காமராஜரை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
காமராஜர் படத்தில் வேகமாக சென்ற லாரி மழை சகதியை அடித்ததை காமராஜரை அவமானப்படுத்தியதாக சாலை மறியல்,போராட்டம் என்று பரபரப்பாக்கிய சாதி மோதல் உருவாக்க எண்ணிய எர்ணாவூர் நாராயணன்தான் காமராஜருக்கு இந்த அவமரியாதையை செய்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளை கொண்டாட அவர் வயதை குறிக்கும் வகையில் எடையில் கேக் செய்து
வெட்டி கொண்டாடுவது சரியாகும்.ஆனால் இந்த எர்ணாவூர் கும்பல் செய்தது என்ன?
காமராஜர் உருவம் என்று கேக்கில் அசிங்கமாக முண்டம் போன்ற ஒன்றை செய்தனர்.
அத்துடன் விட்டால் பரவாயில்லை அதை கத்தியால் குத்தி புகைப்படம் எடுத்து விட்டு காமராஜர் உடல் உறுப்புகளை(கேக்கைத்தான்) ஒவ்வொன்றாக வெட்டி அனைவருக்கும் கொடுத்து நின்றனர்.
இதுதான் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டமாம்.
இதற்கு மேல் பெருந்தலைவரை யாராவது அசிங்கம்,கொடுமை படுத்தமுடியுமா?
காமராஜர் சிலை சேதமானால் பொங்குகிற நாம் அவரது மற்றோரு வடிவமாக கேக்கில் செய்த காமராஜரை சின்னாபின்னமாக்குவதற்கு என்ன செய்யலாம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக