செவ்வாய், 4 டிசம்பர், 2018

திட்டமிட்ட படுகொலை.

உத்தரப்பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரக் கும்பல் படுகொலை செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

"ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா மற்றும்பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு, இந்த  படுகொலையைசெய்திருப்பது அம்பலமாகியுள்ளது."

தற்போது இச்சம்பவம் தொடர்பாக, பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் யோகேஷ்ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள தனிப்படை காவல்துறையினர், அவர்களில் 3 பேரை கைது செய்துள்ளனர்.


கொலைச் சதியின் பின்னணி
கடந்த 2015-ஆம் ஆண்டு, மாட்டிறைச்சிவைத்திருந்ததாக கூறி, முகம்மது அக்லக் என்ற இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அவரது மகன் தானிஷ் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

அப்போது, இந்த வழக்கை விசாரித்து, அக்லக் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்லஎன்று கூறியவர்தான் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதிலும் தீவிரமாக இருந்துள்ளார்.

இதற்கு பழிவாங்கவே, சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரங்கள் தற்போது படுகொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சங்-பரிவாரின் சூழ்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர்மாவட்டத்திற்கு உட்பட்ட ஸயானா என்ற கிராமத்தில்தான் சுபோத் குமார் சிங் படுகொலைநடந்துள்ளது. திங்களன்று காலை ஸயானா கிராமத்திற்கு வெளியே 25 பசுக்களின் இறைச்சி குவித்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறி, அவற்றை சங்-பரிவாரத்தினர் டிராக்டரில் அள்ளிப்போட்டுக் கொண்டு, சிங்க்ராவதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

 அங்கு, மாடுகளைக் கொன்றவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்நிலையத்தின் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களையும் தாக்கிதீயிட்டுக் கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர்.
நிலைமை மோசமானதால், அங்கு வந்தகூடுதல் காவல்துறையினர், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும்,வன்முறைக் கும்பலைக் கலைக்க முயன் றுள்ளனர்.

 இதற்கிடையேதான், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை குறிவைத்த வெறிக்கும்பல் ஒன்று, ஜீப்பிலேயே வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.
துப்பாக்கிகளாலும் அவரை சரமாரியாக சுட்டுள்ளது. 11 ரவுண்டுகள் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


உயிரை எடுப்பதில் குறியாக இருந்த வெறிக்கூட்டம்
சங்-பரிவார கும்பலின் கல்வீச்சில்தான் சுபோத் குமார் இறந்தார் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

ஆனால், சுபோத்குமார் சிங் தலையில் 32 மி.மீ. அளவிற்கு துளை இருப்பதும், துப்பாக்கியால் சுடப்பட்டதன் மூலமாகவே இவ்வளவு பெரிய காயம்ஏற்பட்டுள்ளதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கூர்மையான மற்றும்கனமான ஆயுதம் மூலம் அவர் தாக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.சுபோத் உயிர் பிழைக்கக் கூடாது என்று,வன்முறையாளர்கள் மிகவும் கவனமாகஇருந்துள்ளனர்.
சுபோத் குமார் சிங்கின் கார் ஓட்டுநர் ராம் அஸ்ரே-வின் வாக்குமூலமும் அதை உறுதிப்படுத்துகிறது.

“ஆபத்தான நிலையில் இருந்த சுபோத்குமாரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன்; ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது; அதோடு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்துவந்தன; இதனால் என் உயிரை காக்க ஓடிவிட்டேன்; அதன்பின் என்ன நடந்தது என்றுதெரியாது. கூடுதல் போலீசாரோடு வந்துபார்த்த போது இன்ஸ்பெக்டர் இறந்திருந் தார்” என்று அஸ்ரே தெரிவித்துள்ளார்.

சதியை உறுதிப்படுத்தும் வட்டாட்சியரின் சந்தேகங்கள்
சுபோத் குமார் சிங் படுகொலை, இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை, புலந்த்சாஹர் வட்டாட்சியர் ராஜ்குமார் பாஸ்கரின் சந்தேகங்களும் வலுவாக்கியுள்ளன.
“பசுக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டதுதான் வன்முறைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பசுக்கள் கொல்லப்பட்டு, அதன்தோல் கரும்புத் தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று போடப்பட்டுள் ளது.

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றுநினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.எனவே, வேண்டுமென்றே மக்களுக்கு இதுதெரிய வேண்டும் என வெளியே தொங்கவிட்டு சென்று இருக்கிறார்கள்” என்று வட்டாட்சியர் கூறியுள்ளார்.
மேலும், “இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கில் பசுப் பாதுகாவலர்கள் வந்து உள்ளனர். ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 400-க்கும் அதிகமான நபர்கள்அங்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள் மாட்டிறைச்சியை வைத்து கலவரம் செய்ய தொடங்கி உள்ளனர்.


அந்த பசுக்காவலர்கள் எல்லோரும், ஏற்கெனவே டிராக்டரில்தயாராகி இருந்தது போல வந்துள்ளனர்.
சரியாக புகார் வந்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் தயாராகி இருந்தால் மட்டுமே இத்தனை ஆட்களை அழைத்துக் கொண்டு வர முடியும்.
எனவே, இது திட்டமிடப்பட்ட கலவரமாகஇருக்குமோ? என்று சந்தேகம் வருகிறது” என்றும் வட்டாட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

“மாட்டிறைச்சி போடப்பட்ட பகுதிக்குஅருகில், இஸ்லாமியர்களின் 3 நாள் திருவிழா ஒன்று திங்களன்று துவங்கியுள்ளது. ‘இதெமா’ என்ற பெயரிலான இந்த விழாவில், கலவரம் உருவாக்க வேண்டும்; அது இந்து - இஸ்லாமிய பிரச்சனையாக மாற வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம்” என்று போலீசாரும் தங்களின் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆதித்யநாத் அரசே காரணம்
2015-இல் படுகொலை செய்யப்பட்ட முகம்மது அக்லக் வழக்கை விசாரித்துவந்ததே, சுபோத் குமார் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவரின் சகோதரிதெரிவித்துள்ளார்.

மேலும், இப்படுகொலைக்கு உத்தரப்பிரதேச ஆதித்யநாத் அரசு மற்றும் அதன் காவல்துறையின் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
 மேலும், முதல்வர் ஆதித்யநாத், எந்நேரமும் மாடு, மாடு என்று திரிவதாகவும் விமர்சித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக, பெயர் தெரிந்த 27 பேர் மீதும், அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 வன்முறை தொடர்பாக காவல் துறையினர் இதுவரை 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது ஐபிசி 147,148, 149 (வன்முறையில் ஈடுபடுதல்),
332 (அரசு ஊழியரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல்),
353 (பணியின்போது அரசு ஊழியரைத் தாக்குதல்),
341 (சட்டவிரோத கூடுதல்),
302 (கொலை),
307 (கொலை முயற்சி),
436 (தீ வைத்தல்) ஆகிய9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.



படுகொலை செய்யப்பட்ட சுபோத் குமார்சிங்கின் குடும்பத்திற்கு ஆதித்யநாத் அரசு ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வன்முறையின்போது,
நண்பரை ஊருக்கு அனுப்புவதற்காக அந்த பகுதிக்கு வந்து -

 வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுமித் என்ற 19 வயது இளைஞரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...