வரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது.
‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.
என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.
சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.
தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!
மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!
போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.
ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.
” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?
உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?
கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?
-துரை.சண்முகம்
நன்றி:வினவு.
உலக அளவில் பல்வேறு நாடுகளில்,மதுவிலக்குக் கொள்கை தள்ளாடி தள்ளாடித் தான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஏன் என்றால் மதுவிலக்குக் கொள்கை அல்லவா?
இதே மதுவிலக்குப் பிரச்சினையிலும் மாறி மாறி முடிவு எடுக்கப்பட்டதற்கு சில உதாரணம் கூறுகிறேன்.
அமெரிக்க நாட்டிலே 1919ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16ஆம் நாள் அரசியல் சட்டத் தையே திருத்தி,
மதுவிலக்குச் சட்டத்தை அமலுக் குக் கொண்டு வந்தார்கள். ஆனால் 1938ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்
20ஆம் தேதியன்று மதுவிலக்குச் சட்டம் அங்கே ரத்து செய்யப்பட்டது.பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டு மது விலக்குச் சட்டம் கொண்டு வரப்பட்டது; 1932இல் அந்த நாட்டில் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நார்வே நாட்டில் 1919ஆம் ஆண்டு மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது; அது 1927இல் ரத்து செய்யப்பட்டு விட்டது. நியூபவுண்ட்லாண்ட் நாட்டில் 1915இல் மதுவிலக்கை அமல் செய்தார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள். துருக்கியில் 1920இல் மதுவிலக்கை அமல்படுத்தினார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள்.
அமெரிக்க நாட்டிலே 1919ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16ஆம் நாள் அரசியல் சட்டத் தையே திருத்தி,
மதுவிலக்குச் சட்டத்தை அமலுக் குக் கொண்டு வந்தார்கள். ஆனால் 1938ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்
20ஆம் தேதியன்று மதுவிலக்குச் சட்டம் அங்கே ரத்து செய்யப்பட்டது.பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டு மது விலக்குச் சட்டம் கொண்டு வரப்பட்டது; 1932இல் அந்த நாட்டில் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நார்வே நாட்டில் 1919ஆம் ஆண்டு மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது; அது 1927இல் ரத்து செய்யப்பட்டு விட்டது. நியூபவுண்ட்லாண்ட் நாட்டில் 1915இல் மதுவிலக்கை அமல் செய்தார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள். துருக்கியில் 1920இல் மதுவிலக்கை அமல்படுத்தினார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள்.
1971இல் தி.மு.கழகம் மதுவிலக்குக் கொள்கையை ஒத்தி வைப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் மது விற்பனை
செய்யப்படவில்லையா? என்றால், விற்பனை செய்யப்பட்டுத்தான் வந்தது.
பெரிய பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், ஏன் நடுத்தர மக்கள் கூட மது அருந்துவதற்கான "பர்மிட்"களை வாங்கிக் கொண்டு,
மதுக்களை விற்பனை செய்யும் கடைகளிலிருந்து மது வகையறாக்களை வாங்கி அருந்திக் கொண்டு தான்இருந்தார்கள்.
மதுக்களை விற்பனை செய்யும் கடைகளிலிருந்து மது வகையறாக்களை வாங்கி அருந்திக் கொண்டு தான்இருந்தார்கள்.
வசதி குறைந்தோர், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்களிடம் வாங்கிக் குடித்தார்கள்.
எனவே முன்பு எந்தக் காலத்திலும் மது இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுதந்திரம் பெறு வதற்கு முன்பே கூட,மது விற்பனை நடந்து கொண்டிருந்ததால்தான், அண்ணல் காந்தி அடிகளே கள்ளுக் கடை மறியல் என்றபெயரால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார்.
எனவே முன்பு எந்தக் காலத்திலும் மது இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுதந்திரம் பெறு வதற்கு முன்பே கூட,மது விற்பனை நடந்து கொண்டிருந்ததால்தான், அண்ணல் காந்தி அடிகளே கள்ளுக் கடை மறியல் என்றபெயரால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார்.
தந்தை பெரியார் அவர்களே கள்ளுக்கடை மறியல்செய்ததோடு, தனக்குச் சொந்தமான தோப்பில்கள் இறக்குவதற்கான 500 தென்னை மரங்களை யெல்லாம்வெட்டிச் சாய்த்தார்.இதெல்லாம்தான் வரலாறு.
ஆனால் தினமனி,தினமலர் போன்ற ஜெயலலிதா ஆதரவு ஊடகங்கள் மது விலக்கு கொண்டுவந்து திமுக பெயர் ,பலன் அடைன்து விடக் கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு சேற்றை வாறி வீசுகின்றன.
-கலைஞர்.
We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
பதிலளிநீக்குCall or whatsapp +91 9945317569