செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுகவில் போட்டியிட்டவர், கரூர் சின்னசாமி.
கரூரில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்கப் போன சின்னசாமியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள்.
அப்போது அவர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இனி எதையும் செய்ய வேண்டாம்..’ என்று சொல்ல... அவருக்கு நெருக்கமான நண்பர்களோ ஆச்சரியத்துடன் கேட்டபோதுதான் விவரம் தெரிய வந்திருக்கிறது.
செந்தில் பாலாஜி இங்கே நம்ம கட்சிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லியிருக்காரு. மகேஷ் மூலமாக பேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு.
தலைமையில் இருந்தும் கூப்பிட்டு சொல்லிட்டாங்க. எனக்கு எம்.பிக்கு கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. எம்.பி. தேர்தலுக்கு இங்கே ஆகும் செலவை அவரு பார்க்கிறதா சொல்லிட்டாராம்.
சீக்கிரமே அவரு இங்கே வந்துடுவாரு.
அதனால யாரும் அவரைப் பத்தி தப்பா வாய்விட்டுட வேண்டாம்...’ என்று சொல்ல... திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம்.
இந்த தகவல் கரூர் திமுக வட்டாரத்தில் தீயாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.
அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்.
ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போய் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள்.
இந்த சந்திப்புக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை.
சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கும் அவர் வரவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக, நவம்பர் இறுதி வாரத்தில் கரூரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார் செந்தில் பாலாஜி.
இந்தமுறை ஆர்டர் கேட்டுப் போன பிரஸ் உரிமையாளரிடம், ‘இப்போ காலண்டர் வேண்டாம். நான் அப்புறம் சொல்றேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
ஜெயலலிதா நினைவு நாளில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை. இப்படியாக அவரது செயல்பாடுகள் எல்லாமே கடந்த இரண்டு வாரங்களாகப் புதிராகவே இருக்கிறது.
கரூர் சின்னசாமிதான் இப்புதிருக்கு விடையளித்துள்ளார்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை.
ராணுவ வீரர் கைது.
உத்தர பிரதேசம் காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து ராணுவத்தால் ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து மூத்த அதிகாரியான அபிஷேக் சிங் கூறும்போது, ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் 12.50 மணி அளவில் ராணுவத்தால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து அவர் புலந்தஷகர் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ஸ்ரீநகரில் பணியில் இருந்து வருகிறார். இவர் 15 நாள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான புலந்தஷகர் வந்திருந்தார், அந்த நேரத்தில் பசுகாவலர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் ஜீதேந்தரும் ஈடுபட்டது பல வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.
மேலும் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த அன்று மாலையே ஜீதேந்தர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டாரா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, ஜீதேந்திர மாலிக் தான் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.
இதுதொடர்பாக
வன்முறை நடந்த எடுக்கப்பட்ட வீடியோவில், அவனுடைய துப்பாக்கியை எடு என்ற
ஒரு குரல் பின்னால் கேட்கிறது. இதேபோல், புலந்தஷகர் காவல் நிலையம் அருகே
நடந்த வன்முறையில் ஜீதேந்தர் இருப்பது பல வீடியோக்களில் பதிவாகி உள்ளது.
இதனிடையே, சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
இதேபோல், மேலும் இரண்டு காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எடப்பாடிக்கு வந்த நெருக்கடி?
ராணுவ வீரர் கைது.
உத்தர பிரதேசம் காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து ராணுவத்தால் ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஷுபோத் குமார் சிங் |
இதுகுறித்து மூத்த அதிகாரியான அபிஷேக் சிங் கூறும்போது, ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் 12.50 மணி அளவில் ராணுவத்தால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து அவர் புலந்தஷகர் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ஸ்ரீநகரில் பணியில் இருந்து வருகிறார். இவர் 15 நாள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான புலந்தஷகர் வந்திருந்தார், அந்த நேரத்தில் பசுகாவலர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் ஜீதேந்தரும் ஈடுபட்டது பல வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.
மேலும் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த அன்று மாலையே ஜீதேந்தர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டாரா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, ஜீதேந்திர மாலிக் தான் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.
ஜீதேந்திர மாலிக் |
இதனிடையே, சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எடப்பாடிக்கு வந்த நெருக்கடி?
அதிமுக
மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு
சாதி ரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில்
முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள்
மற்றும் சில முக்கிய தொழிலதிபர்கள் சென்னையில் ஒரு இடத்தில் கூடி கொங்கு
மண்டல அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
பணம்
கொழிக்கும் முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த
அமைச்சர்களிடம் தான் இருக்கின்றன என்றும், இதை இப்படியே விட்டால் நமக்கு
எதிர்காலமே இருக்காது என்று ஆரம்பித்து அந்த கூட்டத்தில் பயங்கர
கடுப்பாகியுள்ளனர் அமைச்சர்கள்..
முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின்
கைகளில்தான் முழு அதிகாரமும் உள்ளதாக அவர்கள் கொந்தளிதுள்ளனர்.
முன்பு
அவர்களது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அந்த அமைச்சர்கள் தற்போது அனைத்து
துறைகளிலும் தங்கள் அதிகாரத்தைத் காட்டத் தொடங்கியுள்ளதால் மற்ற
அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர்.
இதே
போல் அந்த கொங்கு மண்டல அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர்
மாவட்ட அளவிலும் சிலர் மொத்த ஒப்பந்த பணிகள், பணி நியமனங்கள், பணி
மாறுதல்களை போன்றவற்றை முடிவு செய்கிறார்களாம் இதற்கு அதிகாரிகள் முழு
அளவில் ஒத்துழைப்பு தருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து
நிற்கிறார்கள்.
இந்த
கொங்கு அமைச்சர்களின் அதிகாரத்தால் வருவாய் இல்லாமல் போவதுடன்
கட்சிகளுக்குள் சொந்த மாவட்டத்திலேயே மரியாதை இல்லை என்றும் அவர்கள்
புலம்பியுள்ளனர்.
தற்போதுள்ள
அமைச்சர் பதவிக்கு பல கோடிகளை கொட்டித்தான் வந்திருக்கிறோம் என்றும்,
இதையெல்லாம் எப்படி திருப்பி எடுப்பதும் என்றும் அநத் அமைச்சர்கள்
புலம்பியுள்ளனர்.
தற்போது
இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலை அதையெல்லாம் எப்போது
திரும்பி எடுப்பது என்றும் கொந்தளிக்கிறார்கள். இதையடுத்து அந்த மூன்று
அமைச்சர்கள் துறைகளில் எங்கு? எப்படி? ஊழல் நடைபெறுகிறது என்பதை
ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என அந்தக்
கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து உளவுத்துறை
மூலம் தகவல் கிடைக்கவே அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை
சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால்
இபிஎஸ்க்கு எதிரான மனநிலையில் உள்ள அமைச்சர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல்
இருப்பதாகவும், அதனால் ஒரு நெருக்கடியான சூழல் ஓடிக் கொண்டிருப்பதாகவும்
தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்:செல்வநாயகம்,
நன்றி:ஆசியாநெட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக