வெள்ளி, 14 அக்டோபர், 2011

 

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : அப்துல் கலாம்!

கோவை: கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்துல் கலாம் கூறினார். கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் தொழிலதிபர் ஜிகே.சுந்தரம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். பின்னர் மாணவர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு, அப்துல் கலாம் அளித்த பதில்கள்: இந்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடியின் தரத்தை சிறந்த ஆசிரியர்கள் நியமனம், போதுமான பயிற்சி, சிறந்த பாடத்திட்டம் மூலம் மேலும் மேம்படுத்த முடியும்.  இந்தியாவில் தற்போது 235 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ல் 400 மில்லியன் டன்னாக அதிகப்படுத்த வேண்டும். காற்று, சூரிய சக்தி, நீர், பயோ டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அணுமின் உற்பத்தி தவறில்லை. அணுமின்சாரம் தவிர்க்க முடியாதது. அதே நேரம் அணுமின் நிலையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் வராது என்பதையும், அதன் பாதுகாப்பையும் விஞ்ஞானிகள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...