புதன், 10 ஆகஸ்ட், 2011

அனிதா ராதாகிருஷ்ணன் கைது ,அடுத்து,,,,,,?



   திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் போலீசார் இன்று கைது செய்தனர்.கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் போது நடந்த கொலை முயற்சி ஒன்றில் சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் அதில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சசிகுமார் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பெரியசாமியின் ஆதரவாளரான சுரேஷ் கோஷ்டியினர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் சுரேஷை கொலை செய்யத் தூண்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது.  மார்ச் 1ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாகவும், சுரேஷ் கொடுத்த புகார் தொடர்பாகவும் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்செந்தூரில் இருந்த அவரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது ஐபிசி 307 வது பிரிவின் கீழ் கைது செய்தனர். 
இதுவரை நிலமோசடி,மற்றவகைகளில் அனிதாவை கைது செய்ய வில்லையே என பரவலான பேச்சு இருந்தது.அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
காரணம் அவர் ஜெயலலிதாவின் கடுங்கோபத்த்க்கு ஆளாகியே அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டவர்.
அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வளர்த்த்வர். இருப்பினும் அவரின் கல்கோரிகள்,சொத்துக்கள் மீது சின்னம்மாவின் கண்பட்டுவிட்டது.அதை தனது பெயரில் எழுதிவைக்கக் கோரி அது முடியாததால் அம்மாவிடமும் போட்டுக்கொடுத்து அங்கும் பருப்பு வேகாததால்  முதல் செயற்குழு க்கூட்டத்திற்கு அழிப்பில்லாமல்போய் விட்டது. தனியேஇவருக்கு மட்டும் செயற்குழு என ஒரு ஊருக்கு வர அழைப்பு அனுப்பப்பட்டதாம்.அங்கு வைத்து பலவந்தமாகவாவது எழுதி வாங்கப்படாலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தகவல் வந்துவிட அதில் இவர் கலந்து கொள்ளவில்லை.
பின் கட்சியை விட்டு நீக்கப் பட.தனது பாதுகாப்பை முன்னிட்டே அவர் தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.
ஆக இவர் எப்படியும் ஜெயலலிதா ஆட்சியில் துன்பத்தை சந்திப்பார் என்று தொகுதி முழுக்கவே பேச்சு இருந்ததௌ.இதுகூட தாமதமான கைது முன்பே எதிர்பார்த்ததுதான்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் முழுக்க தி.மு.க.தோற்றப்போதும் திருச்செந்தூர் தொகுதியில் இவர் மட்டுமே 4-வது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பாட்டுள்ளார்.
அதில் இருந்தே இவரின் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.
இப்போது அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதே தெரியவில்லை.அதை போலீசார் மிக ரகசியமாக வைத்துள்ளனர்.இதில் இருந்தே இவ்வழக்கு போலியாக உருவாக்கப்பாட்டது எனத் தெரிகிறது.
அடுத்து யார்? எ.வ.வேலு வாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...