திங்கள், 31 டிசம்பர், 2018

தேறாதவர்கள் !

முன்னாள் முதல்வர் கலைஞர்  மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும்.
இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

 அதே போல் ஹரியானாவில் ஜிண்ட் தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா கையெழுத்து விவகார வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தகுதி நீக்கம் செய்யப்பட 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தாமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் அரசியல் சார்பு நிலையைத்தான் காட்டுகிறது.

18 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட உறுப்பினர்கள் ஒருவர் கூட நீதிமன்றம் செல்லாமல்,தேர்தல் ஆணையத்தில் மறுபரிசீலனை செய்யக்கூறாமல் இருக்கையில் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருப்பது பழனிச்சாமியின் தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சி.

கஜா புயல் பேரிடரை தேர்தல் ஆணையம் காரணம் காட்டமுடியாது.
காரணம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்தான் திருவாரூர் தொகுதி உள்ளது.மற்றவை பாதிப்பில்லாதவைதான் .

கேட்டால் தொகுதிகாலியாகி ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்ற விதியைக்காட்டுவார்கள்.
ஆறு மாதங்களுக்குள் என்றுதான் உள்ளதே தவிர அதற்கு முன்னதாக நடத்தவே கூடாது என்று விதிகள் இல்லை.

இதற்கு முழுக்காரணம் பாஜக வேண்டுகோள்படி அல்லது கட்டளைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதுதான்.
வழக்கு நடக்கும் திருப்பரங்குன்றம் தவிர்த்து 19 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் இன்றைய மத்திய,மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகளின் படி 90% திமுக வெற்றி பெறும் ,மிச்சம் அதிமுகவுக்கு போகும் அதுவும் உறுதி இல்லை என்ற நிலைதான்.
அப்படி பட்டக்காலத்தில் அதிமுகவின் பாஜக எடுபிடி ஆட்சி வேறு வழியின்றி தானாகவே கவிழ்ந்துவிடும்.
அதைத்தவிர்க்கவே மோடி-அமித் ஷா இந்த அடிமைகளைக் காக்கும் பணியை செய்துள்ளார்கள். 
இப்போது தேர்தலவைத்தால் தேறாதவர்கள் தங்கள் எடுபிடி ஆட்சியாளர்கள் என்பது தெரிந்த செய்திதானே.


===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...