வெள்ளி, 14 ஜூலை, 2017

பத்தும் செய்யும் பணம்.

டெல்லி  காவல்துறையினர் தினகரன் மீதான லஞ்ச மோசடி வழக்கில் இருந்து அவரை கழட்டி விட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.இன்றைய நிலவரம் அதுதான்.

தினகரனிடம் இரட்டை இல்லை சின்னம் தேர்தல் ஆணையத்திடம் பெற்றுத்தர கையூட்டு வாங்கிய  சுகேஷ் சந்திரா மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.அதில் இந்த கையூட்டு,தினகரன் என்ற  விபரங்களே இல்லை.

வி.பி.ஐ  என போலி ஆவணங்களை உண்மை ஆவணங்கள் போல் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக மட்டுமே உள்ளன.இரட்டை இல்லை சின்ன லஞ்சம் விபரங்கள் இல்லை. ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சுகேஷ் சந்திரா மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் சிறை தண்டனைவிதிக்க முடியும். 

இது தொடர்பாக டெல்லி காவல்துறையை கேட்டால் "சசிகலா அக்கா மகன் தினகரன், அவருடைய நண்பர் மல்லி கார்ஜுனா, ஹவாலா புரோக்கர்கள் நாது சிங், லலித் குமார் ஆகியோர் தற்போது, ஜாமினில் வெளியே உள்ளனர். அவர்கள் தொடர்பான  ஆவணங்களை சேகரித்து வருகிறோம். 
கிடைத்ததும் அதனடிப்படையில் குற்ற சாட்டுகளை பதிவு செய்வோம் " என்கின்றனர்.

அப்படி என்றால் இதனடிப்படையில் தினகரனை கைது செய்தனர்?

வலுவான ஆதாரம் இல்லாமலா அவரை கைது செய்தனர்?
அது தவறு அல்லவா?
இவைகளை எல்லாம் வைத்துப்பார்த்தால் இது அரசியல் சதுரங்க வேட்டை .

தினகரன் ஆட்சியை கைப்பற்றி விடக்  கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ராஜதந்திர கைதோ என்ற  ஐயம் வருகிறது.

இரட்டை இல்லை சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்துக்கு கோடிகளில் கையூட்டு என்றால் தரகர், தினகரனை கைது செய்தவர்கள் கையூட்டு பெற காத்திருந்த தேர்தல் ஆணைய  அலுவலர்கள் பற்றி இதுவரை இம்மி அளவு கூட தகவல்களை வெளியிடவில்லை, சுட்டு விரல்  நீட்டி யாரையும் இனம் காட்டவில்லை,குற்றப்பத்திரிகை யில் பெயர் இடம் பெறவே இல்லை.

என்ன நடைமுறை இது.என்னவகையான சட்டம் இவை.
சுகேஷ் சந்திரா         ,தினகரன்

கையூட்டு கொடுப்பவர் கைது.அதை கொண்டு சென்று கொடுத்த தரகர் கைது.ஆனால் கையூட்டு பெற்றவர்கள் மட்டும் அதிகாரத்தில் அட்டகாசம் செய்கிறார்கள்.அவர்கள் யாரென்றே காவல்துறை இனம்காட்டவில்லை.மறந்து விட்டதா?
அல்லது மறைக்கப்படுகிறார்களா?

தேர்தல் ஆணையம் கூட இதுவரை இது தொடர்பாக தனது ஆணையத்துக்குள் எந்த விசாரணையையும் துவக்கியதாக தகவல்களே இல்லை.

இனியும் தினகரன் தங்கள் இசைக்கு தில்லானா ஆடவில்லை என்றால் மட்டுமே குற்ற பத்திரிகையில் அவர் பெயர் இடம் பெறும் என எச்சரிக்கப்பட்டிருக்கலாமோ?

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் இந்தியாவில் பணமும் அதிகாரமும் இணைந்தால் அடுத்த நொடி இந்தியா புரோக்கர்கள் மூலம் ரியல் எஸ்டேட் காரர்கள் மூலம் மனைகளாக விற்கப்பட்டு விடும்.அந்த அபாயம் நெருங்கி விட்டது.

சித்தி சசிகலா பரப்பன சிறையை பணம்கொடுத்து போயஸ் தோட்டமாக்கி விட்டார்.

