திங்கள், 4 ஏப்ரல், 2016

பனாமா பேப்பர்ஸ்,

இந்த ஆவணங்கள், முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. 

அதைத் தொடர்ந்து, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த, 40 ஆண்டுகளாக, உலகெங்கும், 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது. 
'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம், சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால், பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், மொஸாக் ஃபொன்செக' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. 
இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. 
ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள, இந்த நிறுவனம் உதவி வருகிறது.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. போலி நிறுவனங்களில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியை, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில பத்திரிகை உட்பட, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த, உலகெங்கும் உள்ள,100க்கும் மேற்பட்ட பத்திரிகைகளைச் சேர்ந்த நிருபர்கள் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த மோசடியை அம்பலப்படுத்திய முயற்சிக்கு, 'பனாமா பேப்பர்ஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த ஆவணங்கள் மூலம்  உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும்  தங்கள் நாட்டின் வரி ஏய்க்க பனாமா நாட்டை பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. 


இதுவரை பொதுவாக உலகப்  பிரபலங்கள்கணக்கில் வராத சொத்துக்களை  ஸ்விஸ் வங்கியில் பதுக்குவது வழக்கம். அங்கு மட்டும்தான் கறுப்புப் பணம் பதுக்கல் உள்ளது என்று நம்பிக்கொண்டிருந்தோம்.



ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறி ,அதை கைப்பற்றி மக்களுக்கு பங்கு வைத்து தரப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தவர்  மோடி  . 
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் ஸ்விஸ் நாட்டைப்பற்றி பேசுவதே இல்லை.

 அதுகுறித்து செய்திகளில் சர்ச்சைகள் எழுந்துவந்தன. 


இந்நிலையில் ஸ்விஸ் வங்கிகளையும் தாண்டி வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தைச் சேமிக்க பனாமா நாட்டில் வழியிருப்பது வெளியான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் என்னும் அமைப்பு சமீபத்தில் பனாமா ஆவணங்கள்
 விஷயத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது.


உலக அளவில் பிரபலங்கள் பணத்தை பனாமா நாட்டில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 
பல நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் தலைவர்கள் 72 பேர் தொடர்புடைய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. 
பல்வேறு உலக நாடுகளின் தற்போதைய மற்றும் முந்தைய அதிபர்கள், பிரதமர்கள், 12 பேர் உட்பட, 140 முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ளனர்.*விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்*லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா கால்பந்து வீரர்*சிக்முண்டர் டேவிட் கன்லாக்சன் , ஐஸ்லாந்து பிரதமர் *நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர்*பெட்ரோ போரோசென்கோ, உக்ரைன் அதிபர் *சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்,சவுதி அரேபிய மன்னர் *ஜாக்கி சான், பிரபல நடிகர் *சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பம்*பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆகியோர் முக்கிய தலைகளாகும்.

இந்திய திருநாட்டை பொறுத்தவரை வராக்கடன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பலர் பனாமா பட்டியலில் உள்ளனர்.

 இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் பாஜக வேட்பாளர் அமிதாப்பச்சன்,அவர் மருமகள் &நடிகை  ஐஸ்வர்யா, டி.எல்.எப் உரிமையாளர் கே.சி.ராய், வினோத் அதானி மற்றும் பலர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
*'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடி*'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்*லோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்*மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே*முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும், பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜி*தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்.
பனாமா வங்கியில் கணக்கு தொடங்கி இப்படி பணத்தை கொண்டு சென்று மறைத்து வைக்க , ஒருவர் அந்நாட்டில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கவேண்டும்.

 அந்நிறுவனம் துவக்கத்தொடு பெயரளவில் இருந்தால் போதும் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றுகூட கட்டாயமில்லை. 

அந்நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கில் தொடர்ந்து கறுப்புப் பணம் சேமிக்கலாம். 

இந்த சலுகயின்படி  அமிதாப் பச்சன் வெளிநாட்டில் இயங்கும் 4 கப்பல் நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பதாக கணக்கு தொடங்கப்பட்டு பல கோடிகள்  பணம்போடப்பட்டு வருகிறது.

இதே போல் நடிகை ஐஸ்வர்யா ராய்,வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இயுக்குனராக பொறுப்பு வகிப்பதாகவும்  தற்போது அந்நிறுவனத்தின் பங்குதாரராக தனது பெயரை ஐஸ்வர்யா ராய் மாற்றிக் கொண்டதாக  கூறி கொடிகளில் பணம் போடப்படுகிறது  தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில்  சுரங்கத்தொழில் துவங்க இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 20000கோடிகள் கடன் கேட்ட அதானி ஏற்கனவே 1000 கோடிகள் வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு திரும்பச்செலுத்தாமல் உள்ளார்.

அதனால் இந்திய மாநில வங்கி[ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா]மேலும் அதானிக்கு  கடன் தர மறுத்தப்போது பிரதம் மோடியே கடனை வழங்கச்சொல்லி வங்கியை வற்புறுத்தினார்.

இப்போது பனாமா வங்கியில் அவருக்கு பல்லாயிரக் கணக்கான கோடிகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே வாங்கிய திரும்பச் செலுத்தாத பணம் இருக்குமிடம் தற்போது தெரிந்து விட்டதால் மோடி ஸ்விசுக்குப்பதில் பனாமா வங்கியில் இருக்கும் அதானி உட்பட்ட இந்திய பண முதலைகள் பணத்தை மீட்டு வந்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றலாம்.
குடியரசுத்தலைவராக அமிதாப் பச்சனை முன்னிறுத்த பாஜக.முலாயம் சிங் என்று சிலர் முதற்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ஆனால் அமிதாப் அப்பதவிக்கு பொருந்துவாரா?

உ.பி மாநிலத்தில் வறுமைக்கு உடபட்டோருக்கு கொடுத்த விவசாய நிலங்களை அம்பிதாப் பச்சன்,அபிஷேக் பச்சன்,ஐஸ்வர்யா பெற்று அனுபவித்து வந்தனர்.
அதேபோல் நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகையும் அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்டு வந்தது .பத்திரிகைகளில் வெளியான பின்னர் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் ,கல்யான் ஜுவல்லர்ஸ் உ ட்பட நிறைய விளம்பரப் படங்களில் கோடிகளை வாங்கிக் கொண்டு நடித்து வந்தாலும் வறுமையின் கோரப்பிடியில்தான் இன்னமும் இருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல வீட்டு வசதி வாரிய வீட்டையும் முறைகேடாக பெற்று அமிதாப் குடும்பம் வாடைக்கு விட்டு வாழ்க்கை நடத்தி வந்த விவகாரமும் வெளியெ  வந்தது.
இப்படி துன்பப்பட்டு சிறுக,சிறுக சேர்த்தப்பணத்தைத்தான்  பனாமா நாட்டில் கறுப்புப்பணமா வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இது மோடியின் கண்களுக்கு குடியரசுத்தலைவர் பதவியை அமிதாப்புக்கு கொடுக்கும் தகுதியாகக் கூட தெரியலாம்.

ஜெயா தொலைக்காட்சி ,நமது எம்ஜிஆர் நாளிதழைத் திட்டிய சி.தா.செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் ச.ம.உ வேட்பாளர் அறிவிப்பு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...