ஞாயிறு, 31 ஜூலை, 2011


தமிழக அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்
                                            

அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் நாளை அறப்போராட்டம் நடக்கிறது.
வடசென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடும் அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ம் திகதி அறப்போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்தது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கோவையில் நடந்த பொதுக்குழுகூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மாவட்ட தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். சென்னையில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும் போராட்டத்துக்கு தி.மு.க பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமையிலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதேபோல மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க போராட்டம் நடக்கும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

போலி விசா மோசடி: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

விசா தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்த்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது, மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...