2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா
முன்மொழிந்த கட்டணத்தை உயர்த்துமாறு வற்புறுத்தாதது ஏன்? சட்ட விரோதம்
என்று தெரிந்தும் உரிமங்களை ரத்து செய்யாதது ஏன்?
'சொல்லுங்க ப.சிதம்பரம் அவர்களே
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத் தில் இன்னும் பதிலளிக்கப்படாத கேள்
விகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம்
பதிலளித்தே ஆகவேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல்
தலைமைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப் பினருமான
சீத்தாராம் யெச்சூரி வலி யுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பிரதமர் மன்மோகன்
சிங், கூட்டுக்குழுவிடம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்.
சிதம்பரத்தின் பதில்கள் கிடைக்கப் பெறாமல் அல்லது அவரிடம் விசாரிக் காமல்
எப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இறுதி விசாரணை அறிக் கையை தயாரிக்க
முடியும் ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்த மாக
விசாரணை செய்து வந்த நாடாளு மன்ற கூட்டுக்குழுவில் அங்கம் வகிக் கும் சக
உறுப்பினர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல்
தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., குறிப்பு ஒன்றை
அனுப்பியிருக்கிறார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்ற கூட்டுக்குழு
முன் வந்துள்ள சில கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரும் பதில் சொல்லியாக
வேண்டிய தேவை எழுந்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர்
பி.சி.சாக்கோ தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் நிதி அமைச்சர் குறித்து
எண்ணற்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
நிதி அமைச்சரின் பங்களிப்பு
தொடர்பாக கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல், நாடாளுமன்ற
கூட்டுக்குழு எந்த முடி வுக்கும் வருவது சாத்தியமில்லை.சாக்கோ தயாரித்துள்ள
வரைவு அறிக்கையில், 10.43ஆவது பிரிவு பின் வருமாறு
கூறுகிறது:
‘‘தொலைத்தொடர்புத் துறையி லிருந்து 2007 நவம்பர் 29 தேதியிட்டு
வந்த கடிதத்திற்கு, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்
களுக்கான துறை எவ்விதத் தகவலும் அனுப்பவில்லை என்று கூட்டுக்குழு விற்கு,
நிதி அமைச்சகம் தெரிவித்திருக் கிறது. நடைபெற்றுள்ள நிகழ்வுகளிலி ருந்து,
ஏற்கனவே உள்ள உரிமதாரர் களிடம் ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக
அனுமதித்துள்ள கட்டணம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை மேற்கொண்டுள்ள
நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகம் ஒத்துப்போகிறது என்றே கூட்டுக்குழு
அனுமானிக்கிறது.’’இவ்வாறு, தொலைதொடர்புத் துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமக் கட்
டணங்கள் தொடர்பாக மேற் கொண்ட நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகமும்
ஒத்துப்போனதாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு தன் வரைவு அறிக்கையில்
குறிப்பிட்டிருப்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா? 2.1.2(3)வது
பிரிவின்படி, நிதி அமைச் சகத்திற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கும்
இடையே ஒப்பந் தம் ஏற்பட்டிருக்க வேண்டியது கட் டாயம், என்று
தொலைத்தொடர்புத் துறை அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பிலிருந்து நன்கு
தெரிந்தும் கூட, 2001ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட அள விலேயே நுழைவு மற்றும்
ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை 2008ல் வசூலிக்கக் கூடாது என்று நிதி அமைச்சகம் ஏன்
வலியுறுத்தவில்லை?உரிமக்கட்டணங்களை நிர்ணயிப் பதில் நிதி அமைச்சகத்தின்
ஒப்புதல் அவசியம் என்றிருக்கக்கூடிய நிலை யில், நிதி அமைச்சகம் அத்தகைய ஒப்
புதலை அளித்ததா?
ஆ.ராசா,சாக்கோவிற்கு அனுப்பி யுள்ள கடிதத்தில்,
உரிமக் கட்டணங் கள் சம்பந்தமாக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும்
நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், 2008 ஜனவரி முதல் வாரத்தில் நிதி அமைச்
சரை அவர் சந்தித்தபோது அவர் அளித்த ஒப்புதலின் அடிப்படையிலும் தான்
மேற்கொள்ளப்பட்டது என்று கூறியிருக்கிறாரே? அவ்வாறு இருவருக் குமிடையே
சந்திப்பு நடந்தது உண் மையா?
ஆம் எனில், 2008ஆம் ஆண் டிற்கான உரிமங்களுக்கு
2001இல் நிர் ணயித்த அதே உரிமக் கட்டணத்தை வசூலிக்க மத்திய நிதி அமைச்சர்
தன் சம் மதத்தை அளித்ததாகக் கூறியி ருப்பது சரிதானா? 2008 ஜனவரி 15
அன்று அவர் பிர தமருக்கு எழுதியுள்ள கடிதத்தின்படி 2008 ஜனவரி 10 அன்று
நுழைவு மற் றும் உரிமக் கட்டணங்கள் தொடர் பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு
முடிந்துபோன விசயம் என்று குறிப் பிட்டிருக்கிறீர்களே, ஏன் அவ்வாறு
ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்?.
நாட்டின் மிகவும் புகழ்பெற்ற வழக்
கறிஞர்களில் ஒருவர் என்ற முறையில், மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு
உரிமக்கட்டணங்களுக்கான அனு மதிக் கடிதத்தை எந்த சமயத்திலும் ரத்து
செய்யலாம் என்று சந்தேகமற நன்கு தெரியும். 2008ஆம் ஆண்டில் அளிக்கப்படும்
நுழைவு மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக 2001 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட
கட்டணத் தொகையையே பெறுவதற்கு, அவரது சம்மதம் அவசியம். அமைச்சரவைக் குறிப்பு
எப்படி இருந்த போதிலும் இந்திய அரசின் (வர்த்தக நடைமுறை)விதி 4ன்கீழ்,
நிதி அமைச்சர் உடன்பாட்டைத் தெரி விப்பது கட்டாயமாகும். அத்தகு சமயத் தில்
அவர் ஏன் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை?அதேபோன்று இந்திய
அரசின் (வர்த்தக நடைமுறை) விதி 7இன்கீழ், நிதி சம்பந்தப்பட்ட வழக்குகளில்,
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு
வரும் பட்சத்தில், நிதி அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத் தைக் கூட்டி
அமைச்சரவை முடிவைக் கோரலாமே, ஏன் அவ்வாறு நிதி அமைச்சர் கோரவில்லை?
மிகவும்
உயர்ந்த இடத்தில் அமர்ந் திருக்கும் நிதி அமைச்சர், இக்கேள்வி களுக்கு
நாடாளுமன்ற கூட்டுக்குழு வின் முன்பு நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ
பதிலளிக்க முடியும். மேற்கண்ட அம்சங்கள் குறித்து நிதி அமைச்சரின் பதிலைப்
பெறாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழு இப்பிரச் சனையில் நிதி அமைச்சகம் அல்லது
நிதி அமைச்சரின் பங்களிப்பு குறித்து எந்த முடிவுக்கும் எப்படி வரமுடியும்
என்பது புரியாத புதிராகவே இருக் கிறது.
-இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி
கேள்விகளை தொடுத்துள் ளார்.
பதில் வழக்கமான கல்லுளி மங்கத்தனமா ன மவுனம்தான்.
---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக