வியாழன், 1 ஆகஸ்ட், 2013

"தந்தி டிவி"கூத்து

“தந்தி டிவியில என்ன நடக்குது ? “ என்றான் வடிவேல்.

“தந்தி டிவியில பெரிய கூத்து நடக்குது. “ என்று சொல்லி சிரித்தான் தமிழ்.

“சொல்லிட்டு சிரிடா… “

“தந்தி டிவியில ரங்கராஜ் பாண்டேன்ற நபர் ஆசிரியரா இருக்கார். அவரால பெரிய குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. இவர் வெளிப்படையான ஆர்எஸ்எஸ்காரர். பீகார் மாநிலத்தை பூர்வீகமா கொண்டவர். இதுக்கு முன்னாடி, தினமலர்ல தலைமை நிருபரா இருந்தார்.

மூவர் உயிரைக் காப்பதற்காக, தீக்குளிச்சு உயிரிழந்த செங்கொடியைப் பத்தி காதல் தோல்வியால தீக்குளிச்சாங்கன்னு செய்தி போட்ட புண்ணியவான். இவரை பூபதின்றவர்தான் தந்தி டிவிக்கு எடுத்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராத்தான் எடுத்தார். ஆனா, இவர் தன்னுடைய உள்குத்து திறமையால ஆசிரியரா ஆயிட்டார்.

இவரை வேலைக்கு எடுத்த ஜெயசீலன், வேலையை விட்டுப் போகும்போது இவனை மாதிரி ஒரு மோசமான ஆளை பாத்ததேயில்லன்னு சொல்லிட்டுப்போயிட்டார்.

தன் கூட வேலை பாக்கற யாரா இருந்தாலும், அவங்களை மட்டம் தட்டி முன்னேற விடாம பண்றதுல ரங்கராஜ் பாண்டே கில்லாடி. தன்னோடு இந்து மத வெறியால, மாற்று சமூகத்தினரை மட்டம் தட்ற வேலையையும் பார்ப்பார்.

மை.பா நாராயணன் என்பவர் தந்தி டிவியில கேள்விக்கென்ன பதில்ன்ற நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஓரங்கட்டி, நாராயணனையும் ஓரங்கட்டுனவர்தான் இந்த பாண்டே. இதுக்கு முன்னாடி இங்க வேலை பாத்த மதிவாணனையும் இதே மாதிரி ஓரங்கட்டுனதாலதான், நான் வேலையை விட்டுப் போறதுக்குக் காரணமே, பாண்டேதான்னு சொல்லிட்டுப் போயிட்டார்.”

தந்தி டிவியை நம்பர் 2 இடத்துக்கு கொண்டு வரணும்ன்றது தந்தி டிவி நிர்வாகத்தோட நோக்கம். செய்தித்தாள்ல நம்பர் ஒன்னா இருக்கற நம்பளால நம்பர் 2 இடத்துக்கு வர முடியலையேன்ற ஆதங்கம் நிர்வாகத்துக்கு இருக்கு. ஒரு மாசத்துக்கு சேனல் நடத்தறதுக்கு 2 கோடி செலவாகுது. ஆனா விளம்பர வருவாய் வெறும் 70 லட்சம் மட்டும்தான்.

குறைந்தபட்சம் ஃப்ளாஷ் நியூஸ்களை வேகமாகக் கொடுத்தால் கூட, பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதைக் கூட செய்ய விடாமல் தடுக்கிறார் பாண்டே. தனக்கு பிடித்தமான முக்கியமான செய்திகளை மட்டும், வருமாறு பார்த்துக் கொள்கிறார்.

பாண்டேவுக்கு அர்நப் கோஸ்வாமி போல ஆக வேண்டும் என்ற விருப்பம். இதனால், நேர்முகத்துக்கு வருபவர்களை பேசவே விடாமல், இவரே பேசிக் கொண்டிருப்பார்.

இவர் மீதுள்ள இன்னொரு குற்றச்சாட்டு, தமிழக பிஜேபி நிர்வாகியான வானதி ஸ்ரீநிவாசனை அடிக்கடி நிகழ்ச்சிக்கு அழைப்பது. கிட்டத்தட்ட வானதி ஸ்ரீநிவாசனை தந்தி டிவியின் நிலைய வித்வானாகவே ஆக்கி விட்டார்.”

”இவர் ஏன் பிஜேபிக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்… ? ”

”ரெண்டு காரணம். ஒன்று இவர் ஆர்எஸ்எஸ் என்பதால், அதைச் செய்கிறார். இன்னொன்று, இரண்டு பேருக்கும் இது வசதி அல்லவா ? வானதி ஸ்ரீநிவாசன் அடிக்கடி தொலைக்காட்சியில் வந்தால் அவர்தான் தமிழக பிஜேபியின் ஒரே முகம் என்று அவருக்கு பலன். இப்படி செய்வதால், பிஜேபி தலைவர்களிடம் ரங்கராஜ் பாண்டேவின் பெயரை அறிமுகம் செய்து, இவரை ராஜ்ய சபை எம்.பியாக்கலாம் என்ற திட்டமும் உண்டு. பாண்டேவுக்கு எம்.பியாக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. ”

”சரி தந்தி நிர்வாகம் ஏன் இதை அனுமதிக்குது ? ”

”பாண்டே என்னும் பூனைக்கு மணி கட்டுவதற்காகத்தான், சன் டிவி ராஜாவை நியமிக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். தந்தி டிவியை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வருவதற்கு சரியான ஆள் ராஜாதான் என்று தந்தி டிவி மேலிடம் முடிவெடுத்தது. ”

”ராஜாவுக்கு சன் டிவியில சீட்டை கிழிச்சுட்டாங்களா ? ”

”இன்னும் முழுசா கிழிக்கலை. கிழிக்கப் போறாங்க. இப்போ அதுக்காகத்தான் ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்திக்கிட்டு இருக்காங்க. இந்த விசாரணை முடிஞ்சா தன்னை வேலைக்கு எடுத்துடுவாங்கன்னு ராஜா நினைச்சுக்கிட்டு இருந்தார். ஆனா சன் டிவி நிர்வாகத்தைப் பாத்துக்கிற கலாநிதி மாறனோட மகள் காவ்யா நான் இதை அனுமதிக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாங்களாம். அவங்க சவுக்கு தளத்தோட வாசகர் கூடவாம்.



ராஜா வந்துட்டா நம்ப சீட்டை கிழிச்சுடுவாங்கன்னு நெனைக்கிற ரங்கராஜ் பாண்டே, ராஜா தந்தி டிவிக்கு வரப்போறார்ன்ற செய்தி பொய் செய்தி.. ராஜா மாதிரி ஆளை தந்தி டிவியில எடுக்க மாட்டாங்கன்னு செய்தியை பரப்பிக்கிட்டு இருக்கார். ”

”அப்போ ராஜா வர்றது உறுதிதானா… ? ”

”உறுதியாத்தான் இருந்துச்சு.. ஆனா, ராஜாவை தந்தி டிவியில எடுக்கறாங்கன்ற செய்தியை யாரோ ஃபேஸ்புக்ல போட்டு அது தீயா பரவிடுச்சு. இதனால, இப்படிப்பட்ட நபரை எடுத்தா நமக்கு கெட்ட பேரோன்னு தந்தி நிர்வாகம் தயங்குது. ஆனாலும், பாண்டேவுக்கு மணி கட்டறதுக்கும், தந்தி டிவியை ரெண்டாவது இடத்துக்கு கொண்டு வர்றதுக்கும், ராஜாதான் சரியான நபர்னு நினைக்கிறாங்க. ”



(டாஸ்மாக் தமிழ் 14 www.savukku.net)
suran

1 கருத்து:

  1. ஐயைய்யோ..குத்துதே கொடையுதே...எல்லா பயலுங்களுக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...