொன்னவுடன், தாவிக்குதித்து வந்து மன்னிப்பு கேட்டிடுவாரா?
நரேந்திர மோடி ஆட்சி நடைபெறும் குஜராத்தில், நடைபெற்ற கல வரத்தில் 1044 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2548 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போனார்கள். 919 பெண்கள் கணவர்களை இழந்து விதவையானார்கள். 606 குழந்தைகள் தாய், தந்தையற்ற அனாதைகளாக்கப்பட்டனர். இது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தான். ஆனால், உண்மையான இழப்புகள் ஏராளம் என்பதே முஸ்லிம் மக்களின் கருத்தாக உள்ளது.
இத்தனை கொடுமைக்கும் காரணமான மோடி மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? 
அப்படி என்றால் இலங்கைப்படுகொலைகளுக்காக இராஜபக்சே மன்னிப்பு கேட்டால் போதுமா ?
“குஜராத்தில், கடந்த 2002- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். என்று கூறிய மோடி, “நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில்விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக் கும் இருந்தது” என்று குஜராத் படுகொலையின் போது தனது மனநிலையை தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
suran
இந்த செய்தியை அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரித்ததை தேர்ந்த படிப்பாளியான தமிழருவி மணியன் படிக்கவில்லையா? இரத்தம் குடிக்கும் பூனைகள், ருத்ராட்சம் அணிந்து வந்தாலும் அதன் இதழோரத்தில் வழிந்தோடும் குருதியின் வாசனை தேசமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தேர்தலில் ஒரு  வாக்கு கூட இல்லாத இயக்கத் தலைவர் தனது அரசியல் தரகு வேலை மூலம் தனது சுய உருவத்தை வெளிக்காட்டியுள்ளார்.
ஈழப் பிரச்னையில் கருணாநிதியை குறை கூற இவருக்கு என்னதகுதி உள்ளது.சிபிஎம் கட்சியை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது.இவரின் தரகு வேலைக்கு இன்னொரு ஈழ ஆதரவாளர் -தியாகி வைகோதான் சரியாகி உள்ளார் என்பது இன்னொரு கொடுமை.
வாக்குமூலம் அளிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு இறுதி அத்தியாயத்தை தமிழருவி எழுதி வருகிறார்.

- ப.கவிதா குமார்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு எற்றபடி எடை இந்த அ ளவு இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு.
அதை சுரு க்கமாக.பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்) என்று சொல்லுவார்கள் .அந்தக் கணக்கீட்டை வைத்து தான்  ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன்  உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். 
* 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
* 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
* 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
* 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
பருமன் கொண்டவர்கள். 


------------------------------------------------------------------------------------------------------------
கேழ்வரகு... ரொம்ப நல்லது.!
-------------------------------------------------------------
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. 
பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.
 கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். 
suran
குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்.
 இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். 
 கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.
 நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் .
 கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. 
இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். 

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். 
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன.
 கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். 
------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 14 அக்டோபர், 2013

வாழ்நாள்சாதனையாளர்" கமல்ஹாசன்"

மும்பையில் நடைபெற உள்ள  சர்வதேசத் திரைப்படவிழாவின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது திரைக்களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவது பற்றி செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், "
"இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியாது" என்று கூறினார். தொடர்ந்து,"இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். ஆயினும் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்து இருங்கள் இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று பரிந்துரை செய்யவும் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றும் கமல் கூறினார். 
இனி அதிக இந்திப் படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
suran
கமல்ஹாசன் வயதான நடிகர்களை விட அதிக நாட்கள் தனது திரையுலக வாழ்வை கடந்துள்ளார்.
52ஆண்டுகள்.அதுவே அவரை வாழ் நாள் சாதனையாளராக்க போதுமானது என மும்பை திரையுலகினர் தெரிவித்தனர்.
சென்னை திரையுலக 100ஆண்டுகள் ஜெயா அரசு விழாவில் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்ட கமல்ஹாஸனுக்கு இந்திய திரையுலக மும்பை மய்யம் சரியான மரியாதையை செய்கிறது.
அதை புறந்தள்ளாமல்கமல்ஹாசன் ஏ ற் று க் கொள்வதுதான் முறை.
அதுதான் சென்னை அதிமுக கட்சி திரையுலக கூ லிகள் நடத் திய அம்மா புகழ் பாடும்100 ஆண் டுகள் விழா அவ மானத்துக்கு தரும் பதிலடியாக இருக்கும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

உயிர் காக்க...


ஒரு பயிற்சி!

