வெள்ளி, 30 செப்டம்பர், 2016

றெக்கைகட்டி பறக்கிறது....

வதந்திகள் தற்போது தமிழக அரசாலும் ,காவல்துறையாலும்தான் பரவி வருகிறது.றெக்கைகட்டி பறக்கிறது.

ஒரு மாநில முதல்வர் உடல் நிலை பாதித்தால் அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசின் தலைமசெயலாளருக்கு உண்டு.
அவருக்கு மட்டும்தான் உண்டு.
ஆனால் தமிழ் நாட்டில் தலைமச்செயலாளர் முதல்வரை இதுவரை மருத்துவமனையில் சந்தித்ததே இல்லை.
தமிழக மக்களைப் போல் ,அதிமுகவினரைப்போல் அவரும் மருத்துவமனை வாசலுடன் திருப்பி அனுப்பப்படுகிறார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டிய ஆளுநரும் இதுவரை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதிக்கப்படவே இல்லை.
இதை செய்கிறவர் யார்.

கட்சிக்காரர்கள் பார்க்க அனுமதி இல்லை சரி. மட்டுமின்றி அரசு அதிகாரிகள்,அதுவும் மாநில தலைமைச்செயலாளர் ,ஆளுநர் போன்றவர்களை கூட சந்திக்க விடாமல் தடுப்பது யார்.அவ்வளவ்ய் அதிகாரம் படைத்தவர் யார் இந்திய பிரதமரோ,குடியரசுத்தலைவரோ அல்ல.

சாதாரண போயசு தோட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் என்ரு சொல்லிக்கொள்ளும் உடன் பிறவா சகோதரி சசிகலா.
இந்த சசிகலா மருத்துவர்களையே ஜெயலலிதாவை பார்க்க விடுகிறாரா என்ரு தெரியவில்லை.

இந்த சகோதரை வார்த்தைக்கு கட்டுப்பட்டு முதல்வரை பார்க்காமல் இருக்கும் அரசு தலைமைச்செயலளர்,அரசு அதிகாறிகள் குறிப்பாக ஆளுநர் இவர்களைப்பற்றி என்ன சொல்ல.

அவர்களின் முதுகெழும்புக்கு அப்போலோவிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
ஒருவராலும் பார்க்க முடியாத முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை,பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% மிகை ஊதியம்,தேர்தல் அதிமுக வேட்பாலர் அறிவிப்பு எல்லாம் செய்கிறாராம்.

ஆனால் அவரை சந்தித்து விட்டு வந்ததாக சொல்லும் பாஜக அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தான் வராண்டாவிலெயே நின்று விட்டு வந்ததாக சொல்லுகிறார்.

ஆக கேப்பையில் நெய் வடிகிறது.அதை அப்போலோ போனால் வாங்கி வராலாம்.
அண்ணா மருத்துவ சிகிச்சை பெற்ற போது அதை தினசரி மக்களுக்கு அறிவித்தது தலைமச்செயளர்தான்.

அட்த்து எம்.ஜி.ஆர அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது இன்றைய முதல்வர் ஜெயலலிதா "அவர் உயிருடன் இருப்பதே சந்தேகம்.ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் "என்றார்.
ந்ன்கு கவனிக்கவும் சொன்னது எதிர்க் கட்சித்தலைவாரான கலைஞர் அல்ல.எம்ஜிஆர கட்சியை சார்ந்த அன்று கட்சியின் கொள்கை பரப்புச்செயலர் பதவி பிடுங்கப்பட்டு எம்ஜிஆரால்  ஒதுக்கி வைக்கப்படிருந்த ஜெயலலிதா.
அதை உடைத்து காட்டவே பாக்கியராஜ் எம்ஜிஆர் சந்திப்பு,புகைப்படங்கள்,காணொலி கள் தமிழகம் முழுக்க பரப்பப்பட்டன.அத்தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக வென்றது.

ஆனால் இன்று...?

ஒரு மாநில முதலவர் ஜெயலலிதா  பலவேறு வதந்திகளுக்கிடையே மருத்துவமனையில் படுத்திருக்கிறார.
அவர நிலையை மக்களுக்கு  எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயம் மாநில தலைமைசெயலாளருக்கு இருக்கிறது.

ஆனால அவரை கூட முதல்வரை பார்க்க விடாமல் தடுக்கிறார் எந்த அரசுப்பதவியும்,மக்கள் பிரதிந்தித்துவ பதவியிலும் இல்லாத  ஒரு சாதாரண பெண்மணி சசிகலா.

அவர வார்த்தைக்கு கட்டுப்பட்டு மருத்துவர்களில் இருந்து,அரசு அலுவலர்கள் வரை வராண்டாவில் காவல் காக்கிறார்கள்.

ஆனால் சசிகலாவோ"அக்காள் அப்படி சொன்னார்.அக்கா இதை அறிவித்தார் என்று சொல்ல அதிகாரிகளும்,கட்சியினரும் அவர்  வார்த்தையை தலைமேல் வைத்து ஆடுகிறார்கள்.

