சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சியினர் வன் முறையில் இறங்கி ,கொடும்பாவிகளை எரித்தும் கடைகள்,பேருந்துகள் மீது கல்வீசியும் தாக்குவதால் தமிழகம் முழுக்க மக்களின் இயல்பு வாழவு பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கருணாநிதி வீட்டிற்குள் அதிமுகவினர் சிலர் நுழைய முயன்றனர்.  காவல்துரையினர் அதிமுகவினரை டடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்  திமுகவினர் அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். அதனால்இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.காவல் துரையினர செயல் படாததினால் கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ஸ்டாலின் வீட்டிலும் கல் எறிந்து அதிமுகவினர் ரகளையில் ஈடு பட்டனர்.அங்கேயும் காவல்துறை கைகட்டி நின்றதால் திமுகவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.