வியாழன், 13 அக்டோபர், 2016

தேவையற்ற பழையதுணிமூட்டை


காங்கிரசு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது.
ஆனால் இன்றைய சூழலில் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு போய் என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்.


ஜெயலலிதாவை ஆதரித்து பேசுவதால்,ராகுல் ஜெயலலிதாவை தனிவிமானத்தில் பறந்து வந்து சந்தித்ததால் அதிமுக தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று நம்பினால் அவர்களை விட தார்ப்பாயில் வடிகட்டிய ----- யாரும் இருக்கமுடியாது.

இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணியாக அரசியலில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பெட்டிக்கடைகாரர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து பிடறியை பிடித்து விரட்டப்பட்டவர்கள்.அரசியல் தரகர் வைகோ மூலம் திமுகவுக்கு எதிராக கடையை திறந்து வைத்து போனியாகமல் இருப்பவ்ர்கள்.


அவர்களுடன் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம்.ஆனால் அங்கிருந்து துண்டைக் காணோம்,துணியை காணோம் என்று ஓடியவர்கள்தான் முன்னாள்காங்கிரசு வாசன்கட்சி, நடிகர்விஜய்காந்த் கட்சிகள்.

நீங்கள் தப்பித்தவறி அதிமுகவுடன்கூட்டணி சேர்ந்தாலும் திமுகவிடம் வாதாடி பெற்றது போல் கவுரவமானஇடங்களிப்பெறமுடியாது.திருவோட்டில்போட்ட்டதை வாங்கிக்கொண்டுபோகவேண்டும்.


அத்துடன்உங்கள்கை சின்னத்துக்குஅங்குவேலை இல்லை.எல்லாமே இரட்டை இலை.அவர்கள்சின்னத்தில்கருணாஸ்போன்றுநின்றுசட்டமன்றத்துக்குஒருவேளை தப்பித்தவறிபோனாலும்அம்மா பரணியை பாடுவதும்,மேசையை தட்டுவதும்தான்உங்கள்மககள்தொண்டாகஇருக்கும்.

அங்குபோய் ஜெயலலிதாவுக்கு ஒத்து நாதஸ்வரம் ஊதமுடியாதுஎன்றெல்லாம் அடம்பிடிக்கமுடியாது.
பாடச் சொன்னால் பாடனும்,ஆடச் சொன்னால் ஆடணும், நாதஸ்வரம் ஊதச் சொன்னால் ஊதியே ஆகணும்.
இவை எல்லாம் நாங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.தமிழ் நாட்டில் இருக்கும் சிறுகுழந்தைக்கும் தெரிந்த விசயம்.


அதுவும் காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் அனுபவம் ரொம்ப அதிகம்.


இவைகளை எல்லாம்தெரிந்தே திமுகஎதிர்ப்பை எடுத்துக்கொண்டு அரசியல் செய்ய எண்ணும் காங்கிரசுக்கு ஒரு உண்மையும் தெரிந்திருக்கும் அது திமுகவுக்கு காங்கிரசு தேவையற்ற பழையதுணிமூட்டைதான்.


அதை எப்போது தூக்கிஎறிவதுஎன்றநினைப்பில்தான்திமுகதொண்டன்ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள்.



கலைஞரின் தேவையற்றபெருந்தன்மையால்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கோபுரகலசத்தில்ஒட்டியிருக்கும் எச்சிலை தன்னால்தான்கோபுரம்அழகாயிருக்கிரதுஎன்றுஎண்ணினால்அதற்குஅடுத்துவரும்காற்றே புத்திபுகட்டிவிடும்.

கோபுரம்திமுகழகம் என்றஉண்மையை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது.
ராகுலை வைத்து வாக்குகளை குவிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் துடைத்து எறியுங்கள்.


உங்கள் ராகுல் தமிழகத்துக்கு திமுககூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் கிடைக்கிற வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்காமல்தான் போகும்.இதுதான் வடமாநிலங்கள் காட்டிய உண்மை.


"ராகுலை கட்சியை விட்டு விலகிப் போகச் சொல்லுங்கள்.அவர் இருந்தால் காங்கிரசு காணாமல் போய்விடும்"
இதை சொன்னது உ.பிரதேச காங்கிரசு தலைவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...