முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர்
செயற்கை கொள் மூலமாக நாம் வாக்களிக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை
கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்பு இன்றைய முதல்வர் ஜெயலலிதா ,ராம்தாஸ்
போன்றாவர்கள் கூட வாக்குப்பதிவு எந்திரம் ஒரு மோசடி என்று
சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தான் வென்ற பிறகு ஜெயலலிதா அப்படி பேச
வில்லை.
இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில்
ஏமாற்றுவேலை செய்வது மிக எளிது அப்படியும் நடக்கிறது. அதற்கு ஆதாரம் http://indiaevm.org
அமேரிக்கா போன்ற முன்னேறிய மேலை
நாடுகளில் எல்லாம் இன்றுவரை வாக்குப்பதிவு எந்திரம் பயன்
படுத்தப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒரு முறை
மட்டும் பயன்படுத்தியது பிரான்ஸ் மட்டும். அதுவும் இப்போது பழைய காகித முறைக்கே மாறி விட்டது.காரணம்
வாக்குப்பதிவு எந்திரம் தில்லு,முல்லுக்கு இலக்காகி விடும்
என்பதுதான். அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர்,நிதியமைச்சர்,உள்துறை
அமைச்சராக முடியும். இன்றைய அமெரிக்க விருப்பம் மோடி மற்றும் பாஜக..அதனால்தான்
பாஜக தானும் புதிய பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பதாகவும்,அந்நிய மூலதனத்தை இன்னமும்
அதிகரிக்கப்போவதாகவும் ,சில்லறை வர்த்தகத்தில் அந்நியர்களை வரவேற்பதாகவும் தேர்தல்
வாக்குறுதிகளை தந்துள்ளது. காங்கிரசு செய்ததையே இவர்களும் செய்யப்போகிறார்கள்
என்றால்
மோடிக்கும்,மன்மோகனுக்கும் என்ன வித்தியாசம்.? மக்கள் ஏன்
மோடியை தேர்ந்தெடுக்க வெண்டும்? அமெரிக்க கைவண்ணம் அங்குதான் ளிர்கிறது . இந்த
பத்தாண்டு காலம் மன்மோகன் அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடி செய்த வேலைகளால்
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து விட்டது.நடுத்தட்டு மக்கள் என்றிருந்த ஒரு பிரிவு
கீழ்த்தட்டு நோக்கி பொய் கொண்டிருக்கிறது. விலைவாசி எற்றம் ,அந்நிய வர்த்தகம்
அனைவரையும் கோபப்படவைத்து விட்டது. அம்பானி போன்ற பணமுதலைகள் திமிங்க்களங்க்களாக மாறி
விட்டன. இது மக்களை மேலும் ஏழை-பணக்காரன் வேறுபாட்டை அதிகரித்து
அல்லல்படவைத்துவிட்டது. மன்மோகன் -காங்கிரசின் மீது மக்களுக்கு எற்பட்ட கோப
அலையை கணித்த அமெரிக்கா தனது பிரதமர் நாற்காலி பொம்மையை மாற்ற தீர்மானித்து
விட்டது. அதற்கு மாற்று குஜராத்தில் அந்நிய மூலதனங்களுக்கு வாசலை முழுமையாக
திறந்து விட்ட மோடி. காங்கிரசுக்கும்,பாஜகவுக்கும் இந்துத்துவாவை தவிர வேறுபாடு
ஒன்று மில்லை.இரண்டுமே முதலாளிகளுக்கு லாலி பாடும் வலது சாரிகள்.காங்கிரசை விட பாஜக
தீவிர வலது சாரி.போதாதா.?அமேரிக்கா போட்டு தந்த அதி தொழில் நுட்ப விளம்பரம் மூலம்
மோடி குஜராத்தை விட்டு வெளியேறி இந்தியாவை காப்பற்ற உருவெடுத்த பரமாத்மா வாக ஒரே
நேரத்தில் அனைத்து ஊடகங்கள்,இணைய தளங்கள் ,சமுக வலைகள் அலற ஆரம்பித்தன. குஜராத்தில் பாலாரும்-தேனாறும் ஓடவைத்த மோடியே இந்தியாவை
கடைத்தேற்ற வந்தவர் என்று காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். தங்களை படித்த நாளும்
தெரிந்த மேதாவிகள் என்று எண்ணி திரிந்தவர்கள் கூட இந்த விளம்பர அலையில் மூழ்கி
காணாமல் போய்விட்டனர். ஆக அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்து விட்டது.இந்தியா
இறையாண்மையும்-வாக்களித்த மக்களும் மீண்டும் தோற்று விட்டனர்.
தாங்கள் எண்ணியபடி வாக்குகளை பதிய வைக்கும் எந்திரம்
மூலமெ மின்னணு வாக்குபதிவை நடத்த வைகிறார்கள் . வாக்குப்பதிவை அவ்வாறு செய்ய
வைக்கமுடியுமா என்பவர்கள் இந்த தளத்துக்கு சென்று பார்க்கலாம். .http://indiaevm.org
மோடியின் இந்த இமாலய வெற்றியின் பின்னால் இது போன்ற
மோடி வித்தைகள்
உள்ளன . -------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக