சனி, 16 நவம்பர், 2013

த[நெ ]டு மாறன்

முள்ளி வாய்க்கால் முற்றம் இன்று பரபர பிரச்னையாக உள்ளது.
இதுவரை கருணாநிதியின் ஈழப்பாசத்தை வேசம் என்றும் ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று கொண்டாடியவர்கள் முகத்தில் ஒரு டன் கரி.
ஜெயா அரசு முற்றத்தின் சுற்று சுவரை இடித்ததை கூட மத்திய அரசின் கட்டாயத்தால் தமிழக அரசு செய்து விட்டதாக தன்னை மாவீரன் என்று கூறிக் கொள்ளும் ப.நெடுமாறன் வகையறாக்கள் சொல்லிக்கொண்டு சிறையில் புலம்புகிறார்கள்.suran
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இருமுறை பதவி இழந்த கருணாநிதி திட்டமிட்ட ஈழத் துரோகி பட்டத்தால் இம்முறையும் பதவியை இழந்தார்.ஈழப்பிரச்னை மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை முறைகேடும் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
ஆனால் எவ்வளவு காலம்தான் நானும்  நல்லவராக நடிப்பது என்று இப்போது தனது ஈழப் பாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.
இது கொஞ்சம் தான் இன்னமும் நெடுமாறன்,சீமான் போன்றோர் பார்க்க வேண்டிய வை இருக்கிறது.அது ஏற்கனவே வைகோ பார்த்து அதிர்ந்த பக்கம்தான்.ஆனால் வைகோ ரோசம்,மானம் இழந்து அவரை இடையில் சிறிது காலம் அன்பு சகோதரியாக்கி அழகு பார்த்து இப்போது மீண்டும் பாசிஸ்டாக பிரகடனம் செய்து வருகிறார்.
நெடுமாறன் திரையில் வடிவேலு செய்ததை முற்றத்தில் செய்து வருகிறார்.தன்னை ஜெயா அரசு சிறையிலிட்டாலும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டார் என்று புளகாங்கிதமடைந்துள்ளார் .
செந்தமிழன் சீமானோ பிழைக்கத்தெரிந்த புரட்சியாளர்.
முற்றம் பிரச்னையில் நாம் தமிழர் தொண்டர்கள் அடி பட்டு ரத்தம் சிந்தினாலும் தான் மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்று சஷ்டி விரதம் இருக்கிறார்.
அவருக்கு கருணாநிதி ஆட்சிக்கும் -ஜெயலலிதா ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியும்.
அதை விட முக்கியமாக இருவரில் யார்  ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்ற உண்மையும் தெரியும்.அதனால் அடக்கி வாசிக்கிறார் .அடங்கிப் போயுள்ளார்.
கருணாநிதி ஒருநாளில் புழலில் இருந்து வெளியெ விட்டு விட்டார்.
ஆனால் திடீர் ஈழத்தாய் ??
வைகோ முன்னுதாரணம் இருக்கிறதே?
ஒன்றை மட்டும் இன்னமும் இந்த நெடு மாவீரனையும்.செந்தமிழனையும் நம்பி ஈழப்பிரச்னையை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
முள்ளி வாய்க்கால் முற்றம் சுற்று சுவர் -பூங் காவுக்கு ஒப்பந்தம் போட்டு இடம் கொடுத்தவர் கருணாநிதி.
அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடித்து தூள் கிளப்பியவர் ஜெயலலிதா,
சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனத்தீர்மானம் நிறைவெற்றிக்கொண்டே முற்றத்தில் அவர் கரசேவை நடந்துள்ளது.
அது மட்டுமல்ல வேதனை  நெடுமாறன் இன்னமும்  மாவீரன் பிரபாகரனுடன் தான் கதைப்பதாக கதை விட்டு தன்னை முன்னி லை ப்படுத்துவதுதான்.
மாவீரன் பிரபாகரன் நிச்சயம் இன்னமும் வாய் மூடி ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவர் அல்ல.அதாவது இந்த நெடு,சீமான் போன்ற அடக்குமுறைக்கும்,சிறைக்கும் அஞ்சும்  கோழை அல்ல.தான் இருப்பதை எவ்வாறாவது -எவ்வகையிலாவது.இதற்குள் தெரிவித்தித்திருப்பார்.
ஆனால் அதற்கு இயலா உடல் நிலையில் இருப்பாரானால் இங்கு நடக்கும் ஈழ வியாபரத்தை கண்டு கொதி நிலையில் தான் இருப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...