ஆக இன்று தமிழ் நாட்டை ஆள்பவர் ,அதிமுக கட்சியை நடத்திவருபவர் அம்மணி சசிகலாதான்.
இந்த போக்கைத்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் மிக அபாயகராமனது.மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

அதிமுக கட்சியை சசிகலா நடத்திக்கொள்ளட்டும்.வேட்பாளர் பட்டியலை வெளியிடட்டும்.இல்லை தேர்தலில் இருந்தே ஒதுங்கிக்கொள்ளட்டும்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை அதிகாரிகள் நேரில் சந்திக்கவிடாமல் அவர் இதை சொன்னார்,அதை சொன்னார் என்று ஆட்சியை நகர்த்த சசிகலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது,அவர் வார்த்தைக்கு அரசு இ.ஆ.ப ,அதிகாரிகள் எந்த அரசு விதிகளின் படி கட்டுப்படுகிறார்கள் என்றுதான் மக்களுக்கு புரியவில்லை.

அப்படி அதிகாரிகளுடன் ஜெயலலிதா கலந்துரையாடல் ,இடலி சட்னி தின்றார்,திரவ உணவு எடுத்தார் என்றால் அந்த படங்களை வெளியிடலாமே.அதற்கு யார் என்ன தடை போட்டார்கள்.அது அரசின் கட்டாய கடமை அல்லவா?
ஜெயலலிதா சாப்பிடுகிற படம் கூட  வேண்டாம்.
20% போனஸ் அறிவிப்பு கோப்பில் கையெழுத்திடுவது.அதிகாரைகளுடன் காவிரி பிரச்னையில் கலந்துரையாடியது படங்களை மட்டுமாவது வெளியிடலாமே.

அரசுக்கு அது கட்டாய கடமையும் அல்லவா?


இல்லையெனில் வதந்திகள் உலா வரத்தான் செய்யும்.அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதை உருவாக்க மூலக்காரணமான சசிகலா,அரசு தலைமைச்செயலளர்,அதிகாரிகள்,காவல்துறை உயர அதிகாரிகள் மீதுதான் எடுத்தாக வேண்டும்.

இல்லையென்றால் தமிழச்சிகளுக்கு மட்டுமல்ல,தமிழன்களுக்கு சந்தேகங்கள் அடுக்கடுக்காக வரத்தான் செய்யும்.

========================================================================================
=====



செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஆண்னென்ன? பெண்னென்ன??



ஆண் ,பெண் இட ஒதுக்கீடு .பொது,தனி இட ஒதுக்கீடு இரண்டையும் தேர்தல் ஆணையம் கடை பிடிப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும்.

அதுமட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளையும் அதிகரிக்கும்.நிர்வாகத்திறமையின்றி லஞ்சம்,ஊழல் அதிகார  வகுக்கும்.
சாதியாலும்,மதத்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் ஒரு நாட்டில் எதற்காக சாதிவாரி ஒதுக்கீடு?
எல்லா இனத்தவரும் பரவலாக ஒற்றுமையாக இருக்கும் தொகுதிகளில் தனி,பொது என்று இனவேறுபாடு மேலும் பிளவைதான் உண்டாக்குகிறது.
இதை தனது மக்களுக்கு ஒரு அரசே செய்வது வெட்கக்கேடானது.அரசியல்வாதிகளின் குறுகிய வாக்கு சேர்க்கும் குள்ளநரித்தனத்துக்கு அரசும்,தேர்தல் ஆணையமும் துணை போவது மிக தூரம்.
 ஓட்டப்பிடாரம் காலம்,காலமாய் தனித்தொகுதி.

ஓட்டப்பிடாரம் வட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம்தான்.அதை தனித்தொகுதியாக அறிவித்தில் பிரசினை இல்லை.அப்படி அறிவிக்கப்படா விட்டாலும் நாம கடசிகள் அங்கு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தும்.காரணம் அவர்களின் வாக்குகள் எண்ணிக்கை.

ஆனால் தொகுதி சீர் திருத்தம் செய்கிறேன் என்று அருகில் உள்ள தூத்துக்குடி,திருவைகுண்டம் தொகுதி பகுதிகளையும் தேர்தல் ஆணைய நிபுணர்கள் குழப்பியதில் சம்பந்தமே இல்லாத தூத்துக்குடி  மாநகராட்சி பகுதிகள்  திருவை ,தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஊடே ஓட்டப்பிடாரம் தொகுதி ஊடுருவி வாக்காளர்களுக்கு குழப்பம்.
நடந்த சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தை தேடி இல்லாததால் இரட்டை இலைக்கு மாமூலாக வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அங்கு டி.வி.சின்னத்தில் திமுக கூட்டணி கிருஷ்ணசாமி நின்றார்.
ஆனால் வாக்களித்தவர்களுக்கு தங்கள் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்பது கூட தெரியவில்லை.
அதுமட்டுமல்ல முன்பு தாழ்த்தப்பட்ட இன  மக்கள்பெரும்பான்மையாக  இருந்த ஒட்டப்பிடாரத்தில் இன்று
மற்ற இனத்தவர்கள் வாக்குகள் அதிகம்.

இனி சாதி அரசியல்  செய்யும் கிருஷ்ணசாமி,ஜான்பாண்டியன் போன்றவர்களை மற்ற இனத்தவர்கள் ஒருங்கிணைந்து தோற்கடித்து விடுவார்கள்.கட்சி சார்பில் உள்ளவர்கள்தான் வெற்றி பெற முடியும்.

இது ஒருஉதாரணம் தான்.மற்றோன்று பெண்கள் ஓதுக்கீடு .

இதனால் கடசியில் இருக்கும் ஆண் தனது தொகுதி பெண் என்பதால் விட்டு விடுவானா தனது மனைவி அல்லது தங்கையை பினாமியாக நிறுத்தி வெற்றி பெற வைத்து அங்கு மக்கள் பிரதிநிதியாக அவனே செயல் படுகிறான்.அவனது வழி காட்டலிலேயே அவன் மனைவி செயல்படுகிறார்.ஆக அத்தொகுதிக்கு இரட்டை பிரதிநிதி.

வீட்டை கவனிக்கும் பொறுப்பில் உள்ள குடும்பப் பெண்களை அரசியல் சாக்கடையில் இணைத்து அசிங்கப்படுத்துகிறது.
அப்படி அதிமுக இரு எம்.பி.கள் அரசியலில் கிளப்பிய அசிங்கத்தை நாம் கண் கூடாக பார்த்துள்ளோம்.தனது மனைவியிடமிருந்து பாதுகாப்பு கேட்கும் நிலை கணவருக்கு.

அரசியலில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து 50 சதம் வாய்ப்புகள் வழங்கலாமே?

சத்தியவாணி  முத்து,சற்குணபாண்டியன்,அனந்த நாயகி,பொன்னம்மாள், நவ்ரோஜி,முதல் இன்று சுப்புலட்சுமி ஜெகதீசன்,சக்தி கோதண்டம் ,பி.தி.சரஸ்வதி,கனிமொழி,வளர்மதி,கோகுல இந்திரா என்று அரசியல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு என்ன குறைவு.


ஏன் முன்னாள் பிரதம இந்திரா காந்தியும்.இன்றைய நம்  முதல்வர் ஜெயலலிதாவும் பெண்கள் ஒதுக்கீட்டிலா ஆட்சியை பிடித்தார்கள்.

ஆர்வம் உள்ள பெண்களுக்கு கடசியில் இருந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
30% அல்லது 70%வரை பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அக்கடசி விருப்பம்.
ஆனால் அரசியல் சாக்கடை என்று முன்பிருந்தே சொல்லுவார்கள் .அதன் நிலை அதை விட  இன்றுமிக  மோசம். விரும்பத்தகா நெடி அந்த சாக்கடையில் இருந்து வீசுகிறது.


அரசியலில் ஒரு பெண்மணி சமீபத்தில் எதிர்க்கடசி தலைவரை முன்னாள் முதல்வரைப்பார்த்து"அவர் தைரியமாக வரலாம்.அவர் வேட்டியை நாங்கள் உருவ மாட்டோம் "என்று தான் ஒரு பெண் என்ற வெட்க உணர்வே இல்லாமல் ஆண்களை விட கீழிறங்கி பேசியதை பார்த்தோம்.
அந்த சாக்கடையில் உங்கள் குடும்ப பெண்களை இறக்கி விடுவது அவர்களை சாக்கடையில் தள்ளி நாமே அசிங்கப்படுத்துவதற்கு சமம்.அதன் பின் விளைவாக இன்றைய அரசியலை பார்த்தால் நாமும் கேவலப்படுவதுதான் நடக்கும்.

 அதுபோல தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் வாக்கு அதிகம்,மதத்தினர்  வாக்குகள் அதிகம் என்று கணக்கிட்டுதான் அதற்கேற்றார்ப்போல் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.
தென்பகுதிகளில்,நாடார் ,தேவர்,வட பகுதிகளில் வன்னிய ர்களுக்கு முக்கியத்துவம்.சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்டவர்,வாணியம்பாடி,கீழக்கரை ,மயிலாடுதுறையில் பகுதியில்  முஸ்லீம் என்று சில வரைமுறைகளை அனைத்துக்கடசிகளும் வைத்திருக்கிறார்கள்.

அந்த வரை முறையே போதும்.
எதற்கு தேவையில்லாமல் தனித்தொகுதிகள்.

அப்படி ஒதுக்கியதன் மூலம் அத்தொகுதி விரைந்து முன்னேறும் என்றால் அப்படி முன்னேறிய ஒரு தொகுதியை தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்ட முடியுமா?

