சனி, 26 மார்ச், 2016

ஓர் அலசல்!

திமுக ஊழல் கட்சியா? 


திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே தவிர எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை பெற்றதில்லை.
சர்க்காரியா ஊழல் வழக்குகள் குறித்து எம் ஜி ஆருக்காக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திரா காந்தியே கூறித்தான் பிறகு கூட்டணி வைத்தார்
அதிலும் சாட்சியம் கூறிய எம்ஜிஆர் கேள்விப்பட்டேன் பேசிக்கொண்டனர் எனக்குத் தெரியாது என்றுதான் பல இடங்களில் கூறினார் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் இன்றுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்பதும் உண்மை!


நள்ளிரவில் நாட்டைவிட்டு ஓடிவிட்டால் என்னசெய்வது? 

என்பதுபோல துரத்தித் துரத்தி வயதையும் முன்னாள் முதல்வர் என்பதையும் பாராமல் தலைவர் கலைஞரைக் கைது செய்த வழக்கு ----தளபதி மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? 
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று! 
இப்போதுவரை அந்த வழக்கு என்ன ஆயிற்று? 
எனக்குத் தெரிய இராயப்பேட்டை பாலத்தை ஏழு அடிகள் வரை தோண்டிப்பார்த்த
ும் தலைவரையும் தளபதியையும் முதல் எதிரிகளாக நினைக்கும் ஜெயலலிதாவால் ஒரு குற்றத்தையும் ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை! 

ஆனால் திமுக ஊழல் கட்சி என்றுதான் பிம்பத்தை உருவாக்கி தொடர்ந்தும் வருகின்றனர்!
சரி! அடாவடித் தனமாக நிலத்தைக் கையகப்படுத்தியத
ை மீட்டுத் தருகிறோம் என்று ஜெயலலிதா ஒரு சட்டம் கொண்டுவந்து
# நிலஅபகரிப்புச்சட்டம் என்ற பெயரில் ஏராளமான திமுகவினரைக் கைது செய்தார்களே ஒன்றிலாவது எந்தத் திமுகவினராவது தண்டனை அடைந்தார்களா? 

எல்லாம் அந்தந்த நேரத்துப் பரபரப்புச் செய்திகளுக்கும் திமுக மீதான பழிக்கும்தான் என்பதை நடுநிலைவாதிகள் யோசிக்க வேண்டாமா?
சரி இறுதியாக 2ஜி வழக்குக்கு வருவோம்!
திருஆ_ராசாவோ‬ திருமதி
கனிமொழியோ வாய்தா வாங்கி விசாரணைக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்துஒளிந்து கொண்டனர் என்று செய்தி வந்திருக்கின்றதா? 

நல்லபடியாக விசாரணைக்கு ஒத்துழைக்கின்றனர் என்று நீதியரசர் பாராட்டியது எத்தனை பேருக்குத் தெரியும்?
எத்தனை ஊடகங்கள் வெளிப்படுத்தின? 

பாராட்டுகின்றன?
அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களே என்பதுதான் மிகப்பலருடைய வாதம்! விசாரணைக்காக சிபிஅய் அலுவலகம் சென்றவர்களை அங்கேயே கைதுசெய்து வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லி அப்படியே சிறைக்குள் வைக்க அனுமதியும் பெற்றுவிட்டனர்! 

விசாரணைக்குச் செல்லாமல் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு தப்பிக்காததே அவர்கள் செய்த குற்றம்!
இன்னும் விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது!
பதினெட்டு ஆண்டுகள் விசாரணையிலிருந்து தப்பித்க்கப் புதுப்புது வழிகளைக் கண்டறிந்து நூறு கோடி ரூபாய் அபராதம்-- நான்காண்டு சிறைத் தண்டனை!-

- சொத்துக்கள் பறிமுதல்! 
என்றெல்லாம் தண்டனை பெற்றவர்கள் பதினைந்து நாட்கள் ஊதுபத்தி உருட்டியதொடு வெளியே வந்துவிட்டால் நல்லவர்கள்!
வழக்கே முடியாமல் பிணை (ஜாமீன்) கேட்கமாட்டேன் என்று பொறுப்புடன் சட்டத்தை மதித்துக் காத்திருந்தவர்கள் குற்றவாளிகள்! அப்படித்தானே?
நடுநிலைவாதிகள் யோசிக்கலாமே? 

மாட்டார்கள்!
சரி!
ஆ.ராசாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கிட்டு சோதனை போட்டார்களே
ஒன்றும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று திரும்பிச் சென்றார்களே
அது எத்தனை கோடிரூபாய்க்கான குற்றச்சாட்டு தெரியுமா?
எழுபது கோடி ரூபாய்களை ஆ.ராசா வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு! அப்படியானால் அவர்கள் கூற்றுப்படி மீதம் ஒரு இலட்சத்து எழுபத்தி அய்யாயிரம் கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து முப்பது கோடி சொத்து என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
இன்னொரு பக்கத்தில் 2ஜியே 1,76,000 கோடிக்குப் போயிருக்க வேண்டும் என்றால்
3ஜி , 4ஜி எல்லாம் எத்தனை கோடிக்கு விலை போயின;
நாட்டுக்கு ஓர் அய்ந்து இலட்சம் கோடியாவது வருமானம் வந்ததா என்று
ஏன் எவரும் கேட்கவில்லை?
வரவில்லை என்றால் அதற்குக் காரணமானவர்களை
ஏன் திகார் சிறையில் அடைக்கவில்லை?

என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
திமுக ஊழல் கட்சியா? 

நாமாவது யோசிப்போம்!
                                                                                                            நன்றி : -கார்த்திகை நிலவன் வலைப்பூ
======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...