சனி, 22 அக்டோபர், 2016

காந்தி பெண்களுடன் உல்லாசம் ?

வருண் காந்தி பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து அதன் மூலம் ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் விலைமாதர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் சிக்கிக் கொண்ட பாஜக எம்.பி., வருண் காந்தி, வேறு வழியில்லாமல், ராணுவ ரகசியங்களை வெளியிட்டார் என்று வெளியான தகவலை தற்போது அவரே மறுத்துள்ளார்.
பா.ஜ.க எம்பியும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி, வெளிநாடு சென்று இருந்தபோது தனது பெண் பாதுகாவலர்கள் மற்றும் விலைமாதர்களுடன் வருண் காந்தி மோசமாக நடந்து கொண்டதாகவும், அதுதொடர்பான புகைப்படங்கள், ஆயுதபேர இடைத்தரகர் அபிஷேக் வர்மாவிடம் சிக்கிக் கொண்டதாகவும், அதை வைத்து பிளேக்மெயில் செய்து ராணுவ ரகசியங்களை வருண் காந்தியிடம் அபிஷேக் வர்மா பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் நியூயார்க்கில் இருக்கும் எட்மண்ட்ஸ் ஆலென் தெரிவித்து இருப்பதாகவும், அந்தக் கடிதம் தங்களுக்கு கிடைத்து இருப்பதாகவும், சமீபத்தில் சுவராஜ் அபியான் தலைவர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் பூஷண் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை வருண் காந்தி மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...