*
கொஞ்ச நாள் முன்னாடி சங்கிகள் மோடியின் *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக பகிர்ந்திருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகமிருக்கும்.
அதுக்கு நாம இதையெல்லாம் போய் வடநாட்டில் சொல்லுங்கடா...
இங்கே நாங்க தமிழ்நாட்டில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து 12 வருசமாகுது.
மோடியின் திட்டம் இலவசமல்ல, பயன்பெற விரும்பும் மக்கள் பிரிமீயம் கட்டணம் என்று பதில் சொல்லியிருந்தோம்.
இப்போ என்ன ஆச்சு?
திமுக கொண்டு வந்த ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்து எடப்பாடி உத்தரவு போட்டு...தமிழ்நாடு மத்தியரசின் மோடி கேர் திட்டத்தில் இணைவதாக அறிவிச்சிருக்கார்.
அப்படியென்ன அந்த மோடி கேர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என்ற ஆராயப்போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவிச்சிருக்கார். திட்டத்தை வெளிப்படையாக...டாம்பீகமாக அறிவிச்சவர்...அந்த திட்டத்தில் மக்கள் இணைவதற்கு ரகசியமாக விதித்திருக்கும் நிபந்தனைகளை படிங்க...
♦ குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.!
♦ ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது.!
♦ லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது.!
♦ வீட்டில் 3 அறைகள் இருக்கக்கூடாது.!
♦ வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது.!
♦ மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது.!
♦ விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது.!
♦ அரசு ஊழியராக இருக்கக்கூடாது.!
♦ வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.!
♦ 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள்
♦ 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர்,
♦ குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம்
♦ பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.!
அப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.
இதற்கெல்லாம் பக்தர்களிடம் நேரடி பதிலிருக்காது.
2019ல் எங்களை வென்றுகாட்டுங்கள் என்ற வாய்சவடால் தான் வரும். எதற்கு?
இவர்கள் செய்த எல்லா அலங்கோலங்களையும் சரி செய்யவா?
வடக்கு முட்டாப்புண்ணாக்குகள் மதவெறியின் காரணமாக தூக்கிப்பிடிக்கும் பாஜகவை தெற்கு சுமக்காது என்பது நமக்கு நல்லா தெரியும்.
அதனால வடக்கில் அவனவன் இந்த அரசாங்கத்தை நம்பி நடுரோட்டுக்கு வரட்டும்.
நாம அமைதியா ஓரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்.
ஆ.சிவகுமார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக