புதன், 29 நவம்பர், 2017

சைம(சீமா)னின் கொள்கை விளக்க தத்துவம்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். 
தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. 
சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.
முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார். 
நன்றி:வினவு.

 “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.
வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.
2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். 
அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.
வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. 
சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?
கந்து வட்டி கொடுத்தாலும் ,அதை வாங்கி மீள முடியாமல் மாண்டாலும் இருவரும் தமிழினம் என்றால் எதுவுமே தப்பில்லை.என்பதுதான் சைமன் என்கின்ற சீமானின் கொள்கை விளக்க தத்துவம்.
அதுவே மார்வாடிஇன்னும்  பிற வந்தேறிகள் என்றால் கந்துவட்டி கொடுமைக்கு தூக்கிலிட வேண்டும் என்பதுதான் இதன் "உள்ளடக்கம்."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொலை வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவை ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயாவின் மரணம், கொலை என அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சொராபுதீன் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயா. 

அவரது உறவினர்கள், ‘காரவன்’ என்கிற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தகுற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். 
2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நீதிபதி பி.எச்.லோயாவின் உடல், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் சக நீதிபதியின் மகளது திருமண விழாவில்பங்கேற்க லோயா சென்றிருந்தார். 
முதல்நாள் இரவு 11 மணிக்கு மனைவி ஷர்மிளியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அன்றைய தினம் நடந்தவற்றை அப்போது மனைவியிடம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் அரசுவிருந்தினர் மாளிகையான ரவி பவனில் சக நீதிபதிகளுடன் உள்ளதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு மறுநாள் காலை அவரது மரணச்செய்தியைத் தான்அவரது குடும்பத்தினரால் கேட்கமுடிந்தது. மாரடைப்பை தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அவரது உடல் நலம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
நாட்டில் மிகப்பெரும் விவாதத்துக்குள்ளான சொராபுதீன் என் கவுண்ட்டர் வழக்கை மட்டுமே அந்தநேரத்தில் லோயா விசாரித்துவந்தார். 

நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை 2005-06 காலகட்டத்தில் நடந்த 2 என்கவுண்டர் கொலைகளில் குற்றவாளியாக சிபிஐ சேர்த்திருந்தது. 
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த சொராபுதீன் ஷேக்கையும் அவரு மனைவி கொளசர்பீஷயையும் குஜராத் காவல்துறையினரின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் 2005 நவம்பரில் கைது செய்து காவலில் எடுத்துக்கொண்டனர். பின்னர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டி போலி என்கவுண்டர் நாடகத்தின் மூலமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். 
 இச்சம்பவத்தில் சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006 டிசம்பரில் கொலை செய்யப்பட்டது அமித்ஷா மீதான இரண்டாவது வழக்காகும்.
வழக்கு விவரங்களை ஒற்றை நீதிபதி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மூன்று நீதிபதிகள் மாறிமாறி வந்தனர். 
சாட்சிகளிடம் விசாரணை நடத்தத் தொடங்கி ஓராண்டு கடந்தபின்னர் 2014 ஜுனில் முதல் நீதிபதி ஜெ.டி.உல்பதி மாற்றப்பட்டார்.

அடுத்து லோயா வந்தார். அவரதுமரணத்திற்கு பிறகு வந்த எம்.பி.கோசவி, தன்னை குற்றமற்றவராக கோரும் அமித்ஷா தரப்பு வாதத்தை 2014 டிசம்பர் 15 முதல் 3 நாட்கள் கேட்டார். 
டிசம்பர் 30இல் 75 பக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் அமித்ஷா அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
  • லோயாவின் உடலைப் பார்த்த போது ரத்தத் துளிகள் அவரது உடைகளில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தலையின் பின்பக்கம் அடிபட்டிருந்தது.பெல்ட் எதிர்பக்கமாக திரும்பியும், முழுக் கால்ச்சட்டையின் பெல்ட் சொருகும் கிளிப்புகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டன.
  • மறு உடற் கூராய்வு நடத்துவதற்காக அவரது சகோதரியும் மருத்துவருமான பியானி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் லோயாவின் நண்பர்களும்சக நீதிபதி உள்ளிட்டோரும் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனகேட்டுக்கொண்டனர்.
  • விருந்தினர் மாளிகையிலிருந்து லோயாவை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அன்று இரவு அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த விருந்தினர் மாளிகையிலிருந்து அதிக தூரத்தில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. உடனடியாக ஆட்டோ கிடைப்பதும் சிரமம். அந்த நள்ளிரவில் எப்படி ஆட்டோ பிடித்தார்கள் என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 அது மட்டுமல்ல, லோயாவை மருத்துவமனையில் அனுமதித்த போதும் உடனிருந்தவர்கள் குடும்பத்தினருக்கு விவரம் தெரிவிக்கவில்லை. 
லோயாவுக்கு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவும் செய்துள்ளது. 
மருத்துவமனை ஊழியர்களும் லோயாவுடன் இருந்தவர்களும் காவல்துறையினரும் நடந்துகொண்ட விதம் சந்தேகமளிக்கும் விதத்தில் இருந்ததாக, பியானி கூறினார். சிறிய அளவில் இருமல் வந்தால் கூட, மருத்துவரான தன்னைச் சந்திக்கும் லோயாவுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு உடல்நிலை இருந்ததில்லை எனவும் பியானி தெரிவித்துள்ளார்.
லோயாவின் உடற்கூராய்வு அறிக்கையில் ரத்த சம்மந்தமுள்ள சகோதரர் கையெழுத்து பதித்துள்ளதாக ஆவணங்களில் காணப்படுகின்றன. ஆனால் அதுபோன்ற ஒரு உறவு தங்களுக்கு இல்லை எனவும், கையெழுத்திட்ட நபர் குறித்து எந்தவிவரமும் தெரியாது எனவும் பியானி தெரிவித்துள்ளார். 
ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளரான ஈஸ்வர் பஹேட்டி என்பவர்தான் லோயாவின் மரணத்தை அவரதுஉறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.  இவருக்கும் லோயாவுக்கும் என்ன தொடர்பு என்கிற விவரமும்குடும்பத்தினருக்கு தெரியாது. 
நான்கு நாட்களுக்குப் பிறகேலோயாவின் செல்போன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லோயாவின் மரணச் செய்தியை ஊடகங்கள் உரிய முறையில் கையாளவில்லை.
சொராபுதீனின் சகோதரர் ரூபாபுத்தீன் நீதிபதியின் மரணம்தொடர்பாக சிபிஐக்கு கடிதம் எழுதியிருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...