தமிழ்நாட்டு அரசியலில் அமமுகதினகரன் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி வருவது போன்ற தோற்றம் அவரால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது மாயத்தோற்றம்தான் .
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை மட்டுமே உதாரணமாக காட்டி, அதிமுக, திமுகவை.விடவும், அமமுக பலம் மிகுந்த கட்சி என்பது போன்ற பிரச்சாரத்தை அக்கட்சியினர் செய்து வருகிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் ஆதரவாளர்கள் உழைத்த கடுமையான உழைப்பு அவர்கள் ஆற்றிய அசாத்திய தேர்தல் பணியை எவரும் குறை சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான களப்பணியாளர்கள் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் தத்து எடுத்தனர்.
குடும்பத்தில் ஒருவராகவே மாறி தினகரனின் ஆற்றலை (!) அருமை, பெருமை (?)களை பலபடச் சொல்லி தொப்பிச் சின்னத்திற்காக விநியோகித்த பணத்துடன் கூடுதல் தொகைகளும், ஒரு சில இடங்களில் 20 ரூபாய் டோக்கனும் கொடுத்து அதிமுகவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து மாபெரும்(!) வெற்றியை ஈட்டினார் தினகரன்.
அதிமுகவைப் பொறுத்தவரை கட்சி, கொடி, இரட்டை இலைச் சின்னம் திரும்பக் கிடைத்த மெத்தனத்திலும், ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்கிற மிதப்பிலும், அந்த தேர்தலில் கோட்டை விட்டுவிட்டனர்.
89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம், கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.நமக்கு கிடைத்து என்ன ஆகப்போகிறது?
தினகரன் வெற்றி பெற்றால், இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சியை கவிழ்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார் என திமுகவினர் கருதி இருப்பார்கள் போலும். தலைமையின் இந்த எண்ணம் திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களிடமும் எதிரொலித்தன் விளைவுதான் திமுக படுதோல்வி அடைந்தது.
திமுக நினைத்தது போலவோ, தினகரன் கருதியது போலவோ எதுவுமே நடக்கவில்லை. இ.பி.எஸ், வெகு சாமர்ததியமாக சற்றேறக்குறைய இரண்டு ஆண்டு ஆட்சியை கொண்டு சென்று விட்டார். காரணம் டெல்லியின் ஆசி.
அதிமுக வை கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தில் கால் பாதிக்க எண்ணுகிறது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி யை பொம்மை முதல்வராக வைத்துக்கொண்டு மோடி,அமித் ஷா தமிழ்நாட்டை ஆள்வதாக கூறுவது உண்மை என்றே ஆகிறது.அடிக்கடி முதல்வர் டெல்லி சென்று மோடியை ஆலோசித்து விட்டு வருவது தெரிகிறது.
மோடி ஆசியுடன் தொடர்ந்து 2021 என்ற ஆட்சியின் நிறைவுக்காலம் வரை கொண்டு சென்று விடுவார் என்றுதான் தெரிகிறது.
முதல்வர் முதல் அதிமுகவினர் ஊழல்கள்,முறைகேடுகள் தொடர்பாக எதிர் கட்சிகள் ஆளுநர்,பிரதமரிடம் தரும் ஆதாரங்கள் குப்பைக்கூடைக்கே செல்கிறது.நீதிமன்றமும் சரிவர தீர்ப்பைத்தருவதில்லை.கேட்டால் சட்டப்படி எப்படியோ ,மனசாட்சிபடியே தீர்ப்பு என்று வசனம் பேசுகிறார்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமது ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு சாதகமாக வரும் ஆட்சியை எப்படியாவது அகற்றி விடலாம் என தினகரனும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏக்களும் நம்பினர்.
ஆனால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், மூன்றாவது நீதிபதியும், சபாநாயகர் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தீர்ப்பளித்து விட்டனர். இதனால் 18 எம்.எல்.ஏக்களின் நிலை ‘இலவு காத்த கிளியாக’ ஆகிவிட்டது.
எப்படியும் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்பதை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று தகுதி இழந்த எம்.எல்.ஏக்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர். ஆனாலும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தினகரன் அவர்களின் எண்ணத்திற்கு கருத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
ஏற்கனவே, தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, மூன்றாம் நீதிபதிக்கு வழக்கை கொண்டு சென்று இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி மேலும் ஓராண்டு தொடர வழிவகை செய்துவிட்டோம்.
உச்சநீதிமன்றம் சென்றால் அங்கு வழக்கின் தீர்ப்பு வெளிவர இரண்டாண்டுகளோ, மூன்றாண்டுகளோ கூட ஆகலாம். அதுவரை இவர்கள் எளிதாக ஆட்சியை கொண்டு சென்றுவிடுவார்கள்.
எனவே ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான் இடைத்தேர்தல் முடிவை எடுத்தேன் என்று தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் கூறி சமாதானப்படுத்தி தேர்தலைச் சந்திக்க நினைக்கிறார்.
தினகரனின் முடிவை எட்டிலிருந்து சுமார் பத்து எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் முன்னதாகவே இ.பி.எஸ்–ஓ.பி.எஸ். அணியினருடன் பேசி, தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வந்தால் அரசுக்கு ஆதரவு நிலை எடுத்து வந்து விடுவது, அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விடுவது என முடிவெடுத்ததாக தெரிய வருகிறது.
அதனால்தான் ஐகோர்ட் தீர்ப்பு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக 18 எம்.எல்.ஏக்களையும் குற்றாலம் ரிசார்ட்டில் தங்க வைத்தார் தினகரன் என்றும் பேசப்பட்டது. கோர்ட் முடிவு எதிர்பார்த்தபடி வராததால் தினகரன் அப்செட்டில் இருக்கிறார்.
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால், இதில் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பது கேள்விக்குறியாக இருப்பதால், தனித்து தேர்தலை சந்திக்க முடியாது எனக் கருதி காங்கிரஸ், சி.பி.எம் – சி.பி.ஐ. மற்றும் தலித் கட்சிகளை முக்குலத்தோர் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்க காய் நகர்ததி வருகிறராம்.
இன்னொரு பக்கம் இபிஎஸ் – ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய ஆறு அமைச்சர்களை நீக்கிவிட்டு, செங்கோட்டையன் தலைமையில் ஆட்சி நடக்கட்டும், அமமுகவை அதிமுகவில் இணைத்து ஒன்றுபட்ட கட்சியின் நிர்வாகத்தை நாங்கள் (தினகரன் – சசிகலா) கவனிக்கிறோம். செங்கோட்டையன் தலைமையில் ஆட்சி நடக்கட்டும் என டில்லி பா.ஜ. தலைமையின் உதவியோடு ரகசிய பேச்சுக்கள் நடக்கிறதாம்.
அரசியலில் பல அதிரடிகளை அவ்வப்போது நிகழ்த்தி வரும், பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா உறுப்பினருமான முக்கிய பிரமுகர்தான் மீடியேட்டராக இருந்து இந்தப் பணிகளை செய்கிறாராம். தினகரன் திட்டம் நிறைவேறுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக