சனி, 22 டிசம்பர், 2018

இல்லாத ஊருக்கு நான்தாண்டா ராஜா!

அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்த சமீபத்திய விவகாரமென்றால் அது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதுதான். 

மணல் கடத்தல், கூலிப்படை ஏவி மிரட்டல் என்று தொடர் குற்றச்சாட்டுக்களில் தேனியில் இவரது பெயர் அடிபட்ட நிலையில் திடீரென்று தூக்கப்பட்டுள்ளார். 


கழகத்திலிருந்தே தூக்கப்படுமளவுக்கு தம்பி என்னதான் தப்பு செய்ததாக அண்ணன் கண்டுபிடித்துள்ளார்? 
என்பதுதான் அ.தி.மு.க.வினரையே குடையும் கேள்வி.

 இதற்குப் சில சர்ச்சைகள் பற்றிய விளக்கங்கள் பதிலாக கிடைத்தாலும் கூட எல்லோரையும் அதிர வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ’தன் மகள் பெயரில் தமிழ்நாட்டில் புதிய கிராமத்தையே போலியாக உருவாக்கினார் ராஜா! 
அதுதான் அவரது அஸ்திவாரத்தை ஆட்டிவிட்டது.’ என்கிறார்கள். 

இந்த புகாரை யாரோ அட்ரஸ் இல்லாத பேர்வழி, போகிற போக்கில் ஓதியதில்லை. 
 ராஜாவின் சரிவுக்கு காரணமான வழக்கை தொடந்த அமாவாசி என்பவரை இதைப் போட்டு உடைத்துள்ளார்.

 அமாவாசி பற்ற வைத்திருக்கும் தகவல் இதுதான்...”மதுரை ஆவின் கூட்டுறவின் கீழ் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது தொகுதிகள் வருகின்றன.

 இவற்றில் கடைசி தொகுதியான போடியில் தான் ஓ.ராஜா போட்டியிட்டு இயக்குநர் ஆனார். கோ ஆபரடிவ் தேர்தல் விதிப்படி ஒரு கிராமத்தில் பால் கூட்டுறவு சொசைட்டி சேர்மனாக இருந்தால்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்.

 ஆனால் ஓ.ராஜா அப்படி எதிலும் இல்லை. அதேவேளையில் ஆவின் தலைவர்! 
எனும் பெரும் பதவி மீதான ஆசையை விடவும் முடியவில்லை. 

அதனால் செய்தார் பாருங்க ஒரு திருட்டுத்தனம். அதாவது, ‘உப்புக்கோட்டை பேரூராட்சியின் கீழ் ரோஸி நகர் வருவாய் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மன்.’ என்று தன்னை ஓ.ராஜா குறிப்பிட்டு, தேர்தலில் நின்றுள்ளார். 

ஆனால் உண்மையில் அப்படியொரு கிராமமே இல்லை. 
ஆமாங்க, ரோஸிநகர் எனும் கிராமமே தேனி மாவட்ட வருவாய் கிராம லிஸ்டில் இல்லை. 

தன் அண்ணன் இந்த மாநிலத்துக்கே துணை முதல்வர் எனும் தைரியத்தில் தன் மகளான ரோஸி பெயரில், இல்லாத கிராமத்தை போலியாக உருவாக்கியுள்ளார். 
அரசு அதிகாரிகளும் இதற்கு உடன் நின்றுள்ளனர். 
மிகப்பெரிய மோசடியை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.” என்றிருக்கிறார். 


இந்த தகவலை அப்படியே கேட்ச் செய்திருக்கும் தேனி, மதுரை மாவட்ட தி.மு.க.வினர், ‘பன்னீர்செல்வம் தன் துறையின் மூலம் அப்ரூவல் இல்லாத மனைகளுக்கு அப்ரூவல் கொடுக்கும் பணிக்காக கோடி கோடியாய் கொள்ளையடித்து கொட்டுகிறார். 

அவரது மகன் ரவீந்திரநாத்தோ சட்டப்புறம்பாக ஆற்றில் மணல் அள்ளி சம்பாதிக்கிறார். ஆனால் தம்பியோ, போலியாக கிராமத்தையே உருவாக்கி, ஆவின் சேர்மனாகிவிட்டார். 
என்ன ஒரு சாதனை குடும்பம்! 
இதுதான் நிஜ தர்மயுத்தம்.” என்று கிழி கிழியென கிழிக்கின்றனர்.
 
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா  நீக்கப்பட்டதால், தம்பியையே கட்சியில இருந்து நீக்கி ஓபிஎஸ் தன்னை நீதிதேவன் என்று நிருபித்து இருக்கிறார் ஏன் அதிமுகவினர் அதகளம் செய்து வந்தனர். 

ஆனால், ஆவின் தலைவர் பதவியை காட்சிப்பதவியை மட்டும் பறித்துவிட்டு, எடப்பாடி கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பக்கா பிளானோடு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக ஓபிஎஸ்ஸை புகழ்ந்த அதே வாய் பன்னீருக்கு எதிராக எடப்பாடியிடம் வத்தி வைத்து வருகிறதாம்.  


இதனால் கடுப்பில் இருந்த எட்டப்படியார்,  ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான் கட்சிக்கு நல்லது, கொஞ்சம் மிஸ்ஸானால் மொத்தமாக ஆப்படித்துவிடுவார் என எடப்பாடி நினைக்கிறாராம், ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்பினால், என்ன பிரச்சனைகள் வரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்தாராம், அதுமட்டுமல்ல டெல்லி மேலிடத்திலும் தூது அனுப்பினாராம்,  இதற்கு டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் காட்டி விட்டதாம்.  

ஒரு காலத்தில்  பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை தற்போது பிஜேபி கழட்டிவிட்டது.  டெல்லி சொன்னதன் பேரில் எடப்பாடியும் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கிட்டாராம். 
எடப்பாடி மற்றும் பிஜேபியின் பிளான் தெரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்க  தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறாராம்.   

கட்சிப்பதவியையும், துணை முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு வெளியில் அனுப்பினால் என்ன செய்வார் ஓபிஎஸ்? என ப்ரீ பிளான் போட்டிருக்கும் எடப்பாடி,

 ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்புவதற்கு முன்பாக அவரின் மொத்த பிளானையும் முறியடித்துள்ளாராம்.
                                                                                                                                  
 -ரா.குமாரவேல்.
(ஆசியாநெட் உதவியுடன்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...