வியாழன், 24 ஜனவரி, 2019

புறக்கணிக்கப்படும் "எச்.ஏ.எல்" நிறுவனம்.

துரோகத்தின் உச்ச கட்டம்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 17.1.2019 நாளிட்ட ஊடகச் செய்தியை பெருமகிழ்ச்சியோடு மறுநாளே 18.1.2019 முதல் பக்கத்தில் தீக்கதிர் தமிழ் ஏடு மட்டும் முழு தொழில்நுட்ப விபரங்களுடன் வெளியிட்டிருந்தது.
தற்காப்பு உற்பத்தியில் சர்வதேச தர மின்னணுவியலுடன் கூடிய சண்டை விமானதயாரிப்பில் இது பெருமைக்குரிய சாதனைதான். அதிகஉயரத்தில் பறந்தபடியே நகரும் இலக்கை எந்த திசையிலிருந்தும் தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் ஆயுதம் பொருத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹெலிகாப்டரின் சோதனை வெற்றிஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி உள்ளாற்றலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தமகிழ்ச்சிகரமான வெற்றிக்காக நமது டிஜிட்டல் சக்திமான் மோடிஜி அன்றைய தினமே எச்ஏஎல் நிறுவனத்தைவாழ்த்தி செய்தி வெளியிட்டிருந்தாரா இல்லையா என்பதைபிரபல செய்தித் தாள்களிலிருந்து அறியமுடியவில்லை.

எச்ஏஎல் நிறுவனத்தின் திறன்
இம்மாதம் முதல் வாரத்தில் எச்ஏஎல் முன்னாள் தலைவர் அசோக் சக்சேனா ஒரு ஆங்கில செய்திநிறுவனத்திற்கு தனது கட்டுரையை அனுப்பியிருந்தார்.
அதில் “இப்போதும் மோசமாகிவிடவில்லை; அரசுக்கும்அரசுக்குமான (இண்டர் கவர்ன்மெண்ட்டல் அக்ரிமெண்ட்) ஒரு ஒப்பந்தத்தின் மூலம் எல்லா ரபேல் ரகபோர் விமானங்களையும் நமது எச்ஏஎல் நிறுவனத்திலேயே தயாரிக்க முடியும்” என கூறியிருந்தார்.

நவீன சண்டை விமானங்களான எஸ்யு.30 எம்கேஐ (இது நமது வான்படையின் நட்சத்திர போர் விமானம் ரபேலுக்கு இணையானது) மிக் 29 பிரஞ்ச் ஜாகுவார் விமானங்களை தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தயாரித்த அனுபவமிருப்பதால் ரபேலை தயாரிப்பதற்கான நிறுவனஉள்ளாற்றல், அனுபவம், தகுதி எல்லாமே நமது எச்ஏஎல்நிறுவனத்திடம் உள்ளது.

 பிரெஞ்ச் நிறுவனமான டசால்ட்டுடன், ஒரு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் போட்டு எச்ஏஎல்-இல் ரபேல் தயாரிக்கப்பட்டால் பராமரிப்பு, பழுது பார்த்தல், அதற்கான வசதிகள், பயிற்சி வசதிகள், எஞ்சின்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, சிறந்த சிக்கன செலவின தீர்வு, புதிய விமானங்களை குறைந்த செலவில் தயாரிக்கும் வாய்ப்பு உருவாகும் எனவும் சக்சேனா எழுதியிருந்தார்.
 9.1.2019 அன்று பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரையில், எச்ஏஎல்-இன் திறன்குறித்த சந்தேகங்களை அசோக் சக்சேனா நிராகரித்துள்ளார் என்ற முன்னுரையுடன் அச்செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மோடி அரசுதான் எச்ஏஎல் குறித்த அந்த துரோக பிரச்சாரங்களை சந்தேகங்களை தொடர்ந்து செயற்கையாக உருவாக்கிவந்தது என்பதும் அந்த அழுத்தத்தில்தான் சக்சேனா தனது கட்டுரையில், தான்விரும்பும் தீர்வோடு எழுதியிருந்தார் என நாம் கருதலாம்.

பாதுகாப்பு அமைச்சரின் உள்நோக்கம்

13.9.2018 அன்று பிடிஐ நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் “முந்தையஅரசின் ஒப்பந்தத்தில் 126 ரபேல் விமானங்களை தயாரிக்க.. வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அவைகளை தயாரிப்பதற்கான திறமையை எச்ஏஎல் கொண்டிருக்கவில்லை” என்று பகிரங்கமாக கூறினார். (டைம்ஸ் குழுமச் செய்தி 13.9.2018)

தனது கார்ப்பரேட் கூட்டாளியான ரிலையன்ஸ் அம்பானிக்காகவே குறுகியகாலத்தில் நரேந்திர மோடி எச்ஏஎல் நிறுவனத்தை புறக்கணித்து அந்த வாய்ப்பினை தற்காப்பு உற்பத்தியில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வாரி வழங்கினார்.
 இது மட்டுமின்றி, மிக அதிக விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும், இந்த சண்டை விமானஊழல் விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல, தற்காப்பு உற்பத்தி மற்றும் சர்வதேச ஆயுத விற்பனை சந்தையிலும் கடந்த இரண்டு வருடங்களாக அம்பலப்பட்டு நிற்கிறது.
'தேஜஸ்' போர் விமானம்.எச்.ஏ.எல்.

சக்சேனா கட்டுரை வெளியான ஒரு வாரத்தில்எச்ஏஎல் தனது விமான பொறியியல் மற்றும் மின்னணுவியல் ஆற்றலை மோடி அரசின் கன்னத்தில் அறைந்தாற்போல் நிரூபித்துள்ளது. ரபேல் ஊழல் அம்பலமாகியிருக்கும் இத்தருணத்தில் எச்ஏஎல்-இன் இந்த வெற்றி,இந்தியா முழுவதும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 1965, 1971 யுத்த ஜாம்பவான்களுக்கும் (றுயசஎநவநசயளே) விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கும் நாட்டை நேசிக்கக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எச்ஏஎல் நிறுவனத்திற்கு திறமையில்லை என நிர்மலா சீதாராமன் தில்லி செய்தியாளர் சந்திப்பில் பேசியதையும் சக்சேனாவின் 9.1.2019 தேதியிட்ட அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தையும் எச்ஏஎல்-இன்17.1.2019 சாதனையையும் இணைத்து புத்திசாலியானஊடகவியலாளர்கள் நேரடி பேட்டி ஒன்றில் நிர்மலா சீதாராமனின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவார்களா?


எது நிரந்தர தீர்வு?

பாதுகாப்பு உற்பத்தியை லாப வெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கும் மிக மோசமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.
இது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும்சமூக வாழ்வியல் போன்ற துறைகளில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஆசிய கண்டத்தின் அமைதியை சீர்குலைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான நிரந்தர தீர்வு என்ன?அருகாமையில் ரஷ்ய - சீன அனுபவங்கள் நம் கண்முன்னே உள்ளன. உலகில் ஆயுத உற்பத்தி ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் ரஷ்யா உள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை துணை நிறுவனங்களாகவும் சந்தையில் கூட்டு பங்கு நிறுவனங்களாகவும் உள்ளன. ஆனால்அவை எல்லாம் ரோஸ்டக், யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன், யுனைடெட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் போன்றபிரம்மாண்டமான பாதுகாப்பு உற்பத்தி அரசு நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தும் ரஷ்ய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன.

பாதுகாப்பிற்காக 150.2 பில்லியன் டாலர் ஒதுக்கீடுசெய்யும் இரண்டாவது நாடு சீனா. இதில் பெரும்பகுதியை தனது சொந்த பாதுகாப்பு உற்பத்தி வளர்ச்சிக்காகசீனா செலவிடுகிறது.
உலகின் மிகச்சிறந்த 22 பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் மக்கள் சீனத்தின் அரசு நிறுவனங்களாகும். இதில் முதல் பத்து நிறுவனங்களில் சீனத்தின் அரசு நிறுவனங்களான சிஎஸ்ஜிசி, ஏவிஐசி மற்றும் நாரின்கோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
 1998லிருந்து 2017 வரை தளவாட ஏற்றுமதி 211 விழுக்காடு உயர்ந்து முதன்முறையாக உலகின்முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.


ஆரவாரமின்றி முன்னேற்றம்

சீனத்தின் அரசு நிறுவனமான செங்டு விமான தயாரிப்புநிறுவனம் ஆரவாரமே இல்லாமல் ஐந்தாம் தலைமுறை ஜே.20 ரக போர் விமானங்களை தயாரித்து தனது படையணிகளில் இணைத்து விட்டது.
 சீனத்தின் பாதுகாப்பு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்து வருவதுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் நான்காம் தலைமுறை மிக்.29 மற்றும் எஸ்யு.30 எம்கேஐ போர் விமானஉற்பத்தியில் ஏற்கனவே உற்பத்தி அனுபவம் மற்றும் உள்ளாற்றல் பெற்றுள்ள எச்ஏஎல்-ஐ புறக்கணித்து விட்டு,தகுதியில்லாத ரிலையன்சை அங்கீகரித்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திக்கும் நாட்டிற்கும் மோடி இழைத்த துரோகத்தின் உச்சமாகும்.

சர்வதேச தரஅரசுத்துறை நிறுவனங்களான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஏ) பாரத் டைனமிக்ஸ், பெல் போன்ற ஆராய்ச்சி உற்பத்தி நிறுவனங்கள்இணைந்து ராணுவத்திற்கான நாக், திரிசூல்,ஆகாஷ், பிரம்மோஸ், ப்ரித்வி போன்ற ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள், வான் தற்காப்பு மின்னணுகருவிகளை உற்பத்தி செய்து வருகின்றன.

கார்ப்பரேட்டுகளிடம் சிக்கிய ‘மேக் இன் இந்தியா’

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.
மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.

இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தென்கொரிய லிக் நெக்ஸ் ஏவுகணை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ‘மேக் இன் இந்தியா’ ஆதரவுடன் முயற்சித்து வருகிறது.

 மோடியின் மேக்இன்இந்தியா கவர்ச்சி முழக்கம் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் முக்கியஒரு தந்திரம் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை நாம் கூறமுடியும்.
இந்திய ஆயுத தளவாட உற்பத்தியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையை மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் செய்துவருகிறது.
 இந்திய பாதுகாப்பு உற்பத்தியை ஊழல்மயமாக்குவது நட்டின் பொதுநிதியை சூறையாடுவதும் பாதுகாப்பு உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்குவதோடு இணைந்தவைதான்.
                                                                                                                                                                                                                                              - சுஜித் அச்சுக்குட்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...