சபாநாயகர் தனபால் தனித்தொகுதியாளர்தான் .அவர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதை தவிர தன்  தொகுதிக்கு செய்த ஒரு நல்ல காரியத்தை இந்த இரண்டு முறை ஆட்சிக்காலத்தில் காட்ட முடியுமா?

ஆக தனித்தொகுதியாலும்,பொதுத்தொகுதியாலும் ,பெண்கள் தொகுதியாலும் ஒன்றும் மாற்றம்  நடக்க போவதில்லை.
குழப்பங்களும்,மறைமுக மோதலும்தான் நடக்கும்.

 தாழ்த்தப்பட்டவர்களை விட அதிக பிறர் வாழும் தூத்துக்குடி மாநகராட்சியை  இப்போது தனித்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.அதற்கு அடிப்படை காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அப்படி அறிவித்தவர்களின் முட்டாள்தனமும் ,தான்தோன்றித்தனமும்தான் காரணம் .இப்போதே பிற இனத்தவர்கள் கோபத்தில் கட் சி வேறுபட்டின்றி  ஒன்றாகி அரசியல் செய்ய இணைந்து விட்டார்கள்.

60 வட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வட்டம் 7 தான் .இதில் மேயரும் அடங்கி விடுவார்.
இவர்களை வைத்து அவர் தனித்தொகுதிக்கு என்ன செய்ய முடியும்.பிற இனத்தவரின் 53 உறுப்பினரை மீறி மேயர் என்ன செய்ய இயலும்?இதில் கட்சி கட்டுப்பாடு வேறு இணைந்து விடும்.
பின் இது தனித்தொகுதியானதால் என்ன பயன் ?

எதற்கு தனித் தொகுதியாக்க வேண்டும்.ஒரு நன்மையையும் இல்லை.மாறுதலும் இல்லை.
எதற்கு தனித்தொகுதி என்ற பிரிவு வேண்டும்.?

இப்படி செய்வதன் மூலம் அரசே திட்டமிட்டு சாதி வேறுபாடுகளை தூண்டி விடுகிறது.
எல்லோரும் இந்தியர்,தமிழர் என்ற அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல் கடசிகளே தொகுதியை அலசி ஆராய்நது வேட்பாளர்களை மதம்,இனம் பார்த்து நிறுத்த்தும் கட்டாயத்தில் இருக்கையில் தனித்தொகுதி என்று அறிவிப்பது  வீண் .

காரணம் இன்றைய தனித்தொகுதி ஒட்டப்பிடாரத்தில் தாழ்த்தப்பட்டவர் இல்லாமல் ஒருவரை நிறுத்தினால் அவர் சுயேட்சை என்றால் கூட வென்று விடுவார்.

காரணம் பிறர் வாக்குகள் இப்போது அங்கு அதிகம்.அவர்கள் அனைவரும் தங்கள் கோபத்தை காட்ட இதை வடிகாலாக எடுத்து கொள்வார்கள் .கட்சிகளை மீறி இதுதான் உண்மை.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

நட்டாற்றில் விட்டாய்.

விக்னேஷ் என்ற தம்பி காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரை இழந்திருக்கிறான்.
இதனால் இழப்பு அவனது குடும்பத்தினருக்குத்தான்.
விக்னேஷ் உயிரிழப்பால் காவிரி பிரச்னை ஓய்ந்துவிடுமா?

அப்பிரச்னை தமிழகத்தில்மழை பெய்ததும்ஓய்ந்துஅடுத்தாண்டுமீண்டும்எழும்.

காவிரி பிரச்னை நூற்றாண்டு பிரச்னை.
இவரது உயிரிழப்பால் தீர்ந்து போகும் பிரச்னை இல்லை.
அப்பிரச்னை தொடர்பாக நம் முதல்வரே இன்று வரை தீவிரநடவடிக்கையில்இறங்கவில்லை.
காவிரிநீரால் விவசாயம்செய்யும்விவசாயிகள்யாரும்இதுவரை தீக்குளிக்கவில்லை.

அவ்வலவுஏன்மேடை தோறும்தொண்டை நரம்புபுஅடித்துஎழ தமிழன்வீரம்பேசும் கட்சித்தலைவர் முப்பாட்டன்முருகனின்ஓட்டன்சைமன்இதுவரை தீக்குளிக்கவில்லையே.
ஈழமக்கள்படுகொலையை தடுக்க
அங்குசென்று
போராடாமல் கலைஞர் ஏன்
அப்படுகொலையை தடுக்கவில்லை என்று அடுத்தவர்களை மட்டும்தானே கேள்வி கேட்கும் அரசியல் செய்கிறார்.
அதை எல்லாம தம்பி விக்னேஷ் உணரவேண்டாமா?

இவரின்தீக்குளிப்பு மரணம் நாம் தமிழர் கட்சிவளரும் ஆனால் கட்சி அலுவலகத்தில் புகைப்படம் மாட்டி மாலையிடலுடன் உன் நினைவுகள் மறைந்து போகும். மக்கள் மனதில் இருந்தும் காலத்தினால் மறந்தும் போகும்.

ஆனால் உன்னால் தன் வாழ்வு செழிக்கும்,குடும்பம் தளைக்கும் என்று எதிர்பார்ப்பில் கனவில் இருந்தபெற்றோர்,உற்றோர் வாழ்வில் நீங்கா துயரம் தானே தங்கும்.
வாழ்வில் சாதிக்க எத்தனையோ சவால்கள் காத்திருக்க. ஆண்டாண்டு நீளும் காவிரி அரசியல் கண்டு மயங்கிபோனாய்,மாண்டும்போனாய்.

காவிரிபோராட்டத்தில்மாண்டதுநீ மட்டுமல்ல.
கர்நாடகாவில் இதே போராட்டத்தில் துப்பாக்கியால் இரண்டு வாலிபர்களும் மாண்டார்களே.
இதில் யார் செய்தது தியாகம் என்பது.

உன் மரணத்துக்குப் பின்னரும் காவிரி ஓடும்.
காவிரி போராட்டங்களும் இணைந்தோடும்.
அதில் உன் தியாகமும் கரைந்துபோகும்.
ஆனால் நீ செய்தது தியாகம் அல்ல.


அதானால் யாருக்கும் பயனில்லை.
(சீமானைத் தவிர.)
உன் குடும்பத்துக்கு துரோகம்.

காதலுக்காகஉயிரை விடும் பருவத்தில் நீயோ
காவிரிக்காக உயிரை விட்டாய்.
உன்னை நம்பிய உயிர்களை
நட்டாற்றில் விட்டாய்.

காவிரிநீரை அல்ல.
கண்ணீர் துளிகளையே
உன் கால்களில்
விடுகிறோம்.



செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரி-ஜெயலலிதா-பாஜக..?

காவிரி பிரச்னை எப்போதும் உள்ளதுதான் எனினும் இந்த ஆண்டு அதிகமாக வன்முறை வெடிக்க காரணம்.
கர்நாடக விவசாயிகளோ ,வழக்கமாக காவிரியை வைத்து அரசியல் செய்யும் வாட்டாள் நாகராஜோ காரணமில்லை.
 கர்நாடக பா.ஜ.கட்சி ,மத்திய அரசு இவர்களை விட  முக்கியமாக   தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்கள்தாம்.

முறையாக இதன் முன்னர் முதல்வர்களாக இருந்த கலைஞ்சர் ,எம்.ஜி.ஆர்.நேரடியாக விவசாய நீர்த்தேவை போது கர்நாடக முதல்வரை தொலைபேசியிலும் ,அரசு சார்பில் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு  காவிரியில் நீரை திறந்து விடக்கூறுவார்கள்.

வாட்டாள் நாகராஜ் போல் சிலர் எதிர்க்க ,போராட கொஞ்சம் முரண்டு பிடித்து காவிரி நீர் வரும்.
ஆனால் ஜெயலலிதா முதல்வரான பின்னர்தான் இப்போராட்டங்கள்,எதிர்ப்பு அதிகமாகியுள்ளது என்பதை கவனிக்கலாம்.

காரணம் கர்நாடக முதல்வரிடம் காவிரி நீரை தமிழகத்துக்கு தேவையான அளவு திறந்து விடுங்கள் என்று முறையாக கேளாமல் நீதிமன்றத்தை மட்டுமே அணுகுவது.மூன்று முறை கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு விட்டது.

ஆனால் இதுவரை தமிழ் நாட்டில் திமுக பல முறை வலியுறுத்தியும் அனைத்துக்கடசி கூட்டம் கூட்டப்படவில்லை சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கவில்லை.
ஒரு வேளை "காவிரியை வைத்துக் கொள் ,அம்மாவைத் தா "என்ற அவர் சிறைவாசம் பதாகை உண்மை என்கிறாரே.

அந்த அணுகு முறை கர்நாடக அரசை மட்டுமல்ல அங்குள்ள மக்களிடமும் தமிழகம் மீது அதிருப்தியை உண்டாக்கிவிட்டதுதான் உண்மை.

முன்பு கர்நாடகம் முரண்டு பிடித்தாலும் அவ்வப்போது திறந்து வீட்டா இன்னொரு காரணி வீரப்பன்.
வீரப்பன் தனது முறையில் கர்நாடகாவை எச்சரிப்பதும்,நீதிமன்றம் சொல்லியும் திறக்காத காவிரி திறக்கப்பட்டு விடும்.
ராஜ்குமார் போன்ற்வர்கள் கடத்தல் போன்ற கசப்பான அனுபவம்தான் காரணம்.விடுதலைப் புலிகள்கிருஷ்ண சாகர் அணையை குண்டு வைத்து  போவதாக அப்போது  எழுப்பப்பட்ட புரளி குட காரணம்தான்.

காவிரி நீரில் இவ்வளவு தீப்பிடிக்க காரணம் மத்திய ஆளும் பாஜ.கட்சிதான் .

”அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் தண்ணீர் விடக்கூடாது என்றனர். நான் அதை புறந்தள்ளி விட்டு அரசியல் சாசனத்தைக் காக்க தமிழகத்திற்கு தண்ணீர் விடும் முடிவை எடுத்தேன். இப்போது அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.” 
என்று பிரதர் மோடிக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எழுதிய கடிதத்தில் முதல்வர் சித்தராமையா,குறிப்பிட்டிருப்பதே அதை உண்மை என்கிறது. 

குஜராத் ஆட்சியை நீடிக்க ஒரு கோத்ரா ரெயில் எரிப்பை மோடியின் பாஜக கையாண்டதோ ,அதே போல் கர்நாடகாவில் எடியூரப்பாவுக்குப் பின் விட்ட ஆட்ச்சியை பிடிக்க காவிரியை கையாளுகிறது.


அதன் மூலம் குறுகிய கன்னட இன  உணர்வைத்தூண்டி கலவர கர்நாடகாவாக்கி காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதே பாஜக நோக்கம்.அதற்கு அப்பாவி கன்னடர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள்.

இந்தியாவில் தமிழ் நாடும்,கர்நாடகாவுக்கு அண்டை மாநிலங்கள்.

அங்கு காவிரியில் வெள்ளம் வந்தால் அதை தமிழ் நாடு கேட்டா திறந்து விடுகிறார்கள்.

வறண்டு போனால் தமிழ் நாடு போல் கர்நாடகாவுக்கு காய வேண்டியதுதான்.

அவர்களுக்கு மின்தேவையை பூர்த்தி செய்து ஐ.டி ,வியாபார நிறுவனங்கள் மூலம் செல்வம் கொழிக்க வைப்பது தமிழ் நாட்டு நெய்வேலி உடைபட்ட மின் நிலையங்கள்தான்.இந்த அணு மின் நிலையங்கள் ஆபத்தை எதிர்பார்த்திருப்பதும்,எதிர் கொள்ள வேண்டிய கட்டாயமும் தமிழர்களுக்குத்தான்.

இதுவரை கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்காதே என்று எந்த தமிழனாவது போராடி கன்னடர்களை தாக்கியிருக்கிறானா.

கர்நாடக கன்னடருக்குத்தான் ஒருத்துளி வியர்வைக்கு ஒரு பவுன் காசை முட்டாள் தமிழன் தன்  மனைவி தாலியை விற்று கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

கர்நாடக மக்களை அதனது அரசியல் நோக்கத்துக்காக பாஜக சீரழிவை நோக்கி தள்ளுகிறது.

காவிரியில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறக்காதே என்று இதுவரை கர்நாடக விவசாயி கள் போராடவில்லை என்பதுதான் உண்மை.போராடுவது பாஜக, நாகராஜ் போன்ற அரசியல்வாதிகள் அமைப்புகள்தான்.

தமிழ் நாடும் கர்நாடகாவும் இந்தியாதான். அண்டை மாநிலங்கள்தான் .இந்தியா -பாகிஸ்தான் அல்ல.
நாளை குடகுமலையில் பூகம்பம் வந்து இயற்கை பேரிடர் வந்தால் அதில் இரண்டு மாநிலங்களும் பாதிப்பைதான்  பெறப்போகிறது.

கர்நாடகாவில் காவிரி உற்பத்தியானாலும்,அது அதிகம் பாய்ந்து வலுப்படுத்தியது தமிழ் நாட்டைத்தான்.அதில் குறுக்கே அணைக்கட்டியதால் மட்டும் காவிரி கர்நாடகாவுக்கு சொந்தமாக்கி விட்டது.
கர்நாடகா முதல்வர் ஐந்து நாட்களுக்கு முன்னரே அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டவுடனே தமிழக முதல்வருக்கும்,தலைமைசெயலருக்கு தமிழ் நாட்டில் உள்ள கன்னடர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கடிதம் எழுதி தொலைபேசியிலும் பேசிவிட்டார்.
ஆனால் அங்கு தமிழர்கள் தாக்கப்படும்,தமிழக பேருந்துகள்,வாகனங்கள் எரிக்கப்படும் ,தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு இதுவரை தமிழக முதல்வர் என்ற பொறுப்பில் இருக்கும் கன்னட அய்யங்கார் ஜெயலலிதா கர்நாடக அரசை தமிழர்களை பாதுகாக்க கோரவில்லை.மத்திய அரசையும் துணை ராணுவத்தை அனுப்ப சொல்லவில்லை.
அவ்வளவு ஏன் தமிழ் நாட்டில் முதல்வர்,அரசு என்று ஏதாவது இருக்கிறதா என்றே தெரிய வில்லை.
சித்தராமையா கடிதத்திற்கு பின்னர் முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா காவல்துறை அதிகாரிகள் கூட்டம் கூட்டி கன்னடர்கள் வீடுகளுக்கும்,தொழில்களுக்கு பாதுகாப்பது போட சொல்லியுள்ளார்.
அதன்படி நடிகர்கள் ரஜினி காந்த் ,ரமேஷ் அரவிந்த்,பாபி சிம்கா ஆகியோர்கள் வித்துக்கள் முன்னாள் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 இப் பிரசனையை சுமுகமாக்கி இரு மாநிலங்களையும் அமைதி படுத்த வேண்டிய மத்திய அரசு  இன்னமும் காவிரியில் கால் வைக்காதது ஏன்?

பிரதமர் மோடி தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா போலவே வாயைத்திறக்காமல் இருப்பது ஏன்?
ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு மனக்குழப்பம்.

மோடிக்கு ?
பாஜக கையாளும் அரசியல் கலவரத்தை அதன் பயன் தெரியும் வரை விட்டு பிடிப்பதுதானோ?
=====================================================================================

சனி, 10 செப்டம்பர், 2016

பேஸ்புக் பணிந்தது.

வியட்நாம் போரின் போது, நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து ஒரு சிறுமி நிர்வாணமாக ஓடிய புகைப்படம் வெளியிட்டதை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், நார்வே நாட்டின் கடும் எதிர்ப்பால் பணிந்து, அதை மீண்டும் பிரசுரம் செய்தது.
கடந்த 1972-ம் ஆண்டு நடந்த அமெரிக்கா-வியட்நாம் போரில் அமெரிக்கா வீசிய நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து, சில குழந்தைகளுடன் கிம் பக் என்ற 9 வயது சிறுமி நிர்வாணமாக, அழுதுகொண்டே ஓடிவருவது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படகலைஞர் நிக் உட் காங் ஹுன் ‘அசோசியட் பிரஸ்’ நிறுவனத்துக்காக எடுத்தார். வியட்நாம் போரின் கொடுமையை உணர்த்தும் விதமான இருந்த இந்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், நார்வே நாட்டைச் சேர்ந்த டாம் ஈக்லான்ட் என்ற எழுத்தாளர், போரின் புகைப்படங்கள் என்ற தலைப்பில் இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, பகிர்ந்து கொண்டார்.
ஆனால், பேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி நிர்வாணப் புகைப்படங்களை பிரசுரம் செய்ய அனுமதியில்லை என்று கூறி இந்த புகைப்படத்தில் உள்ள ஒருசில பகுதியை மாற்றி அமைத்தது. மேலும், இந்த புகைப்படத்தை வெளியீடும் அனைவரின் கணக்கில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் கடந்த சில நாட்களாக புகைப்படத்தை நீக்கத் தொடங்கியது. சிலரின் கணக்கையும் முடக்கியது.
வரலாற்று முக்கியத்துவம் , போரின் கொடூரத்தை உணர்த்தும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமியின் நிர்வாணம், ஆபாசம் அல்ல என்ற கோணத்தில் பார்க்க கூடாது என பேஸ்புக் நிறுவனத்துக்கு நார்வே நாட்டு மக்களும் புகைப்படத்தை வெளியிட்ட டாம் ஈக்லாண்டின் ஆதரவாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நார்வே நாட்டின் பிரதமர் எர்ணா சோல்பெர்க் கணக்கில் இருந்தும் இந்த புகைப்படம் நீக்கப்பட்டதால் அவரும் கடும் கோபமும், எரிச்சலும் அடைந்து, கருத்து, பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாக கண்டித்தார்.
இது குறித்து சமூகவலைதளமான பேஸ்புக் மீது கடும் விமர்சனம் எழுந்தது. நார்வே நாட்டில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய நாளேடான ஆப்டன் போஸ்ட் தனது முதல் பக்கத்தில் பேஸ்புக்கின் லோகோ, நிறுவனர் ஜூகர்பெர்க் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறார் எனக் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பிரதமர் எர்ணா சோல்பெர்க் கூறுகையில், “ பேஸ்புக் நிறுவனம் சமூகவலைதளத்தில் குழந்தைகளின் மான்பைக் குலைக்கும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பதை நான் வரவேற்கிறேன்.
அதேசமயம், நபாம் சிறுமி புகைப்படம் என்பது, வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, இதை நீக்கி இருக்கக் கூடாது. அதை திருத்தி இருக்கவும் கூடாது. என்னுடைய குழந்தைகளும், மற்றவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் வளரும்போது, வரலாற்றில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப் படத்தையும், நிகழ்வுகளையும் திருத்துவது, நீக்குவது என்பது வரலாற்றை மாற்றுவதற்கும், உண்மையை மறைப்பதற்கு சமம்'' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் ஒருவாரத்துக்கு பின், மீண்டும் அந்த புகைப்படத்தை திருத்தமின்றி பிரசுரம் செய்வதாக தெரிவித்து மன்னிப்பு கோரியது. “ நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் புகைப்படம் சமூகத்தின் மதிப்புகளை குலைக்கும் என நம்பப்படுகிறது. சிலநாடுகளில் இது அபாசமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த விசயத்தில், வரலாற்று மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கருதி இந்த புகைப்படத்தை வெளியிடுகிறோம்'' என தெரிவித்தது.
பேஸ்புக் நிறுவனத்தின் முடிவை வரவேற்ற நார்வே பிரதமர் மகிழ்ச்ிச தெரிவித்து, “ சமூக வலைதளத்தின் மூலமே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'' என்று தெரிவித்தித்தார்.👀

பேஸ்புக் பணிந்தது.

வியட்நாம் போரின் போது, நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து ஒரு சிறுமி நிர்வாணமாக ஓடிய புகைப்படம் வெளியிட்டதை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், நார்வே நாட்டின் கடும் எதிர்ப்பால் பணிந்து, அதை மீண்டும் பிரசுரம் செய்தது.
கடந்த 1972-ம் ஆண்டு நடந்த அமெரிக்கா-வியட்நாம் போரில் அமெரிக்கா வீசிய நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து, சில குழந்தைகளுடன் கிம் பக் என்ற 9 வயது சிறுமி நிர்வாணமாக, அழுதுகொண்டே ஓடிவருவது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படகலைஞர் நிக் உட் காங் ஹுன் ‘அசோசியட் பிரஸ்’ நிறுவனத்துக்காக எடுத்தார். வியட்நாம் போரின் கொடுமையை உணர்த்தும் விதமான இருந்த இந்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், நார்வே நாட்டைச் சேர்ந்த டாம் ஈக்லான்ட் என்ற எழுத்தாளர், போரின் புகைப்படங்கள் என்ற தலைப்பில் இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, பகிர்ந்து கொண்டார்.
ஆனால், பேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி நிர்வாணப் புகைப்படங்களை பிரசுரம் செய்ய அனுமதியில்லை என்று கூறி இந்த புகைப்படத்தில் உள்ள ஒருசில பகுதியை மாற்றி அமைத்தது. மேலும், இந்த புகைப்படத்தை வெளியீடும் அனைவரின் கணக்கில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் கடந்த சில நாட்களாக புகைப்படத்தை நீக்கத் தொடங்கியது. சிலரின் கணக்கையும் முடக்கியது.
வரலாற்று முக்கியத்துவம் , போரின் கொடூரத்தை உணர்த்தும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமியின் நிர்வாணம், ஆபாசம் அல்ல என்ற கோணத்தில் பார்க்க கூடாது என பேஸ்புக் நிறுவனத்துக்கு நார்வே நாட்டு மக்களும் புகைப்படத்தை வெளியிட்ட டாம் ஈக்லாண்டின் ஆதரவாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நார்வே நாட்டின் பிரதமர் எர்ணா சோல்பெர்க் கணக்கில் இருந்தும் இந்த புகைப்படம் நீக்கப்பட்டதால் அவரும் கடும் கோபமும், எரிச்சலும் அடைந்து, கருத்து, பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாக கண்டித்தார்.
இது குறித்து சமூகவலைதளமான பேஸ்புக் மீது கடும் விமர்சனம் எழுந்தது. நார்வே நாட்டில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய நாளேடான ஆப்டன் போஸ்ட் தனது முதல் பக்கத்தில் பேஸ்புக்கின் லோகோ, நிறுவனர் ஜூகர்பெர்க் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறார் எனக் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பிரதமர் எர்ணா சோல்பெர்க் கூறுகையில், “ பேஸ்புக் நிறுவனம் சமூகவலைதளத்தில் குழந்தைகளின் மான்பைக் குலைக்கும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பதை நான் வரவேற்கிறேன்.
அதேசமயம், நபாம் சிறுமி புகைப்படம் என்பது, வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, இதை நீக்கி இருக்கக் கூடாது. அதை திருத்தி இருக்கவும் கூடாது. என்னுடைய குழந்தைகளும், மற்றவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் வளரும்போது, வரலாற்றில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப் படத்தையும், நிகழ்வுகளையும் திருத்துவது, நீக்குவது என்பது வரலாற்றை மாற்றுவதற்கும், உண்மையை மறைப்பதற்கு சமம்'' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் ஒருவாரத்துக்கு பின், மீண்டும் அந்த புகைப்படத்தை திருத்தமின்றி பிரசுரம் செய்வதாக தெரிவித்து மன்னிப்பு கோரியது. “ நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் புகைப்படம் சமூகத்தின் மதிப்புகளை குலைக்கும் என நம்பப்படுகிறது. சிலநாடுகளில் இது அபாசமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த விசயத்தில், வரலாற்று மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கருதி இந்த புகைப்படத்தை வெளியிடுகிறோம்'' என தெரிவித்தது.
பேஸ்புக் நிறுவனத்தின் முடிவை வரவேற்ற நார்வே பிரதமர் மகிழ்ச்ிச தெரிவித்து, “ சமூக வலைதளத்தின் மூலமே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'' என்று தெரிவித்தித்தார்.👀

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...