அரியானா,பஞ்சாப்,டெல்லி என மூன்று மாநிலங்களை அக்கினி தழல்களால் முட்டவைத்திருக்கும் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பற்றி சில தகவல்கள்.
இந்தியாவின் வட மாநிலமான ஹரியானாவில் உள்ள சிர்ஸாவில் தேரா சச்சா செளதா என்ற அமைப்பு உள்ளது. 1948-ஆம் ஆண்டு பலூசிஸ்தானில் இந்த அமைப்பு மஸ்தானி பலூசிஸ்தானி என்பவரால் தொடங்கப்பட்டது.
1960-ஆம் ஆண்டில் அவர் மரணம் அடைந்த பிறகு அவரது சீடரான சத்னம் சிங் தேரா சச்சா செளதா தலைவரானார்.
1991-ஆம் ஆண்டில் அவர் உயிரிழந்த பிறகு, குர்மீத் ராம் ரஹீம் சிங் டிஎஸ்எஸ் அமைப்பின் தலைவரானார்.
மதசார்பற்ற நிலை, சமமான வாய்ப்பு, உண்மை, நம்பிக்கை, கருவியான செல்வத்தை நிராகரிப்பது ஆகியவை தனது கொள்கையாக குர்மீத் சிங் அறிவித்தார்.
அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றில் சுமார் ஆறு கோடி பக்தர்கள் உள்ளதாக தேரா சச்சா செளதா அமைப்பு கூறுகிறது.
பேரிடர் மீட்பு காலங்களில் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக மருத்துவர்கள், பொறியாளர்கள், வர்த்தர்கள், மீட்புக் குழுவினர் உள்பட சுமார் 70 ஆயிரம் பேரை தன்னார்வலர்களாகக் கொண்ட ஷா சத்னம் ஜி பசுமை படையை குர்மீத் சிங் நிறுவியுள்ளார்.
பாலியலுக்கு எதிராகவும், அடிமைப்படுத்தப்படும் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இவரது அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 2009-ஆம் ஆண்டில் குரல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அவரது அமைப்பைச் சேர்ந்த ஏராமான தன்னார்வலர்கள் முன்வந்தனர்.
இதனால் அவரது அமைப்பு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள சமூக அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது.
யோகா குரு பாபா ராம்தேவ் "பதாஞ்சலி" நிறுவனம் மூலம் ஆயுர்வேத மருந்து பொருட்களை விற்பனை செய்வது போல, குர்மீத் சிங்கின் அமைப்பும் சிர்ஸாவில் இருந்தபடி ஆயுர்வேத பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது.
ராஜஸ்தானின் மோடியா பகுதியில் 1967-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி குர்மீத் சிங் பிறந்தார்.
ஆன்மிக பணிகள் மட்டுமின்றி, திரைக்கதை வசனம், இயக்கம், இசை அமைப்பு, பாடல்கள் பாடுவது ஆகியவற்றிலும் குர்மீத் சிங்குக்கு ஆர்வம் உள்ளது.
அதனால், "எம்எஸ்ஜி: மெசேஞ்சர் ஆஃப் காட்" என்ற படத்துக்கு அவரே வசனம் எழுதி, பாடல்களைப் பாடி நடித்துப் படத்தை வெளியிட்டார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது புகழ் பரவியது.
2015-ஆம் ஆண்டில் அவரது படம் வெளியானபோது, அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தணிக்கை குழு உறுப்பினர் லீலா சாம்சன் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
2001-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் ஆறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
2007-ஆம் ஆண்டில் தன்னை சீக்கிய வழியில் வந்த மத குருவாக அவர் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சீக்கியர்களின் அதிருப்திக்கு ஆளானார்.
இதன் விளைவாக அவரது அமைப்பு கிளைகளுக்கு எதிராக சீக்கியர்கள் போராட்டங்கள் நடத்தி மிகவும் தீவிரமானது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடந்தபோது, பாரதிய ஜனதா கட்சி - அகாலி தளம் கூட்டணிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை அளித்தார்.
