திங்கள், 9 மார்ச், 2015

புழல் தயார்?

'நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், 21 லட்சம் ரூபாய் கேட்டு, கடுமையாக மிரட்டியது தான், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம்' என, உளவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி, நெல்லையில், வேளாண்மை பொறியியல் துறையில் பணிபுரிந்த முத்துக்குமாரசாமி, 57, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மாவட்டத்தில், ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
அப்போதைய, வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அழுத்தம் தான், அதிகாரி தற்கொலைக்கு காரணம் என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதையடுத்து, கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.
புழல் தயார்?
 மேலும், அதிகாரி தற்கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.
எஸ்.பி., அன்பு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர், நேற்று விசாரணையை துவக்கினர். என்.ஜி.ஓ., காலனியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள், ஓட்டுனர்கள், ஊழியர்களிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும், பலரிடம் விசாரணை நடத்தவும், போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் " நெருக்கடிகளுக்கு பணியாமல், ஏழு ஓட்டுனர்களை, முத்துக்குமாரசாமி நியமித்தார். இதனால், 'ஒரு இடத்திற்கு, 3 லட்சம் ரூபாய் வீதம், 21 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது; இந்தப் பணத்தை, நீ தான் (முத்துக்குமாரசாமி) தர வேண்டும்' என, மேலிடத்தில் இருந்து மிரட்டினர்.
முத்துக்குமாரசாமியும், தன் வருங்கால வைப்புநிதி, உறவினர்களிடம் கடன் என, 10 லட்சம் ரூபாயுடன் சென்னை சென்றார். ஆனால், 'மொத்தமாக, 21 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, மீண்டும் மிரட்டப்பட்டார்;
 இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், தற்கொலை செய்து கொண்டார்."என்பது உறுதியாகி விட்டது.
 ஸ்டாலின்,இளங்கோவன் மற்றும் எதிர்கட்சியினர்கள் , சிபிஐ விசாரணையை கேட்டதாலும் அவர்கள் அதற்காக நீதிமன்றம் போக இருப்பது தெரிந்ததாலும் அப்படி சென்றால் அதிமுக ஆட்சிக்கே ஆப்பு வந்து விடும்.
மக்கள் மத்தியில் அமைச்சர்கள் செயல்பாடு அசிங்கப்பட்டு விடும் என்பதாலும் ஜெயலலிதா அக்ரியை தூக்கியிட்டு சிபிசிஐடி க்கு இவ்வழக்கை மாற்றியுள்ளார்.
அதை தவிர முத்துக்குமாரசாமியின் மனைவி, தலைமைச் செயலர் ஞானதேசிகனின் உறவினர் என்பதாலும்,ஞான தேசிகன் வலியுறுத்தலாலும் வேளாண் அலுவலர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு, விஸ்வரூபம் எடுத்துள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...