அவர் அக்கா மகன் தினகரன் பணம் கொடுத்து ..டெல்லியை தமிழ்நாடாக்கி விட்டாரோ ?
                                                                                                                  =  பிரஸ் ஏட்டய்யா குமாரவேல் 
=================================================================== ============================
ஜிஎஸ்டியின் ‘மாஜிக்’ பலிக்குமா?



எதற்காக கார்ப்பரேட்டுகள் ஜிஎஸ்டி முறைமையை வரவேற்கிறார்கள்?

ஏற்கெனவே வரி முறைமையில் மறைமுக வரிகளின் பங்கு அதிகமாக உள்ளது. 
ஜிஎஸ்டி முறைமையும் மறைமுக வரிகள் தொடர்பானதே. இதனால் வருமானம் அதிகரித்தால் அது இன்னும் மொத்த வரிகளில் மறைமுக வரிகளின் பங்கையே அதிகரிக்கும். நேரடி வரிகளை அரசாங்கம் மேலும் குறைத்தால் சமன்பாட்டில் அதன் தாக்கம் மேலும் அதிகமாகும்.ஏற்கெனவே மொத்த வரிகளில் நேரடி வரிகளைக் காட்டிலும் மறைமுக வரிகளின் அளவு இரண்டு மடங்கு ஆகும். இதன் பொருள் வரிச்சுமையை அதிகமாகச் சுமப்பது சாதாரண மக்கள் என்பதே. 
செல்வ வரி ஒழிப்பு, மறைமுக வரி விகித அதிகரிப்பு ஆகிய இரண்டு அடிப்படையான அம்சங்களின் பின்புலத்திலேயே ஜிஎஸ்டி முறைமை அறிமுகமாகிறது.இது கார்ப்பரேட்டுகள் விரும்புகிற பாதை என்பதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். வரவேற்கிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் நேரடி வரி வசூலில் அதிகரிப்பும் இருந்திருக்கிறதே?
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய ஓர் காலக்கட்டத்தில் நேரடி வரி வசூலில் அதிகரிப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அது கார்ப்பரேட் லாபங்களின் மீதான வரி விகித அதிகரிப்பால் கிடைத்த கூடுதல் தொகை அல்ல. 
அரசின் பொருளாதாரப் பாதையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்ததன் விளைவாக கார்ப்பரேட் லாபங்களில் ஏற்பட்ட உயர்வின் பிரதிபலிப்பே அது. 
விகிதம் கூடாமல் நடந்தேறிய விபரீதம் அது. ஆனால் அதற்குப் பின்னர் குறிப்பாக 2011- 12க்குப் பிறகு ஆஜரான ‘‘நிதிச்சுருக்க’’ கொள்கைகளின் காரணமாக போராடி வரிகளின் பங்கு குறைந்துவிட்டது. பொது முதலீடுகள் வெளியிடவும், மறைமுக வரிகளின் வாயிலான வருமானம் அதிகரிக்கப்பட்டதும் இந்த காலத்தில் நிகழ்ந்துள்ளது.

நவீன தாராளமயப் பாதையோடு ஜிஎஸ்டி முறைமைக்கு உள்ள தொடர்பு என்ன?
நவீன தாராளமய காலத்திய வளர்ச்சியின் உள்ளடக்கம் பாரபட்சமானது. அது உச்சபட்ச பொருளாதார அகழியை உருவாக்கியுள்ளது. நவீன தாராளமயப் பாதை இன்றைய மூலதனக் குவிப்பின் காரணமாக தன்மையில் ஓர் அடிப்படையான முரணை கொண்டுள்ளது. 
அம்முரண்பாடு என்ன? ஒரு புறம் மலிவான உழைப்பு, ஆழமான சுரண்டலுக்குரிய வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்துகிறது. மூலதனக் குவிப்பிற்காக இந்நடவடிக்கைகளை அது சார்ந்துள்ளது. மறுபுறம் இத்தகைய நடவடிக்கைகள் கிராக்கியைத் தடுக்கின்றன. உழைப்பாளர்களின் ‘உற்பத்தித் திறன் அதிகரிப்பையும் பாதிக்கிறது. இது மூலதனக் குவிப்பிற்கு தடையை உருவாக்குகிறது.
இச்சூழலில் ஜிஎஸ்டி வரி முறைமை அறிமுகம் வருமானத் திரட்டலுக்கான பெரும் தேவையாக அரசுக்கு உள்ளது. சர்வதேச விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான எக்சைஸ் வரிகளை பெருமளவு போட்டு மக்களின் பாக்கெட்டுகளில் கைவைப்பதைப் பார்க்கலாம்.

மலிவு உழைப்பும், ஆழமான சுரண்டலும் மூலதனக்குவிப்பில் ஏற்படுத்திட, முரண்பாட்டை மீறியும் இப்பாதையில் அதிகம் பயணிப்பது ஏன்?
விவசாய வருமானங்களில் வீழ்ச்சியும் மலிவான உழைப்பைப் பெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்துள்ளது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் கடந்த 25 ஆண்டுகளில் தேக்கத்திலேயே உள்ளது. 
மதிப்பு அதிகரிப்பில் உழைப்பாளிகளின் பங்கு 10 சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது.இவற்றின் பயனாக பெரும் தொழிலகங்களின் உபரியும், லாபப் பங்குகளும் அதிகரித்துள்ளது. உயர் ஊதியம் பெறுகிற சிறு பகுதியினரும் பயன்பெற்றுள்ளனர்.இச்சூழ்நிலை தனிநபர் சராசரி சரக்கு உற்பத்தி, மலிவு உழைப்பை அதிகரித்திருப்பதால் உலகச் சந்தையில் ‘‘போட்டி’’ போடுகிற வாய்ப்பை பெரும் தொழிலகங்களுக்கு தந்துள்ளன. 
கார்ப்பரேட்டுகளின் இலாபப் பங்கு அதிகரிக்கும்போது அவர்களின் முதலீடுகளும் இயல்பாகவே அதிகரிக்கின்றன.

ஆனால் முதலீடுகள் அதிகரித்தாலும் சந்தை வேண்டுமே?
அதுதான் மூலதனக் குவிப்பில் இங்கே எழும் முரண்பாட்டை மீறிப் பயணிக்க முயற்சிப்பதன் ரகசியம். குறைவான வருமானம் உள்ள பொருளாதாரத்தில் உள்நாட்டு கிராக்கி வளராது. 
அதனால் சந்தையும் விரிவடைய முடியாது. மறுபுறம் வருமான உயர்வு கிடைக்கிற சிறு பகுதியினரின் தேவைகள் ஏற்படுத்துகிற கிராக்கியும், சந்தையும் வித்தியாசமானது. 
நிறைய சேவைகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது கிராக்கியின், சந்தையின் தன்மையில் ஒரு பாரபட்சத்தை உருவாக்கியுள்ளது.இதன் காரணமாக இறக்குமதிகளைச் சார்ந்த சந்தையை இங்கு ஊக்குவிக்க வேண்டியுள்ளது.உள்நாட்டில் மலிவான உழைப்பை உறுதி செய்தாலும் அது ஏற்றுமதி வளர்ச்சியில் பிரதிபலிக்கவில்லை. ஆகவே நெருக்கடி ஆழமானதாகவும், மிக நீண்டதாகவும் தற்போது மாறியுள்ளது. அதுவே அவர்களின் பயணம் அறிவிக்கப்பட்ட இலக்குகளை எட்ட முடியவில்லை.

ஜிஎஸ்டி முறைமை எல்லா பொருளாதார நோய்களுக்கும் மாமருந்து என்கிறார்களே?
இன்றைய நெருக்கடிக்கான தீர்வு பொது முதலீடுகளை அதிகரிப்பது, அதன் வாயிலாக ஆதாரத் தொழில் வளர்ச்சி, விவசாயத்திற்கு புத்துயிர் சேவைகள் விரிவாக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதிலேயே அடங்கியிருக்கிறது.
யார் அதிகமாக வரி செலுத்துகிற சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனரோ அவர்களிடமிருந்து வருவாய் திரட்டலை உறுதி செய்கிற வழிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.ஆனால் சர்வதேச நிதி மூலதனமும், இந்தியப் பெரும் தொழிலகங்களும் இத்தகைய தீர்வுகளை முற்றிலும் நிராகரிக்கின்றன. 
ஆகவே இந்திய அரசாங்கம் ‘‘நிதிச் சுருக்கத்தோடு’’ காதலித்து கரம் பிடித்துள்ளது.எனினும் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை. நவீன தாராளமய கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறார்கள். இத்தகைய திவாலாகிப் போன சிந்தனையின் வெளிப்பாடே ஜிஎஸ்டி ‘‘மாஜிக்’’ பலிக்கும் என்பது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி - ஜூலை 9, 2017, இதழில் சுர்ஜித் மஜூம்தார் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்   க.சுவாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...