அதற்கு முன்னதாக, 2007-ஆம் ஆண்டில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்கு குர்மீத் சிங் ஆதரவு தெரிவித்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான ஹர்மிந்தர் சிங் ஜஸ்ஸியின் மகளை தனது மகனுக்கு இவர் திருமணம் செய்து வைத்தார்.
குர்மீத் சிங் மீது இரு பாலியல் வழக்குகள், தனது ஆண் ஆதரவாளர்களுக்கு ஆண்மை நீக்க பரிசோதனை செய்ய தூண்டியதாக வழக்கு, ஆயுத பயிற்சி வழங்கியது, ஒரு கொலை வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன.
சர்ச்சைகள் நிறைந்த இவரது வாழ்வில், பல கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் உயர் ரக லெக்சஸ் சொகுசு காரை குண்டு துளைக்காத வாகனமாக இவர் வடிவமைத்தார்.
ஒரே நேரத்தில் ஆன்மிகம், அரசியல், கலை, சினிமா, இசை, ஆயுர்வேத மருத்துவம் என பல துறைகளில் ஆர்வம் காட்சியதால் குர்மீத் சிங் வெகு சீக்கிரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிரபலமானார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
"அபிஷேக் பட்டேல்" எனும் மரியாதைக்குரிய காவலர்.
சாமியார் மக்களிடம் தனக்கு உள்ள பக்தி வெறியினால் பலர் உயிரை குடித்த அதே நேரம் தன உயிரைப்பற்றி கவலை படாமல் 400 பேர்கள் உயிரை காப்பாற்றிய காவலரை பற்றியும் அறிவோம்.
இவர் தியாகம் சாமியார் கலவரத்தால் ஊடகங்கள் கண்டு கொள்ளப்படவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வைக்கப்பட்டது, இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது பள்ளி நிர்வாகம்.
உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர், அச்சமயம் வெடிகுண்டு வைக்கப்பட்ட பள்ளியில் 400 மாணவர்கள் இருந்தனர்.
10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு எப்போது வெடிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் அங்கிருந்த தலைமைக் காவலரான அபிஷேக் பட்டேல் என்பவர் சிறிதும் தயங்காமல் அந்த வெடிகுண்டை தன் தோலில் தூக்கிக்கொண்டு சுமார் 1 கிமீ தூரம் ஓடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வைத்தார்.
சினிமாக்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு செய்தித் தொலைக்காட்சியின் நிருபர் எடுத்த 12 நொடிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் வாழும் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியே தோலில் வெடிகுண்டுடன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காவலர் படு வேகத்தில் ஓடிச் சென்றது வலைத்தளவாசிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர், அச்சமயம் வெடிகுண்டு வைக்கப்பட்ட பள்ளியில் 400 மாணவர்கள் இருந்தனர்.
10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு எப்போது வெடிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் அங்கிருந்த தலைமைக் காவலரான அபிஷேக் பட்டேல் என்பவர் சிறிதும் தயங்காமல் அந்த வெடிகுண்டை தன் தோலில் தூக்கிக்கொண்டு சுமார் 1 கிமீ தூரம் ஓடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வைத்தார்.
சினிமாக்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு செய்தித் தொலைக்காட்சியின் நிருபர் எடுத்த 12 நொடிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் வாழும் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியே தோலில் வெடிகுண்டுடன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காவலர் படு வேகத்தில் ஓடிச் சென்றது வலைத்தளவாசிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தலைமைக் காவலர் பட்டேல் கூறியபோது, சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்று வெடிகுண்டு வைப்பு சம்பவம் ஒன்றின் நிகழ்விடத்திற்கு சென்ற போது அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் 500 மீட்டர் சுற்றளவில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் கூறினர்.
400 குழந்தைகளின் உயிரும் கண்முன்னே இருக்கும் போது முன்னர் நடந்த சம்பவம் மனதில் தோன்றியதாகவும் இதன் காரணமாகவே எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓடோடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வெடிகுண்டை எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
வீரதீரத்துடன், தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொதுநலனுடன் செயல்பட்ட தலைமைக்காவலர் பட்டேலிற்கு மத்திய பிரதேச காவல்துறை பாராட்டுடன், பரிசுத் தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக