ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வரவேற்கத்தக்கது

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான்.
suran.
பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது.
ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது.
இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா?
கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்.
ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி பணம் கொடுத்தவனுக்கு கொடுக்க காவல்துறை,பறக்கும்படை பாதுகாப்பு.
பணம் வாங்கியவனுக்கு கையில் காப்பு என்பது விசித்திரம்.
சரி.அதுதான் இருக்கட்டும்.
இரண்டாவது.தேர்தல் வாக்குப்பதிவை வைகாசி பிறக்கும் வரை ஒத்திப்போடவேண்டும் என்ற தமிழக மக்கள் ஆவலை மீறி அதற்குள் வாக்குப்பதிவை நடத்தி முடித்தது.
suran-dinamalar
இதனால் பழைய குருடி கதவை திறடி என்று மீண்டும் மின்வெட்டு தமிழகத்தை தேர்தல் ஆணையம் கையில் இருந்து தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதே.
25ம் தேதி முதல் எங்கள் பகுதியில் 6 மணி நேரம் மின் வெட்டு மீண்டும் வந்து மக்கள் உடலையும் ,மனதையும் கொதிக்க வைத்து வருகிறது.
இதற்காக த்தான்  வைகாசி வரை பிரச்சாரம் செய்ய அவகாசம் கொடுத்து காற்றடி காலம் துவங்கியதும் வாக்குப் பதிவை வைத்திருந்தால் இப்படி மக்கள் புழங்கி சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஜெயா அரசு கடனை உடனை வாங்கி மின்தட்டுப்பாடு வராமல் பார்த்து கொண்டிருந்திருக்கும்.அதை கெடுத்தது தேர்தல் ஆணையம்தான் .
எப்படியோ அதிமுகவினர் தங்களை அதிரடி தோல்வியில் இருந்து காத்துக்கொள்ள மட்டுமே தேர்தல் ஆணைய செயல் பாடுகள் பயன் Photo: மீண்டும் பல மணிநேரம் இருட்டு தேர்தல் முடிந்தது மின்வெட்டு வந்ததுநெல்லை:தமிழகத்தின் மின் தட்டுப்பாடு கடந்த 2 மாதமாக அதிக  அளவில் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கியதால் ஆளுங்கட்சிக்கு மின்வெட்டு பெரும் நெருக்கடியாக  இருந்தது. இதையடுத்து, வெளியிலிருந்து கொள்முதல் செய்யப்படும்....- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=89291பட்டுள்ளது.மக்கள் நலனுக்கல்ல.

இதன் கடைசியில் ஒரு பொன் மொழி.இது ஜெயலலிதாவுக்கு .
"இந்த மக்களவை தேர்தலில் உங்களுக்கு கிடைத்த சில இடங்களும் உங்கள் செல்வாக்கிலோ,ஆட்சித்திறமையிலொ கிடத்ததல்ல .உங்கள் தொண்டர்கள் கண்விழித்து காசு கொடுத்து வாங்கியதுதான்.
உங்கள் ஆட்சி-நிர் வாகத்திறமையை பற்றி தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க போக முடியாமல் திணறிய உங்கள் வேட்பாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக பன்னீர் செல்வத்திடமிருந்து.
தஞ்சாவூரில் முகவர்கள் சென்ற பிறகு அதிமுகவினர்களை வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்ட முத்திரையை நீக்கி நோண்டிய  மண்டல  அலுவலர் மீது நடவடிக்கையும் இல்லை .அங்கு மீண்டும் வாக்குப்பதிவு இல்லை என்கிற பிரவின்குமாரின் நடுநிலை செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.[ஜெயா கட்சியினரால் மட்டும்.}
suran-Sasi Kumar's photo.

பதில் மரியாதை...
  
 பஞ்சாப் மாநில, தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தன் காலில் விழுந்து வணங்கிய, பெண் வேட்பாளருக்கு பதில் மரியாதை செலுத்திய மோடி. ...
 
 மேலும் படிக்க : http://election.dinamalar.com/photo.php?id=257163

"கும்பிடே சரியில்லையே?"பாரத்து மோடியிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ,!"
Photo
------------------------------------------------------------------------------------------------------------------------





 
 
 
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...