பெண்களும் ஈடுபடும் பயங்கரம் ஆபத்தான ஆசனவாய் கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்க பிஸ்கட், வைர கற்கள் போன்றவற்றை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இவ்வாறு கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த கடத்தில் பெண்களும் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
முதலில் கடத்தப்பட வேண்டிய நகை, ரத்தினக் கற்கள் போன்றவற்றை ஆணுறையில் நிரப்பி நூல் போன்றவற்றால் கட்டுகின்றனர். இதை ஆசனவாய் வழியாக உள்ளே திணித்து கடத்துகின்றனர். வாய் வழியாக என்றால், ஆணுறையை தேனில் நனைத்து விழுங்க செய்கின்றனர். 48 மணி நேரத்தில் எளிதாக வெளியே வந்து விடும். இனிமா கொடுத்தால் உடனே வந்துவிடும் என்பதால் கடத்தலுக்கு இம்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உயிருக்கு ஆபத்து இல்லை. என்றாலும், வயிற்றுவலி, குடலில் புண் போன்ற கோளாறு உள்ளவர்கள் இவ்வாறு செய்தால் தீராத பிரச்னைகளை ஏற்படுத்தும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுக்குள் ஆணுறை எதிர்பாராதவிதமாக கிழிந்தால், கடத்தல் பொருட்கள் வெளியேறி, குடலை அறுத்துவிடும் அபாயமும் இருக்கிறது. ஆபத்து இல்லை என்று கருதி பெண்களும் இத்தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக