சனி, 4 அக்டோபர், 2014

ஜாமீன் கிடைக்கலையா..?

’என்ன பன்னீர் ஜாமீன் கிடைக்கலையா?’
”பெங்களூர் முழுக்க அலைஞ்சிட்டேமா.எல்லா மீனும் கிடைக்கிற ஜெத்மலானி கடையில் கூட ஜாமீன் கிடைக்கலை.கனி மொழியோட காலியாகிட்டுனுட்டாங்கம்மா.”
‘இங்கேயே அலைந்தால் எப்படி.தமிழ் நாட்டில் போய் தேடு”
“அங்கே அம்மாவ உள்ளே வைச்சதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் பிடிக்கவே மீனவர்கள் போகலையாம்மா.”
”மொத்தத்துல இப்போதைக்கு என்னை வெளியே எடுக்க மாட்டீங்க இல்லே’
“அம்மா.உங்களுக்கு ஆதரவா,நீதிக்கு எதிரா தமிழ் நாடு முழுக்க பொது மக்கள் உண்ணா விரதம்,கடையடைப்பு,பேருந்து கொளுத்தல்,கருணாநிதி கொடும்பாவி எரிப்புனு அதகளப்படுத்தி வராங்க.உங்களுக்கு கூட ”மக்களின் முதல்வர்”னுபுதுசா பட்டம் தந்திருக்கங்கமா.”
“போதும்.போதும்.இப்படி என்னை உசுப்பேத்தியே என்னை உள்ளே தள்ளிட்டு,நீ முதல்வராகிட்டு எனக்கு புதுப்பட்டமா தர்றீங்க.வெளியே வந்து வச்சுக்கிறேன்’
“சரிமா.உங்க ஆணைப்படி வெளியே போய் முதல்வர் வேலையை பார்க்கிறேமா.தினமும் உங்க படத்தை பார்த்து அஞ்சு நிமிசம் அழுதுட்டு தாமா அமைச்சர்கள் பனியை திடங்குகிறோம்.’
‘இனி என்னை பார்க்க வராதே.போயா வெளியே.”
-அழுது கொண்டே சிறை வாசல் வரை வந்த மான்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் தேசிய கொடி பறக்க காரில் செல்லும் போது சிறையிலும் தேசியக் கொடி பறப்பதை பார்த்து மீண்டும் கண்கலங்குகிறார்.

இந்த இடத்தில் எனக்கு முழிப்பு வந்து விட்டது.சே என்ன சோகமான ஒரு கனவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...