திங்கள், 17 ஜூலை, 2017

கையில் பணமிருந்தால் கைதி கூட ராணிதான்.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரின் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு தனது வசதிக்காக சிறையையே மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் சமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை என்று சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், அந்த சமையல் அறையில் தானே சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



அந்த சிறப்பு வசதிக்காக சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரிரு முறை சிறையை விட்டு வெளியே சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில வசதிகளுக்காக பணத்தை அள்ளி வீசுகிறாராம். சசிகலாவுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள அறையில் பாதுகாப்புக்காக மற்ற யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வெளியில் இருந்து சசிகலாவை சந்திக்க வரும் இடத்தில் கேமரா வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சசிகலா சிறையில் 5 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா, ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி கசிந்தது.
கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைஅதிகாரிகளுக்கும் ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறையில் சசிகலாவுக்காக தனிச் சமையலறை கட்டப்பட்டது. சமையல் செய்ய ஒரு கைதி ஒதுக்கப்பட்டார் என ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக் முதலவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பொழுது சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர். 'சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்  என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கை விவகாரத்தில் ஊடகங்களில் பேட்டியளித்தற்காக விளக்கம் கோரி கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவுக்கு விருந்தினர்களை சந்திக்க என்று தனியாக குளிர்சாதன அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கேமராவில் பதிவாகியிருக்க கூடிய இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் உடனுக்குடன் அழிக்கப்படுவதாகவும் இரண்டாவது அறிக்கையினையும் டிஐஜி ரூபா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்
 கர்நாடக சிறைத்துறை டிஐஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக  தற்பொழுது, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் ஆர். அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ரூபா. வேறு எந்தக் காரணமும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறினார்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

😨மாட்டின் பயன்கள் பற்றி  ஆய்வு செய்ய ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

19 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இக்குழு.

 இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர்.

‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
மாட்டு குழு.
ஆய்வு துவக்கப்பட்ட போது  

மாட்டின் கோமியம்,பஞ்ச கவ்யம் பற்றி ஆய்வு செய்வதுதான் குழுவின் முக்கிய நோக்கம்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.🤔

🤥"பாஜக அரசின் இந்த குழுவை பாரட்டி வரவேற்கிறோம்."
என முதல்வர்கள் நிதிஷ் குமார்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலாவது ஆட்களாகக் வரவேற்றனர்.

"இந்த ஆய்வின் மூலம் ஜிஎஸ்டி வரி பாதிப்பினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் குறையும்.இந்தியா பொருளாதர வல்லரசாக உருவெடுக்கும்" என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

😗"விவசாயிகள்  பஞ்ச கவ்யத்தை வயல் வெளிகளில் தெளிப்பதின் எல்லா வயல்களிலும் பாஸ்மதி அரிசி விளைந்து அவர்களின் பிரச்னை எல்லாம் தீரும்" என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூடுவாஞ்சேரி விமான நிலையைத்தில் பேட்டியளித்தார்.
(அவரின் துறை அவருக்கே தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.)

😆"கோமியத்தை இந்த ஆய்வின் மூலம் அதிக அளவு உறபத்தி செய்து காவிரி பிரச்னையை தீர்க்கலாம்.கர்னாடகாவிடம் இனி தண்ணீர் கேட்டு கெஞ்ச வேண்டாம்.இதை எதிர்க்கும் ஸ்டாலினும்,கமல்ஹாசனும் இன்னும் அரசியலில் பக்குவ‌மடையவில்லை "என தமிழிசை கருத்து தெரிவித்தார்.

😎"மாட்டின் கோமியம்,பஞ்சகவ்யம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்ததன் மூலம் இன்னுமொரு "புதிய இந்தியா'  பிறந்துள்ளது.வாழ்த்துகள்"என்று இன்ப சுற்றுலா சென்றுள்ள பிரதமர் மோடி  அன்டார்டிகாவில் இருந்து டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.


மக்கள் அல்லாடும் பிரசனைகளுக்கு இந்தியாவில் வறுமையா என்ன?

வேலைவாய்ப்பு,குடிநீர்,விவசாயம்,நீட்,ஜி.எஸ்.டி  என்று எத்தனையோ  வருகிறது.
எதற்காவது இந்த பாஜக அரசு முதலாவது குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுத்ததா?
பாஜக அரசே திட்டமிட்டு மக்கள் மீது திணித்த பண மதிப்பிழப்பு,நீட்,மாட்டிறைச்சி என்று எதிலாவது மக்கள் கேட்க ஓர் ஓரமாக  மனதிலாவது நினைத்ததா?

ஏன் .மாட்டின் மீது மட்டும் இந்த பாசம்,பரிவு,
இதில் நூற்றில் ஒரு பங்காவது தனக்கு வாக்களித்து நாடு,நாடாக சுற்றுலா போக வைத்திருக்கும் மக்கள் மீது மோடி காட்டுகிறாரா?

தன்னை சந்திக்க வரும் நடிகைகளுக்கு ஒதுக்கும் நேரத்தை அவரால் விவசாயிகள்,மக்கள் பிரச்னைக்காக வருபவர்களை சந்திக்க ஒதுக்க முடிகிறதா?

இதில் வேறு உலகிலேயே தன்னை ஆள்வோர் மீது நம்பிக்கை வைத்துள்ள நாடுகளில் இந்தியாதான் (74%)முதலிடமாம்.

நாட்டை ஒரு வழி செய்வதில் மோடிக்கு இருக்கும் ஆர்வத்தை விட இந்திய மக்களுக்குத்தான் அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

மாற்றி யோசித்தால் எப்படியோ இந்த வாழ்வில் இருந்து அப்படியாவது தப்பிக்கலாமா என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...