புதன், 26 ஜூலை, 2017

கீழடி....அழித்தொழிப்பு...

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் பழந்தமிழ் சமூகத்தின் நகர நாகரிகத்திற்கான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் என்றும், கீழடியை இந்துத்துவா சக்திகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். 

‘கீழடி அகழ்வாய்வு என்பது திராவிடர் மற்றும் தமிழர் வரலாறு மற்றும் நாகரிகத்திற்கு கிடைத்த கொடை’ 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில் 50 செண்ட் அகழ்வாய்விலேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

 ‘‘கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு பொருட்களின் ஆய்விலும், பெண்களின் கல்வியறிவு, கடல் சார்ந்த வணிகம், நீர்மேலாண்மை, சமயமற்ற வாழ்முறை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல்துறையின் ஐந்து பிரிவுகளில் ஒரு பிரிவு தான் தென்னிந்தியாவில் உள்ளது. 
நாற்பதுஆண்டுகளில் இத்துறை ஐந்து சதவீத அளவுக்கு கூட தமிழகத்தில் ஆய்வு நடத்தவில்லை. நீண்டஇடைவெளிக்கு பிறகு மைசூர் மத்திய தொல்லியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்ற அமர்நாத் ராமகிருஷ்ணன் என்கிற தமிழர், வைகை நதிக்கரையிலும் ஒரு நாகரிகம் இருந்தது, அதை ஆய்வு செய்வோம் என பணியைத் தொடங்கினார். 

இந்த ஆய்வின் ஒவ்வொரு படிக்கும் முன்பு பெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ர ஒரு சமூகப் புறக்கணிப்பின் வலியுடன் தொடங்கப்பட்ட ஆய்வே கீழடி. இன்னும் அதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கிறோம்.

அசோகரின் கல்வெட்டே இந்தியாவின் வரலாற்று காலகட்டத்தை மாற்றியது. ஒரு கல்வெட்டைத் திறந்தால் பல கற்பிதங்கள் தகர்ந்துவிடும். கீழடியைக் கண்டு அஞ்சுவதற்கும், கீழடி தமிழர்க்கு மகத்தான ஆயுதமாக மாறியதற்கும் இதுதான் காரணம்.

உலகிலேயே மிக அதிகமாக சுமார் 1 லட்சம்கல்வெட்டுக்கள் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 65 ஆயிரம் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டவை. 

அதில் பழமையான பிராமி எழுத்துகள் கொண்டவை 93.அவற்றில் 24 கல்வெட்டுக்கள் வைகை நதிக்கரையில் தான் கிடைத்துள்ளன. எனவே அங்கு நதிக்கரை நாகரிக, கல்விகற்ற சமூகம் இருந்ததற்கான அடையாளம் உறுதியாகிறது.

கீழடி தொல்லியல் ஆய்வில் இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாக இரண்டாயிரம் ஆண்டு முந்தைய புத்தர் கால மண் கலயம், அசோகர் கால கல்வெட்டு, ஆப்கான் சூது பவளம், தந்தத்தில் சீப்பு, சதுரங்கம், தாயக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் ஒரு தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குடியிருப்புகளில் மூன்று விதமான வடிகால் அமைப்பு, ஒரே மாதிரியான 33 செ.மீ செங்கற்களால் அமைந்த அஸ்திவாரமில்லா குடியிருப்புகள், எழுத்துக்களைக் கொண்ட 72 பானை ஓடுகள் என கணிதம், கல்வி, கட்டுமானம், தொழில் அனைத்திலும் சிறந்து விளங்கியதற்கான சுமார் ஐயாயிரத்து 800 பொருட்கள் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த ஆவணங்களை ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்ப அனுமதி கோரப்பட்டது. ஆனால் 10 மாதிரிகளில் இரண்டை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பஅனுமதித்து வெறும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கியது மத்திய மோடி அரசு.

அதே வாரம் அயோத்தியில் ராமர் அருங்காட்சியகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ர ஏன் தமிழர் வரலாற்று ஆவணங்கள் முடக்கப்படுகின்றன என்பதற்கு இதை விட பெரிய விளக்கம் தேவையில்லை.

கி.மு 200-கி.மு 195 ஆம் ஆண்டுகளில் மக்கள்வாழ்ந்ததற்கான தொல்பழங்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தமிழரின் ஆதாரங்கள் கீழடியில் இருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் தமிழர் நாகரிகத்தின் அனைத்து அம்சங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இலக்கியங்களை வரலாறாக ஏற்கமாட்டார்கள்.

இப்போது அதைவிட மேன்மையான சமூகமாகதமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழடியில் கிடைத்திருக்கிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் ஒரு பொருள் கூட மதம் சார்ந்த பொருட்களாக இல்லை. 

இந்நிலையில் அதை யாரும்அழித்து விடக்கூடாது. 

வரலாற்றை திரித்து விடக்கூடாது என்பதில் மார்க்சியர்கள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் கவனமாக இருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...