எங்கு வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.
ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே,  அதை வாயுக்கோளாறு என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும்  ஆபத்தாகிவிடும்.'
முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா,
 அசிடிட்டியா?
 மாரடைப்பா?
 எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? 
நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு என்று நினைத்துக் கொண்டு சோடா கொடுக்கிறோம். மார்பில் தைலங்களைத் தடவி மசாஜ் செய்கிறோம்.
மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி வந்திருந்தால், இப்படியெல்லாம் செய்வது ஆபத்தில் முடிந்துவிடும். இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்தம் அங்கங்கே நின்றுவிடும்.
எனவே மாரடைப்பு ஏற்பட்டவரை அருகில் இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆம்புலன்ஸோ, வேறு வாகனங்களோ வருவதற்காகத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்பதால், விரைந்து செயல்பட வேண்டும்.
முதலில், மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மாரடைப்பு பரம்பரையாக வர வாய்ப்புண்டு.  சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும். 
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வரும்.
 இப்படி உள்ளவர்கள் நெஞ்சு வலி என்று சொன்னால் மாரடைப்பு வர அவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு என்று தெரிந்து அருகில் உள்ளவர்கள் உஷாராகிவிட வேண்டும்.
ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மாரடைப்பா?
suran
 இல்லையா?
 என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 
மாரடைப்பு ஏற்பட்டால் அதிகமாக வியர்க்கும். வாந்தி வரும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். படபடப்பு ஏற்படும். இடது தோள், இடது கைகளில் வலிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். சிலர் மயங்கி விழுந்துவிடுவார்கள்.
எனவே நெஞ்சு வலி என்று சொன்ன ஒருவரை  உட்கார வைக்கக் கூடாது. 
நேராகப் படுக்க வைக்க வேண்டும். 
தலையை மட்டும் ஒரு பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.
 ஏனென்றால் தலை நேராக இருந்தால் வாந்தி வரும்போது அது திரும்பவும் வாய்க்குள்ளே போய் மூச்சுக் குழாயை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு. 
மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த ஒருவர்  நினைவுடன் இருக்கிறாரா? இல்லையா
? என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டும்.
 அதற்கு அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றால் அடுத்து அவர் மூச்சு விடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். பிறகு கழுத்தருகே கை விரலை வைத்து அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
ஒருவேளை நாடித்துடிப்பு இல்லையென்றால், அவருடைய நெஞ்சில் கை வைத்து, செங்குத்தாக அழுத்துவதற்குத் தேவையான நிலையில் அவர் அருகே மண்டியிட்டு அமர வேண்டும்.
நடு நெஞ்சில் ஒரு கையை வைத்து, அதற்கு மேல் இன்னொரு கையை வைத்து அழுத்த வேண்டும். இவ்வாறு முப்பது தடவைகள் அழுத்த வேண்டும்.
அதற்குப் பிறகு, அவர் தலையைத் திருப்பி, அவருடைய வாயில் வாயை வைத்து மூச்சுக் காற்றை  அவருடைய  வாய்க்குள் இரண்டு முறை விட வேண்டும்.
suran
மாரடைப்பு வந்தவர் மூச்சுவிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். 
மூச்சு விடவில்லை என்றால் மீண்டும் முப்பது தடவை கைகளை வைத்து அழுத்தி, இரண்டு முறை அவருடைய வாய்க்குள் மூச்சுக் காற்றை விட வேண்டும்.
ஆம்புலன்ஸ் வரும் வரை இந்த முதல்  உதவியைச் செய்ய வேண்டும். இந்த முதல் உதவியினால் மாரடைப்பு வந்தவரின் தடைபட்ட சுவாசம் சீர்படும்.
 ரத்தம் ஓட்டம் நடைபெறும். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்பதற்கு இந்த முதல் உதவி உதவும்.
இந்த இதய இயக்க மீட்பு உதவி யை ஆங்கிலத்தில்
"Cardiopulmonary Resuscitation (CPR)' என்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்ட்ராய்ட் போன் வைரஸ் 


ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது.
இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. 
இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
 இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும். இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன.
 இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. பயனாளர், தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. 
இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.

அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். 
நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். 
முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். 
கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.
நன்றி:தினமலர்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

"கம்யுனிசத்" தில் இருந்து "அண்ணாயிசம்".?


suran

நீங்கள் மூன்றாவது அணியை மையமாக வைத்து யோசிக்கிறீர்கள். ஆனால், மோடி பிரதமராக முடியாத சூழலில், "பா.ஜ.க. ஆதரவோடு ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் தில்லியில் அடிபடுகிறதே?"
சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். 
ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும் சந்தோஷம்தான்!

இது தா.பாண்டியன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் பேட்டி என்றால் நம்ப கொஞ்சம் கடினம்தான்.
பாஜகவுடன் ,காங்கிரசுடன் கூட்டணி என்றாலே அவர்களை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கும் பார்வை உள்ள கம்யுனிஸ்ட் இயக்கத்தில் இப்படி ஜெயலலிதா ஆதரவு அந்த இயக்கங்களின் அடிப்படை கொள்கைகளையே தரத்து வருகிறது.
ஏற்காட்டில் முன்பு காங்கிரசு ஆட்சியில் பங்கு கொண்டதால் திமுக வுக்கு ஆதரவு இல்லை என்று கொள்கை அடிப்படையில் அறிக்கை விட்ட தா.பா,&ஜி.ரா ,.க்கள் பாஜக வுடன் சேர்ந்து பிரதமாராக ஜெயா வந்தால் சந்தோசம் என்பது எப்படி பட்ட கேவலமான கொள்கை.
கருணாநிதி என்ன செய்தாலும் அது மக்கள் விரோதம் கம்யுனிசக் கொள்கைகளுக்கு விரோதம்.ஆனால் தனது ஆட்சிகள்தொறும் பேருந்து கட்டணம்,பால் விலை ,மின்கட்டணம் பொன்றவற்றை ஜெயா ஆட்சி கூட்டினால் அது மக்கள் நன்மை தரும் செயல் .
"இந்தியாவிலேயே பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இது இருக்கிறது. ரேஷன் கடைகளில் முதலில் இலவச அரிசி கொடுத்தது தமிழ்நாடு. ஏழைப் பெண்கள் திருமண உதவிக்கு நான்கு கிராம் தங்கம் - ரூ. 50 ஆயிரம் பணம் கொடுப்பது தமிழ்நாடு. எந்த ஊரில் ஒரு ரூபாய்க்கு இட்லியும் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதமும் தருகிறார்கள்? 
வெளியில் 20 ரூபாய்க்குத் தண்ணீர் விற்கிறது; தமிழக அரசாங்கமோ 10 ரூபாய்க்குத் தருகிறது. இப்படிப் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன; பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட நீரைக் கொடுப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை அல்லவா? ஓர் அரசாங்கம் தண்ணீரை விற்பதை எப்படிச் சாதனையாகக் கொள்ள முடியும்? ஒரு கம்யூனிஸ்ட்டாக நீங்கள் எப்படி இதைப் பாராட்டுகிறீர்கள்?
ஜெ. ஆட்சியில் குறையே இல்லை என்கிறீர்கள்?
திட்டங்களை அமலாக்கும் இடத்தில் குறைகள் இருக்கலாம். அது நம் சமூகத்தைப் பிடித்த பீடை. திட்டங்களில் குறை இல்லை என்கிறேன்."
suran
தி ட்டங்களில் குறையே இல்லையாம்.தாது மணல் கொள்ளை அடித்தவனை விட்டு ,விட்டு அ தன் மீது நடவடிக்கை எடுத்த கலெகடர் மீது நடவடிக்கை எடுத்த ஜெயா அரசு ,இப்போது மணல் கொள்ளை 6லட்சம் கோ டிகளுக்கு மேல் என்று அறிக்கை வந்ததும் அக் கோ ள்ளைக்காரர்கள் மீது எடுத்த நடவடிக்கை ?தற்காலிக மணல் அள்ளத்தடைதானெ .அதை பற்றி கேட்டால் -மணல் கொள்ளைக்கு எதிராக நீங்கள் அறிக்கை கூட விடவில்லையே என்று கேட்டால் தா.பா.யாருமே போராட வில்லையே.மாண்ட-மயிலாட தானே பார்க்கிறார்கள் என்கிறார்.இதில் இருந்தே தமிழ் நாட்டில் உள்ள பொதுவுடமை கட்சிகள் இரண்டுமே ஜெயா வுடைமை ஆகி விட்டது. பகிரங்கமாகி விட்டதே.
ஜெயா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதும்.நீதிமன்றம் அவர்களுக்கு பணி வழங்க ஆணை விடுத்தும் இன்னமும் அவர்களுக்கு பணி வழங்காததும்,ஊனமுற்றோர் பத்து நாட்களுக்கும் மேல் வேலை வாய்ப்ப்புக்கு சாலையில் இறங்கி மறியல் செய்து போராடியும் இன்றுஅரை அது தொடர்பாக ஜெயா அரசு ஒன்றும் செய்யாதது இந்த தொழிலாளர் வர்க்க கட்சியினருக்கு கண்ணில் படவே இல்லையா?
தா.பாண்டியந்தான் அப்படி என்றால் மார்க்சிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் தா.பாவை  மிஞ்சி அதிமுக ஜால்றாவாகி விட்டார்.
தீக்கதிர்  பத்திரிக்கை ஜெயலலிதா படம்-செய்தி இல்லாமல் வருவதாக தெரிய வில்லை.
முன்பும் இக்கட்சிகள் திமுக,அதிமுக என மாறி கூடடணி வைத்துள்ளன.ஆனால் அப்போது காங்கிரசு ,பாஜக எதிர்ப்புதான் முக்கிய காரண மாக இருந்தது.ஆனால் அவை இப்போது ஜெயா ஆதரவு-கருணாநிதி எதிர்ப்பு என்று சுருங்கி விட்டது.
காங்கிரசுக்கு கருணாநிதி ஆதரவு கொடுத்தது மகா குற்றம் என்றால் சென்ற காங்கிரசின் ஆட்சியில் 63 மக்களவை உறுப்பினர்களாய் வைத்து காங்கிரசு ஆட்சியை நான்கரை ஆண்டுகள் தாங்கி பிடித்த கறை கம்யுனிஸ்ட் கட்சிகளின் கைகளில் உள்ளதே ?அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?கறை நல்லதுதான் என்கிறார்களா ?தா.பாவும்.ஜி.ராமகிருஷ்ணநும் ?
சந்திக்க மறுத்தாலும் ஒரு இடம்தான் என்றாலும் போயஸ் தோட்டம்தான் இன்று தோழர்களுக்கு மார்க்ஸ் காட்டிய பாதையில் உள்ளது.கோபாலபுரம் அதன் எதிர்புறத்தில் தான். 
"அண்ணாயிசம் "என்று எம்ஜியார் கண்டு பிடித்த தத்துவம்தான் இன்று அவர்களுக்கு "கம்யூனிசம்"[தாஸ் காப்பிடலை] விட முக்கிய வேதமாகி விட்டது. 
பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் தர வகையற்ற ஒரூ அரசு ஒரு ரூபாய்க்கு இட்லி அதுவும் ஆயிரம் இட்லி விற்பதும்,பாதுகாக்கப்பட்ட தண்ணிரை தடையின்றி மக்களுக்கு வழங்க வக்கற்ற அரசு 10 ரூபாய்க்கு அதை விற்பதும் சாதனை யாக தெரியும் இந்த காமாலை கண் காரர்களை விட்டு பொதுவுடமை தத்துவத்தின் பால் இன்னமும் பற்று கொண்டவர்கள் விலகுவதுதான் நாம் இடது சாரிகள் இயக்கத்துக்கு செய்யும் மரியாதை.இவர்கள் இன்னமும் கம்யுனிசம் என்ற  பெயரை பயன் படுத்துவது சரியானதல்ல.
suran

-------------------------------------------------------------------------------------------------
ஆந்திரா -ஓடிசா கலக்கும் புயலால் பாதிப்புக்குள்ளானோர் 
-------------------------------------------------------------------------------------------------
பயன் படுத்த சில தொலை பேசி எண்கள் :
-------------------------------------------------------------------------------------------------
Orrisa
Balasore: +91-6782-262674
Bhadrak: +91-6784-251881
Cuttack: +91-671-2507842
Dhenkanal: +91-6762-221376
Gajapati: +91-6815-222943
Ganjam: +91-6811-263978
Jagatsinghpur: +91-6724-220368
Jajpur: +91-6728-222648
Kendrapara: +91-6727-232803
Keonjhar: +91-6766-255437
Khurda: +91-6755-220002
Mayurbhanj: +91-6792-252759
Nayagarh: +91-6753-252978
Puri: +91-6752-223237

Andra Pradesh
Hyderabad: +91-4023-456005 / +91-4023-451043

Railway Helpline
Vizag-0891-2505793, 08935-249672
Vizianagaram-08922-225510
Srikakulam-08942- 28722
Naupada-08945-249728
Rayagada-06856-6222407
Koraput-06852-251802


Regards
Site2SMS.Com Team

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயிரன் டன் தங்கம் 
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. 
அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு யிரிழந்தவர்.
suran
 தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். 
ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை.
ஆனால்  மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத் கனவை நம்பியுள்ளார்.
அவர் கிடைத்தால் தங்கம் என்பதால் தொண்டி பார்க்க சொல்லியுள்ளார்.
 அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து தொல்லியல் துறை, ஆயிரம் டன் தங்கப் புதையலை தேடும் பணியை தொடங்க உள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------
suran

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...