வெள்ளி, 30 நவம்பர், 2018

‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’


தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமத்துக்கான பணத்தைப்பெற்றக்கொண்ட பின்னரும்   அரசு வழங்கவில்லை என்பதும் அதற்கு மோடியின் அலுவலகம்தான் கரணம் என்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆனால் வழக்கம் போல் மோடி வாயை முட்டிக்கொண்டுள்ளார் .

தனியார் நிறுவங்கள் தொலைதொடர்பில் தூள் பரத்திக்கொண்டிருக்கையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மந்தமாக இயங்குவதாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அது ன்மைதான் .
ஆனால் அதற்கு காரணம் மோடியின் பாஜக அரசுதான் என்ற உண்மை தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது.பி எஸ் என் எல் நிறுவனம் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதில் மோடியின் அரசு 100% பங்கை வகிக்கிறது.
அம்பானியின் ஜியோவுக்கு மாடலாக நின்றவர்தான் மோடி.
பிரதமர் படத்தை தனியார் நிறூவனம் தனது விளம்பரத்திற்கு பயன் படுத்துவது அரசியல் இறையான்மைப்படி தவறு என்றாலும் அதை அம்பானியோ ,மோடியோ கண்டுகொள்ளவில்லை.அவர்தான் மக்களுக்கான பிரதமர் இல்லையே.கார்பரேட்களின் பிரதமர்தானே.

இந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 
காங்கிரஸ் ஆடசியில் வாங்கப்பட்ட அதி நவீன தொலைத்தொடர்பு இயந்திரங்கள் ஜியோ அப்பனையே தூக்கிசாப்பிடும் அள்வு செயல்திறன் மிக்கவை.
ஆனால் அதை மோடி அரசு பயன்படுத்தாவிட்டால் முடக்கி வைத்துள்ளது என்பது அரசாங்க ரகசியம் அல்ல.அதை செயல்படுத்த அனுமதிக்கக்கோரி பி எஸ் என் எல் பல முறை வேண்டிய பொது மோடி அரசு அமைதிக்காததால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர் .
அதனால் கோபமான மோடி 4ஜி அலைக்கற்றை உரிமத்துக்கு  பி எஸ் என் எல் 2000 கோடிகள்வரை பணம் செலுத்திய பின்னரும் வழங்காமல் உள்ளது.
இதனால் 3ஜியுடன் முடங்கி,4ஜி வழக்கமுடியாமலும் நவீன கருவிகளை செயல்படுத்தகமுடியாமலும் பி.எஸ்.என்.எல் திணறி வருகிறது.
இவை எல்லாமே பிரதமர் மோடியின் அப்பட்டமான ஜியோ ஆதரவு செயல்.அரசு பொதுத்துறை நிறுவனத்தை முடக்கி அழிக்கும் கேவலமான செயல் .
ஒரு கார்ப்பரேட் கைக்கூலி பிரதமரிடம் வேறு என்னதான் மக்கள் எதிர்பார்க்கமுடியம்.


பிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைக்கவில்லை. 
ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் காதில் விழவே இல்லை.
 மோடியின் இந்த அழித்தொழிப்பு வேலைகளை எதிர்த்து 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
 
ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலினார் நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை திட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. 
போட்டி குறைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ கண்டிப்பாகக் கால் மற்றும் தரவு கட்டணங்களை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 
இதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடியாக ,வெளிப்படையாகவே  உதவி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


4ஜி அலைக்கற்றை வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ள இந்தப் புகார்களுக்கு இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 
ரிலையன்ஸ்ச் ஜியோ வணிக ரீதியாகத் தங்களது சேவையினை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்குக் சென்று விட்டது.
போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம், அதில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் என்றும் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெஷன் திட்டம் மாற்றம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற கோரிக்கைகளும் அடங்கும்.


நரேந்திர மோடி தலைமையிலான அரசு விதிகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் தங்களது பென்ஷன் பங்களிப்பில் இருந்து பெறும் தொகையினை அளிக்காமல் வருவதாகவும் இது நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சியில் பெறும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

செப்டம்பர் 2016ல் தனது சேவைகளை துவங்கிய முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் கழுத்தறுப்பு விலை குறைப்பு காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளன. 

 தன்னுடைய வலுவான பொருளாதார பலத்தை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடக்க விலைக்கு குறைவாக தனது சேவைகளை வழங்குகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களையும் அழிப்பதே ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம். 

தனது இந்த இலக்கை ரிலையன்ஸ் ஜியோ அடைந்தவுடன் தனது உண்மை சொரூபத்தை அது காட்டும். குரல் அழைப்புகள் மற்றும்இணையதள கட்டணங்களை கடுமையாக உயர்த்துவதன் மூலம் அது மக்களை கொள்ளையடிக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கம் வெளிப்படையாக ஆதரவளிப்பது என்பதுதான் மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம். 


ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவக்கிய2016 செப்டம்பர் அன்று நாட்டின் அனைத்துமுக்கிய தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில், ரிலையன்ஸ் ஜியோவின் சேவை பயன்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி, கூப்பிய கரங்களோடுவேண்டுகோள் கொடுத்தார். 

 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிறுவனம், எனவே அதன் இலக்கை அடைவதற்கான வழியில்யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ‘தெளிவான’செய்தியை இந்த விளம்பரம் ஒட்டு மொத்த நாட்டுமக்களுக்கும் கொண்டு சென்றது. ரிலையன்ஸ் ஜியோவின் பாதையில் குறுக்கிட்டஒரு நபர் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.

அன்றைக்கு தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக் அவர்கள்தான் அது. 

 ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்த காரணத்தால், அரசிற்கு வரவேண்டிய வருமானம் குறைந்துள்ளதை அவர் தைரியமாக சுட்டிக்காட்டினார்.

 (தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயின் அடிப்படையிலேயே தான் அரசிற்கு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்களை செலுத்தி வருகின்றன)

. ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் இத்தகைய கழுத்தறுப்பு விலையினை அமலாக்கி வருவதால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக்  கடிதம் எழுதினார். 
 இதன் விளைவாக தீபக் அவர்கள் தொலைத் தொடர்பு துறையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு வணிகத் துறையில் சேர்க்கப்பட்டார். 

இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராகபேசுபவர்களுக்கு இதுதான் கதி என்பதை நரேந்திரமோடி அரசாங்கம் தெளிவாங்கியது .

இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களை அழித்தொழிக்க வேண்டும் என்கிற ரிலையன்ஸ் ஜியோவின் இலக்கை அடைவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறகுகளை வெட்டும் திருப்பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
 பிஎஸ்என்எல் நிறுவனம்100 சதவிகிதம் அரசுக்கு சொந்தமானது.
 தனியார்நிறுவனங்கள் 4ஜி சேவையை கொடுக்க ஆரம்பித்து4 ஆண்டுகள் கழிந்துவிட்டன.அரசாங்கம் 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல்-க்கு வழங்காத காரணத்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் தனது 4ஜிசேவையை துவங்கவில்லை.

 பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் (ஏயுஏபி) கடந்த ஒருவருட காலமாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

ஆனால், 
"ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஒரு பொதுத்துறை நிறுவனம் தரும் கடுமையான போட்டியை தடுப்பதற்காகவே மத்திய ஆட்சியாளர்கள் இந்தக் கோரிக்கையின் மீது கேளாக்காதினராய் உள்ளனர்"
என்பதே பி.எஸ்.என்.எல், ஊழியர்களின் குற்றசாட்டு.
உண்மையும் அதுதானே?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...