கனிமொழி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: கதறி அழுத தாயார் |
![]() |
நீதிமன்றத்திற்கு ராஜாவும் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி நுழைந்ததும், அங்கு ஏற்கனவே காத்திருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி அழுதார். அவருடன் டி.ஆர்.பாலுவும் வந்திருந்தார். நேற்று( 21ம் திகதி) பிற்பகல் டெல்லி பட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். நீதிமன்றத்தில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார். உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக வித்தியாசமாக கைப்பைகளை பயன்படுத்தும் கனிமொழி அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த பொலிசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி கனிமொழியையும், சரத்குமாரையும் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர் |
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”
டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...

-
" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...
-
டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...
-
எம்.ஜி.ஆர்.முதல்வாராக இருக்கிறார். கேரள அரசு தமிழக அரசிடம் 65 லட்சம் லிட்டர் எரிசாராயத்தை கேட்டது. முதலில் 26 லட்சம் லிட்டரும் பின்னர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக