செவ்வாய், 8 ஜனவரி, 2019

3 கன்டெய்னர்களின் தொடரும் மர்மம் !



2016 சட்டமன்ற தேர்தலின் போது, மே 13-ம் தேதி தேர்தல் அதிகாரிகள் வாகன
சோதனையில் ஈடுபட்டபோது 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருப்பது
கண்டறியப்பட்டது.

 டெல்லியில் இருந்து அருண்ஜெடலிதான் முதலில் வாயைத்திறந்து அது வங்கியின் பணம் என்றார்.அதன்பின்னரே கோவை ஸ்டேட் வங்கி அந்த பணத்திற்கு உரிமை கோரியது.

ஆனாலும் அந்த வங்கி சமர்ப்பித்த அதற்கான ஆவணங்கள் முறையானதாக இல்லை.

கண்டெய்னர் லாரிகளின் எண்கள் தவறாக இருந்தது.
பாதுகாப்புக்கு வந்தவர்கள் காவல்துறை சீருடை இல்லாமல் அனுமதி பெறா  துப்பாக்கி வைத்திருந்தனர்.அவர்களும் காவல்துறை வாகனத்தில் வராமல் தனியார் சொகுசு கார்களில் வந்தனர்.

அதைவிட ஐயம் தந்தது.தேர்தல் பார்வையாளர்கள் அக்கண்டெய்னரை சாலையில் பரிசோதிக்க நிறுத்தியபோது வேகமாக நிறுத்தாமல் சென்றதுதான்.துரத்தியே அந்த லாரிகளை மடக்கினர்.

தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாயுடன்
பிடிபட்ட இந்த 3 கன்டெய்னர்களின் மர்மமும், உண்மையான பின்னனியும் இன்று வரை
விடை தெரியாமல் இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...