வியாழன், 18 ஜூன், 2015

ஈழத்துரோகி கருணாநிதி?

ஈழத்துரோகி



கருணாநிதி?

"ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க கருணாநிதி தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், 

"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃ
பார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.


இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.

அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், "எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் துரோகம் செய்தார்" என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேசுகிறார். துரோகம் செய்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

"அ.தி.மு.க. அரசு துரோகம் இழைக்கிறது" என்னும் தலைப்பின் கீழ் உள்ள இணைத்துள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டி "தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது" என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு.க.வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.க. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அங்கு சென்று தன் தரப்பு வாதத்தை அழகாக அழுத்தம் திருத்தமாக மத்திய அரசாங்கத்திற்கு எடுத்து வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதை தட்டி கழித்துவிட்டு பழனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதில் கலைஞரை குறை கூறுகிறார்.

இன்று தமிழகத்தில் ஈழ வியாபாரிகள் சீமான் [எ]சைமன் ,வேல்முருகன்,பழ.நெடுமாறன்,போன்றோருக்கு தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவை திட்டுவதை விட,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவை திட்டுவதை விட ஈழத்தமிழர் பிரச்னைக்காக இருமுறை பதவியை இழந்த ராஜீவ் காந்தி கொலையான போது எதோ இவர்தான் கொன்றது போல் கடும் அடக்குமுறைக்கு ஆளான கருணாநிதியை திட்டுவதும்-புழுதி வாரி தூற்றுவதும் எளிதாக இருக்கிறது.வாங்கிய காசுக்கு விடுதலைப் புலிகளுக்கு,மாவீரன் பிரபாகரனுக்கு  எதிரானவரை ஈழத்தாய் என்பதிலேயே அவர்களின் வியாபரத்தந்திரம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இப்போது கனி மொழி கூறியதாலேயே விடுதலைப்புலிகள் துப்பாக்கியை விட்டு விட்டு சரணானதாக புதுக்கரடி வந்துள்ளது.இவ்வளவு நாள் கழித்து வரக் காரணம்  ரா.கி.நகர் இடைத்தேர்தல் .
என்னவோ விடுதலைப்புலிகள் பிரபாகரனை விட கனி மொழியின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் போல் இந்த கரடி கத்திக்கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு இணக்கமாக இருந்த பிரபாகரன் கடைசிவரை கருணாநிதியை கண்டு கொள்ளவே இல்லை.
டெசோ மாநாடு நடத்தி ஈழப் போராளிகளுக்கு நிதி வழங்கிய போது கருணாநிதியிடம் இருந்து நிதி வாங்க மறுத்தவர் பிரபாகரன்.
கருணாநிதிதான் ஈழப் போராட்டத்துக்கு தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காக வலிய சென்று ஆதரவினை அளித்து ராஜீவ் கொலையால் அசிங்கப்பட்டு பதவியையும் இழந்தார்.
ஆனால் விடுதலைப்புலிகள் கருணாநிதியை அவர் ஆதரவை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.அதுவும் உலகறிந்த உண்மை.
அப்படி பட்ட புலிகள் கருணாநிதி மகள் என்ற காரணத்தால் கனி மொழி அறிவுரைப்படி நடந்து கொண்டார்கள்,சரணடைந்தார்கள் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை,அல்லது புளுகு என்பது வெளிப்படை.

இந்த அளவுக்கு கருணாநிதி மீது சேற்றை அள்ளி வீசக் காரணம்.

அவர் இந்த 92 வயதிலும் தமிழினத்தலைவராக இருப்பதுதான்.
அவரைக் கண்டு இன்னமும் தமிழின விரோதிகள் பயப்படுகிறார்கள் என்பதுதான்.
கருணாநிதியை சுற்றித்தான் இன்னமும் தமிழக அரசியல் சுழலுகிறது என்பதையே இந்த புளுகுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வேறு காரணம்.
இப்போதைக்கு இல்லை.
==================================================
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று செண்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்களுக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.
இதே வேளை தலைநகர் காட்மாண்டு நகரமும்கூட தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் மீதும் ஏறும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...