திங்கள், 30 மார்ச், 2015

நேர்மையின் விலை சிறுமையாதல்?

இந்தியாவில் மட்டும்தான் நேர்மையாக செயல் பட்டால் அந்த அதிகாரியை தூக்கிப் பந்தாடல்,அப்படியும் அடங்காவிட்டால் ஒரு காசு பெறாத மேசையடி வேலை கொடுத்தல் அப்படியும் அடாங்கா விட்டால் அவரைப்பற்றி அவதூறு பரப்பல்,முடிவில் அவரின் உயிரைப்பறித்தல் என்று ஆட்சியாளர்கள் பரிசுகளை அள்ளித்தருகிறார்கள்.
இதற்கு சில நாக்குத்தள்ளிய அவதார அதிகாரிகளும் வாலை  ஆட்டிக்கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதோ நேர்மையாகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி யின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது.
 எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை.
ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது.
டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான்.
ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ.
 காரணம், அவரது நேர்மை.

தமிழ் நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் மாவட்ட கலெக்டரின் பெயர் தெரியாது.
 தமிழ்நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்தெரியாது.
ஆனால் சகாயத்தை எல்லோருக்கும் தெரியும்.

காரணம், அவரது நேர்மை.
முத்துக்குமாரசாமி என்ற வேளாண்மைத் துறை அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது. அவரது முகம் தெரியாத பலரும்கூட அவருக்காகப் போராடினார்கள்.
 காரணம், அதிகார நெருக்கடிகளுக்குப் பணிந்துகொடுக்காத அவரது நேர்மை.

பீகாரில் தங்க நாற்கர சாலை அமைப்பதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்த முயன்ற சத்யேந்திர துபே என்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டபோது இப்படித்தான் போராட்டம் வெடித்தது.
அதன்பின் உத்தரப் பிரதேசத்தில் கலப்பட எண்ணெய் விற்கும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுத்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மஞ்சுநாத்துக்கும் இப்படித்தான் மரணம் நேர்ந்தது. அவரைக் கொன்றவர்களுக்கு கடந்த வாரம்தான் ஆயுள் தண்டனை வழங்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் சுரங்கக் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் 3 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார்.

டி.கே.ரவி இறந்த இதே கர்நாடகாவில் கூட்டுறவு சங்க நில ஒதுக்கீடு முறைகேட்டை அம்பலப்படுத்திய மகந்தேஷ் என்ற அதிகாரியை இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக சாகடித்தார்கள்.
 இன்னும் பலர் டிரான்ஸ்பர் என்ற அஸ்திரத்தால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்.
அசோக் கெம்கா, சஞ்சீவ் சதுர்வேதி, துர்கா சக்தி நாக்பால் என பலர் இந்தப் பட்டியலில் உண்டு.

சகாயமும் இப்படி பலமுறை பந்தாடப்பட்டிருக்கிறார். 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 டிரான்ஸ்பர்கள். என்ன ஒரு நாடோடி வாழ்க்கை! ஒரு பதவி யில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருப்பதற்கு எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் நியாயமான உரிமை உண்டு.
 ஆனால் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்துக்காக எப்போதும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருப்பது எவ்வளவு நிம்மதியற்ற குடும்பச் சூழலை ஒருவருக்குக் கொடுக்கும்! 

பொது வாழ்வில் நேர்மை என்ற குணம் அரிதாகிவிட்ட காலத்தில், நேர்மையாக இருப்பது என்பது அபாயகரமான விஷயமாக ஆகிவிட்டது. எப்போது என்ன வலை விரித்து நம்மை சிக்க வைப்பார்களோ என 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டும். முதுகின் பின்னால் குத்த சக ஊழியர்களே க்யூவில் நிற்பார்கள்.
 எல்லாம் சாக்கடையாகிப் போன ஒரு சிஸ்டத்தில் ஒரே ஒரு நேர்மையான அதிகாரி வந்து நின்றால், ‘சம்பாதிக்க’ நினைக்கும் அத்தனை பேருக்கும் அவர்தானே முதல் எதிரி!

நேர்மையாகப் பணியாற்றியதற்காக ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டும் என்றால், அவரைக் காப்பாற்றத் தவறியதற்கு இந்த தேசம் வெட்கப்பட வேண்டும். தன் பணியை நேர்மையாகச் செய்வது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கும் ஒரு அதிகாரியை மக்கள்தான் கொண்டாட வேண்டும்
; பாதுகாக்க வேண்டும்.
 ‘இவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் மக்கள் பொங்கி எழுவார்கள்’ என்ற பயம்தான் அவருக்கான பாதுகாப்புக் கவசம்.
இப்போது கர்நாடக மக்களின் போராட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்க ரவி மீது காதல் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது.
அவர் கடைசியாகப்பேசியதில் உள்ள ஒரு பெண் அதிகாரியிடம் ரவி தன்னை ஒருதலையாகக் காதலித்ததாக வாக்கு மூலம் வாங்கி அதனால்தான் ரவி தற்கொலை செய்து கொண்டார் என்ற திரைக்கதையை அரசு உருவாக்கி வருகிறது.
ஆனால் ரவி தந்தை கடைசியாக பேசிய அலை பேசி பேச்சுக் களில் பல காவல்துறையால அழிக்கப்பட்டிருக்கிறது.அந்த பெண்  அதிகாரிதான் பேசியுள்ளார்.அதுவும் ரவி இறந்த பின்தான் அவர் அலைபேசியில் பேசி யுள்ளதாக தெரிவிக்கிறார்.எது உண்மை.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ஒரு அதிமுக கட்சிக்காரரிடம் பேசி கோபத்தில் தனது வண்டியை அங்கேயே விட்டு விட்டு அலைபேசியில் வெறு யாரிடமோ பே சியபடி சென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை வீட்டுக்கடன் விடயமாக வருமானவரி விசாரணைக்குப்பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று நம் சிபிசிஐடி கிளப்பி விட்டது போல் ரவியின் கதையில் நடக்கிறது.மாநிலங்கள் மாறினாலும் மணல் கொள்ளையர்களும்,அரசியல் கொள்ளையர்களும் அவர்கள் கூட்டனியும்,புத்தியும் மாறுவதில்லை என்பதைத்தான் இரு சம்பவங்களும் காட்டுகின்றன.
இன்று இந்த கொள்ளையர்களிடம் இலக்காக இருப்பது நமது சகாயம்.
அவருக்கு வரும் மிரட்டல்களுக்கு வேறு ஒருவராக இருந்தால் வேலையை விட்டு விவசாயம் பார்க்க போயிருப்பார்.தமிழ் நாடு ஆட்சியாளர்கள் அதிகாரி சகாயத்துக்கு தரும் பாதுகாப்பை விட இடைஞ்சல்கள் தான் அதிகம்.அலுவலகத்துக்கு கூட இடம் தரவில்லை.இருக்கும் மாநகராட்சி கடை யை கூட காலி செய்யக் கூறி நோட்டீசை கதவில் ஒட்டி அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு கூட சரிவர வழ ங்கப்பட வில்லை.
அவரைப்போன்றவர்களுக்கு மக்கள்தான் பாது காப்பை வழ ங்க வேண்டும் .நேர்மையானவர்களே இல்லை என்று புலம்பும் மக்கள்தான் அரிதாக இருக்கும் சகாயம் போன்ற நேர்மையாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்க
வேண்டும்.பாதுகாக்க வேண்டும் .

முன்பெல்லாம் நேர்மையாக ஒரு அதிகாரி இருந்தால், தப்பு செய்யும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவரிடம் பயந்து ஒதுங்குவார்கள். ஆனால் இப்போது நேர்மை மனிதர்கள்தான் தப்பான ஆசாமிகளிடமிருந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது.காரணம் மக்கள் தங்களுக்கு மீண்டும் வாக்களிப்பதை பற்றிய பயம் தான்.ஆனாலின்று 500 ரூபாய்க்கு வாக்குகளை மக்கள் விற்று விடுவதுதான்.அதை வாங்க பணம் தேவையே.அதற்கு எந்தவகைகளில் எல்லாம் பணம் கிடைக்கும் என்று பதவி மூலம் சம்பாதிக்கும் நிலைக்கு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் வந்து விட்டனர்.மக்கள் மன நிலை மாறும் வரை சகாயம்,முத்துக் குமாரசாமி,
 ரவி போன்ற அதிகாரிகளுக்கு ஆபத்துதான் அவர்கள் மீது  மேலும்  அவதூறு சேறுகள் அள்ளி வீசப்படலாம்.
நேர்மையாளர்களை பாதுகாக்க வேண்டியது ஆட்சியாளர்களை கடமையல்ல.அவர்களைப் பாதுகாக்க மக்கள்தான் போராட வேண் டும் .

ஞாயிறு, 22 மார்ச், 2015

மக்கள் தொண்டர்களுக்கு

 மக்கள் செலவிடும் பணம்.



 நமக்கு சேவை செய்வதாகக் கூறி மக்களிடம் வாக்குகளை பெற்று சட்டப்பேரவையில் மேசையை தட்டும்,
வெளிநடப்பு செய்யும் ,கூச்சலிட்டு காலம் கழிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றியும் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் பற்றியும் ஒரு பார்வை பார்க்கலாம்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்;
 ஈட்டுப்படி7,000 ரூபாய்
; தொலைபேசி படி, 5,000;
 தொகுதிப்படி 10 ஆயிரம்;
 அஞ்சல் படி,2500
 தொகுப்பு படி, 2,500; வாகனப் படி, 20 ஆயிரம்
என்று ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது .
 மேலும் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன. 
இது மேசையை தட்டி கூச்சலிட்டாலும் உண்டு.
வெளிநடப்பு செய்தாலும் உண்டு.
வெளியெ தாழ்வாரத்தில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு அப்படியே வீட்டுக்குப் போனாலும் உண்டு.

மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன,
வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன.
 சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது.
ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள் [லெட்டர் பேடு]; 
பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500;
 ஹீரோ பேனா ஒன்று; 
டைரி ஒன்று; 
காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.
இது தவிர எம்.எல்.ஏ., வாக பதவியேற்றவுடன் ஒவ்வொருவருக்கும், ஒரு சிறிய கைப்பெட்டி வழங்கப்படுகின்றன.
அதில், இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரதி - தமிழ் மற்றும் ஆங்கிலம், திருக்குறள் புத்தகம், எம்.எல்.ஏ., கையேடு, காமன்வெல்த் பாராளுமன்ற சங்கம் - தமிழ்நாடு கிளை குறித்த, சிறு கையேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள், 1986ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதிகள் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்), எம்.எல்.ஏ.,க் களின் சொந்த விவரங்கள் மற்றும் போட்டோவுடன் கூடிய, 'யார் எவர்' எனும் வெளியீடு, எம்.எல்.ஏ., குறிப்பிடும், இரு வாகனங்களுக்குரிய, 'ஹாலோகிராம்' பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள், அதில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் சட்டசபை கூடும் நாட்களில், எம்.எல்.ஏ., விரும்பும் இரு நாளிதழ்கள், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., குடியிருப்பில் வழங்கப்படும்;
எம்.எல்.ஏ., ஆனதும் வழங்கப்படும்; 'பிரீப்கேஸ்'சில், 11 ஆவணங்கள் இருக்கும். மற்றபடி கிடைக்கும் பிரிப்கேஸ் கள் இந்த கணக்கில் வராது.

எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது.
 பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப்படுகிறது. அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
 அரசு மருத்துவமனையில், 'அ' அல்லது 'ஆ' பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம்.
மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் அவர்கள் ஆற்றும் மக்கள் சேவைக்காகவே வழங்க்கப்படுகிறது.
இனி 2011 அதாவது இந்த சட்டமன்ற பதவி ஆரம்பக்காலம் முதல் இன்றுவரை தமிழக சட்டமன்றத்தில் நடந்த கூத்துக்களை அதுதாங்க நடவடிக்கைகளை பார்ப்போம்.
234 எம்.எல்.ஏ.,க் களில், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா ஆகியோர், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதில்லை.
 சட்டசபைக் கூட்டம் நடந்த, 159 நாட்களும், 45 எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு தவறாது வந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐந்து நாட்கள்;
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 56 நாட்கள்;
 தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 27 நாட்கள்;
 புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 153 நாட்கள்;
ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், 75 நாட்கள்;
ம.ம.க., ஜவாஹிருல்லா, 146 நாட்கள் வருகை புரிந்துள்ளனர்.
எதிர் கட்சி வரிசையில் புதிய தமிழாக்கம் கிருஷ்ண சாமி அதிக நாட்கள் வந்து சென்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2011 மே 23ம் தேதி, முதல் முறையாக கூடியது.
அதன்பின், 2011 ஜூன் 8ல், தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, முதன் முறையாக, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியானது.
 அதே நாளில், மொத்தம் நான்கு அறிவிப்புகள் வெளியாயின.
கடந்த 2011ல், 21 முறை, 2012ல், 43 முறை, 2013ல், 45 முறை, 2014ல், 41 முறை, என, நான்கு ஆண்டுகளில், 110 விதியை பயன்படுத்தி, 150 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்ற பின்னர் பன்னீர் செல்வம் முதல்வராக இருக்கிறார்.இவர் இதுவரை ஒரு முறை கூட 110 விதியின் கீழ் பேசவில்லை.
முதல்வருக்கான இருக்கையிலும் இவர் அமரவில்லை.முதல்வர் பெயர் பலகையும் இவர் அறையில் வைக்கப்படவில்லை.காரணம் இவர் மக்களின் முதல்வரில்லை என்பதுதான்.
முதல் சட்டசபைக் கூட்டம், 2011 மே 23ல் கூடியது;
கவர்னர் உரையுடன் முதல் கூட்டத்தொடர், எட்டு நாட்கள் நடந்தன;
 முதல் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம், 25 நாட்கள் நடந்தன.
இரண்டாம் கூட்டத்தொடர் ஒருநாள் மட்டுமே நடந்தது;
மூன்றாம் கூட்டத்தொடர், 2012 ஜன., 30ல், கவர்னர் உரையுடன் துவங்கி, ஆறு நாட்கள் நடந்தன.
நான்காம் கூட்டத்தொடர், 32 நாட்களும்,
 ஐந்தாம் கூட்டத்தொடர் ஐந்து நாட்களும்,
ஆறாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 41 நாட்களும்,
 ஏழாம் கூட்டத்தொடர், ஏழு நாட்களும் நடந்தன.
 எட்டாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 31 நாட்கள் நடந்தன. முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், ஒன்பதாம் கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடந்தன.
இந்த கூட்டத் தொடர்களின் போது , தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன;
 ஒரே நாளில், இருமுறை, நான்கு முறை கூட வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 43 முறை;
 தே.மு.தி.க., 25 முறை;
புதிய தமிழகம், 24 முறை;
பா.ம.க., ஏழு முறை;
காங்., 12 முறை;
இ.கம்யூ., எட்டு முறை,
 மார்க்.கம்யூ., 11 முறை;
 ம.ம.க., எட்டு முறை வெளிநடப்பு செய்துள்ளன.
ஆக மொத்தமாக சட்டசபை பதிவில், மொத்தம், 147 முறை வெளிநடப்பு பதிவாகி உள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் வரை, ஒன்பது கூட்டத்தொடர், 159 நாட்கள் நடந்தன.
மே 2011 முதல், 2015 பிப்., 12ம் தேதி வரையிலும், சட்டசபை நடக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டருக்கு, 5 லட்சத்து 4,000 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டு உள்ளது.
சட்டசபைக் கூட்டத்தின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட மினரல் வாட்டருக்கு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 58 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

வெள்ளி, 20 மார்ச், 2015

மாட்டிறைச்சி திண்பது

மும்பை உயர்நீதிமன்றத்தில் விசால் சேத் என்ற வழக்கறிஞரும் சைனாசென் என்ற மாணவரும் இணைந்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள் ளனர். அவர்கள் வழக்கின் மனுவில் கூறியுள்ளதாவது:
“நாங்கள் இந்துக்கள்.
மாட்டிறைச் சியை உணவாகக் கொள்பவர்கள்.
அது சத்துணவாகும் எங்களது உணவில் ஒரு பகுதியாகும்.மாட்டிறைச்சி உண்ணும் இந்துக்கள் பண்பாட்டு சிறுபான்மையினர் ஆகும். அவர்களுக்கு தங்களது உணவு மற் றும் பண்பாட்டு அடையாளத்தை பாது காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு மாட்டுத் தோல் வைத்திருந்தால் அது குற்றமாகாதாம். ஆனால் அதே சமயத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தால் அது குற்றமாகும்.
இந்த தடை, அரசியல் சட்டத்தின் பிரிவு 21 மற்றும் 29ன்படி சிறுபான்மையினரை மொழி, மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் பாகுபடுத்துவதாகும். விலங்கு கொழுப்பு சத்து என்பதன் அடிப்படையில் மாட்டிறைச்சி மலிவாக கிடைப்பதாகும். எனவே இதை தடை செய்வதோ அல்லது அதன் இறக்குமதியை தடை செய்வதோ சட்டவிரோதமாகும்.
மாட்டிறைச்சி மற்றும் பசுவதைச் தடைச்சட்டம் என்பது, சத்துணவுக்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை பாதித்து விடும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநிலத்தின் பாஜக அரசினால் பசுவதைத் தடைச்சட்டம் அமலாக்கப் பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி பசுவதைக்கப்படுவது மட்டுமின்றி மாட்டு இறைச்சி விற்பனையும் அதை உண்பதும் கடுமையான குற்றமாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3ல் 1 பங்கு மக்கள், குறிப்பாக இஸ்லாமியரும் தலித் மக்களும் பிற்படுத்தப்படட மக்களும் மாட்டிறைச்சியை உணவாகக் கொள் கின்றனர். '
எனவே இச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கூறியதை விட இன்னமும் சில குறிப்புகள் உள்ளன.
உலகில் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய் யும் நாடு பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா தான். 
இதன்மூலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகமானதாகும்.
மாட்டிறைச்சி ஏற்றுமதி யின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிக மான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்துஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணு கிறார்கள்.
இந்தியாவின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள். இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.
ஐக்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்படவில்லை).
ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.
இந்தியாவில் மாமிச உணவு உண்பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.
வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவசாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.
இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் அனுமதிப்பதில்லை.
அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள்.
 ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால்நடைகள் உண்டாக்கும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண்டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.
ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும்.
 பசு வதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும்.
கால்நடை வளர்ப்போரைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.
அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவ சாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட மனிதன்,சிங்கம்,புலி,ஆடு,பன்றி,கோழி  போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .அதற்காக அதை ஏதோ தெய்வப்பிறவி போன்று காண்பித்து வணங்குவது உங்கள் [ஆளும் காவிகளின்]நம்பிக்கையாக இருக்கலாம்.அதை நீங்கள் கோவில் கட்டி கொண்டாடுங்கள்.
அதை யாரும் தடுக்கப் போவதில்லை.
ஆனால் அதை ஒரு உணவாக கொள்வோ ரிடம் ஏன் உங்கள் வேலையை காட்டுகிறீர்கள்.அவர்களை இதை சாப்பிடாதே,அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன் படுத்துவது சரியாகுமா?
சிவனின் வாகனமான மாட்டை [பசு வை] காப்பற்றும் நீங்கள் பிள்ளையாரின் வாகனமான எலியை ஏன் கண்ட இடத்திலேயே போ ட்டுத்தள்ளுகிறீர்கள் .முருகனின் சின்னம் கோழியை பிராயலரில் வளர்த்து விருந்தாக்குகிறீர்கள்.? அப்படியே போனால் ஒவ்வொரு மிருகமும் ஒரு சாமியின் வ உதவியாளராகத்தானே உள்ளது?
உங்களின் மகா விஷ்ணுவே பன்றியாக உருவெ டுத்தவ்ர்தானே?
இப்போ என்ன செய்வீங்க?
 பசுவதைத் தடைச் சட்டம் என்பது  மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீறலாகும்.
உங்கள் நம்பிக்கையை உங்கள் வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள்.அதை நாட்டு மக்கள் தலைகளில் திணிக்காதீர்கள்.
 அது  தனிமனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.
காவி மனதில் இருக்கும் ஆசைகள் போல் வெள்ளை,பச்சை மனதுகளிலும் பல ஆசைகள் நம்பிக்கைகள் இருக்கும்.அதை மறந்து விடாதீர்கள்.

பசுவை கொல்லாதீர்கள்,தின்னாதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு குடி,குடியை கெடுக்கும் என்று சொல்லும் ஆட்சியாளர்களுக்கு அது ஒன்றும் புதுசு இல்லையே .சிகரெட் பெட்டியில் உடல் நலத்துக்கு கேடு என்று மட்டும் போட்டு விட்டு வரி போட்டு வருமானம் பார்க்கும் அரசுக்கு இப்படி செய்வதில் ஒன்றும் அசிங்கம் வந்து விடாது.
"மாட்டிறைச்சி திண்பது காவிகளுக்கு எதிரானது"என்று மாட்டிறைச்சி கடைகளில் விளம்பரம் செய்யச் சொல்லுங்கள் அதுவே போதுமானது.
அதுதானே நம் அரசின் நடைமுறையும் கூட.
==========================================================================
==========================================================================


 சன்  குழுமத்தை விழுங்கும் அம்பானி, 

நெட்வொர்க் 18 தொலைக்காட்சி குழுமத்தை வாங்கிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கார்ப்பரேட் கம்பெனி தற்போது சன்டிவி நெட்வொர்க்கை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரிலையன்ஸ் கம்பெனி ஏற்கனவே பலதுறைகளில் கால்பதித்து நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட்டாக வளர்ந்து வருகிறது.
பெட்ரோலியம் , இயற்கை எரிவாயு, தொலைபேசி, கைபேசி மற்றும் பிராட்பேண்ட் போன்ற இணையதள சேவைகள் காய்கறி, மீன், இறைச்சி மற்றும் சில்லரை வணிகம், மின்சாரம், சினிமா தயாரிப்பு மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பல துறைகளில் நுழைந்து ஆதிக்கம் செய்து வருகிறது.
இக்கம்பெனி திட்டமிட்ட முறையில் அகில இந்திய அளவில் தன்னைநிலைநிறுத்திக் கொள்ள ஊடகத்துறையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றுவதற்கு திட்டமிட்ட முறையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க முடியும் என்று கருதுகிறது.ஊடக பலத்தால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை உணர்ந்தே ஒவ்வொரு மீடியாகம்பெனிகளை வாங்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் ஈடிவி எனப்படும் பிரபலமான ஈநாடு டிவி கார்ப்பரேட் குழுமத்தை வாங்கியது.
அதனைத் தொடர்ந்து நெட்வொர்க் 18ஐ வாங்கியது. இந்நிலையில், ரிலையன்சின் மூத்த அதிகாரிகள் சன்டிவி குழுமத்தின் மூத்த அதிகாரிகளிடம் சென்னையில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெஹல்காஇணைய ஏட்டின் செய்தியை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வியாகாம் என்ற கம்பெனியின் ஆதரவுடன் மீடியாகம்பெனிகளை வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்சின் இத்தகைய முயற்சிகள் சுதந்திரமான மற்றும் பாரபட்சமில்லாத ஊடகத்தின் செயல்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும் என ஊடகச் சுதந்திரத்திற்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நெட்வொர்க் 18ஐ வாங்கும்போது அதில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்று அஞ்சி தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது ஊடக உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது .
----------------------------------------------------------------------------------------------------------
 ரிலையன்சை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைகெஜ்ரிவால் விசயத்தில் நிரூபணமானது.
எரிவாயு தோண்டி எடுக்கும்விசயத்திலும் அது விலை நிர்ணயிப்பது குறித்தும் அந்த கம்பெனி மேற்கொண்ட முறைகேடுகள் குறித்தும் ஆம்ஆத்மி கட்சி நேரடியாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் கம்பெனி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவர் கெஜ்ரிவாலும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டனர். கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டதற்கு வேறு பின்னணிகள் இருந்தாலும், அதன்பின்னணியில் ரிலையன்ஸ் இருந்ததை மறுக்க முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 

அதுபோல கார்ப்பரேட் கம்பெனியின் உளவாளிகள் பெட்ரோலிய அமைச்சகத்தின் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை திருடியதிலும் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரிலையன்ஸ் கம்பெனியின் சைலேஷ் சாக்சேனாமற்றும் ரிஷி ஆன்ந்த் போன்றவர்கள்தான். இந்த நிகழ்வுகளில் முதலாவதானது, ரிலையன்ஸ் தன்னுடைய நலன்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களைப் பழிவாங்குவதற்கு தயங்காது என்பதைக் காட்டியது.
அதே போன்று தனது நலன்களை காப்பதற்கு அது எந்த அளவிற்கும் செல்லும் என்பதும் நிரூபணமானது.
இவர்களின் ஆதிக்கம் ஊடகத் துறையில் பரவினால் நிச்சயம் அதன் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று ஊடகவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சன் டிவி கார்ப்பரேட் குழுமம்2ஜி அலைக்கற்றை வழக்குகள், ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் பேரவழக்குஎன விடுபட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது.
அத்துடன் அது அஜய் சிங் என்பவரிடம் வாங்கி நடத்தி வந்த ஸ்பைஸ்ஜெட் நட்டமடைந்து மீண்டும் விற்றவருக்கே விற்கப்பட்டுள்ளதும் இக்குழுமத்தின் இறங்கு முகத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன் முதலாக தனியார் தொலைக் காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம் பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நூறு கோடிகளாக இருந்தது.
இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.
 இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை (ஒன்பதரைக்கோடி)சென்றடையும் 20 சேனல்கள் உள்ளன.
 வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களை அதிகம் கொண்ட அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது.3 45 எப்எம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர்.
 கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள், 4 பருவ இதழ்கள், 5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை,
கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம்.
 இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல்சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலிலும் உள்ளது..
 சன் நெட்வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ.1000 கோடி.
மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின் படி சன் நெட்வொர்க்கின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.
இந்திய அளவில் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டியவர் சன் குழுத்தின் நிர்வாகி கலாநிதி மாறன் தான்.
அவரது சம்பளம் ரூ.37 கோடி ரூபாயாக இருந்தது.
ரிலையன்ஸ் தனது நலன்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களைப் பழிவாங்குவதற்கு தயங்காது.தனது நலன்களை காப்பதற்கு அது எந்த அளவிற்கும் செல்லும் என்பதும் நிரூபணமானது. இவர்களின் ஆதிக்கம் ஊடகத் துறையில் பரவினால் நிச்சயம் அதன் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும்.
 =========================================================================

ஞாயிறு, 15 மார்ச், 2015

உடன்[பாடில்லா]குடி?



உடன்பாடில்லா உடன்குடி?

உடன்குடி அனல் மின் நிலைய திட்டம் ரத்து என்னும் செய்தி இன்றைய [அ.தி.மு.க.] அரசின் நிர்வாகதிற்கும், குளறுபடிகளுக்கும்  சிறந்த உதாரணம்.
கடந்த தி.மு.க. அரசு தமிழ் நாட்டில்உருவாகும் மின் தட்டுப்பாட்டை நீக்க பல இடங்களில் மின் உற்பத்திநிலையங்களை உருவாக்கியது.அதில் ஒன்றுதான் உடன்குடி அனல் மின நிலையம்.
இந்த திட்டத்தை ‘பெல்’ என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து நிறைவேற்றும் வகையில் 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2012-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2013-ம் ஆண்டு மின்வாரியமே நிறைவேற்றஒப்பந்த புள்ளிகளை கோரினார்.அதன் மூலம் இந்த திட்டத்தை தாமதப்படுத்தி மின் வெட்டை அதிகமாக்கினார்.
 1320 மெகாவாட் மின்சாரம் அளிக்கும் இந்த திட்டம் பலவகையிலும் தாமதம் செய்யப்பட்டு, இதில் பங்கேற்ற சீன நிறுவனம் டெண்டர் விதிகள் தமிழ் நாடு அரசு மீறுவதாக கூறி நீதிமன்றம் சென்றது.

 திமுக அரசு கொண்டு வந்த மிந்திட்டங்களை நிறைவெற்றாமல் மாநில தேவைக்கு தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை இப்போது அமைச்சராக இருக்கும் நத்தம் விசுவநாதனும், முன்பு தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் தற்போது தலைமை செயலாளர் ஆக இருக்கும் ஞானதேசிகனும் சேர்ந்து தான் வாங்கினார்கள்.அதில் தமிழ் நாடு மக்கள் வரிப்பணத்தை வீணடித்து தாங்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டனர்.
இப்போது உடன் குடி அனல் மின் நிலையத் திட்டத்தை தமிழ் நாடு அரசும் செய்யப்போவதில்லை திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தாமதம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கும் மின்வாரியத்தில் ஒரு திட்டத்தை ரத்து செய்து 80 கோடி ரூபாயை தேவையற்ற முறையில் நஷ்டப்படுத்தி இருப்பது தான் இன்றைய அ.தி.மு.க. அரசின் அவல நிலைமை.நிர்வாகத்திறமை.
தமிழ் நாடு முழுக்க வரௌம் கொடை காலத்தில் முன் வெட்டு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கையில் உள்ள மின் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது என்னவகை நிர்வாகம்,ஆட்சி என்று தெரிய வில்லை.இருக்கும் ஒரு ஆண்டையும் வெளியே அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி கடத்தி விடலாம என்ற நினைப்பு ஆட்சி செய்வோருக்கு உண்டாகி விட்டது போல் தெரிகிறது.அடுத்து தான தேர்தலி நின்று வெல்ல முடியாது என்ற எண்ணமா?
அல்லது தீர்ப்பு வெளியாகி தேர்தலில் நிற்கவே முடியாது என்ற முடிவு  திண்ணமா?.
முதலில் உடன் குடி அனல் மின் நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் வரவிருந்த மின்சாரம் மட்டும் நட்டமில்லை.இதுவரை செலவிட்ட 80 கோடிகளும் நட்டம் அதற்கு யார் பொறுப்பு?
அந்த நட்டத்தை தற்போதைய துக்ளக் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
சில பின்னணிகள்:
தமிழ்நாடு மின் வாரியம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனம் இணைந்து, துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தலா, 800 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தன.
 ஆனால், இந்த மின் நிலைய பணிகள் துவக்குவதில்,ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 'பெல்' நிறுவனத்தை ஓரங்கட்டினார்.
 'உடன்குடி மின் நிலையம், தமிழ்நாடு மின் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா, 2012 பிப்ரவரியில் அறிவித்தார்.
 உடன்குடி மின் நிலையத்தின், மின் உற்பத்தி திறன், இரண்டு அலகுகளிலும், 800 மெகாவாட்டில் இருந்து, தலா, 660 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது.
இந்த மின் நிலையத்திற்காக, திருச்செந்துார் தாலுகாவில் உள்ள, 700 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில், வருவாய் துறை அதிகாரி கள் ஈடுபட்டுள்ளனர்.
 இதையடுத்து, மின் வாரியம் சார்பில், உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும், ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்ய, 2013 ஏப்ரலில் 'டெண்டர்' கோரப்பட்டது.

இதில், சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் 'பெல்' நிறுவனம் என, நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன.
 இந்நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் விலை புள்ளி என, இரண்டு விவரங்களை, மின் வாரிய அதிகாரிகளிடம் வழங்கின. தொழில்நுட்ப புள்ளி, அதே ஆண்டு அக்., மாதம் திறக்கப்பட்டதில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனமும், 'பெல்' நிறுவனமும் தேர்வாகின.
தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட, ஆறு மாதங்களுக்குள், விலை புள்ளி திறக்கப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற காலதாமதம் இழுபறிக்கு பின், கடந்த நவ., மாதம் தான், விலை புள்ளி திறக்கப்பட்டது.
 இதையடுத்து, மின் வாரிய அதிகாரிகள், உடன்குடிக்கு, தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தைதேர்வு செய்து, அதற்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் பெற முடிவு செய்தனர்.

ஆனால், மின் வாரிய அதிகாரிகள், தேர்வு செய்த நிறுவனத்திற்கு,10 பைசாவுக்கு கூட பயனில்லாமல் பணி ஆணை வழங்க,  ஆட்சியாளர்களுக்கும் ,சில அதிகாரிகளுக்கும் விருப்பமில்லை.சீன நிருவனத்திடமும்,அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திடமும் எதை பெற முடியும்?
 இதையடுத்து, நிதித்துறை அதிகாரிகள், உடன்குடி, 'டெண்டர்' விவரங்களை, மின் வாரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்று, தலைமை செயலகத்தில் உள்ள, எரிசக்தி துறை செயலர் அலுவலகத்தில், ரகசியமாக மதிப்பீடு செய்து வந்தனர்.
 மின் வாரிய அலுவலகத்தில், கடந்த, 13ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு அதன் இயக்குனர் குழு கூட்டம் நடக்க இருந்தது.
ஆனால், அந்த கூட்டம், திடீரென தலைமை செயலகம், ஒன்பதாவது மாடியில் உள்ள, தொழில் துறை கூட்ட அரங்கிற்கு மாற்றப்பட்டு ரகசியமாக நடந்தது.

 மின் வாரிய தலைவர் சாய்குமார், இயக்குனர்கள் தேவராஜன், அண்ணாதுரை, அருள்சாமி, கலைவாணன், அரசு சார்பில், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, நிதித்துறை செயலர் சண்முகம், தொழில் துறை செயலர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியசிறிது நேரத்தில், மின் வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதில், உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வற்காக நடத்தப்பட்ட, 'டெண்டரை' ரத்து செய்து விட்டு, புதிதாக, 'டெண்டர்' வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில், தற்போது, உடன்குடி, 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி புதிதாக 'டெண்டர்'விட ஆரம்பித்தால் டெண்டர் விடும் பணிக்கு, 1 ஆண்டு; கட்டுமான பணி, 4 ஆண்டு என, 2020ம் ஆண்டிற்கு பின்னர்தான், உடன்குடி மின் நிலையம் அமைக்கப்படும் .
திட்ட செலவும், தற்போதைய, 10,121 கோடி ரூபாயில் இருந்து,
15 ஆயிரம் கோடிரூபாயாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிமுக ஆட்சியாளர்களால் இன்னமும் வெட்டியாக மக்கள் பணம் சீரழியும் நிலைதான் உண்டாகியுள்ளது.

'10 பைசாவுக்கு கூட பயனில்லை':

, உடன்குடி பணிகளை விரைவாக முடிக்கும் வகையில், கட்டுமான பணி வழங்கப்படும் ஒப்பந்த நிறுவனம், தன் சொந்த செலவில், மின் நிலையம் அமைக்க வேண்டும்;

பின், அதற்கான நிதி வழங்கப்படும்.
 இந்த அடிப்படையில், 'டெண்டர்' கோரப்பட்டது.
ஆனால், இதில்,
ஆள்வோருக்கும்,அலுவலர்களுக்கும்எந்த பயனும் இல்லை என, தெரிகிறது. எனவே, '10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத, 'டெண்டரை' ரத்து செய்யவும்' என மேலே இருந்து  தொடர்ந்து வலியுறுத்தல் வந்ததால், 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

=========================================================================
இன்று
[16 மார்ச்] 
  • மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
  • திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
  • இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
  • முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
=========================================================================

டிராபிக் ராமசாமி:

1. சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திப்பதால், இவரது முயற்சியால் 2006 ஆம் ஆண்டு கட்டாய தலைகவசம் கொண்டுவரப்பட்டது.

2. 2009 ஆம் ஆண்டு எந்திரன் படப்பிடிப்பு கிண்டி கத்திபாராவில் காலையில் வேலை செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னையில் பகலில் டிராபிக் அதிகமாக உள்ள இடத்தில் படப்பிடிப்பு எடுத்தால் அது விதி மீறல். ஆனால் அவரது வழக்கு எந்திரன் குழுவின் செல்வாக்கால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

3. இவர் வழக்கு தொடர்ந்ததை பற்றிய செய்தி நான் இணையத்தளத்தில் படிக்கும் போது, கீழே comment-இல் நமது ரசிகர்கள் இவருக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்தனர். அவர் செய்தது எதுவும் தனது சுயநலத்திற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ள வில்லை.

4. சென்னையில் பெருவாரியான பல கட்டிடங்கள் விதி மீறல்கள் உள்ளன. அவற்றை எதிர்த்து பல வழக்குகள் போட்டு, தி. நகரில் பல வணிக நிறுவங்களை மூட காரணமாய் இருந்தார். ஆனால் பண பலம் மூலம் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன.

5. திரு. சகாயம் அவர்களை தாது மணல் மற்றும் கல் குவாரி ஊழலை கண்டறிய நியமிக்க உதவியாக இருந்தார்.

6. விளம்பர பலகைகள் வைக்க கூடாது என வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றும், அதை அரசியல் கட்சிகள் மீறுவதும் அதற்கு காவல்துறை துணை போவதும் இவருக்கு கோபத்தை உருவாக்கி அதை அவரே கிழித்து எறிந்தார். அதனால் தான் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

7. எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் அரசியல், ஆகவே இளையசமுதாயம் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினார். பலமுறை தேர்தலில் நின்றார். மிக சொற்ப ஓட்டுகளே பெற்றார். 


இன்று அதிமுக கட்சிக்காரர் வீரமணி புகாரின் பேரில் ராமசாமியை கைது செய்து சட்டை,செருப்பு இல்லாமல் தெருவில் இழுத்துச் சென்றது காவல் துறை.நீதிமன்ற கண்டிப்புக்குப் பின்னர்,மக்களின் அதிருப்திக்குப்பின்னர் 
  வீரமணி தனது கார் கண்ணாடியை ராமசாமி உடைக்கவில்லை தான் அப்படி புகார் ஏதும் கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார்.அப்படி என்றால் உள் ரத்தக் காய்ங்களுடன்,ரத்தக் கசிவுகளுடன் மருத்துவ மனையில்
டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரே அந்த காயங்கள் எப்படி அவருக்கு ஏற்பட்டது?
வீரமணி புகாரின் பேரில் டிராபிக் ராமசாமி மீது கடுமையாக நடந்து கொண்ட தமிழக காவல் துறை அவர் தந்த புகாரின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?வீரமணியை ஏன் கைது செய்து சட்டையில்லாமல்,செருப்பில்லாமல் சிறைக்கு அழைத்து செல்லவில்லை?

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...